Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங் களில் காட்டு யானைகள் மிதித்து அப்பாவி கிராம மக்கள் பலியாவது தொடர்கதையாகி வரு கிறது. வனத்துறை ஒத் துழைப்பு இல்லாத நிலை யில் கிராம மக்களே யானைகளை விரட்ட முயற்சிக்கும் போது இது போன்ற அசம்பா விதங் கள் நிகழ்வதாக குற்றம் சாட்டப்படுகிறது

காட்டு யானை கூட்டம்

வனப்பகுதிகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்னி, மலைப்பாம்பு போன்ற காட்டு விலங்குகள் அதிகம் வாழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமப் பகுதிகளில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வரு வதால் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கை யான நிகழ்வாகி விட்டது.

குறிப்பாக, காட்டு யானை கள் கிராமப் பகுதிகளுக்குள் மட்டுமல்ல, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலு வலகம் வரை வந்து பொது மக்களை மிரட்டி சென்ற சம்பவங்களும் நிகழ்ந்தது. இதனால் யானைகள் மிதித்து பலியாவோரின் எண்ணிக் கையும் ஆண்டுதோறும் அதி கரிக்க தொடங்கி உள்ளது.

விவசாய பயிர்கள் நாசம்

கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிக்குள் நுழைந்தது. இவை கள் 2 பிரிவுகளாக பிரிந்து கர் நாடகா மாநில எல்லை யோரம் உள்ள வனப்பகுதி களில் ஒரு குழுவும், ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ள மகாராஜகடை, குருவிநாயனப் பள்ளி, காளிக்கோவில் போன்ற கிராமப் பகுதிகளை ஒட்டிய வனப்பகுதியிலும் சுற்றி வருகிறது.

குறிப்பாக மகாராஜகடை பகுதியில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி வந்து விவசாய நிலங்களில் பொது மக்கள் பயிரிட்ட விவசாய பயிர்களையும், மாந்தோட்டங் களையும் அழித்து வந்தன. இரவு நேரங்களில் வரும் காட்டு யானை கூட்டத்தின் அட்டகாசத்தை பார்த்த இந்த பகுதி விவசாயிகள் மனம் நொந்து போய் உள்ளனர்.

யானை சாவு

இதுகுறித்து கிராம மக்கள் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், காட்டு யானைகளை விரட்ட வனத் துறை முழுமுயற்சி எடுக்க வில்லை. இந்த நிலையில் மகாராஜகடை பகுதியில் மாசு கலந்த தண்ணீரை குடித்த யானை ஒன்று பலியானது. அதற்கு பிறகும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த யானைகள் மகாராஜாகடை கிராமத்தை ஒட்டிய பகுதியில் இரவு நேரங் களில் வரத் தொடங் கியது.

எந்த நேரமும் ஊருக்குள் நுழையும் என்ற நிலையில் கிராம மக்களே யானைகளை காட்டுக்குள் விரட்டலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து தீப்பந்தங்கள் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் பார்த்துக் கொண் டனர்.

விவசாயி பலி- சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மகாராஜகடை முனியப்பன் கோவில் பகுதிக் குள் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வரவே, கிராம மக்கள் அவற்றை விரட்ட தீப்பந்தங்களுடன் கிளம்பினார்கள். அவர்களை யானைகள் திருப்பி விரட்ட தொடங்கியது. இதில் அனை வரும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் இதே கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன்(55) என்ற விவசாயி யானையிடம் சிக்கிக் கொண்டார்.

யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். இதைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் திரண்டனர். அவர்கள் பலியான சின்னப் பையனின் உடலை மகாராஜ கடையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப் போது வனத்துறை அலுவல கத்தை சிலர் உடைத்து சூறை யாடினார்கள்.

பொதுமக்கள் விரக்தி

இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தாசில்தார் நடராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பிணத்துடன் மறியலில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். அப்போது ஆவேசத்துடன் பேசிய அந்த பகுதி பொது மக்கள், கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சுற்றித் திரியும் காட்டு யானைகளை விரட்ட வேண் டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் அவர்கள் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் எங்கள் கிராமத் தையும், பொதுமக்களையும் யானைகளிடம் இருந்து பாதுகாக்க இரவு நேரங்களில் தீப்பந்தம் மற்றும் பட்டாசு களுடன் கிளம்பினோம். இதில் சின்னப்பையன் பரி தாபமாக இறந்து விட்டார். வனத்துறையின் அலட்சியமே இவரின் உயிரிழப்புக்கு காரண மாகும் என தெரிவித்தனர். நள்ளிரவு 2 மணி வரை நீடித்த பொதுமக்களின் போராட்டம், அதிகாலையில் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மகராஜாகடை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
On Friday, September 19, 2014 by farook press in ,    
திருச்சியில் 13–வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகள் நேற்று கண்களை கறுப்பு துணியால் கட்டி கொண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், கைகளில் கம்பு, சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதன போராட்டம்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். நதிகளை இணைத்து தேசிய நதிவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகள் திருச்சி அண்ணாசிலை அருகில் கடந்த 5–ந்ம் தேதி முதல் மாநில துணை தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஒவ்வெரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 13–வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. அப்போது விவசாயிகள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், ஒரு கையில் கம்புடனும், மற்றொரு கையில் சட்டி ஏந்தியும் போராட்டம் செய்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.
On Friday, September 19, 2014 by farook press in ,    
சமயபுரத்தில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பூனாட்சி வழங்கினார்.

விலையில்லா சைக்கிள்கள்

சமயபுரம் மாரியம்மன் கோவில் மேல்நிலைப்பள்ளியில் 103 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் பூனாட்சி கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:–

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் ஒதுக்கீடு செய்யாத நிதியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா பள்ளி கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்து வருகிறார். மேலும் கல்வி கற்கும் மாணவ–மாணவிகள் எந்த சிரமமும் இல்லாமல் படிக்கும் வகையில் 14 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது.

நிம்மதியாக வாழலாம்

மாணவ–மாணவிகளின் கல்வி தரம் உயர்வதால் அந்த மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ளவர்கள் மாநிலமாக தமிழகம் விரைவில் திகழும். மாணவ–மாணவிகள் 20 வயது வரை கஷ்டப்பட்டு படித்தால் நிம்மதியாக வாழலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட கவுன்சிலர் அரிசி மூக்கன், குணசீலம் ஊராட்சி தலைவர் சத்யநாராயணன், சிறுகாம்பூர் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், ச.கண்ணனூர் பேரூராட்சி தலைவர் அம்சவள்ளி, ஒன்றிய குழு துணை தலைவர் வெற்றிசெல்வி தர்மலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் முருகேசன், பாசறை ஒன்றிய தலைவர் சமயபுரம் கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

On Friday, September 19, 2014 by farook press in ,    
திருச்சி மாநகரில் பெண்களிடம் சங்கிலி பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9½ பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெண்களிடம் சங்கிலி பறிப்பு 

திருச்சி மாநகரில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனால் சங்கிலி பறிக்கும் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். இதையடுத்து உதவி கமிஷனர் அருள்அமரன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் குட்ஷெட் மேம்பாலம் அருகே நேற்று காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

3 வாலிபர்கள் கைது 

அங்கு நடத்திய விசாரணையில் அவர்கள், பாலக்கரை காஜாப்பேட்டையை சேர்ந்த பிரின்ஸ் (வயது 26), சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த ரெமி (26), வடிவேல் (30) என்பதும், இவர்கள் திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் இருந்து தங்க சங்கிலிகளை பறித்து சென்றதும் தெரியவந்தது.

மேலும், தங்க சங்கிலிகளை பறித்து சென்று அதனை விற்ற பணத்தில் 3 பேரும் உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளனர். இதையடுத்து இவர்களிடம் இருந்து 9½ பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்தனர்.
On Friday, September 19, 2014 by farook press in ,    
சென்னை கடற்கரை பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 7.45 மணிக்கு கடற்கரையை தூய்மைப்படுத்தும் தினம் கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக கடலோர காவல் படை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

உலகம் முழுவதும் மனிதர்களால் கழிவு பொருட்கள் கொட்டும் இடமாக கடல் பகுதிகள் கருதப்படுகிறது. கடலுக்குள் இருந்து எடுக்கப்பட்ட குப்பைகளில் 59 சதவீத கழிவுகள் பூமியில் இருந்து மனிதர்கள் வீசும் மக்கும் தன்மையற்ற கழிவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய குப்பைகளால் கடல்வளமும், கடல்வாழ் உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே கடல் பகுதிகளை குப்பை–மேடுகளாக்குவதை தடுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் 1986–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3–வது வாரத்தில் கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் நாளை காலை 7.45 மணி முதல் காலை 10 மணி வரை கடற்கரை பகுதிகளில் இந்த தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் கடலோர காவல்படை, பள்ளிகள்–கல்லூரிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொள்கிறார்.

மெரினா கடற்கரையில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார். நமது கடற்கரைகளை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே திரளான பொதுமக்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
On Friday, September 19, 2014 by farook press in ,    
ஆலந்தூர்,
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசிய விமானம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து நேற்று மாலை ஒரு விமானம் வந்தது. அதில் பெருமளவில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சென்னை திருவொற்றியூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 36), தாஜுதீன் (40) ஆகியோர் சுற்றுலா விசாவில் மலேசியா சென்று திரும்பியிருந்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை.
ஒரு கிலோ தங்கம்
ஆனால் இருவரிடமும் டைல்ஸ் கற்களை வெட்டும் கருவிகள் இருந்தன. சந்தேகப்பட்டு அதை பிரித்துப் பார்த்த போது அதில் தலா அரை கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். 1 கிலோ எடையுள்ள அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.30 லட்சம்.
இது தொடர்பாக 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை தங்கம் கடத்தி வர பயன்படுத்திய முக்கிய புள்ளிகள் குறித்து விசாரிக்கின்றனர்.
On Friday, September 19, 2014 by farook press in ,    
ஆலந்தூர், 
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் முன் உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் நேற்று மாலை திடீரென ‘பேனர்கள்’ வைக்கப்பட்டன. இதுபற்றி மீனம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில் அவை அனுமதி இன்றி வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ‘பேனர்’களை உடனடியாக அங்கிருந்து அகற்றினார்கள். இந்த ‘பேனர்’களை அங்கு அனுமதி இன்றி வைத்தது யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
On Friday, September 19, 2014 by farook press in ,    
பூந்தமல்லி,
திருவேற்காடு, சிவன் கோவில் சாலையில் 63 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியில் பனையாத்தம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலை தனிநபர் ஒருவர் பராமரித்து வருகிறார். இந்த இடத்தை வேறு ஒரு தனி நபர் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிலத்தை அளப்பதற்காக நேற்று சர்வேயருடன் 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அங்கு வந்தனர். ஆனால் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது. அதனை அளக்கக்கூடாது என்று அப்பகுதி பொது மக்களும், கோவில் நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து நிலத்தை அளக்காமல் சர்வேயர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதை கண்டித்து 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திடீரென திருவேற்காடு பஸ்நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசியதையடுத்து மறியலை கைவிட்டு வக்கீல்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
On Friday, September 19, 2014 by farook press in ,    
கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் மொத்தம் 1,226 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. கோவை ஆவாரம்பாளையம் வாக்குச்சாவடி எண் 369–ல் ஓட்டுப்பதிவு தொடங்கும்போது மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதேபோல் குளத்துப்பாளையம் வாக்குச்சாவடி எண் 998–லும் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் விரைந்து சென்று எந்திரத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறை சரி செய்தனர். இதைத்தொடர்ந்து 2 வாக்குச்சாவடிகளிலும் 15 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதன்பின்னர் ஓட்டுப்பதிவு எந்தவித இடையூறும் இன்றி நடைபெற்றது.
கோவை மேயர் தேர்தலுக்கு மொத்தம் 1,226 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. ஓட்டுப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்றிவிட்டு புதிய ஓட்டுப்பதிவு எந்திரங்களை பொருத்த தயார்நிலையில் 154 எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே பொருத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடைபெற்று முடிந்ததாக மாநகராட்சி பிரிவு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.