Tuesday, September 30, 2014
வாழப்பாடி: வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வமணி.42. ஜெ., பேரவை நிர்வாகி. இவர், வாழப்பாடியில் உள்ள, 100 அடி உயரம் கொண்ட தூர்தர்ஷன் ஔிபரப்பு டவரில் ஏறி, ஜெ.,வை விடுதலை செய்யாவிட்டால் குதித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். போலீசார், தீ அணைப்பு பிரிவினர், அ.தி.மு.க.வினர் இணைந்து அவரை சமாதனப்பத்தி, டவரில் இருந்து இறக்கினர்
பெங்களூரு: கர்நாடகா ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரத்னமாலா, மனுவிற்கு பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இந்த மனு மீதான விசாரணை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் இந்தாண்டு இயல்பை விட, 90 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரின் ஆண்டு சராசரி மழையளவு 602.45 மி.மீ., 2012ல், 365.29 மி.மீ., 2013ல், 263.88 மி.மீ., பெய்திருந்தது. கோடை மழை சராசரி 124.20 மி.மீ., ஆனால், இந்தாண்டு 132.22 மி.மீ., பதிவானது.ஜூன் முதல் செப்., வரை பெய்யும் தென்மேற்கு பருவ மழை, முதல் இரண்டு மாதங்கள் ஏமாற்றியது. ஜூன், ஜீலை மாதங்களில், 23 மி.மீ., மழை பொழிய வேண்டும்; ஆனால், 3.4 மி.மீ., மட்டுமே பெய்தது. அதன்பின், பருவ மழை தீவிரமடைந்தது. ஆகஸ்டில் சராசரி 31.94 மி.மீ., மழை பெய்தது. நடப்பு ஆண்டு 101.83 மி.மீ., பெய்தது. செப்டம்பரில் சராசரி மழையளவு, 51.54 மி.மீ., இம்மாதம் 29ம் தேதி காலை வரை, 118.6 மி.மீ., பெய்துள்ளது.வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவ மழை, துவக்கத்தில் பாசன ஆதாரமாக உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்தது. அதனால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நிலப்பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், வேளாண் சாகுபடி செய்ய முடியவில்லை.கடைசி இரு மாதங்கள், இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதால், நிலைப்பயிர்கள் மற்றும் சாகுபடி பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதிதாக கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு பருவ மழையும் பெய்தால், கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ள வசதியாக அமையும்,' என்றனர்.
திருப்பூரின் ஆண்டு சராசரி மழையளவு 602.45 மி.மீ., 2012ல், 365.29 மி.மீ., 2013ல், 263.88 மி.மீ., பெய்திருந்தது. கோடை மழை சராசரி 124.20 மி.மீ., ஆனால், இந்தாண்டு 132.22 மி.மீ., பதிவானது.ஜூன் முதல் செப்., வரை பெய்யும் தென்மேற்கு பருவ மழை, முதல் இரண்டு மாதங்கள் ஏமாற்றியது. ஜூன், ஜீலை மாதங்களில், 23 மி.மீ., மழை பொழிய வேண்டும்; ஆனால், 3.4 மி.மீ., மட்டுமே பெய்தது. அதன்பின், பருவ மழை தீவிரமடைந்தது. ஆகஸ்டில் சராசரி 31.94 மி.மீ., மழை பெய்தது. நடப்பு ஆண்டு 101.83 மி.மீ., பெய்தது. செப்டம்பரில் சராசரி மழையளவு, 51.54 மி.மீ., இம்மாதம் 29ம் தேதி காலை வரை, 118.6 மி.மீ., பெய்துள்ளது.வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவ மழை, துவக்கத்தில் பாசன ஆதாரமாக உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்தது. அதனால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நிலப்பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், வேளாண் சாகுபடி செய்ய முடியவில்லை.கடைசி இரு மாதங்கள், இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளதால், நிலைப்பயிர்கள் மற்றும் சாகுபடி பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதிதாக கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு பருவ மழையும் பெய்தால், கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ள வசதியாக அமையும்,' என்றனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கர்நாடகா தனி நீதிமனறத்தில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதை கண்டித்து, 2 வது இன்று காலை 8.00 மணி முதல், மாலை 5 மணி வரை திருப்பூர் புதிய பேருந்து நிலையம் டெலிபோன் அலுவலகம் எதிரில் துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில் 2ஆயிரத்திற்கும் மே ற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் இருந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வடக்கு தொகுதி செயலாளர் ஜான், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் ராதாகிருஷ்ணன், எம்..ஜி.ஆர்., மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து துணை மேயர் சு.குணசேகரன் கூறியதாவது:-
ஒரு சாதாரண குடிமகன்கள் கூட இந்த தீர்ப்பு என்பது மனித உரிமை மீறல் செயல் என கூறுகின்றனர் சாதாரண கைதியை கூட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படகூடாது என்று உள்ளது. ஏன் என்றால் அவருக்கு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால் தமிழக மக்களால் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அடையும் வகையில் நல்ல பல திட்டங்களை மக்களுக்கு அளித்து இந்தியாவிற்கே முன் உதாரணமாகவும், தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாகவும் உருவாக்க அல்லும் பகலும் அயராது பாடுபடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மேல் முறையீடு செய்யகூட வாய்ப்பு அளிக்காத வகையில் அவரை சிறையில் அடைத்து பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சனிக்கிழமை அன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. எத்தனை சக்திகள் வந்தாலும் அவரை அசைக்க முடியாது.அவர் விடுதலை ஆகும் வரை அறப்போராட்டம் தொடரும்.
இவ்வாறு துணை மேயர் சு.குணசேகரன் கூறினார்.
இந்த உண்ணாவிரதத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன், மாணவரணி மாரிமுத்து, பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெகநாதன், சுந்தரமூர்த்தி,வழக் கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, தங்கவேல், மாமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், முருகசாமி,விஜயகுமார், பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, அமுதா வேலுமணி, பி.பாலன், திலகர் நகர் சுப்பு, செந்தில் குமார், சத்தியா, ஈஸ்வரன், சின்னசாமி, சேகர், கிளை கழக செயலாளர்கள் விவேகானந்தன், ராஜேந்திரன், மற்றும் நிர்வாகிகள் பி.எஸ்.டி.செல்வம், சிவகுமார், காலனி செல்வம், மணிகண்டன், சின்னு, கந்தசாமி, பி,பார்த்திபன், மயில்ராஜ், நீதிராஜன், பங்க் என்.ரமேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் அன்னபூரணி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சாதிக் பாஷா, ராமநாதன், வாசுதேவன், வினோத்குமார், முபாரக், ஆகியோர் உள்பட 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள கலந்து கொண்டனர்.
பழி வாங்காதே, பழி வாங்காதே அம்மாவை பழி வாங்காதே,
ஓய்வு இல்லை, உறக்கம் இல்லை, அம்மா வரும் வரை உறக்கம் இல்லை,
ஜாமீன் கொடு, ஜாமீன் கொடு, அம்மாவிற்கு ஜாமீன் கொடு,
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் மனித மீறலை கண்டிக்கிறோம்.
மீண்டும் அம்மா முதல்வராக வருவார்
விழித்திடு, விழித்திடு தமிழனமே விழித்திடு,
என்பது போன்ற கோஷங்கள் உண்ணாவிரதத்தில் படிக்கப்பட்டன.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, நரேந்திர மோடியை சந்தித்தார். பின்னர் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் விருந்து அளித்தார். மோடி நவராத்ரி நோன்பில் இருப்பதால் அவர் சூடன தண்ணீர் மட்டுமே அருந்தினார்.
இந்த விருந்து நிகழ்ச்சிக்கு பிறகு டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள நதேரந்திர மோடி, “அதிபர் ஒபாமாவுடன் அருமையான சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்“ என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் ஒபாமாவுக்கு, நரேந்திர மோடி கீதையின் சிறப்பு பதிப்பு ஒன்றையும், மகாத்மா காந்தியின் விளக்கம் அடங்கிய புத்தகத்தையும் பரிசளித்தார். பின்னர் இரு தலைவர்களும் தங்கள் பதவி ஏற்கும் முன் நடந்த நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இரு தலைவர்களும் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே தங்கள் பிரச்சாரத்தில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினர். தங்கள் ஆட்சி அமைக்கும் போது இரு தலைவர்களும் தலைநகரத்துக்கு வெளியே உள்ள நகரத்தை சேர்ந்தவர்கள். என்று சையது அக்பரூதின் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடியுடன் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் சென்றனர்.
ஒபாமா, மோடிக்கு விருந்த அளித்தபோது வெள்ளை மாளிகை முன்பு அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் கலாச்சர நிகழ்ச்சிகள் நடனங்கள் ஆடினர்.
காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் சீக்கிய அமைப்பை சேர்ந்த சிலர் வெள்ளை முளிகை முன்பு போரட்டத்திலும் ஈடுபட்டனர். சமீபத்தில் வெள்ளை மாளிகையில் இரண்டு முறை பாதுகாப்பு விதி முறைகள் மீறப்பட்ட காரணத்தால் பிளயர் இல்லம் மற்றும் வெள்ளை மாளிகை பலத்த பாதுகாப்புடன் இருந்தது.
ஜப்பானில் சனிக்கிழமையன்று எரிமலை ஒன்று திடீரென வெடித்து சிதறி, அதற்கு அருகில் நூற்றுக்கணக்கான மலையேறிகள் அகப்பட்டுக் கொண்டதில், 30க்கும் அதிகமானோர் இறந்துவிட்டதாக இப்போது நம்பப்படுகின்றது.
மீட்புப் பணியாளர்கள், ஒண்டாகே எரிமலை உச்சிக்கு அருகே சடலங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், ஆனால், அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை.
சுமார் 40 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை எதுவும் இன்றி எரிமலை திடீரென பாறைச் சிதறல்களையும், சாம்பலையும் விசிறியடித்தபோது அங்கிருந்து நூற்றுக்கும் அதிகமான மலையேறிகள் ஒருவாறு தப்பித்து வந்துவிட்டார்கள்.
சிலரை இராணுவ ஹெலிக்கொப்டர்கள் மீட்டிருக்கின்றன.
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் ஒருபால் உறவைத் தடை செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 100 பிரம்படிகள் கொடுக்கப்படும்.
திருமணத்துக்கு வெளியில் பாலுறவை வைத்துக்கொள்பவர்களுக்கும் இதே தண்டனை அளிக்கப்படும்.
ஆச்சே மாகாணம், கடுமையான இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்தோனேசியாவின் மற்ற பகுதிகளில் ஒருபால் உறவுக்குத் தடை இல்லை.
அரசாங்கத்துக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாகப் பத்தாண்டுகளுக்கு முன்னர் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது.
இதன்படி, ஆச்சே மாகாணத்தில் மட்டும் இஸ்லாமிய சட்டக் கோவையான ஷரியா சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஒருபால் உறவுக்குத் தண்டனை அறிவித்துள்ள புதிய சட்டம், மனித உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்று அம்னஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹமீத் கர்காயின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்கிறார்.
ஆப்கானிஸ்தானில் அதிரபராக இருக்கும் ஹமீத் கர்காயின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து ஜனநாயக முறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது.
அந்தத் தேர்தலில் அஷ்ரப் கனி மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அஷ்ரப் கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை அப்துல்லா அப்துல்லா ஏற்கவில்லை. இதனால் தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாமல் இழுபறி நிலை நீடித்தது.
இந்நிலையில் தற்போதைய அதிபர் கர்சாய் முன்னிலையில் அவர்கள் இருவரும் இடையில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி அஷ்ரப் கனி அதிபராகவும், அப்துல்லா அப்துல்லா பிரதமராகவும் நியமனம் செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, புதிய அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்கிறார். இவருடன் 100 உயர் அதிகாரிகளும் பதவி ஏற்கின்றனர். பதவி ஏற்பு நிகழ்ச்சி தலைநகர் காபூலில் நடைபெறுகிறது.
அதிபராகப் பதவி ஏற்கும் அஷ்ரப் கனி மற்றும் அப்துல்லா அப்துல்லா இருவரும் தலிபான் எதிர்ப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் - முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரின் மகள் செல்சியா, பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதன் மூலம் கிளின்டன் தம்பதியினர், தாத்தா - பாட்டி ஆகியுள்ளனர்.
செல்சியா கிளின்டன், 2010ஆம் ஆண்டு மார்க் மெஸ்வின்ஸ்கி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தான் கர்ப்பமாக இருப்பதை 2014 ஏப்ரலில் அறிவித்தார்.
எங்கள் மகள் சார்லோட் கிளின்டன் மெஸ்வின்ஸ்கி பிறந்துள்ள இந்த நேரத்தில், கணவர் மார்க்கும் நானும் முழுமையான காதலுடனும் பிரமிப்புடனும் நன்றியுடனும் இருக்கிறோம் எனச் செல்சியா, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செல்சியா, ஸ்டான்போர்டு, கொலம்பியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்தவர். தன் பெற்றோருடன் இணைந்து, கிளின்டன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அவருடைய கணவர் மார்க், முதலீட்டு வங்கியாளராகப் பணி புரிகிறார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

