Saturday, October 04, 2014
வெள்ளகோவில்,
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் இருந்து தாராபுரம் வரை 100 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் 6–ந்தேதி நடக்கிறது.
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமலிங்கம், நகராட்சி தலைவர் கந்தசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துக்குமார், நகர அ.தி.மு.க. செயலாளர் டீலக்ஸ் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:–
அ.தி.மு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி 6–ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். இந்த மனித சங்கிலி போராட்டம் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தொடங்கி 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாராபுரம் வரை நடைபெறும். இந்த போராட்டத்தில் காங்கயம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1½ லட்சம் பேர் கலந்து கொள்ள வேண்டும். வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருக்கும் வணிகர்கள் கடைகளை அடைக்க வேண்டாம். தொழிலாளர்களை மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுப்பி வையுங்கள்.
ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், ஒன்றியக்குழு தலைவர்கள், வார்டு செயலாளர்கள், ஆகியோர் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளும் பொதுமக்களை திரட்டி கலந்து கொள்ள செய்ய வேண்டும். இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மளிகைகடை வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், டீக்கடை உரிமையாளர்கள், சுமை தூக்குவோர் சங்கத்தினர், மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் அருகே சக்திவாய்ந்த செம்பு குடம் இருப்பதாக கூறி, ரியல் எஸ்டேட் அதிபரிடம் நூதன முறையில் ஏமாற்ற முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் தாராபுரம் சாலை பழனிச்சாமி காம்பவுண்ட் சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 49). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த தொழில் மூலம் திருப்பூர் கள்ளிப்பாளையம் காலனி செட்டிபாளையம் பகுதியைச்சேர்ந்த ராமசாமி(40) என்பவர் நண்பரானார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த மணிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படவே, 2 மாதங்களுக்கு முன் சக்தி வாய்ந்த செம்புத்தகடு ஒன்று உள்ளது அதை வாங்கி வைத்துக்கொண்டால், தொழிலில் லாபம் ஏற்படும் என ராமசாமி, மணியிடம் தெரிவித்தார். இதை நம்பி, செம்புத்தகடை வாங்கி வைத்து கொண்ட மணிக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து சம்பவத்தன்று, பூஜை செய்து வைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த செம்புக்குடம் ஒன்று தனது நண்பர் ஒருவரிடம் உள்ளதாகவும், அதை வாங்கி வைத்துக்கொண்டால் தொழிலில் மேலும் வளர்ச்சியடையலாம் எனவும் ராமசாமி கூறியுள்ளார். இதை நம்பிய மணியை, நேற்று முன்தினம் இரவு காங்கயம் ரோடு பள்ளக்காட்டு புதூரில் உள்ள ஒரு வீட்டிற்கு ராமசாமி உள்ளிட்ட சிலர், காரில் வந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு வைத்து இருந்த ஒரு செம்பு குடத்தை காண்பித்து இது சக்தி வாய்ந்த செம்பு குடம் என்று கூறி அதற்கு ரூ.10 ஆயிரம் தருமாறு மணியிடம் கேட்டுள்ளனர். செம்பு குடத்தை பார்த்ததும் அது சக்தி வாய்ந்தது இல்லை என்பதை அறிந்து கொண்ட மணி அதற்கான பணத்தை தர மறுத்துள்ளார
அதைத்தொடர்ந்து, ராமசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் மணியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடம் இருந்த, ரூ.2 ஆயிரத்தை பறித்துள்ளார்கள். இது குறித்து, திருப்பூர் ரூரல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது, அங்கு மூணாறு சிவன்மலை பகுதியை சேர்ந்த வீராச்சாமி(60), தேனி ஒயிட்ஹவுஸ் நகர் கருப்புசாமி(35), தேனி அல்லிநகரம் குட்டைத்தளம் தெருவைச்சேர்ந்த சுரேஷ் பாண்டி(31), தேனி என்.ஆர்.டி நகரைச் சேர்ந்த சாந்தி(40), திருப்பூர் அங்கேரிபாளையம் ஆசிரியர் காலனியைச்சேர்ந்த கேசவன்(46), அனுப்பர்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பார்த்திபன்(48), திருப்பூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி(40), திருப்பூர் திருவள்ளுவர்நகர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த கோபால்(47), திருப்பூர் பெருமாநல்லூர் எஸ்.டி.கே நகரைச்சேர்ந்த பாண்டியராஜன்(45), விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் முருகேசன்(51), திருப்பூர் காமராஜர் நகர் நாகராஜன் (56) உள்ளிட்ட 11 பேர் கொண்ட கும்பலை திருப்பூர் ரூரல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த கும்பல் வேறு யாரிடமாவது நூதன முறையில் பணத்தை ஏமாற்றியுள்ளார்களா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்ராட். இவர் திருப்பூர் வளையங்காடு வாசுகி நகர் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது 3 வயது மகள் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதன்பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், அதே பகுதியை சேர்ந்த திருப்பூர் அரசு பள்ளியில் படித்து வரும் 17 வயது மாணவன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதைதொடர்ந்து பள்ளி மாணவனை கைது செய்த போலீசார் பொள்ளாச்சியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் மாணவனை சேர்த்தனர்.
ஜெயலலிதா விரைவில் விடுதலை செய்யக்கோரி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி
சர்வசமய பிரார்த்தனை நடந்தது. தீர்ப்புக்கு எதிர்ப்பு
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனிக்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனை, தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி கலையரங்கில் சர்வ சமய பிரார்த்தனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், மேயருமான கணபதி ராஜ் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்து மதம் சார்பில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கிறிஸ்தவ மதம் சார்பில் பாதிரியார் அசோக்குமார் (டி.இ.எல்.சி), முஸ்லிம் மதம் சார்பில் ராம்நகர் ஜமாத் தலைமை இமாம் முகமது பாரூக் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.முன்னதாக மேயர் கணபதி ராஜ்குமார் பேசும்போது தாயை இழந்த குழந்தை போல்
அ.தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட கொடூரமான தீர்ப்புக்கு தமிழக மக்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை காட்டிவருகின்றனர். பொதுவாக பல்சமய பிரார்த்தனையில் மிகுந்த பலன் உண்டு. இந்த வகையில் சதிகாரர்களால் புனையப்பட்ட பொய்வழக்கால் சிறைக்கு சென்றுள்ள கழக பொதுக்செயலாளரை விடுதலை செய்யக்கோரி இந்த கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதில் சாதி, இன, சமய வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபட்டு மனம் உருகி பிராத்தனை செய்வோம். இந்த பிரார்த்தனையில் மிகுந்த வலிமை உண்டு. இந்த பிரார்த்தனையால் தாயை இழந்த குழந்தை போன்று தவிக்கும் தமிழகத்துக்கு விடிவு ஏற்படும் என்று நம்புவோம். மீண்டும் அவர் முதல்–அமைச்சராக வந்து தமிழக மக்களின் கண்ணீரை துடைப்பார். அதற்காக நாம் கையில் தீபங்கள் ஏந்தி கடவுளிடம் மனம் உருக பிரார்த்திப்போம்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தா.மலரவன், வி.சி.ஆறுக்குட்டி, மண்டல தலைவர்கள் கே.ஆர்.ஜெயராமன், ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்தீபன், பெருமாள்சாமி, குழுத்தலைவர்கள் அம்மன் அர்ஜூனன், பிரபாகரன், சாந்தாமணி, வக்கீல் ராஜேந்திரன், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.ராஜூ, அண்ணா தொழிற்சங்க தலைவர் நா.கருப்புசாமி, சி.டி.சி.கருணாகரன், முன்னாள் எம்.பி யு.ஆர்.கிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் பீளமேடு துரை, சிங்கை ரங்கநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் மெழுகு வர்த்தி தீபம் ஏந்தி மவுன பிரார்த்தனை செய்தனர்.
இதுபோல் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கோவை மாவட்ட தக்னி சுன்னத் ஐக்கிய ஜமாத் சார்பில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏ.அகமத் பாஷா தலைமை தாங்கினார். இதில் செயலாளர் கலிமுதீன், அப்துல் ரஷீத், நசீர் ஷரீப், அன்வர் பாஷா, ஷேக்பாபு, அப்துல் ஜப்பார், முகமது ஷரீப், அப்துல் மன்னார் சையத்குத்தூஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இதுபோல் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி செல்வபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் அந்த பகுதியில் கடைஅடைப்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி நேற்று செட்டிவீதி முதல் ஆண்டிபாளையம் வரை, செல்வபுரம் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் செல்வபுரத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த கண்டன கூட்டத்தில், சங்க தலைவர் கருப்பையா, செயலாளர் சிவசேகர், பொருளாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் மெடிக்கல் நாராயணன், லட்சுமிசேகர், துணைதலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் கோவை தியாகி குமரன் மார்க்கெட் காய், கனி சிறுவியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மார்க்கெட் சபூர் பாய் தலைமை தாங்கினார். முத்தலி, உமர்அலி, முஸ்தபா, கிருஷ்ணன், சங்கர், சுக்கூர்பாய், கரீம், விசாலாட்சி, யூசுப், ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் கோவை உக்கடம் லாரிப்பேட்டை முகமதுஅலி பழைய இரும்பு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.
சர்வசமய பிரார்த்தனை நடந்தது. தீர்ப்புக்கு எதிர்ப்பு
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனிக்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனை, தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி கலையரங்கில் சர்வ சமய பிரார்த்தனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், மேயருமான கணபதி ராஜ் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்து மதம் சார்பில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கிறிஸ்தவ மதம் சார்பில் பாதிரியார் அசோக்குமார் (டி.இ.எல்.சி), முஸ்லிம் மதம் சார்பில் ராம்நகர் ஜமாத் தலைமை இமாம் முகமது பாரூக் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.முன்னதாக மேயர் கணபதி ராஜ்குமார் பேசும்போது தாயை இழந்த குழந்தை போல்
அ.தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட கொடூரமான தீர்ப்புக்கு தமிழக மக்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை காட்டிவருகின்றனர். பொதுவாக பல்சமய பிரார்த்தனையில் மிகுந்த பலன் உண்டு. இந்த வகையில் சதிகாரர்களால் புனையப்பட்ட பொய்வழக்கால் சிறைக்கு சென்றுள்ள கழக பொதுக்செயலாளரை விடுதலை செய்யக்கோரி இந்த கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதில் சாதி, இன, சமய வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபட்டு மனம் உருகி பிராத்தனை செய்வோம். இந்த பிரார்த்தனையில் மிகுந்த வலிமை உண்டு. இந்த பிரார்த்தனையால் தாயை இழந்த குழந்தை போன்று தவிக்கும் தமிழகத்துக்கு விடிவு ஏற்படும் என்று நம்புவோம். மீண்டும் அவர் முதல்–அமைச்சராக வந்து தமிழக மக்களின் கண்ணீரை துடைப்பார். அதற்காக நாம் கையில் தீபங்கள் ஏந்தி கடவுளிடம் மனம் உருக பிரார்த்திப்போம்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தா.மலரவன், வி.சி.ஆறுக்குட்டி, மண்டல தலைவர்கள் கே.ஆர்.ஜெயராமன், ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்தீபன், பெருமாள்சாமி, குழுத்தலைவர்கள் அம்மன் அர்ஜூனன், பிரபாகரன், சாந்தாமணி, வக்கீல் ராஜேந்திரன், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.ராஜூ, அண்ணா தொழிற்சங்க தலைவர் நா.கருப்புசாமி, சி.டி.சி.கருணாகரன், முன்னாள் எம்.பி யு.ஆர்.கிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் பீளமேடு துரை, சிங்கை ரங்கநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் மெழுகு வர்த்தி தீபம் ஏந்தி மவுன பிரார்த்தனை செய்தனர்.
இதுபோல் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கோவை மாவட்ட தக்னி சுன்னத் ஐக்கிய ஜமாத் சார்பில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏ.அகமத் பாஷா தலைமை தாங்கினார். இதில் செயலாளர் கலிமுதீன், அப்துல் ரஷீத், நசீர் ஷரீப், அன்வர் பாஷா, ஷேக்பாபு, அப்துல் ஜப்பார், முகமது ஷரீப், அப்துல் மன்னார் சையத்குத்தூஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இதுபோல் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி செல்வபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் அந்த பகுதியில் கடைஅடைப்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி நேற்று செட்டிவீதி முதல் ஆண்டிபாளையம் வரை, செல்வபுரம் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் செல்வபுரத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த கண்டன கூட்டத்தில், சங்க தலைவர் கருப்பையா, செயலாளர் சிவசேகர், பொருளாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் மெடிக்கல் நாராயணன், லட்சுமிசேகர், துணைதலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் கோவை தியாகி குமரன் மார்க்கெட் காய், கனி சிறுவியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மார்க்கெட் சபூர் பாய் தலைமை தாங்கினார். முத்தலி, உமர்அலி, முஸ்தபா, கிருஷ்ணன், சங்கர், சுக்கூர்பாய், கரீம், விசாலாட்சி, யூசுப், ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் கோவை உக்கடம் லாரிப்பேட்டை முகமதுஅலி பழைய இரும்பு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்து உள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் யானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியி ருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. தற்போது யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் தொடங்கி உள்ளதால், அவை கோவை வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும் போது காட்டு யானைகள் அருகே உள்ள குடியிருப்புகளில் நுழைந்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமலை வனப்பகுதியில் இருந்து 12 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் யானைமடுவு பகுதிக்குள் நுழைந்தன. பின்னர் அந்த யானைகள் அங்கிருந்த வாழைத்தோட்டங் களில் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன. இதை அறிந்த பொதுமக்கள் தீவிர முயற்சி செய்து யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.
ஆனால் அவை வனத்திற்குள் செல்லாமல் அங்கிருந்து தாளியூர் வழியாக தீனம்பாளையம் பகுதிக்கு சென்றன. பின்னர் தீனம்பாளையம் மெயின் ரோட்டில் சிறிதுநேரம் நின்று கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு ரேஷன் கடையின் கதவை காட்டுயானைகள் உடைத்து உள்ளே புகுந்தன. பின்னர் ரேஷன் கடையில் இருந்த அரிசியை யானைகள் தின்று தீர்த்தன.
இதை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானைகளை விரட்ட முயன்றனர். மேலும் வனத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் காட்டுயானைகள் நின்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்து உள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் யானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியி ருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. தற்போது யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் தொடங்கி உள்ளதால், அவை கோவை வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும் போது காட்டு யானைகள் அருகே உள்ள குடியிருப்புகளில் நுழைந்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமலை வனப்பகுதியில் இருந்து 12 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் யானைமடுவு பகுதிக்குள் நுழைந்தன. பின்னர் அந்த யானைகள் அங்கிருந்த வாழைத்தோட்டங் களில் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன. இதை அறிந்த பொதுமக்கள் தீவிர முயற்சி செய்து யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.
ஆனால் அவை வனத்திற்குள் செல்லாமல் அங்கிருந்து தாளியூர் வழியாக தீனம்பாளையம் பகுதிக்கு சென்றன. பின்னர் தீனம்பாளையம் மெயின் ரோட்டில் சிறிதுநேரம் நின்று கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு ரேஷன் கடையின் கதவை காட்டுயானைகள் உடைத்து உள்ளே புகுந்தன. பின்னர் ரேஷன் கடையில் இருந்த அரிசியை யானைகள் தின்று தீர்த்தன.
இதை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானைகளை விரட்ட முயன்றனர். மேலும் வனத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் காட்டுயானைகள் நின்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்படும்படியாக சென்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது கோணிப்பையில் 25 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார்(வயது 25) என்பதும், டாஸ்மாக் கடையில் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி டாஸ்மாக் கடை விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி அன்று திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது. சிவகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றினர்.
சென்னை தண்டையார்பேட்டை ரெயில்வே யார்டில் மின்வயரில் சிக்கிய காற்றாடியை எடுக்க சென்றபோது மின்சாரம் தாக்கி 10–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 15). இவன், அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 1–ந் தேதி தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் ரெயில்வே யார்டில் உள்ள மின்சார கம்பியில் சிக்கிய காற்றாடியை எடுக்க அங்கிருந்த ரெயில்வே பணி வண்டியில் ரமேஷ் ஏறினான். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்வயரில் அவனது உடல் உரசியது.
இதில் அவன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். படுகாயம் அடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி வ.உ.சி. நகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரம் கம்ப்யூட்டர் பழுதானது. இதனால் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென குடியுரிமை பகுதி, போர்டிங் பாஸ் வழங்கும் பகுதி ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர்கள் பழுதாகி செயல் இழந்தது.
அப்போது சென்னையில் இருந்து லண்டன், குவைத், கொழும்பு, மஸ்கட், பக்ரைன் உள்பட 10 நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. அதில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் பாதுகாப்பு சோதனை மற்றும் குடியுரிமை சோதனை செய்வதற்காக நீண்ட வரிசையில் கவுண்ட்டர்களில் காத்து இருந்தனர்.
ஆனால் கம்ப்யூட்டர் பழுதானதால் விரைவாக சோதனை நடத்த முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் வந்து பார்த்தனர்.
இது பற்றி கம்ப்யூட்டர் பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்களில் பலர் தசரா மற்றும் பக்ரீத் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இதையடுத்து பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்து மீண்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
5 மணிநேர போராட்டத்துக்கு பிறகு காலை 7.30 மணி அளவில் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதுவரை பயணிகள் சோதனை மற்றும் போர்டிங் பாஸ் வழங்கும் பணிக்காக கூடுதலான ஆட்களை நியமித்து வழங்கப்பட்டன.
இதனால் 10 விமானங்களும் சுமார் அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி சென்னை புறநகர் பகுதியில் அ.தி.மு.க.வினர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நந்தம்பாக்கத்தில் மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான எஸ்.ராஜசேகர் தலைமை தாங்கினார். மண்டலக்குழு தலைவர் பரிமளா நந்தகுமார், கவுன்சிலர்கள் ஹேமாபரணிபிரசாத், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, எம்.எல்.ஏ.க்கள் ப.தன்சிங், வி.என்.பி.வெங்கட்ராமன், ஒன்றிய தலைவர் என்.சி.கிருஷ்ணன், பட்ரோடு தேன்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் மூவரசம்பட்டில் மாவட்ட பாசறை செயலாளர் கோவிலம்பாக்கம் ராஜேஷ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அப்போது மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் பக்தவச்சலம் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் 10 பேர் மொட்டை போட்டுக்கொண்டனர்.
கொட்டிவாக்கத்தில் பெருங்குடி மண்டலக்குழு தலைவர் கொட்டிவாக்கம் ராஜாராம் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் கே.பி.கந்தன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் டி.வி.நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஆலந்தூர் நகர ஜெயலலிதா பேரவை சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. மாநகராட்சி கவுன்சிலரும், பேரவை செயலாளருமான சீ.வேம்பரசன் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் என்.தனசேகரன், எஸ்.வரதராஜன், பி.சிவராஜ், ஜி.பி.குணா, எம்.எச்.உமர்கத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 5 அ.தி.மு.க. தொண்டர்கள் மொட்டை போட்டுக் கொண்டனர்.
தென்சென்னை மாவட்ட இலக்கிய அணி சார்பில், ஜெயலலிதா விடுதலை கோரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஷேக்அலி, மஜித் ஆகியோர் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ஜி.செந்தமிழன், எம்.கே.அசோக், மாநகராட்சி கவுன்சிலர் என்.எஸ்.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நந்தம்பாக்கத்தில் அ.தி.மு.க. செயலாளர் பர்மா கண்ணன் 108 அலகு குத்தி கொண்டு தேர் இழுத்தார். நீலாங்கரையில் சென்னை மாநகராட்சி கணக்கு தணிக்கை குழு தலைவர் நீலாங்கரை முனுசாமி தலைமையில் மனித சங்கிலி பேரணி நடந்தது. கோவிலம்பாக்கம் ஊராட்சி அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து மணலியில் அ.தி.மு.க.வினர் மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் தலைமையில் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஜோசப், எஸ்.ஆர்.ரவி, சங்கர் உள்பட 101 அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்துக்கொண்டனர். மேலும் மும்மத வழிபாடும், யாக சாலை வழிபாடும் செய்தனர்.
இதில் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.குப்பன், மண்டலக்குழு தலைவர் தங்கசிவம், நகர செயலாளர் டாக்டர் கே.சி.சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அனைவரும் ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல எண்ணூரில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வம், எழிலரசி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
அம்பத்தூரில் நகர அ.தி.மு.க. சார்பில் அம்பத்தூர் ஓ.டி.பஸ்நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அம்பத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...




