Friday, March 13, 2015

On Friday, March 13, 2015 by Unknown in ,    

மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில், மதுரையை அடுத்த ஊமச்சிகுளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலர் மமேஷ் பொய்யாமொழி, ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தார். மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலர்கள் பி.மூர்த்தி (வடக்கு), மு.மணிமாறன் (தெற்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். சட்டப்பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, ஒன்றியச் செயலர்கள் ரகுபதி (மதுரை கிழக்கு) சிறைச்செல்வன் (மதுரை மேற்கு) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திமுக இளைஞரணியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 3500 பேர் ரத்ததானம் வழங்கினர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மேற்பார்வையில் ரத்த வங்கிகளுக்கு ரத்தம் தானமாகப் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மாணவர்கள் 100 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
On Friday, March 13, 2015 by Unknown in ,    
2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் மாநிலம் முழுவதும், மாவட்ட வாரியாக பொதுமக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறார். மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது பாமக ஆட்சி பொறுப்பேற்றால் செய்யப்போகிற திட்டங்களை பட்டியல் இட்டார் .மதுவையும் ஊழலையும் ஒழிப்பதே முதல் லட்சியம் என பேசிய அவர் சுதந்திர இந்தியாவில் அதிக ஊழல் செய்த கட்சியாக அதிமுக  விளங்குகிறது என சாடினார் .தமிழகத்தில் தான் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர் நியமனத்திற்கு 8 லட்சம் ,ஓட்டுனர் நியமனத்திற்கு 5 லட்சம் ,நடத்துனர் நியமனத்திற்கு 3 லட்சம் செவிலியர் நியமனத்திற்கு 4 லட்சம் வீடு கட்டுவதற்கு 1 சதுர அடிக்கு 80 முதல் 150 ரூபாய் தொகை வசூலிக்கப் படுவதாகவும் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என அதிமுக ஆட்சியில் மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை ஊழலே மலிந்துள்ளதாக கூறினார் .நிர்வாகம் என்பதேசுத்தமாக நடைபெறாத நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா விடுதலை ஆக வேண்டும் என யாகம் நடத்துகிறார் அதில் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்ற ஒரு அவல நிலை தமிழகத்தில் நிலவி வருவதாக குறிப்பிட்டார் .தன் மீது சாதி சாயல் விழவில்லை என்றும் தன்னை பொது வேட்பாளராக கருதி காமராஜருக்கு ,அண்ணாவிற்கு ,நடிகருக்கு ,கலைஞருக்கு ஒரு வாய்ப்பு  கொடுத்தது போல் மருத்துவராகிய தனக்கும் தமிழக மக்கள் வாய்ப்பு தருவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் .ஜி கே மணி .வடிவேல் இராவணன் ஆகியோர் உடன் இருந்தனர்
On Friday, March 13, 2015 by Tamilnewstv in    

Thursday, March 12, 2015

On Thursday, March 12, 2015 by farook press in ,    

On Thursday, March 12, 2015 by farook press in ,    
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாடு மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நான்கு நாட்கள் திருப்பூரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு வரும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (புதிய கட்டிடம்) கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெறுகின்றன. 
கட்டுரை போட்டிக்கு கல்வி - அறிவைத் தூண்டுவதா? மதிப்பெண்ணைத் தாண்டுவதா? அல்லது கல்வெட்டு முதல் கணினி வரை.. தமிழே காண்! அல்லது எந்நாட்டிலும் இல்லாத சாதி, இங்கு மட்டும் ஏன்? என்ற மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் நான்கு பக்க அளவில் கட்டுரை எழுதலாம்.
கவிதை போட்டியில் சாதி மதங்களைப் பாரோம்! அல்லது மெல்லத் தமிழ் இனி வளரும்! அல்லது தீண்டாமைக்குத் தீயிடுவோம்! என்ற மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் இரண்டு பக்க அளவில் கவிதைகள் எழுதலாம்.
இந்த போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தேவையான தாள்கள் இங்கேயே தரப்படும். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.ஆயிரம் மற்றும் பதக்கம், புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு மார்ச் 22ம் தேதி திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெறும் தமுஎகச மாநில மாநாட்டு கலை இரவு நிகழ்ச்சியில் பரிசளிப்பு விழா நடைபெறும்.
இந்த போட்டிகள் குறித்து மேலும் விபரங்களுக்கு: 94434 70780, 97860 73353, 90039 46766, 99445 54204, 99428 87500, 94861 08729, 90434 64007, 94421 64354 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தமுஎகச மாநில மாநாட்டு வரவேற்புக்குழு தெரிவித்துள்ளது.
-------------
On Thursday, March 12, 2015 by farook press in ,    
தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் புதிய தலைமுறை தொலைகாட்சி மீதும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க கலை இரவு நிகழ்ச்சியிலும் தாக்குதல் நடத்திய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை சிஐடியு தமிழ் மாநிலக் குழுக் கூட்டம் துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் வி.குமார், ஆர்.கருமலையான், கே.திருச்செல்வன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் உள்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மத அடையாளம் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் மாற்றுக் கருத்து மற்றும் நம்பிக்கை கொண்டோரை குறிவைத்து இந்துத்துவ அமைப்பினர் தாக்குகின்றனர். இது இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மதிக்க மறுக்கிற ஜனநாயக விரோத செயலாகும். இதை பாஜக அரசு பகிரங்கமாக கண்டிப்பதற்கு பதிலாக வேடிக்கை பார்க்கிறது. இதை தொடர் தாக்குதலுக்கான சமிக்கையாக கருதி இந்துத்துவ வன்முறையாளர்கள் தொடர் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இதை சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் எழுத்தாளர்கள் பெருமாள்முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரை தாக்கியதும், அவர்களின் எழுத்துரிமையைப் பறிக்கிற செயலிலும் வகுப்புவாத சாதிய சக்திகள் இறங்கினர்.
கடந்த மார்ச் 7ம் தேதி தமுஎகச சங்கத்தின் சார்பில் உடுமலைபேட்டையில் நடந்த கலை இரவு நிகழ்ச்சிகளின் மீது தாக்குதல் தொடுத்து நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி செய்துள்ளனர். மார்ச் 8ம் தேதியன்று ஆயுதங்களுடன் சென்று புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனத்தின் மீது இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீண்டும் 12ம் தேதி அதிகாலை 3 மணியளவில் புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தகைய வன்செயல்கள் கடும் கண்டனத்திற்குரியதாகும். சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு தாக்குதலுக்கு காரணமான இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறது. தொடர் தாக்குதலில் இந்துத்துவ அமைப்பினர் ஈடுபடுவதற்கு காரணம் மாநில அரசு கண்டுகொள்ளாத போக்கே ஆகும் என சிஐடியு குற்றம் சுமத்துகிறது. எனவே தமிழக அரசும், காவல் துறையும் பிரச்சனைகளின் தீவிரத்தன்மையை உணர்ந்து நியாயமான நடவடிக்கை எடுப்பதும், "கலாச்சார காவலர்கள் என தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு அலையும் கும்பலை" கைது செய்யவும், கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும் என சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிஐடியு மாநிலக்குழுக் கூட்டம் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.
-----------
On Thursday, March 12, 2015 by Tamilnewstv in    


அதில் பங்கேற்ற எஸ்.டி.பி. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் கூறியது லஞ்சம் ஊழலை கட்டு படுத்த கோரியும் மற்றும் தமிழகத்தில் லோக் அயுக்தா அமைத்திட வலியுறுத்தியும் திருச்சி மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போரட்டம் நடத்;துகிறோம் என்றும் இறந்தவர் சான்றிதல் முதல் பிறந்த சான்றிதல் பெறவும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.