Friday, September 30, 2016
🔴🔵 *முதல்வர் குறித்து தேவையற்ற வதந்தியை பரப்ப வேண்டாம்!- எச்சரிக்கை பதிவு!!*
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து யாரும் தேவையற்ற வதந்தியை பரப்ப வேண்டாம். இப்படி... அப்படி... தகவல் வருகிறதே என்று யாரும் குழுவில் பதிந்து விளக்கம் கேட்க வேண்டாம். இப்போது வரை முதல்வர் நலமுடன் உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தேவையற்ற வதந்தியை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காதீர். காவல்துறையும் கண்காணித்து வருகிறது. எல்லா செய்தியும் எப்படி பதிவு செய்யப்படுகிறதோ, அதைப்போல முதல்வர் குறித்து தகவல் வந்தால் உடனடியாக பதிவு செய்யப்படும். எனவே உங்கள் ஒவ்வொரு பதிவிலும் கவனம் தேவை. 💥
இந்து முன்னணியை தடைசெய் !
இன்றுதிருப்பூரில் ஆர்ப்பாட்டம் !
மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் சமூக அமைதிக்கும்,கடைகளுக்கு அச்சுறுத்தலாக கலவரத்தை ஏற்படுத்தும் இந்து முன்னணியை தடை செய்ய வலியுறுத்தி !
நாள் : 30.09.16 வெள்ளிக்கிழமை.
நேரம் : மாலை 3 மணி.
இடம் : மாநகராட்சி அலுவலகம் அருகில்,திருப்பூர்.
திருப்பூர் : -
திருப்பூரில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வில் போட்டியிடுவதற்காக சீட்டு வழங்காததால் முன்னாள் மாநகராட்சியின் திமுக எதிர் தலைவர் சுப்பிரமணி சுயேர்ச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு.
திருப்பூர் 32 வது வார்டை சேர்ந்தவர் செங்கப்பள்ளி சுப்பிரமணி இவர் 40 ஆண்டுகளாக திமுக வில் இருந்து வருகிறார்.கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகாவின் சார்பில் 32 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அதனை தொடர்ந்து மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகுத்தார்.இந்நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக திருப்பூர் மாவட்ட திமுக வில் விருப்பமனு அளித்து இருந்தார்.இந்நிலையில் நேற்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் செங்கப்பள்ளி சுப்பிரமணியத்தின் பெயர் இல்லாத நிலையில் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டகாகவும் கடந்த முறை தனக்கு சீட்டு வழங்கி 32 வது வார்டு பகுதியில் அநேக மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாகவும் தற்பொழுது திமுக வில் தனக்கு சீட்டு கொடுக்காமல் மற்ற ஒருவருக்கு சீட்டு வழங்கி உள்ளதால் தான் திமுக வின் சார்பில் போட்டியிடும் வேட்ப்பாளரை எதிர்த்து சுயெர்ச்சையாக போட்டியிடப்போவதாகவும் அதில் தான் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார்.
Thursday, September 29, 2016

பாரதீய ஜனதா பிரமுகர் கடைக்கு தீ வைப்பு சம்பவத்தால் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாலை மறியல் போராட்டம்திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோட்டில் உள்ள பாரதீய ஜனதா கட்சி பிரமுகரின் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதா அமைப்பாளர்கள், தொண்டர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. உடனடியாக அங்கு 50–க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அங்கு திடீரென பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு சில கடைகளும் அடைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் அங்கு திரண்ட பாரதீய ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த கோரியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காங்கேயம் கிராஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் உறுதி
மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களையும் எழுப்பினார்கள். அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் அறிவுறுத்தலின்படி அந்த பகுதியில் உள்ள கடைகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட ஆரம்பித்தது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாராபுரம்தாராபுரம் அருகே கோழிப்பண்ணையிலிருந்து வெளியேறும் கோழி இறகுகளால் 5 கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் கோழிப்பண்ணையை மூடக்கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோழிப்பண்ணை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கரைப்புதூரில் தனியாருக்கு சொந்தமான முட்டை கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளின் இறகுகள் காற்றில் பறந்து சென்று அருகே உள்ள விளை நிலங்களில் விழுந்து கிடப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆடு,மாடுகள் கோழி இறகுகளை சாப்பிட்டு விடுவதால் இறந்துபோகின்றன. சுகாதாரகேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் ஒன்று திரண்டு சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணையை மூடக்கோரி கோழிப்பண்ணை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கரைப்புதூர் கிராம மக்கள் கூறியதாவது:–5 கிராம மக்கள் அவதி
எங்கள் கிராமத்தில் கடந்த ஒரு வருடமாக தனியார் கோழிப்பண்ணைகள் சில அமைக்கப்பட்டன. அப்போது கிராம மக்கள் இதற்கு எதிர்ப்புதெரிவிக்கவில்லை. காரணம் கறிக்கோழிக்காக அமைக்கப்படும் பண்ணை என்று நினைத்து விட்டோம். ஆனால் இந்த கோழிப்பண்ணைகளில் முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஒரு பண்ணையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இந்த பகுதியில் இதுபோல் 4 கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த கோழிகளிலிருந்து விழும் இளம் இறகுகள் காற்றில் பறந்து வருகிறது. அவ்வாறு பறந்து வரும் இறகுகள் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கரைப்புதூர், சிறுகிணறு, மணல்திட்டுப்பாளையம், கொத்தனூர், எஸ்.ஆலாம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் விழுந்து விடுகிறது. இதனால் காடுமுழுவதும் கோழி இறகுகளாக பரவிக்கிடக்கிறது. விவசாயம் செய்ய முடிவதில்லை. மேய்ச்சலின் போது ஆடு, மாடுகள் தெரியாமல் இறகுகளையும் சேர்த்து சாப்பிட்டு விடுகின்றன. இதனால் அவைகள் இறந்துபோகின்றன. கோழி இறகுகளை சாப்பிட்டு இதுவரை 2 மாடுகளும், 4 ஆடுகளும் இறந்து உள்ளன. காற்று மாசடைந்து விட்டதால், இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளது, நீர் நிலைகள் மாசடைந்து விட்டதால் தொற்று நோய்கள் பரவி வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் குழுந்தைகள் அபூர்வா (வயது 12) மற்றும் அபர்ணா (4) ஆகியோருக்கு மர்ம காய்ச்சல் வந்து கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள கோழிப்பண்ணைகளால் 5–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த கோழிப்பண்ணையை உடனே மூடவேண்டும் என்று கோழிப்பண்ணைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
திருப்பூர் அருகே ஊத்துக்குளி டவுன் பகுதி சாலையோரத்தில் குளத்துப்பாளையம் பகுதியைச்சேரந்த மாடசாமி(49)என்பவர் மர்மமானமுறையில் இறந்துகிடந்தார்.இவரை ஊத்துக்குளி காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி விசாரித்துவருகின்றனர்.காவல் துறைவிசாரனையில் கடந்த14/7/2016தினம் அன்று ஊத்துக்குளி அரசுமருத்துவமனையில் ஆஸ்த்துமா நோய்க்கு சிகிச்சைபெற்றுவந்துள்ளார் அதன் பிறகு 21/7/16தினம் அன்று மருத்துவமனையில்லிருந்து எவருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார் பின்னர் இன்று காலை அதே மருத்துவமனைக்குசென்று சிகிச்சைமேற்கொண்டுள்ளார் ஆனால் நோய் முற்றியதால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டதாக தகவல் தெரிகிறது பிணத்தை கைப்பற்றி திருப்பூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

திருப்பூர்திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் ஓட்டுப்பெட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.உள்ளாட்சி தேர்தல்திருப்பூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 17 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 170 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2,295 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என்று 2,747 பதவிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 17–ந்தேதி மற்றும் 19–ந்தேதி ஆகிய 2 நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 26–ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.ஊரக பகுதியில் 1,636 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இதில் இரட்டை உறுப்பினர் கொண்ட 714 ஊராட்சி வார்டுகள் உள்ளன. ஊரகப்பகுதியை பொருத்தவரை ஒரு வாக்காளர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும். 714 ஊராட்சி வார்டுகளை சேர்ந்தவர்கள் மட்டும் 5 பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.ஓட்டுப்பெட்டிகள்
இதனால் பழைய முறைப்படி, வாக்குச்சீட்டுகளும், அவற்றை போட இரும்பு பெட்டிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. சாதாரணமாக ஒரு வார்டில் 5 வேட்பாளர்கள் இருந்தால் கோத்ரெஜ் வகை பெட்டியில் 500 வாக்குச்சீட்டுகளும், டான்சி வகை நடுத்தர பெட்டியில் 1200 வாக்குச்சீட்டுகளும் போட முடியும். இதுவே டான்சி வகை சிறப்பு பெட்டியாக இருந்தால் 10 வேட்பாளர்கள் ஒரு வார்டில் போட்டியிட்டால் கூட ஒரு பெட்டியில் 1600 வாக்குச்சீட்டுகள் போட முடியும்.இதனால் வார்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே எந்த வகையான ஓட்டுப்பெட்டிகளை அந்த வார்டில் பயன்படுத்துவது என்று நிர்ணயிக்க முடியும். திருப்பூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பயன்படுத்த, 3,183 கோத்ரெஜ் வகை இரும்பு பெட்டிகளும், 2,168 டான்சி வகை நடுத்தர பெட்டிகளும், 1,900 டான்சி வகை சிறப்பு பெட்டிகளும் என்று 7,251 ஓட்டுப்பெட்டிகள் கையிருப்பில் உள்ளன.கூடுதல் பெட்டிகள்
கிராம பகுதிகளை பொருத்தவரை கட்சி பாகுபாடு இன்றி ஏராளமானோர் சுயேட்சையாக போட்டியிடுவார்கள். அதே நேரம் சில பகுதிகளில் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போட்டியின்றியும் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு வேளை பல்முனை போட்டி ஏற்பட்டு, அதிக வேட்பாளர் போட்டியிட்டால், ஓட்டுப்பெட்டிகள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், கூடுதல் பெட்டிகளை இருப்பு வைக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதற்காக, நெல்லை மாவட்டத்தில் இருந்து முதல் கட்டமாக 1,526 கோத்ரெஜ் வகை ஓட்டுப்பெட்டிகள் வந்தன.இதைத்தொடர்ந்து வேலூரில் இருந்து நேற்று 250 ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டன. இவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டபின்னர், எந்த வார்டுக்கு எந்த வகை பெட்டியை பயன்படுத்துவது என்று கணக்கிட்டு சம்பந்தப்பட்ட வார்டுக்கு தேவையான ஓட்டுப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும்.

காங்கேயம்,காங்கேயம் பஸ் நிலையத்தில் மது அருந்திவிட்டு குடிபோதையில் படுத்து கிடக்கும் குடிமகன்களால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.குடிபோதையில் கிடப்பவர்களால் அவதி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பஸ் நிலையம் ஒரு முக்கிய சந்திப்பாக விளங்குகிறது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் 700–க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. அதுபோல் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த பஸ்நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு வெளியூர் பஸ் நிலையம் மற்றும் டவுன் பஸ் நிலையம் என இரண்டு பஸ் நிலையங்கள் ஒரே வளாகத்தில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட இந்த பஸ் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே குடிமகன்கள் தினமும் குடித்துவிட்டு குடிபோதையில் படுத்து கிடப்பதை காணமுடிகிறது.இவ்வாறு குடிபோதையில் படுத்துக் கிடக்கும் குடிமகன்கள், நுழைவு வாயிலில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு உளறிக்கொண்டும், வாந்தி எடுத்தும், அந்த இடத்தை அசுத்தப்படுத்திக்கொண்டும் இருப்பதால் பயணிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். அது மட்டுமின்றி படுத்து கிடப்பவர்களின் துணிகள் விலகி அருவருக்கத்தக்க வகையில் கிடப்பதால் பயணிகள் முகசுழிப்புடன் நிற்கவேண்டியுள்ளது.கோரிக்கை
இவ்வாறு அருவருக்கத்தக்க வகையில் குடிமகன்கள் பஸ்நிலையத்தில் படுத்து கிடப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. பஸ்நிலையம் அருகிலேயே டாஸ்மாக் கடைகள் இருப்பதால் குடிமகன்களுக்கு வசதியாக போய்விட்டது. குடித்து விட்டு பஸ்நிலையம் சென்று படுத்துக்கிடக்கிறார்கள்.எனவே போலீசார் அடிக்கடி பஸ்நிலையம் சென்று குடிபோதையில் இவ்வாறு படுத்து கிடக்கும் குடிமகன்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பஸ்நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளை மூடியாவது குடிமகன்களின் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...