Monday, October 24, 2016

On Monday, October 24, 2016 by Unknown in    

தளி,

அமராவதி ஆற்றுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த 2 முதலைகள் சிக்கின. அவற்றை வனத்துறையினர் மீட்டு முதலைப்பண்ணையில் கொண்டு ஒப்படைத்தனர்ஆற்றில் முதலைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து சற்று தொலைவில் உடுமலை-கல்லாபுரம் சாலையில் வனத்துறையால் பராமரிக்கப்படும் முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள முதலைகளுக்கு மாட்டு இறைச்சியும், மீனும் உணவாக வழங்கப்படுகிறது. இங்குள்ள தொட்டிகளின் மேல் பகுதி மூடப்படாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பறவைகள் முதலைகுட்டிகளை உணவிற்காக எடுத்து செல்லும் நிலை உள்ளது.

அப்போது பறவைகளிடம் இருந்து கீழே விழுந்து உயிர் பிழைக்கும் முதலைகுட்டிகள் அமராவதி அணை மற்றும் ஆற்றுப்பகுதியில் வசிக்கின்றன. அப்படி விழும் முதலைகள் புதர்களில் ஆங்காங்கே மறைந்து வாழ்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கணியூர், கடத்தூர், கல்லாபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் அமராவதி ஆற்றில் உள்ள முதலைகளை பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.ஊருக்குள் புகுந்தன

இந்த நிலையில் கல்லாபுரம் அண்ணாநகர் அருகே வயல்வெளி பகுதியில் ஒரு முதலை சுற்றித்திரிவதாகவும், மற்றொரு முதலை கல்லாபுரம்- கொழுமம் சாலை அருகே உள்ள சுமார் 30 அடி ஆழ கிணற்றில் உள்ளதாகவும் வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த 2 முதலைகளையும் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 2 முதலைகளையும் முதலைப்பண்ணையில் கொண்டு வனத்துறையினர் ஒப்படைத்தனர். அவை அங்கு பரா மரிக்கப்பட்டு வருகின்றன

On Monday, October 24, 2016 by Unknown in    

உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.நகராட்சி வாரசந்தை

உடுமலை ராஜேந்திரா ரோட்டில் நகராட்சி வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் வியாபாரிகள், காய்கறிகளை வாங்கி செல்வதற்கு வரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தேவையான அடிப்படை தேவைகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் வகையில் வாரச்சந்தை புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், கடைகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளது.மழை காலமாதலால் ஓடையை தூர்வாருதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைத்திட்ட பணிகள் நடந்து வருகிறது. உடுமலை தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, இணைப்பு சாலையை அமைக்கவும், உடுமலையில் அம்மா திருமண மண்டபம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் நேற்று பார்வையிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.ஆலோசனை

இந்த பணிகள் உள்பட நகராட்சிப்பகுதியின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று உடுமலையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் (சென்னை) உடுமலை நகராட்சி ஆணையாளர் கே.சரவணகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது நகராட்சி பொறியாளர் தங்கராஜ், நகர் நல அலுவலர் டாக்டர் அருண், நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன், கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

On Monday, October 24, 2016 by Unknown in    

திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டிருந்தார். அதன்படி வடக்கு வட்டத்திற்குட்பட்ட நிரந்தர பட்டாசு கடைகளை திருப்பூர் ஆர்.டி.ஓ.முருகேசன் தலைமையில் வடக்கு தாசில்தார் முருகதாஸ், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், நிலவருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அதிகாரிகள் கந்தசாமி, அண்ணாதுரை ஆகியோர் கொண்ட குழு நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.நிரந்தர பட்டாசு விற்பனை கடைகளில் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் கடை பிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், உரிய ஆவணங்களுடன் கடைகள் செயல்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்கள். விதிகளை மீறினாலோ, உரிமம் இல்லாமல் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Friday, October 21, 2016

On Friday, October 21, 2016 by Tamilnewstv   
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில்  திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பிராத்தனை செய்யப்பட்டது.

பின்னர் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூலோக நாதர் கோவிலில் சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலையில் கே.கே.நகர் விநாயகர் கோவில், ஐயப்பா நகர் பெருமாள் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில்  உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் பெரிய கடை வீதி என்.எஸ்.பி. மகாலில் நல திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் மு.பரஞ்ஜோதி, கே.கே.பாலசுப்ரமணியம், மேயர் ஜெயா, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான்,  மாவட்ட பொருளாளர் ஐயப்பன், துணை செயலாளர் ஜாக்குலின்,   மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன், அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் ஜெயபால்,  மகளிர் அணி செயலாளர் எஸ்.தமிழரசி,  பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி என்.சண்முகம், அன்பழகன், டைமண்ட் திருப்பதி, நாகநாதர் பாண்டி,   மற்றும் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்
On Friday, October 21, 2016 by Tamilnewstv   
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில்  திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பிராத்தனை செய்யப்பட்டது.

பின்னர் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூலோக நாதர் கோவிலில் சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலையில் கே.கே.நகர் விநாயகர் கோவில், ஐயப்பா நகர் பெருமாள் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில்  உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் பெரிய கடை வீதி என்.எஸ்.பி. மகாலில் நல திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் மு.பரஞ்ஜோதி, கே.கே.பாலசுப்ரமணியம், மேயர் ஜெயா, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான்,  மாவட்ட பொருளாளர் ஐயப்பன், துணை செயலாளர் ஜாக்குலின்,   மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன், அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் ஜெயபால்,  மகளிர் அணி செயலாளர் எஸ்.தமிழரசி,  பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி என்.சண்முகம், அன்பழகன், டைமண்ட் திருப்பதி, நாகநாதர் பாண்டி,   மற்றும் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்
On Friday, October 21, 2016 by Tamilnewstv   
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில்  திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பிராத்தனை செய்யப்பட்டது.

பின்னர் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூலோக நாதர் கோவிலில் சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலையில் கே.கே.நகர் விநாயகர் கோவில், ஐயப்பா நகர் பெருமாள் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில்  உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் பெரிய கடை வீதி என்.எஸ்.பி. மகாலில் நல திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் மு.பரஞ்ஜோதி, கே.கே.பாலசுப்ரமணியம், மேயர் ஜெயா, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான்,  மாவட்ட பொருளாளர் ஐயப்பன், துணை செயலாளர் ஜாக்குலின்,   மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன், அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் ஜெயபால்,  மகளிர் அணி செயலாளர் எஸ்.தமிழரசி,  பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி என்.சண்முகம், அன்பழகன், டைமண்ட் திருப்பதி, நாகநாதர் பாண்டி,   மற்றும் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்

Sunday, October 16, 2016

On Sunday, October 16, 2016 by Tamilnewstv   
 திருச்சி 16.10.16

திருச்சி மண்டல மாவட்ட இந்;துஸ்தான் ஸ்கவுட்ஸ் கைட்ஸ் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு சென்னை தலைமையிடத்திலிருந்து தமிழ்நாடு மாநிலபிரதமஆணையர்  ராமமூர்த்தி (ஓய்வு) தலைமையேற்று சிறப்புரையும் இயக்க சம்மந்தமான அறிவுரைகளையும் வழங்கி வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு மாநில சாரண அமைப்பு ஆணையர் பொறியாளர் முத்துகுமார் இயக்க விதிமுறைகளைப்பற்றி விரிவான விளக்கமும் வாழ்த்துரையும் வழங்கினார். பனானா லீ{ப் உரிமையாளர் மனோகரன் வாழ்த்துரை வழங்கினார்.திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் செயலர் பொறியாளர் இராஜசேகரன் முக்கிய விருந்தினராக கலந்துக்கொண்டு பாராட்டுரை வழங்கினார்.மாநில அமைப்பு குழு உறுப்பினரும் விழா பொறுப்பாளருமான முனைவர் லாரண்ஸ் விழாவில் வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் 5மாவட்டங்களிலிருந்து சமூக அமைப்பு பிரதிநிதிகள்;; கலந்து கொண்டனர்.பள்ளிகள் கல்லூரிகளில் மாணவர்களை ;வ்வியக்கத்தில் ஈடுபடுத்துதல் முதலுதவி இயற்கை பேரிடர் மேலாண்மை இரத்த தானம் மற்றும் கண்தானம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் பேனுதல் ஆகிய சமூக சேவைகளுக்கான தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன.

வுpழாவின் முடிவில் சமூக ஆர்வலர் தாமஸ் நன்றியுரையாற்றினார்.விழாவின் நிகழ்வுகள் அனைத்தையும் தலைமையாசிரியர் ஜேம்ஸ் தொகுத்து வழங்கினார்.                                                                     
On Sunday, October 16, 2016 by Tamilnewstv in    
திருச்சி 16.10.15
திருச்சி ஸ்ரீரங்கம் கட்டளகிய சிங்கர்கோயிலில் மாவட்ட மாணவரணி கார்த்திகேயன் தலைமையில் காஜாபேட்டை பசுக்களின் கோ மடத்தில் துணைமேயர் மற்றும் அம்மா பேரவை ஸ்ரீனிவாசன் தலைமையி;ல் வரகனேரி பூலோகநாதர் கோயிலில் பகுதி அவைத்தலைவர் ரெங்கநாதன் தலைமையிலும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சிறப்பு யாகம் கோ பூஜை மற்றும் அண்ணதானம் நடைபெ;ற்றது;



இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் சிறுபாண்மை துறை அமைச்சர் கலந்து கொண்டனர்.மேலும் அஇஅதிமுக சார்பில் மேயர் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Monday, October 10, 2016

On Monday, October 10, 2016 by Tamilnewstv   
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 09.10.2016 மாலை 6.10 மணியளவில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில், மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் பூர்ண குணமடைந்து, பணியை தொடர வேண்டி, இன்று கணபதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ம்ருத்ஞ்சய ஹோமம் மற்றும் கால பைரவர் ஹோமங்கள் நடைபெற்று ஸ்ரீ தன்வந்திரி விநாயகர், மரகதேஷ்வரர், மரகதாம்பிகை மற்றும் கால பைரவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடைபெற்றது. இந்த சிறப்பு ஹோமங்களை ராணிப்பேட்டை இஞ்னியரிங் கல்லூரியின் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பாக தலைவர், திரு. போஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.  இதில் அ.தி.மு.க மாவட்ட செயளாலரும், சோளிங்கர் சட்ட மன்ற உறுப்பினருமான                திரு. கோ. பார்த்திபன், முன்னாள் மாவட்ட செயளாலர்    திரு. சி. ஏழுமலை, வாலாஜா நகர மன்ற தலைவர், நகர செயளாலர் மற்றும் கழகத் தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.