Thursday, September 18, 2014
சின்னமனூர் அருகே கத்தியால் குத்தி கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய் துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட தாவது:-
கூலித்தொழிலாளி
தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே உள்ள துரைச் சாமிபுரத்தை சேர்ந்த பெரிய சாமிதேவர் என்பவ ருடைய மகன் பாண்டியன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த காட்டு ராஜா என்பவருடைய மனைவி பாக்கியம் (45) என்ப வருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப் படுகிறது.
இந்த தொடர்பு குறித்து அறிந்ததும் பாக்கியத் தின் குடும்பத்திற்கு தெரியவந் துள்ளது. இதனால் பாக்கியத் தின் மகன் மணி, மகள் பிரேமா, மருமகன் விஜயன் (28) ஆகிய 3 பேரும் நேற்று காலை பாண்டியனின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ள னர். 3 பேரும் சேர்ந்து பாண்டி யனை தாக்கியுள்ளனர்.
கத்தியால் குத்திக்கொலை
அப்போது விஜயன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் பாண்டியனின் அடிவயிற்றில் குத்தினார். தொடர்ந்து 2 பேரும் சண்டை போட்டதால் பாண்டியனும், விஜயனும் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ள னர். இந்த நிலையில் பாண்டி யன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த விஜயன் சின்ன மனூர் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு உள் ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாண்டியனின் மகள் மலர் மணி (27) சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மணி, பிரேமா, விஜயன், பாக்கியம் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மணி, பிரேமா, பாக்கி யம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப் பட்ட பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டது. இந்த சம்பவம் சின்ன மனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட தாவது:-
கூலித்தொழிலாளி
தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே உள்ள துரைச் சாமிபுரத்தை சேர்ந்த பெரிய சாமிதேவர் என்பவ ருடைய மகன் பாண்டியன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த காட்டு ராஜா என்பவருடைய மனைவி பாக்கியம் (45) என்ப வருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப் படுகிறது.
இந்த தொடர்பு குறித்து அறிந்ததும் பாக்கியத் தின் குடும்பத்திற்கு தெரியவந் துள்ளது. இதனால் பாக்கியத் தின் மகன் மணி, மகள் பிரேமா, மருமகன் விஜயன் (28) ஆகிய 3 பேரும் நேற்று காலை பாண்டியனின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ள னர். 3 பேரும் சேர்ந்து பாண்டி யனை தாக்கியுள்ளனர்.
கத்தியால் குத்திக்கொலை
அப்போது விஜயன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் பாண்டியனின் அடிவயிற்றில் குத்தினார். தொடர்ந்து 2 பேரும் சண்டை போட்டதால் பாண்டியனும், விஜயனும் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ள னர். இந்த நிலையில் பாண்டி யன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த விஜயன் சின்ன மனூர் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு உள் ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாண்டியனின் மகள் மலர் மணி (27) சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மணி, பிரேமா, விஜயன், பாக்கியம் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மணி, பிரேமா, பாக்கி யம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப் பட்ட பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டது. இந்த சம்பவம் சின்ன மனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப் பாட்டை போக்கவும், எதிர் கால குடிநீர் தேவையை கருத் தில் கொண்டும் ரூ.68 கோடியே 83 லட்சம் மதிப்பில் வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கு புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் தொடங்கி அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதேபோன்று பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் லட்சுமி புரம், ஜெயமங்கலம் பகுதி களில் தாய் திட்டத்தின் கீழ் தார்ச்சாலைகள் அமைத் தல், குடிநீர் கிணற்றுக்கு சுற்றுச் சுவர் அமைத்தல், சிறு மின் விசை பம்பு அமைத் தல், தெருவிளக்குகள் அமைத் தல் போன்ற பணிகளும், பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புகள் கட்டும் பணி களும் நடந்து வருகின்றன.
இந்த வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.மீனாட்சி புரம் முதல் லட்சுமிபுரம் வரை ரூ.45 லட்சம் மதிப்பில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். லட்சுமி புரத்தில் குடிநீர் கிணற்றுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு உள்ள தையும், குடியிருப்பு விரிவாக் கம் அடைந்துள்ள பகுதிகளில் புதிதாக தெரு விளக்குகள் அமைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட் டார்.
பின்னர் லட்சுமிபுரம், ஜெய மங்கலம் பகுதிகளில் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட் டப்படும் வீடுகளை பார் வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தர விட் டார். அதனை தொடர்ந்து வைகை அணை பகுதியில் நடந்து வரும் தேனி அல்லி நகரம் நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணி களை கலெக்டர் கே.எஸ். பழனிசாமி பார்வையிட் டார்.
புதிய குடிநீர் திட்டம்
இந்த ஆய்வு குறித்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார் பிலும் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேனி நகரின் குடிநீர் தேவைக்காக வைகை அணை யில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தேனி அல்லி நகரம் நகராட்சி யில் தற்போது சுமார் 95 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த புதிய குடிநீர் திட்ட மானது 2045-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கிட்டு, அதற்கேற்ப சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தண்ணீர் வழங்கும் வகையில் தொடங் கப்பட்டு உள்ளது. இதற்காக தேனி நகரில் 4 இடங்களில் மேல் நிலை நீர்த்தேக்க தொட் டிகள் அமைக்கப் படு கிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிந்து விடும்.
இவ்வாறு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித் தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகேசன், ஊரக வளர்ச் சித்துறை செயற்பொறியாளர் சங்கரஜோதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணை யாளர் (பொறுப்பு) ராஜாராம், பெரியகுளம் வட் டார வளர்ச்சி அலுவலர்கள் நாகரத்தினம், ஜீவரத்தினம் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கலெக்டர் ஆய்வு
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப் பாட்டை போக்கவும், எதிர் கால குடிநீர் தேவையை கருத் தில் கொண்டும் ரூ.68 கோடியே 83 லட்சம் மதிப்பில் வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கு புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் தொடங்கி அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதேபோன்று பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் லட்சுமி புரம், ஜெயமங்கலம் பகுதி களில் தாய் திட்டத்தின் கீழ் தார்ச்சாலைகள் அமைத் தல், குடிநீர் கிணற்றுக்கு சுற்றுச் சுவர் அமைத்தல், சிறு மின் விசை பம்பு அமைத் தல், தெருவிளக்குகள் அமைத் தல் போன்ற பணிகளும், பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புகள் கட்டும் பணி களும் நடந்து வருகின்றன.
இந்த வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.மீனாட்சி புரம் முதல் லட்சுமிபுரம் வரை ரூ.45 லட்சம் மதிப்பில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். லட்சுமி புரத்தில் குடிநீர் கிணற்றுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு உள்ள தையும், குடியிருப்பு விரிவாக் கம் அடைந்துள்ள பகுதிகளில் புதிதாக தெரு விளக்குகள் அமைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட் டார்.
பின்னர் லட்சுமிபுரம், ஜெய மங்கலம் பகுதிகளில் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட் டப்படும் வீடுகளை பார் வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தர விட் டார். அதனை தொடர்ந்து வைகை அணை பகுதியில் நடந்து வரும் தேனி அல்லி நகரம் நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணி களை கலெக்டர் கே.எஸ். பழனிசாமி பார்வையிட் டார்.
புதிய குடிநீர் திட்டம்
இந்த ஆய்வு குறித்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார் பிலும் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேனி நகரின் குடிநீர் தேவைக்காக வைகை அணை யில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தேனி அல்லி நகரம் நகராட்சி யில் தற்போது சுமார் 95 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த புதிய குடிநீர் திட்ட மானது 2045-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கிட்டு, அதற்கேற்ப சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தண்ணீர் வழங்கும் வகையில் தொடங் கப்பட்டு உள்ளது. இதற்காக தேனி நகரில் 4 இடங்களில் மேல் நிலை நீர்த்தேக்க தொட் டிகள் அமைக்கப் படு கிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிந்து விடும்.
இவ்வாறு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித் தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகேசன், ஊரக வளர்ச் சித்துறை செயற்பொறியாளர் சங்கரஜோதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணை யாளர் (பொறுப்பு) ராஜாராம், பெரியகுளம் வட் டார வளர்ச்சி அலுவலர்கள் நாகரத்தினம், ஜீவரத்தினம் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தேவாரம் அருகே நியூட் ரினோ ஆய்வு மையத்திற்கு சாலை அமைக்கும் பணியை பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
நியூட்ரினோ ஆய்வு மையம்
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான அம்பரப் பர் மலையில் சுமார் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதில் முதல்கட்ட பணியாக ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள் ளது. சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்க ராட்சத தண்ணீர் தொட்டி அமைத்துள் ளனர். போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தில் இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள அம்பரப்பர் மலை வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் அகலம் கொண்ட தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக சுமார் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நியூட்ரினோ ஆய்வு கூடத்தில் இருந்து பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான தே.புதுக் கோட்டை வரை தற்போது ரூ.6 கோடியே 30 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில் போக்குவரத்திற்கு வசதி யாக பாலம் ஒன்று கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பாலம் அமைய உள்ள இடத்தில் இடையூறான மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
பொறியாளர் குழு ஆய்வு
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தை மும்பை ‘டாடாபண்ட மண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ தலைமை செயற்பொறியாளர் ரங்கன் தலைமையில் பொறி யாளர்கள் குழுவினர் மற்றும் அறிவியல் ஆய்வு மைய மாண வர்கள் ஆய்வு பணி மேற் கொண்டனர். சாலை அமைக்கும் பணியை போடி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பிர சன்னா தலைமையில் அதிகாரி கள் குழுவினர் பார்வை யிட்டனர்.
இதுகுறித்து நியூட்ரினோ ஆய்வுமைய விஞ்ஞானிகள் கூறுகையில், ‘கண்ணுக்கே தெரியாமல் பிரபஞ்சத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் வெளியாக கூடிய நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்ய அம்பரப்பர் மலையை சுமார் 2 கிலோமீட்டரில் குடைந்து இதற்குள் ஆய்வகம் அமைக்கப் பட உள்ளது. சக்தி வாய்ந்த சுமார் 50 டன்எடையுள்ள காந்தம் நிறுவப்பட உள்ளது. சாலை அமைக்கப்பட்ட பின்பு தான் பாறையை குடை வதற்கான எந்திரங்கள் அனைத்தையும் கொண்டு வர முடியும். எனவே சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது’ என்றனர்.
நியூட்ரினோ ஆய்வு மையம்
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான அம்பரப் பர் மலையில் சுமார் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதில் முதல்கட்ட பணியாக ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள் ளது. சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்க ராட்சத தண்ணீர் தொட்டி அமைத்துள் ளனர். போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தில் இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள அம்பரப்பர் மலை வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் அகலம் கொண்ட தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக சுமார் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நியூட்ரினோ ஆய்வு கூடத்தில் இருந்து பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான தே.புதுக் கோட்டை வரை தற்போது ரூ.6 கோடியே 30 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில் போக்குவரத்திற்கு வசதி யாக பாலம் ஒன்று கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பாலம் அமைய உள்ள இடத்தில் இடையூறான மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
பொறியாளர் குழு ஆய்வு
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தை மும்பை ‘டாடாபண்ட மண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ தலைமை செயற்பொறியாளர் ரங்கன் தலைமையில் பொறி யாளர்கள் குழுவினர் மற்றும் அறிவியல் ஆய்வு மைய மாண வர்கள் ஆய்வு பணி மேற் கொண்டனர். சாலை அமைக்கும் பணியை போடி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பிர சன்னா தலைமையில் அதிகாரி கள் குழுவினர் பார்வை யிட்டனர்.
இதுகுறித்து நியூட்ரினோ ஆய்வுமைய விஞ்ஞானிகள் கூறுகையில், ‘கண்ணுக்கே தெரியாமல் பிரபஞ்சத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் வெளியாக கூடிய நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்ய அம்பரப்பர் மலையை சுமார் 2 கிலோமீட்டரில் குடைந்து இதற்குள் ஆய்வகம் அமைக்கப் பட உள்ளது. சக்தி வாய்ந்த சுமார் 50 டன்எடையுள்ள காந்தம் நிறுவப்பட உள்ளது. சாலை அமைக்கப்பட்ட பின்பு தான் பாறையை குடை வதற்கான எந்திரங்கள் அனைத்தையும் கொண்டு வர முடியும். எனவே சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது’ என்றனர்.
தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்தவர், காசியானந்தம் (வயது 60). தொழில் அதிபர்.
இவர் கடந்த 12–ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த உறவினரின் திருமண விழாவுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவில் காசியானந்தம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்தனர். ஆனால் அங்கு நகை, பணம் இல்லை. பின்னர் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
நேற்று முன்தினம் காசியானந்தம் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், தட்டார்மடம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் பால் ஐசக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகு மூழ்கியதால் தத்தளித்த 5 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.
படகு மூழ்கியதுதூத்துக்குடி அருகே உள்ள வேம்பாரை சேர்ந்தவர் சேவியர். இவருக்கு சொந்தமான சிறிய விசைப்படகில், ஜெபமாலை, அய்யம்பெருமாள், ஆதித்தன், அந்தோணி உள்பட 5 பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் வேம்பாரில் இருந்து சுமார் 13 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
இதனால் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. அப்போது படகின் அடிப்பகுதியில் இருந்த 3 பலகைகள் சேதம் அடைந்தன. கடல்நீர் வேகமாக படகினுள் உட்புகுந்ததால், படகு மளமளவென மூழ்கியது. இதனால் படகில் இருந்த 5 மீனவர்களும் தத்தளித்தனர்.
மீட்புஅப்போது அருகில் வந்து கொண்டு இருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து இன்று மூழ்கிய படகை மீட்பதற்கான நடவடிக்கையை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
படகு மூழ்கியதுதூத்துக்குடி அருகே உள்ள வேம்பாரை சேர்ந்தவர் சேவியர். இவருக்கு சொந்தமான சிறிய விசைப்படகில், ஜெபமாலை, அய்யம்பெருமாள், ஆதித்தன், அந்தோணி உள்பட 5 பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் வேம்பாரில் இருந்து சுமார் 13 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
இதனால் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. அப்போது படகின் அடிப்பகுதியில் இருந்த 3 பலகைகள் சேதம் அடைந்தன. கடல்நீர் வேகமாக படகினுள் உட்புகுந்ததால், படகு மளமளவென மூழ்கியது. இதனால் படகில் இருந்த 5 மீனவர்களும் தத்தளித்தனர்.
மீட்புஅப்போது அருகில் வந்து கொண்டு இருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து இன்று மூழ்கிய படகை மீட்பதற்கான நடவடிக்கையை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியார் 136-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு 7 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பிறந்த நாள் விழா
தூத்துக்குடியில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அரசியல் கட்சியினர் பெரியாரின் உருவப்படம் மற்றும் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பெரியார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சசிகலாபுஷ்பா எம்.பி, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், வேட்பாளர் அந்தோணி கிரேஸ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை மேயர் சேவியர், வடக்கு மண்டல தலைவர் கோகிலா, முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட்செல்வின், பி.டி.ஆர்.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம்
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் இர.கனகராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளர் மா.பால்ராசேந்திரம், மாவட்ட துணைத்தலைவர் பொ.செல்வராசு, துணை செயலாளர் இரா.ஆழ்வார், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.ப.பெரியாரடியான், எஸ்.சக்திவேல், மாநகர திராவிடர் கழக தலைவர் மு.முனியசாமி, செயலாளர் சி.மணிமொழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
7 அமைச்சர்கள்
கோவில்பட்டி பயணிகள் விடுதியில் அ.தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நகர செயலாளர் சங்கர பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராமானுஜம் கணேசன், நகரசபை துணை தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரது உருவ படத்துக்கு மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
மாநில மகளிர் அணி செயலளர் எல்.சசிகலா புஷ்பா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி சக்கையன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர செயலாளர் ராமர், முன்னாள் நகர செயலாளர் கருணாநிதி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பச்சம்மாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாவட்ட பிரதிநிதி முத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் கலைமணிதாஸ், கனகராஜ், கிளை செயலாளர்கள் முனியசாமி, அந்தோணி, கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு ஆதி தமிழர் பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் திலீபன், ஒன்றிய துணை செயலாளர் உதயசூரியன், நிதி செயலாளர் பிரபாகர அதியமான், கொள்கை பரப்பு செயலாளர் தலித் பாலா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, கிருஷ்ணன், மாரியப்பன், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிறந்த நாள் விழா
தூத்துக்குடியில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அரசியல் கட்சியினர் பெரியாரின் உருவப்படம் மற்றும் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பெரியார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சசிகலாபுஷ்பா எம்.பி, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், வேட்பாளர் அந்தோணி கிரேஸ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை மேயர் சேவியர், வடக்கு மண்டல தலைவர் கோகிலா, முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட்செல்வின், பி.டி.ஆர்.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம்
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் இர.கனகராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளர் மா.பால்ராசேந்திரம், மாவட்ட துணைத்தலைவர் பொ.செல்வராசு, துணை செயலாளர் இரா.ஆழ்வார், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.ப.பெரியாரடியான், எஸ்.சக்திவேல், மாநகர திராவிடர் கழக தலைவர் மு.முனியசாமி, செயலாளர் சி.மணிமொழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
7 அமைச்சர்கள்
கோவில்பட்டி பயணிகள் விடுதியில் அ.தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நகர செயலாளர் சங்கர பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராமானுஜம் கணேசன், நகரசபை துணை தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரது உருவ படத்துக்கு மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
மாநில மகளிர் அணி செயலளர் எல்.சசிகலா புஷ்பா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி சக்கையன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர செயலாளர் ராமர், முன்னாள் நகர செயலாளர் கருணாநிதி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பச்சம்மாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாவட்ட பிரதிநிதி முத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் கலைமணிதாஸ், கனகராஜ், கிளை செயலாளர்கள் முனியசாமி, அந்தோணி, கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு ஆதி தமிழர் பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் திலீபன், ஒன்றிய துணை செயலாளர் உதயசூரியன், நிதி செயலாளர் பிரபாகர அதியமான், கொள்கை பரப்பு செயலாளர் தலித் பாலா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, கிருஷ்ணன், மாரியப்பன், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பெரியார் பிறந்தநாள் விழா
தந்தை பெரியார் ஈ.வெ.ரா 136-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க.
அ.தி.மு.க. சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமையில், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், பிரபாகரன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் சுதா கே.பரமசிவன், துணை மேயர் ஜெகநாதன், பொருளாளர் கணேசராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் சரவணன், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் அரிகரசிவசங்கர், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மகபூப்ஜான், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், நகர கூட்டுறவு சங்க தலைவர் டால் சரவணன், மேயராக தேர்வு செய்யப்பட்டு உள்ள புவனேசுவரி, மகளிர் அணி வெண்ணிலா ஜீவபாரதி, கவுன்சிலர்கள் முத்துலட்சுமி, பேபி சுந்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
தி.மு.க.-ம.தி.மு.க.
தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர அமைப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் பெரியார் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிர்வாகிகள் நமசிவாயம் என்ற கோபி, பூக்கடை அண்ணாத்துரை, பொதுக்குழு வின்சர், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருள்வின் ரொட்ரிகோ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ஜெயின் உசேன், மணப்படை மணி, சுதர்சன், விஜயகுமார், கா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம்
திராவிடர் கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் இரா.காசி தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநகர தலைவர் ரத்தினசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பா.ம.க-விடுதலை சிறுத்தைகள்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் வியனரசு தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரவிதேவேந்திரன், சக்தி, தமிழர் தேசிய முன்னணி தமிழ்ஈழன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் அமுதா மதியழகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக், மாநகர் மாவட்ட பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கிங் தேவேந்திரன், பொட்டல் கண்ணன், பெருமாள் பாண்டியன், முத்துப்பாண்டியன், பழனி மாரியப்பன், முத்து, முருகையா பாண்டியன், தினேஷ், முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
அருந்தமிழர் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு அமைப்பினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பெரியார் பிறந்தநாள் விழா
தந்தை பெரியார் ஈ.வெ.ரா 136-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க.
அ.தி.மு.க. சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமையில், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், பிரபாகரன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் சுதா கே.பரமசிவன், துணை மேயர் ஜெகநாதன், பொருளாளர் கணேசராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் சரவணன், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் அரிகரசிவசங்கர், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மகபூப்ஜான், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், நகர கூட்டுறவு சங்க தலைவர் டால் சரவணன், மேயராக தேர்வு செய்யப்பட்டு உள்ள புவனேசுவரி, மகளிர் அணி வெண்ணிலா ஜீவபாரதி, கவுன்சிலர்கள் முத்துலட்சுமி, பேபி சுந்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
தி.மு.க.-ம.தி.மு.க.
தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர அமைப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் பெரியார் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிர்வாகிகள் நமசிவாயம் என்ற கோபி, பூக்கடை அண்ணாத்துரை, பொதுக்குழு வின்சர், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருள்வின் ரொட்ரிகோ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ஜெயின் உசேன், மணப்படை மணி, சுதர்சன், விஜயகுமார், கா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம்
திராவிடர் கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் இரா.காசி தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநகர தலைவர் ரத்தினசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பா.ம.க-விடுதலை சிறுத்தைகள்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் வியனரசு தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரவிதேவேந்திரன், சக்தி, தமிழர் தேசிய முன்னணி தமிழ்ஈழன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் அமுதா மதியழகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக், மாநகர் மாவட்ட பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கிங் தேவேந்திரன், பொட்டல் கண்ணன், பெருமாள் பாண்டியன், முத்துப்பாண்டியன், பழனி மாரியப்பன், முத்து, முருகையா பாண்டியன், தினேஷ், முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
அருந்தமிழர் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு அமைப்பினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வீரசிகாமணியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 32). அவருடைய மனைவி சுதா ராஜேசுவரி (27). இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சுதா ராஜேசுவரி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுதா ராஜேசுவரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுதா ராஜேசுவரி, குடும்ப பிரச்சினை காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எனக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தது, மனித உரிமை மீறல் ஆகும். அதுபற்றி கோர்ட்டில் வழக்கு தொடருவேன்“ என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
உதயகுமாருக்கு அனுமதி மறுப்பு
நேபாள தலைநகர் காட்மாண்டுவில், மனித உரிமை மீறல் குறித்த மாநாடு நடந்து வருகிறது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து காட்மாண்டு செல்ல இருந்தார். ஆனால், அவர் வெளிநாடு செல்ல டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.
“உரிய உத்தரவு இன்றி இனி வெளிநாடு செல்ல முயற்சிக்க வேண்டாம்“ என்று அதிகாரிகள் அவரிடம் அறிவுறுத்தியதாக தெரியவருகிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கூடங்குளம் போராட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி உதயகுமாரிடம் ‘தினத்தந்தி‘ நிருபர் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
பாஸ்போர்ட் முடக்கம்
“ஒவ்வொரு நாட்டுக்கும் ஐ.நா.சபை பிரதிநிதிகள் சுதந்திரமாக சென்று, அந்த நாடுகளில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்கள். ஆனால், இந்தியாவுக்குள் ஐ.நா. சபை பிரதிநிதிகள் வருவதற்கு விசா வழங்கப்படுவது இல்லை. இதனால்தான் இந்தியாவில் நடைபெற இருந்த மனித உரிமைகள் குறித்த மாநாடு, நேபாள தலைநகர் காட்மாண்டுவுக்கு மாற்றப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபைன் உள்ளிட்டோர் எனக்கு அழைப்பு விடுத்தனர். கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள், கூடங்குளம் பகுதியில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து பேசலாம் என்று அங்கு புறப்பட்டேன்.
டெல்லி விமான நிலையத்துக்கு மதியம் 1.30 மணி அளவில் சென்றடைந்தேன். பிற்பகல் 3 மணிக்கு காட்மாண்டுவுக்கு விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நேபாளம் செல்ல வேண்டும் என்றால், இந்திய அரசின் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் போதுமானது. எனவே வாக்காளர் அட்டையை காண்பித்தேன்.
விமானம் சென்றுவிட்டது
நான் கூடங்குளம் போராட்டக்குழுவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்ததால், என்னை தனி அறைக்கு அழைத்துச் சென்றார்கள். துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். என் மீது கூடங்குளம் போலீசில் 350 வழக்குகள் இருப்பதால், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே காட்மாண்டு செல்ல அனுமதிப்போம் என்று கூறினார்கள்.
நெல்லை சூப்பிரண்டிடம் போனில் பேசினார்கள். ஆனால், அனுமதி கொடுப்பது பற்றி, மேல் அதிகாரிகளிடம் கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும் என்று அவர் கூறி இருக்கிறார். இடையில் என்ªன்னவோ நடந்தது. நான் செல்ல வேண்டிய விமானமும் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
5½ மணி நேரம் விசாரணை
அதன்பின்பும் என்னை விடவில்லை. மாவோயிஸ்டுகள் பற்றி என்னிடம் கேட்டார்கள். தீவிரவாதத்தில் நம்பிக்கை இருக்கிறதா? என்றெல்லாம் விசாரித்தார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் துருவித்துருவி விசாரித்தார்களே தவிர, நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். பகல் 1.30 மணி அளவில் தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. இனிமேல் வெளிநாடு செல்ல முயற்சிக்க கூடாது, என்று அறிவுறுத்தி விமான நிலையத்தில் இருந்து அனுப்பி வைத்தார்கள்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தனி மனிதனின் உரிமைக்கு எதிரானது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு யார்-யாரெல்லாமோ? வருகிறார்கள். ஆனால், ஐ.நா.சபை பிரதிநிதிகள் வரக்கூடாதா? இதுதான் இந்தியாவின் ஜனநாயகமா?
வழக்கு தொடருவேன்
எனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல் குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். எனது பாஸ்போர்ட்டை திரும்ப தர வேண்டும். என் மீது போடப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழக அரசு கைவிட வேண்டும்.
இல்லை என்றால் என் மீதான வழக்கை நடத்தி, குற்றம் இருந்தால் தண்டனை கொடுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் எனது பாஸ்போர்டை திரும்பத் தாருங்கள் என்று கோரியும், சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறேன்“
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
உதயகுமாருக்கு அனுமதி மறுப்பு
நேபாள தலைநகர் காட்மாண்டுவில், மனித உரிமை மீறல் குறித்த மாநாடு நடந்து வருகிறது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து காட்மாண்டு செல்ல இருந்தார். ஆனால், அவர் வெளிநாடு செல்ல டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.
“உரிய உத்தரவு இன்றி இனி வெளிநாடு செல்ல முயற்சிக்க வேண்டாம்“ என்று அதிகாரிகள் அவரிடம் அறிவுறுத்தியதாக தெரியவருகிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கூடங்குளம் போராட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி உதயகுமாரிடம் ‘தினத்தந்தி‘ நிருபர் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
பாஸ்போர்ட் முடக்கம்
“ஒவ்வொரு நாட்டுக்கும் ஐ.நா.சபை பிரதிநிதிகள் சுதந்திரமாக சென்று, அந்த நாடுகளில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்கள். ஆனால், இந்தியாவுக்குள் ஐ.நா. சபை பிரதிநிதிகள் வருவதற்கு விசா வழங்கப்படுவது இல்லை. இதனால்தான் இந்தியாவில் நடைபெற இருந்த மனித உரிமைகள் குறித்த மாநாடு, நேபாள தலைநகர் காட்மாண்டுவுக்கு மாற்றப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபைன் உள்ளிட்டோர் எனக்கு அழைப்பு விடுத்தனர். கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள், கூடங்குளம் பகுதியில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து பேசலாம் என்று அங்கு புறப்பட்டேன்.
டெல்லி விமான நிலையத்துக்கு மதியம் 1.30 மணி அளவில் சென்றடைந்தேன். பிற்பகல் 3 மணிக்கு காட்மாண்டுவுக்கு விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நேபாளம் செல்ல வேண்டும் என்றால், இந்திய அரசின் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் போதுமானது. எனவே வாக்காளர் அட்டையை காண்பித்தேன்.
விமானம் சென்றுவிட்டது
நான் கூடங்குளம் போராட்டக்குழுவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்ததால், என்னை தனி அறைக்கு அழைத்துச் சென்றார்கள். துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். என் மீது கூடங்குளம் போலீசில் 350 வழக்குகள் இருப்பதால், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே காட்மாண்டு செல்ல அனுமதிப்போம் என்று கூறினார்கள்.
நெல்லை சூப்பிரண்டிடம் போனில் பேசினார்கள். ஆனால், அனுமதி கொடுப்பது பற்றி, மேல் அதிகாரிகளிடம் கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும் என்று அவர் கூறி இருக்கிறார். இடையில் என்ªன்னவோ நடந்தது. நான் செல்ல வேண்டிய விமானமும் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
5½ மணி நேரம் விசாரணை
அதன்பின்பும் என்னை விடவில்லை. மாவோயிஸ்டுகள் பற்றி என்னிடம் கேட்டார்கள். தீவிரவாதத்தில் நம்பிக்கை இருக்கிறதா? என்றெல்லாம் விசாரித்தார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் துருவித்துருவி விசாரித்தார்களே தவிர, நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். பகல் 1.30 மணி அளவில் தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. இனிமேல் வெளிநாடு செல்ல முயற்சிக்க கூடாது, என்று அறிவுறுத்தி விமான நிலையத்தில் இருந்து அனுப்பி வைத்தார்கள்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தனி மனிதனின் உரிமைக்கு எதிரானது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு யார்-யாரெல்லாமோ? வருகிறார்கள். ஆனால், ஐ.நா.சபை பிரதிநிதிகள் வரக்கூடாதா? இதுதான் இந்தியாவின் ஜனநாயகமா?
வழக்கு தொடருவேன்
எனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல் குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். எனது பாஸ்போர்ட்டை திரும்ப தர வேண்டும். என் மீது போடப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழக அரசு கைவிட வேண்டும்.
இல்லை என்றால் என் மீதான வழக்கை நடத்தி, குற்றம் இருந்தால் தண்டனை கொடுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் எனது பாஸ்போர்டை திரும்பத் தாருங்கள் என்று கோரியும், சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறேன்“
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...








