Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஓசூர் நகராட்சி 16–வது வார்டில் என்.டி.ஆர். நகர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து என்.டி.ஆர்.நகர் பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஓசூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் நகராட்சி கமிஷனர் டாக்டர் இளங்கோவனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கூறியுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் டாக்டர் இளங்கோவன், சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான ரோலர்ஸ் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி ரிம் பள்ளியில் நடந்தது. இதில் 250–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டார் கள். தமிழ்நாடு ரோலர்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் நடுவராக சென்னையை சேர்ந்த கார்த்திக், 2–ம் நிலை நடுவராக கிருஷ்ணகிரி ரோலர்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேசன் செயலாளர் ராஜ்குமார், மூன்றாம் நிலை நடுவராக பாரத் ஸ்கேட்ஸ் ஸ்கில் ரோலர்ஸ் கேட்டிங் சிறப்பு பயிற்சியாளர் ரகமத் ஆகியோர் செயல்பட்டார்கள்.  ரோலர் அட்சஸ்டபிள் ஸ்கேட்டிங், ஸ்கோட் ஸ்கேட்டிங், இன்லைன் ஸ்கேட்டிங் ஆகிய பிரிவுகளில் வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி பாரத் ஸ்கேட்ஸ் ஸ்கில் மாணவ–மாணவிகள் 52 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றார்கள்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஆனைமலை அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் தியாகு விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்பட சில பொருட்கள் திருட்டு போயின. இது குறித்து தியாகு ஆனைமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் உள்பட பொருட்களை திருடிய நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் செல்போனில் உள்ள ரகசிய குறியீட்டு எண் மூலம் அதனை திருடிய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார் கள். விசாரணையில் அந்த அவர் திருப்பூர் மாவட்டம் வேலாம்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் செல்போன் திருடியதாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அய்யா வைகுண்ட சிவபதி

கோவை சரவணம்பட்டியை அடுத்த வரதய்யங்கார்பாளையம் லட்சுமி கார்டனில் அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பணிவிடை, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

அது போல் இந்த ஆண்டுக்கான புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பதி நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு நாதஸ்வர வாத்தியம், செண்டை வாத்தியம் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 5.30 மணிக்கு உகபடிப்பு, அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளல், காலை 8 மணிக்கு அன்னதானம், மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு பணிவிடை, அன்னதானமும், இரவு 7.30 மணிக்கு அகில திரட்டு சிறப்பு சொற்பொழிவும், தொட்டில் வாகனத்தில் அய்யா திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

திருவீதி உலா

திருவிழாவையொட்டி 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் காலை, மாலை உகபடிப்பும், மதியம் உச்சிப்படிப்பும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. தினமும் 6 மணிக்கு சொற்பொழிவும், இரவு 8.30 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

20-ந்தேதி மயில் வாகனத்திலும், 21-ந்தேதி அன்ன வாகனத்திலும், 22-ந்தேதி தொட்டில் வாகனத்திலும், 23-ந்தேதி பூஞ்சப்பர வாகனத்திலும், 24-ந்தேதி சர்ப்ப வாகனத்திலும், 25-ந்தேதி கருட வாகனத்திலும், 26-ந்தேதி குதிரை வாகனத்திலும், 27-ந்தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். 27-ந்தேதி இரவு 9 மணிக்கு செந்தில்குமாரின் அய்யா நாமகீத இன்னிசை கச்சேரி நடைபெறும்.

தேரோட்டம்

திருவிழாவின் 10-ம் நாள்(28-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு உகபடிப்பு, பணிவிடை, அன்னதானமும், பகல் 11.30 மணிக்கு பல்லக்கு வாகனம் மூலம் அய்யா வைகுண்டர் திருத்தேருக்கு எழுந்தருளல், பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு இளைபெருமாளின் இசை நிகழ்ச்சி நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா வைகுண்டர் அம்மையப்பராக எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். அதிகாலை 3 மணிக்கு திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
கோவை அருகே வீடு புகுந்து முதியவர்களை தாக்கி நகைகளை கொள்ளை கும்பல் பறித்து சென்றது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் டி.ஐ.ஜி.யும், போலீஸ் சூப்பிரண்டும் நேரில் விசாரணை நடத்தினர்.

வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்

கோவை சரவணம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயகுமாருடன் அவரது தந்தை மீனாட்சிசுந்தரம் (67), தாய் சியாமளா (61), மனைவி முத்துமாரி ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

விஜயகுமார் நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் முத்துமாரி, மீனாட்சி சுந்தரம், சியாமளா ஆகியோர் இருந்தனர். இரவு சாப்பிட்டு விட்டு அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று தூங்கி கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் விஜயகுமாரின் வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் வீட்டு பிரதான கதவில் ஓட்டி இருந்த நிலைக்கண்ணாடியை கழற்றினார்கள். அதன் பிறகு கண்ணாடி இருந்த இடத்தின் வழியே கையை உள்ளே நுழைத்து உட்புறமாக பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளனர். மர்ம நபரில் ஒருவன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு ஆட்கள் யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிட்டான்.

முதியவர்கள் மீது சரமாரி தாக்குதல்

கதவு திறக்கப்பட்ட சத்தத்தை கேட்டு மீனாட்சி சுந்தரம் யாரது? என்று சத்தம் போட்டு கொண்டே தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது வீட்டிற்குள் நின்றிருந்த மர்ம நபர், மீனாட்சி சுந்தரத்தின் தலையில் பலமாக தாக்கினார். இதில் அம்மா என்று அலறியபடி அவர் கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த சியாமளாவையும் அந்த மர்ம நபர் தலையில் பலமாக தாக்கினார். அவரும் அலறியபடியே கீழே விழுந்தார்.

மாமனார், மாமியாரின் அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து அறையில் இருந்து முத்துமாரி சத்தம் போட்டுக்கொண்டே வெளியே ஓடி வந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களும் திடீரென்று தங்களது வீட்டில் விளக்கை எரியவிட்டு கதவை திறந்தனர். இதை பார்த்த வெளியே நின்றிருந்த ஆசாமி வீட்டிற்குள் இருக்கும் கொள்ளையனுக்கு சைகை காண்பித்தான். உடனே வீட்டிற்குள் நின்றிருந்த அந்த ஆசாமி, சியாமளா அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். வெளியே நின்றிருந்த ஆசாமியும் தப்பி ஓடி விட்டான்.

தீவிர சிகிச்சை

இந்த நிலையில் கொள்ளையர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து மீனாட்சிசுந்தரமும், சியாமளாவும் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். உடனே முத்துமாரி 108 ஆம்புலன்சுக்கும், தனது கணவருக்கும் தகவலை தெரிவித்தார். இதற்கிடையே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஓடி வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மற்றொரு வீட்டில் திருட்டு

இதே போல் விஜயகுமாரின் வீட்டில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனசேகரன் (33) என்பவரது வீட்டிலும் அந்த கொள்ளை கும்பல் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நேற்று தனசேகரன் தனது மனைவி மதுமதி மற்றும் குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். வீட்டின் கதவிலிருந்த கண்ணாடியை கழற்றி உட்புறமாக பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளே புகுந்த ஆசாமி குழந்தை இடுப்பில் கட்டி இருந்த வெள்ளி அரைஞாண் கொடியை அறுத்தான். சத்தம் கேட்டு எழுந்த மதுமதி தனது கணவரை எழுப்ப முயன்று இருக்கிறார். அப்போது கொள்ளையன் மதுமதியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டு வெள்ளி அரைஞாண் கொடியையும், வீட்டில் இருந்த கவரிங் நகையையும் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டான்.

போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை

இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் டி.ஐ.ஜி. மணீஸ் திவாரி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மோப்ப நாய் ஹேரி வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி இருக்கிறதா? என்று ஆய்வு நடத்தினர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பெரியாரின் 136-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசு சார்பில் விழா

பெரியாரின் 136-வது பிறந்தநாளை நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சிறப்பாக கொண்டாடினார்கள். கோவையில் அரசு சார்பில் நடந்த விழாவில், எம்.பி.க்கள் ஏ.பி.நாகராஜன், ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் சின்னச்சாமி, தாமோதரன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, தா.மலரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவை முன்னிட்டு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அருகே பெரியாரின் நினைவு தூண் முன்பு பெரியாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தமிழக நகராட்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, மண்டல தலைவர்கள் சாவித்திரி பார்த்திபன், ஆதிநாராயணன், ஜெயராமன் மற்றும் சி.டி.சி. ஜப்பார், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.-ம.தி.மு.க.

கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கா.ரா.சுப்பையன், கார்த்திக்செல்வராஜ், மகுடபதி, நாச்சிமுத்து உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் ம.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் பெரியாரின் உருவப்படத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் என்.கே.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அ.சேதுபதி, மு.தியாகராஜன், சூரிநந்தகோபால், கணபதி செல்வராஜ், ஆர்.சற்குணம், மு.ராமநாதன், வெள்ளியங்கிரி, ஷாஜகான், யூசுப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கோபால், சாஜித், ஆறுச்சாமி, ராமசாமி, இளங்கோ, பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு

கோவை வெங்கிட்டாபுரத்தில் குத்தூசி குருசாமி படிப்பகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பெரியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வக்கீல் சி.பி.சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கதிரவன், ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலா, அன்பு, ஓவியா உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு பெரியாரின் கொள்கைகள் இடம்பெற்ற நோட்டீசுகளும் வினியோகம் செய்யப்பட்டன.

அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஸ்டீபன் ராஜ் மாலை அணிவித்தார். இந்தநிகழ்ச்சியில் இளங்கோ, சி.டி.சி.சுப்பிரமணி, பி.எஸ்.ஸ்டீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவாடானையில் புதி தாக கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு மையத்தை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் திறந்து வைத் தார்.

புதிய கட்டிடம்

திருவாடானையில் ஊரக உட்கட்டமைப்பு இடை நிரப்பு நிதி 2013-14ன் கீழ் மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு மையம் ரூ.5½ லட் சம் செலவில் புதிதாக கட்டப் பட்டுள்ளது. இந்த கட்டி டத்தை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் திறந்து வைத்தார். திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு 3 சக்கர மிதி வண் டிகளை வழங்கினார். அத னைத்தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளால் தயாரிக்கப் படும் கைவினைப் பொருட் களை பார்வையிட்டார். அதன் பின்னர் மாற்றுத்திற னாளி மையம் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும், மையத் துக்கு புதிதாக சுற்றுச்சுவர் கட்டித்தரப்படும் என்று தெரி வித்தார்.

அதனை தொடர்ந்து திரு வாடானையில் ரூ.1.54 கோடி செலவில் புதிதாக கட்டப் பட்டு வரும் பஸ் நிலைய கட் டிடப்பணிகளை நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பஸ் நிலை யத்தின் வரைபடத்தை பார் வையிட்டு ஆய்வு செய்த அவர் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். மேலும் பஸ் நிலையத்தில் திருவாடானை ஊராட்சி சார்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார்.

ஆய்வு

திருவாடானை அரசு ஆஸ் பத்திரிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் அங்கு செவிலி யர்களிடம் பணியாளர்கள், நோயாளிகள் வருகை குறித்து கேட்டறிந்து அறிவுரை வழங் கினார். திருவாடானை யூனி யன் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கோர்ட்டு, நீதிபதி குடி யிருப்பு, நூலகம், சட்டமன்ற உறுப்பினர் விடுதி, வட்டார குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் பல்வேறு அலுவலக கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் யூனியன் அலுவல கத்துக்கு புதிய அலுவலகம் கட்டுவது தொடர்பாக அதி காரிகளுடன் ஆலோசனை செய்தார். அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் பழனி, யூனியன் தலைவர் முனியம்மாள் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கள் காந்தி மாறன், ஊராட்சி தலைவர்கள் முத்து, காளை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பொதுமக்கள் உணவாக பயன்படுத்தாமல் தென்னை மரங்களுக்கு உரமாக மாறுவது சங்காயம் எனப்படும் மீன்கள்தான்.

சங்காயம் மீன்கள்

ராமேசுவரம், பாம்பன் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கும் பலவகையான மீன்கள் உணவுப்பொருளாக உள்நாட்டில் பயன்படுத்தப்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் மீனவர்கள் பிடித்து வரும் சங்காயம் என்ற பெயருடைய சிறிய வகை மீன்கள் உணவாக பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக இவை கோழித் தீவனமாகவும், தென்னை மரங்களுக்கு உரமாகவும் பயன்படுத்தப்படுவதுடன், இதற்காகவே ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் அனைவரும் நேற்று காலை மீன்களுடன் கரை திரும்பினர். அவர்களில் ஒரு சிலரின் படகுகளில் சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரை சங்காயம் மீன்கள் சிக்கியிருந்தன.

இந்த மீன்கள் முழுவதும் கடற்கரையிலேயே உலர வைக்கப்பட்டன. இந்த பணியில் மீனவர்களும், மீனவ பெண்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

தென்னை மரங்களின் உரம்

சங்காயம் மீன்கள் அதிக அளவில் கிடைத்தது குறித்து பாம்பனை சேர்ந்த மீன் வியாபாரி ஸ்டீபன் என்பவர் கூறியதாவது:-

விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் சங்காயம் மீன்களை மொத்த விலைக்கு வாங்குவோம். பின்னர் அவற்றை கடற்கரையிலேயே உலர வைத்து லாரி, வேன் மூலம் நாமக்கல், சேலம் போன்ற இடங்களுக்கு கோழித் தீவனத்திற்கு அனுப்பி வைப்போம். அத்துடன் தென்னை மரங்களுக்கு உரமாகவும் சங்காயம் மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவை கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.

இந்த மீன்களை உப்புடன் சேர்த்து தென்னை மரத்தின் அடிப்பகுதியில் குழி தோண்டி புதைத்து வைத்தால் மரம் நன்றாக வளர்ச்சி அடைவதுடன், விளைச்சலும் அதிகமாக இருக்கும். இதனால் தமிழகத்தில் ஏராளமான ஊர்களுக்கு சங்காயம் மீன்கள் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த மீன் உலர்த்தப்பட்ட நிலையில் 1 கிலோ ரூ.32 முதல் ரூ.35 வரை விலை போகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்களுக்கும் இந்த மீன்கள் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
சீரகாப்பாடி அருகே தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தாங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த மாணவர்கள் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை வைத்துள்ளனர். இதனை ஒரிரு மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப்பதிவு செய்து சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 23), அதே பகுதியை சேர்ந்த ஜான்பாட்ஷா (22) ஆகியோரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் பிரசாந்த் (வயது 16) மற்றும் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் மகன் ஆனந்த் (19) ஆகிய மேலும் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 3 விலையுயர்ந்த ஆடம்பர மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.