Saturday, September 20, 2014
சென்னை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில், கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கட்டிடத்தை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள், என்ஜினீயர்கள் உட்பட பலரை கைது செய்தனர்.
இதில், கைதான என்ஜினீயர் வெங்கடசுப்பிரமணியன், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் நிபந்தனைகள் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், ‘மனுதாரர் வெங்கடசுப்பிரமணியன் ரூ.20 லட்சத்துக்கு சொத்து ஜாமீனும், ரூ.2 லட்சத்துக்கு சொந்த ஜாமீனும், அதேதொகைக்கு இருநபர் ஜாமீனும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழங்கி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மனுதாரர் தன்னுடைய பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்கவேண்டும்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.
இதில், கைதான என்ஜினீயர் வெங்கடசுப்பிரமணியன், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் நிபந்தனைகள் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், ‘மனுதாரர் வெங்கடசுப்பிரமணியன் ரூ.20 லட்சத்துக்கு சொத்து ஜாமீனும், ரூ.2 லட்சத்துக்கு சொந்த ஜாமீனும், அதேதொகைக்கு இருநபர் ஜாமீனும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழங்கி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மனுதாரர் தன்னுடைய பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்கவேண்டும்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி அளித்த பேட்டி, எங்களது நாளிதழில் கடந்த 4-ந் தேதி வெளியானது. இதில், தமிழக அரசையும், முதல்-அமைச்சரையும் குறித்து அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி எங்கள் மீதும், சுப்பிரமணியசாமி மீதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர, தமிழக பொதுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, எங்களை வருகிற அக்டோபர் 30-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். இந்த செய்தியை உள்நோக்கத்துடன் நாங்கள் வெளியிடவில்லை. எனவே, இந்த சம்மனை ரத்து செய்யவேண்டும். அவதூறு வழக்கு தொடர்பான அரசாணையையும் ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், மனுதாரர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி அளித்த பேட்டி, எங்களது நாளிதழில் கடந்த 4-ந் தேதி வெளியானது. இதில், தமிழக அரசையும், முதல்-அமைச்சரையும் குறித்து அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி எங்கள் மீதும், சுப்பிரமணியசாமி மீதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர, தமிழக பொதுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, எங்களை வருகிற அக்டோபர் 30-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். இந்த செய்தியை உள்நோக்கத்துடன் நாங்கள் வெளியிடவில்லை. எனவே, இந்த சம்மனை ரத்து செய்யவேண்டும். அவதூறு வழக்கு தொடர்பான அரசாணையையும் ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், மனுதாரர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜூ, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
குண்டர் சட்டம்
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், வங்காள மாகாணத்தில் 1923-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டம் முதலில் அமல்படுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக பிற மாகாணங்களில் இந்த சட்டம் இயற்றப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும், போதைப்பொருள், கள்ளச்சாராயம் கடத்தல், விபசாரம், கொலை, கொள்ளை உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தவும், அவர்களை ஓர் ஆண்டுக்கு ஜெயிலில் அடைக்கவும், 1982-ம் ஆண்டு தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
சட்டத்திருத்தம்
இதுபோன்ற தடுப்பு காவல் சட்டம், ஜனநாயக நாடுகளில் அமல்படுத்தப்படவில்லை. போர் காலங்களில் இங்கிலாந்து நாட்டில் தற்காலிகமாக மட்டும் இந்த சட்டம் அமல்படுத்தது. தமிழக அரசு 1982-ம் ஆண்டு இயற்றிய குண்டர் தடுப்பு சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதில், சைபர் குற்றம் மற்றும் பாலியல் குற்றத்தை ஒரு முறை செய்தவர்களை கூட குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் விதமாக சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஏற்கனவே இருந்த ‘தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள்’ என்ற வார்த்தை நீக்கியுள்ளது.
சமூக வலைதளம்
இந்த சட்டத்திருத்தம், அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை பறிக்கும் விதமாக உள்ளது. மேலும், இந்த சட்டத்தை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. இதனால் பேச்சுரிமையை இழப்பதுடன், எந்த விதமான பாவணைகளிலும் தங்களது உணர்வை ஒருவரால் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இதுபோன்ற அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டால், அவர்கள் ஒரு தகவலை வெளிவரவிடாமல் தடுக்க முடியும். தற்போது, அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர்களின் ஊழல் முறைகேடுகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகுகிறது. இந்த சட்டத்திருத்தின் மூலம் இதுபோன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவரவிடாமல் அரசால் தடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பதில் அளிக்க வேண்டும்
எனவே, குண்டர் தடுப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் செல்லாது என்று அறிவிக்கவேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும். அந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த அரசுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு வந்தது. அப்போது, வக்கீல் கே.இந்திரா ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘இந்த வழக்கிற்கு தமிழக தலைமை செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் மனுக்கள் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை நவம்பர் 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.
தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜூ, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
குண்டர் சட்டம்
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், வங்காள மாகாணத்தில் 1923-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டம் முதலில் அமல்படுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக பிற மாகாணங்களில் இந்த சட்டம் இயற்றப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும், போதைப்பொருள், கள்ளச்சாராயம் கடத்தல், விபசாரம், கொலை, கொள்ளை உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தவும், அவர்களை ஓர் ஆண்டுக்கு ஜெயிலில் அடைக்கவும், 1982-ம் ஆண்டு தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
சட்டத்திருத்தம்
இதுபோன்ற தடுப்பு காவல் சட்டம், ஜனநாயக நாடுகளில் அமல்படுத்தப்படவில்லை. போர் காலங்களில் இங்கிலாந்து நாட்டில் தற்காலிகமாக மட்டும் இந்த சட்டம் அமல்படுத்தது. தமிழக அரசு 1982-ம் ஆண்டு இயற்றிய குண்டர் தடுப்பு சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதில், சைபர் குற்றம் மற்றும் பாலியல் குற்றத்தை ஒரு முறை செய்தவர்களை கூட குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் விதமாக சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஏற்கனவே இருந்த ‘தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள்’ என்ற வார்த்தை நீக்கியுள்ளது.
சமூக வலைதளம்
இந்த சட்டத்திருத்தம், அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை பறிக்கும் விதமாக உள்ளது. மேலும், இந்த சட்டத்தை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. இதனால் பேச்சுரிமையை இழப்பதுடன், எந்த விதமான பாவணைகளிலும் தங்களது உணர்வை ஒருவரால் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இதுபோன்ற அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டால், அவர்கள் ஒரு தகவலை வெளிவரவிடாமல் தடுக்க முடியும். தற்போது, அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர்களின் ஊழல் முறைகேடுகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகுகிறது. இந்த சட்டத்திருத்தின் மூலம் இதுபோன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவரவிடாமல் அரசால் தடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பதில் அளிக்க வேண்டும்
எனவே, குண்டர் தடுப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் செல்லாது என்று அறிவிக்கவேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும். அந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த அரசுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு வந்தது. அப்போது, வக்கீல் கே.இந்திரா ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘இந்த வழக்கிற்கு தமிழக தலைமை செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் மனுக்கள் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை நவம்பர் 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்பமுடியாது என்றும், கர்நாடக இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மாண்டலின் சீனிவாஸ் மரணம்
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நேற்று) உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.
மாண்டலின் என்ற இசைக்கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் சீனிவாஸ். இசைக்குடும்பத்தில் பிறந்த மாண்டலின் சீனிவாஸ் தன்னுடைய மாண்டலின் இசைக்கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச்செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவர்.
யாராலும் நிரப்பமுடியாது
மத்திய அரசின் “பத்மஸ்ரீ”, “சங்கீத ரத்னா” உள்பட பல விருதுகளைப்பெற்றவர் மாண்டலின் சீனிவாஸ். மாண்டலின் சீனிவாசின் மறைவு கர்நாடக இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். இவர் விட்டுச்சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்பமுடியாது.
மாண்டலின் சீனிவாசை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மாண்டலின் சீனிவாஸ் மரணம்
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நேற்று) உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.
மாண்டலின் என்ற இசைக்கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் சீனிவாஸ். இசைக்குடும்பத்தில் பிறந்த மாண்டலின் சீனிவாஸ் தன்னுடைய மாண்டலின் இசைக்கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச்செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவர்.
யாராலும் நிரப்பமுடியாது
மத்திய அரசின் “பத்மஸ்ரீ”, “சங்கீத ரத்னா” உள்பட பல விருதுகளைப்பெற்றவர் மாண்டலின் சீனிவாஸ். மாண்டலின் சீனிவாசின் மறைவு கர்நாடக இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். இவர் விட்டுச்சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்பமுடியாது.
மாண்டலின் சீனிவாசை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அறச்சலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் சாவடிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 44). தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார். அதனால் சாவடிக்காடு பகுதியில் உள்ள வீட்டை அதே பகுதியில் வசிக்கும் ஈஸ்வரனின் மாமனார் அண்ணாமலை கவனித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை ஈஸ்வரனின் வீட்டுக்கு அண்ணாமலை சென்றார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தையும், வீட்டில் இருந்து எல்.ஈ.டி. டி.வி.யையும் காணாதது கண்டு திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணத்தையும், டி.வியையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலை உடனடியாக அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நிச்சாம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). அவருடைய மனைவி பழனியம்மாள் (38). இவர்களுக்கு கார்த்தி (23), தங்கராசு (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் கார்த்தி திருப்பூர் பனியன் நிறுவனத்தில்வேலை செய்து வருகிறார். தங்கராசு பாலிடெக்னிக்கில் படித்து வேலை தேடி வந்தார். நேற்று காலை துணி துவைப்பதற்காக கருப்பசாமி, பழனியம்மாள் மொபட்டிலும், தங்கராசு சைக்கிளிலும் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றனர். பழனியம்மாளை மொபட்டில் இருந்து கீழே இறக்கிய கருப்புசாமி, சோப்பு வாங்க கடைக்கு சென்றார்.அப்போது தங்கராசு துணி துவைப்பதற்காக வாய்க்காலின் கரையில் இறங்கினார். எதிர்பாராதவிதமாக அவர் கால் இடறி வாய்க்காலுக்குள் விழுந்துவிட்டார். கரையில் நின்றுகொண்டு இருந்த தாய் பழனியம்மாள் மகனை காப்பாற்றுவதற்காக வாய்க்காலில் குதித்தார். அப்போது அவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த கருப்பசாமி மனைவியும், மகனும் வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்டு இருப்பதை பார்த்து பதறிப்போய் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி பொன்னாமலை தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீர் இழுத்து செல்லப்பட்ட தங்கராசுவையும், பழனியம்மாளையும் தேடினார்கள். அப்போது வாய்க்காலில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் தங்கராசுவின் உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பழனியம்மாளின் கதி என்ன? என்பது தெரியவில்லை. மீனவர்கள் உதவியுடன் பழனியம்மாளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பெருந்துறை அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.
தீ விபத்து
பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் மலைக்கோவில் எதிரில் வசித்து வருபவர் சண்முகம் (வயது 55). அவருடைய மனைவி அங்குலட்சுமி. சண்முகம் திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் இருக்கை, டேபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவைகளை தனது வீட்டையொட்டி உள்ள ஒரு அறையில் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் சண்முகமும், அங்குலட்சுமியும் தூங்க சென்றுவிட்டனர். 11.30 மணி அளவில் அறை முன்பு போடப்பட்டு இருந்த ஓலைக்கீற்றுகளில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்த 2 பேரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இந்த தீ மளமளவென அருகில் உள்ள வீட்டுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
ரூ.15 லட்சம் சேதம்
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி பொன்னாமலை தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீடு முன்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த நாய் கருகி செத்தது. மேலும் பொருட்கள் வைத்திருக்கும் அறை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை வேன், டேபிள், சேர் மற்றும் வீட்டில் இருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், ரூ.1 லட்சம் ஆகியவை தீயில் எரிந்து சேதமானது. இதன் சேத மதிப்பு ரூ.15 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து சண்முகம் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன், சீனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினர்.
தீ விபத்து
பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் மலைக்கோவில் எதிரில் வசித்து வருபவர் சண்முகம் (வயது 55). அவருடைய மனைவி அங்குலட்சுமி. சண்முகம் திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் இருக்கை, டேபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவைகளை தனது வீட்டையொட்டி உள்ள ஒரு அறையில் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் சண்முகமும், அங்குலட்சுமியும் தூங்க சென்றுவிட்டனர். 11.30 மணி அளவில் அறை முன்பு போடப்பட்டு இருந்த ஓலைக்கீற்றுகளில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்த 2 பேரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இந்த தீ மளமளவென அருகில் உள்ள வீட்டுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
ரூ.15 லட்சம் சேதம்
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி பொன்னாமலை தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீடு முன்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த நாய் கருகி செத்தது. மேலும் பொருட்கள் வைத்திருக்கும் அறை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை வேன், டேபிள், சேர் மற்றும் வீட்டில் இருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், ரூ.1 லட்சம் ஆகியவை தீயில் எரிந்து சேதமானது. இதன் சேத மதிப்பு ரூ.15 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து சண்முகம் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன், சீனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினர்.
குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
நடமாடும் மண் பரிசோதனை நிலைய ஆய்வு ஊர்தி ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. 22–ந் தேதி பழவிளை வேளாண்மை விரிவாக்க மையத்திலும், 23–ந் தேதி காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 24–ந் தேதி மூஞ்சிரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 25–ந் தேதி தர்மபுரம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 26–ந் தேதி ஈத்தாமொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 29–ந் தேதி பறக்கை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் மண் ஆய்வுப்பணியை மேற்கொள்கிறது.
எனவே விவசாயிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மண் மாதிரி முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
நாகர்கோவிலில் பேராசிரியர் வீட்டில் கதவை உடைத்து டி.வி. உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுபற்றிய விவரம் வருமாறு:–
பேராசிரியர்
நாகர்கோவில் கல்லூரி ரோடு நீல் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப். இவருடைய மனைவி ஜெனிபர். இவர்கள் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் நேற்று முன்தினம் மாலை தக்கலை கல்குறிச்சி பகுதியில் உள்ள ஜெனிபரின் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் மூலம் தகவல் கிடைத்தது.
கொள்ளை
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் ஜேக்கப் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு விரைந்து வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. எல்.இ.டி. டி.வி., டி.வி.டி. பிளேயர், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட சில பொருட்களை காணவில்லை. பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் வேறெதுவும் திருட்டு போகவில்லை.
வீடு பூட்டிக்கிடந்ததைப் பார்த்து யாரோ மர்ம மனிதர்கள் சுத்தியலால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய சுத்தியல் அருகில் கிடந்தது.
இந்த கொள்ளை பற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சென்று ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் என போலீஸ் தரப்பில் கணக்கிடப்பட்டு உள்ளது. இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆம்லெட்‘ சாப்பிட்ட கொள்ளையர்கள்
கொள்ளை நடந்த பேராசிரியர் வீட்டில் கொள்ளையர்கள் மிகவும் சாவகாசமாக கொள்ளையடித்துள்ளனர். கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்களுக்கு மிகவும் பசித்துவிட்டது போலும். இதனால் வீட்டில் இருந்த முட்டைகளை எடுத்து ‘ஆம்லெட்‘ போட்டு சாப்பிட்டுள்ளனர். மேலும் குளிர்சாதன பெட்டியில் இருந்த பாலை எடுத்து காய்ச்சி குடித்துள்ளனர். கொள்ளையர்களில் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த பழக்கம் உள்ள கொள்ளையர்களை போலீசார் குறி வைத்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்...








