Tuesday, March 20, 2018

On Tuesday, March 20, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி        20.3.18


கடும் எதிர்ப்புக்கிடையே தமிழகத்துக்குள் நுழைந்தது ராம ராஜ்ஜிய ரத யாத்திரை

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்துக்குள் நுழைந்தது. தமிழக-கேரள எல்லையான  கோட்டை வாசல் பகுதிக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.  விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது. இந்த ரத யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து கேரள மாநிலத்திலிருந்து நெல்லை மாவட்டம் வழியாக தமிழகம் வந்தடைந்தது.

நெல்லையில் 144 தடை
நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை நடைபெறவுள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மார்ச் 23ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். இதற்காக நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்புக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் முழுவதும் 32 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  கடும் எதிர்ப்பை மீறி தமிழக அரசு ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தமிழக எல்லையான செங்கோட்டை பகுதிக்கு ரத யாத்திரை வந்து சேர்ந்தது. ரத யாத்திரை தமிழகத்தில் நுழைய எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தமுமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள் கைது
முன்னதாக போராட்டம் நடத்த சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் மதுரை திருமங்கலம் அருகே ஏ.பாறைப்பட்டியில் கைது செய்யப்பட்டார். போராட்டத்திற்கு செல்லும் வழியிலேயே விடுதலை சிறுத்தை கட்சி யின் தலைவர்எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டார் . இதேபோல் தென்காசியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் கொளத்தூர் மணி, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டனர்.  அதனை தொடர்ந்து 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இந்நிகழ்வில் மாநில கருத்தியல் பரப்பு மாநிலதுணை செயலாளர் தொழிலதிபர் எம்.கே முருகன்திருச்சி  தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன் தொழிலாளர் விடுதலை   முன்னணி மாநிலசெயலாளர் பிரபாகரன்அரசு(இலஞ்சிறுத்தை மாநில துணைசெயலாளர்) புல்லட்லாரண்ஸ்(மாவட்டதுணைசெயலாளர்)நடாளுமன்ற தொகுதி செயளாளர்கள் தங்கதுரை மற்றும் தமிழாதன் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணிஆகியோர்  கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.

பேட்டி - திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை

Saturday, March 17, 2018

On Saturday, March 17, 2018 by Tamilnewstv   
திருச்சி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:



தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

உடலுறுப்பு தானத்தில் தனியார் மருத்துவமனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை,பதிவு மூப்பு அடிப்படியில் தான் உடலுறுப்புகள் வழங்கப்படுகிறது.

தமிழகம் உடலுறுப்பு தானத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

ஏர்வாடியில் கண் பார்வை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள்
On Saturday, March 17, 2018 by Tamilnewstv   

On Saturday, March 17, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி ஸ்ரீீீரங்க ம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணத்துப் பூச்சி பூங்்கா்காவில் மார்க்கன்று நடும்்் விழா
நடைபெற்றறது அமைச்சர்கள் வெல்்ல்ல மண்டி நடராாஜன் அமைச்சர் வளர்மதி பாாரளுமன்ற்ற உறுப்பினர் குமார் மாவட்டட ஆட்சித் தலைவர் இராாாசா மணி மரக்கன்றுகள் வைத்தனர்

இந்நிழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம் சீரங்கம் .பகுதி செயலாளர் டைமன் திருப்பதி, சகாாாாதேவன் பாண்டி
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Friday, March 16, 2018

On Friday, March 16, 2018 by Tamilnewstv in ,    
பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்–அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

திருச்சியில் தொழில்துறையினர் நடத்தும் கருத்தரங்கில் தமிழக அமைச்சர்கள், துப்பாக்கி  தொழிற்சாலையின் உயர்அதிகாரிகள் இந்தக்  கருத்தரங்கில் கலந்து கொண்டு தொழில்  வளர்ச்சிக்கான கருத்துக்களைப் பரிமாறி  கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய  பாதுகாப்பு துறை  அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பேசுகையில்  :

இந்தியஅளவில் உள்ள  தொழில்களில் மத்திய  அரசின்கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில்தனியார் மயமாக்குதல்  என்பது எந்தவகையில் வளர்ச்சி பாதையை நோக்கிப்  பயணிக்கும்என்பது குறித்த  விளக்கங்களைத்தெரிவித்தார்

பொது நிறுவனங்கள்  தற்போது சிறு தனியார் நிறுவனங்களை நம்பி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே பொதுத்துறையில்தனியார்  தலையீடு இருந்தால்  வேலைவாய்ப்புஅதிகரிக்கும்,  பொருட்களின் உற்பத்தி, பொருட்களின் தரத்தில் கூடுதல் கவனம்,  என்றும், பல வளர்ச்சிகள்  உள்ளதாக கூறினார்.

திருச்சியைப் பொறுத்தவரை பாரத மிகுமின்நிலையம்,  துப்பாக்கி தொழிற்சாலை,  உள்ளிட்டவற்றிலும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டது. அதற்கான  பணிகள் நடைபெற்று வருகிறது.  பாரதமிகு மின் நிலையத்தைச்சுற்றி உள்ளசிறு, குறு தொழில்  முனைவோர்கள்தங்களுடைய  திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கும்  ஒரு வாய்ப்புஇந்தத் தனியார் மயமாக்குதல் மூலம் நடக்கும்என்று கூறினார்.

ராணுவ தளவாடங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்யவும், தேஜஸ் விமானங்களை போர் விமானங்களாக தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்

தனியார் தலையீடு இல்லாமல்பொதுத்துறைநிறுவனங்கள் செயல்பட முடியாது.  பலதிறமையானவர்களை  தனியார் மயாக்குதல் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும், குறிப்பாக  இந்திய இராணுவத்திற்கும்,  தமிழககாவல்துறைக்குமான  தேவையை தற்போதுஉள்ள இந்தபொதுத்துறை நிறுவனத்தால்கொடுக்க முடியவில்லை. ஆனால் தனியாரின்தலையீடு இருந்தால் அதை நாம் ஈடுசெய்யமுடியும். நாங்கள் எதையும் விற்கவில்லைஅனைத்தையும் உயிர்ப்பிக்க முயற்சிசெய்கிறோம். என்று தெரிவித்தார். நம்முடைய நாட்டில் பாதுகாப்பு துறையை தனியார் மூலம் வலிமையான நிறுவனங்களாக மாற்ற முடியும் என்பது தான் மத்திய அரசின் கொள்கை எனவே அதனை செயல்படுத்த தான் இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம் மக்களிடம் தனியார் மயமாக்குதலை பற்றி எடுத்துக்கூறி வருகிறோம் என்று கூறினார்.

தொழிற் வளர்ச்சிக்கான சர்வதேச மாநாடுநடைபெற உள்ளது அதில் 60 நாடுகள் மற்றும்75 நிறுவங்கள் கலந்து  கொள்வதாகவும் இதில்50%  மானியத்துடன் வழங்கப்படும் என்றும்தெரிவித்தார். மேலும் அரசு  மற்றும் தனியார்நிறுவனங்கள் நன்று வளர்ந்து Make in indiaதிட்டத்தின் கிழ் கொண்டு வந்து நாட்டைமுன்னேற்ற பாதையில் கொண்டு போவதே எங்கள் நோக்கம் எனவும்  தெரிவித்தார்.இந்தியா  ஏற்றுமதியில் சிறந்து விளங்கஓத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்..






Thursday, March 15, 2018

On Thursday, March 15, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 15.3.18
இந்தியஅரசு நேரு யுவகேந்திரா திருச்சிராப்பள்ளி விவேகானந்தா சமூக சேவை அமைப்பு சார்பில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது

இந்நிகழ்சியின் நோக்கம் பாரளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்த செயல்முறைகள் என்ன என்றும் மாணவ மாணவிகள் எ ப்படி அதை மேற்கொள்வது எ ன்றும் பாராளுமன்றம் எ ப்ப டிசெயல்படுகிறது என்றும் மாணவ மாணவியர்இடையே செயல்முறை விளக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது
அதன்படி  மாணவ மாணவிகள் தங்களின் பிரச்சனை தங்கள் பகுதி பொதுப்பிரச்சனை எப்படி தீர்க்க தீர்வு காண்பிக்கப்படுகிறது அரசியல் பிரமுகர்களிடம் எப்படி எதிர்நோக்குவது எ ன்பதன் விளக்கம் விளக்கப்படுகப்பட்டது 
இந்நிகழ்ச்சியில்(விஎஸ்ஓ )சந்தானகிருஷ்ணன் செயலாளர் வரவேற்புரையாற்றினார்ஸ்ரீமத்ஆண்டவன் கல்;லூரி இணை முதல்வர்பிச்சைமணி தலைமைவகித்தார் நேரு யுகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நோக்கவுரையாற்றினார்.டாக்டர்.ராமானுஜம் இயக்குனர்ஸ்ரீமத்ஆண்டவன் கல்லூரி டாக்டர். ராதிகா முதல்வர் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி  சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நேரு யுகேந்திரா திட்டங்கள்பற்றி மகேஷ்வரன் கணக்காளர் கூறினார்.ஸ்ரீதர் தலைவர்(விஎஸ்ஓ) நன்றியுரையாற்றினார்

Wednesday, March 14, 2018

On Wednesday, March 14, 2018 by Tamilnewstv in ,    

வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு
கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை
மாலை 3.00 மணியளவில் கல்லூரி திறந்த வெளி கலையரங்கத்தில்
அமைக்கப்பெற்ற சிறப்பு பந்தலில் இனிதே நடைபெற்றது. கல்லூரி முதல்வர்
முனைவர் த. பால் தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் மற்றும் சிறப்பு
அலுவலர் திரு. என். ரவிச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக்
கலந்து கொண்டு விழாச் சிறப்புரை ஆற்றினார்கள்.
கல்லூரியின் பகுதி V செயல்பாட்டு விரிவாக்க அறிக்கையை (2017-18
கல்வியாண்டிற்கு) கல்லூரி விரிவாக்கப் பணிகள் புல முதன்மையர் முனைவர்
சி.தனபால் அவர்கள் தொகுத்தளித்தார்கள்.
மதிப்புறு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சிராப்பள்ளி ‘ஸ்கோப்’
தொண்டு நிறுவன இயக்குநர் முனைவர் எம். சுப்புராமன் அவர்கள்
வாழ்த்துரை வழங்கினார்கள். சிறந்த தன்னார்வ தொண்டர்களுக்கான
விருதுகளை கல்லூரியின் துணை முதல்வர் எ·ப். சாமுவேல் கிறிஸ்டோபர்
அவர்களும், சுயநிதிப் பிரிவின் துணை முதல்வர் முனைவர் ஆ.ரெல்டன்
அவர்களும் வழங்கினார்கள். பகுதி V பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்களை
கல்லூரி முதல்வர் பாராட்டி சிறப்பு செய்தார்கள்.
சிறந்த சேவை செய்த பிரிவிற்கான விருதினை மாநகராட்சி ஆணையர்
அவர்கள் வழங்கி சிறப்பு செய்தார்கள்.
முன்னதாக இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய
இந்நிகழ்விற்கு வருகை தந்தோரை கல்லூரி இயற்கை கழக ஆசிரிய
பொறுப்பாளர் திருமதி கிளெனி ஜோஸ்லின் அவர்கள் வரவேற்றார்கள். கல்லூரி
விரிவாக்கப் பணிகள் புல இணை முதன்மையர் முனைவர் எம். கேபிரியேல்
அவர்கள் நன்றி கூறினார்கள்.

On Wednesday, March 14, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி  14.03.18.

மாவட்ட அளவிலான தொழிற் முனைவோர் விழிப்புணர்வு முகாம்.

மாவட்ட அளவிலான தொழிற் முனைவோர் விழிப்புணர்வு முகாம் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்றது.இதில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசா மணி பேசிய போது தமிழக அரசு புதிதாக அமைத்திடும் தொழில்களை ஊக்கப்படுத்தவும் அதன் மூலம் வேலை வாய்ப்பினை பெருக்கிடவும் மானியத்துடன் கூடிய திட்டங்களை செயல்படுத்துவதாகவும். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பின் தங்கிய வட்டாரங்களிலும் புதியதாக தொழிலகங்கள் அமைக்கப்பட்டு அதிக பட்சம் ரூ.30 இலட்சம் மூலதன மான்யமாக வழங்கப்பட்டு வருவதாகவும்,புதியதாக அமைக்கப்பட உள்ள தொழிலங்களுக்கு மின் மான்யம், ஜி.எஸ்.டி வரி மான்யம், ஜெனரேட்டர் மான்யம் வழங்கப்படுவதாகவும், மேலும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் அமைத்திட ரூ.10 இலட்சம் வரை வங்கி கடனுதவியும் மான்யமாக 1.25 இலட்சம் அரசு வழங்குகிறது. தமிழக அரசு பட்டம் மற்றும் பட்டயம் படித்துள்ள இளைஞர்களுக்கு ஏற்ற தொழில்களை ஒரு கோடி ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறனர். இத்திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மான்யம் வழங்கபட்டு கடனுக்கான வட்டி விகிதத்தில்  மூன்று விழக்காடு மான்யமும் வழங்கப்படுகிறது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க 10 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் விரைவில் தொழிற் வளர்ச்சிடையும் எனவும்
 இந்தியன் வங்கி சார்பாக தொழிற் செய்ய 80 ஆட்டோக்கள் வழங்கப்படுகிறது. மேலும் மணப்பாறையில் 1000 ஏக்கர் இடம் ஒதுக்கி தொழிற்பேட்டை அமைய உள்ளதாகவும் கூறினார். புதிதாக தொழிற்முனைவோர்கள் இந்த திட்டங்களின் கீழ் பயன் பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திட முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டார்..

On Wednesday, March 14, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 14.3.18
திருச்சி மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் 


  மாவட்ட அவை தலைவர்கள் அம்பிகாபதி, பேரூர் தர்மலிங்கம்  தலைமையில் நடைபெற்றது.


அதில் தீர்மானங்களாக திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் 65 வது பிறந்த நாளை மாதம் முழுவதும் திருச்சி மாவட்டத்தில் கோலகளமாக கொண்டாடுவது எ ன்றும் வருகின்ற 24,25 ஆகிய தேதிகளில் நடைபெறவிற்கும் ஈரோடு மண்டல திமுக மாநாட்டிற்கு திருச்சி வடக்கு தெற்கு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கில் திரளாக பங்கேற்க வேண்டுமென்றும்தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு சங்கத்தேர்தல்களை முறைகேடுகள் நடைபெறமால் நேர்மையாக நடத்திட வேண்டுமெனதமிழக அரசைவலியுறுத்தியும்,காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் விளைநிலங்களுக்கு காவிரி நீரை முறையாக பெற்று தர உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வழியுறுத்தியும் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தேர்தல்களை நேர்மையாக மட்டுமே நடத்துவோம் எனவும் முறைகேடுகளில் ஈடுபட மட்டோம் என அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்   மாவட்ட அவை தலைவர்கள் அம்பிகாபதி, பேரூர் தர்மலிங்கம்  தலைமையில் நடைபெற்றது. மாநகர செயலாளர் அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார். இலக்கிய அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினரும், நடிகரும் மான வாகை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரை ஆற்றினார். வடக்கு மாவட்ட செய லாளர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள்  செளந்திர பாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்.எல். எ.க்கள் கே.என் - சேகரன், அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் குடமுருட்டி சேகர், முத்துசெல்வம், விஜயா ஜெயராஜ் மாநகர நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி வன்னை அரங்கநாதன் இளை ஞர் அணி செயலாளர் ஆனந்த் உட்பட மாவட்ட, மாநகர ஒன்றிய மகளிர் அணி வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.