Saturday, February 15, 2020

On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ?


திருச்சி மன்னார்புரத்தில்  தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறுவனம் எல்பின் இந்நிறுவனத்தின் இயக்குனர் அழகர்சாமி ( எ ) ராஜா, SRK ( எ ) ரமேஷ்  மற்றும் பங்குதாரர்கள் மீதும் பலரை ஏமாற்றிய பல  வழக்குகள் பல மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ளது.

தற்போது மதுரை திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக துரிதமாக செயல்பட்டு எல்பின் நிறுவனத்தை மூடி சீல் வைக்கவுகும் ,ராஜா, ரமேஷ் இருவரையும் கைது செய்யவும்  முழு முயற்ச்சியில்  ஈடுபட்டு வருவதால், இவர்கள்  சார்ந்திருந்த கட்சியின் தலைவர்  இவர்களது செயல்பாடுகளுக்கு ஒத்து வராததால் தானோ

தற்போது காவல்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் எச். ராஜா அவர்களை நேரில் சந்தித்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
எச். ராஜா அவர்களை நேரில் சந்தித்தபோது  கிலோ கணக்கில் எடையுள்ள  விக்கிரகம் ஒன்றை பரிசுப் பொருளாக வழங்கி உள்ளனர்.

எங்களை எப்படியாவது வழக்கில் இருந்து காப்பாற்றுங்கள் எனக் கூறி தங்க விக்கிரகத்தை வெள்ளி முலாம் பூசி வழங்கியதாக ஒரு தகவல் வருகிறது இது உண்மையா பொய்யா என தெரியவில்லை.

ஆனால் அழகர்சாமி ( எ) ராஜாவும் ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ரகசியமாகச் சென்று எச். ராஜாவை சந்தித்ததன் பின்னணி என்ன ? பொதுமக்கள் ஒரே குழப்பத்தில் உள்ளனர்.
On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பிப் 15

தஞ்சையில் நடைபெறும் இந்து மக்கள் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனசதாப்தி ரயில் மூலம் கோவையிலிருந்து அர்ஜுன் சம்பத் தஞ்சாவூர் சென்றார். வழியில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சிறப்பான முறையில் உள்ளது. குறிப்பாக பெண்கள், முதியவர்கள் வளர்ச்சித் திட்டம், அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, நீர்நிலைகள் மேம்பாடு திட்டம், விவசாயிகள், மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஆகியவை வரவேற்கத்தக்கது. கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய மசூதிகளில் பராமரிப்புக்கு தலா 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கோயில்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். முதியோர் பராமரிப்பு இல்லம் மாவட்டந்தோறும் தொடங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கிறிஸ்தவ தன்னார்வத் தொண்டு நிறுவனமத்துடன் இணைந்து செய்வது ஆபத்தானது. கல்வி, சேவை என்ற பெயரில் ஏற்கனவே மதமாற்றம் நடைபெற்று வருகிறது. அரசு நேரடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் ராமகிருஷ்ணா சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்று கூறி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த முறை 2,000 பேர் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். குடியுரிமை சட்ட விவகாரத்தை அரசியல் பிரச்சாரமாக மாற்றி அப்பாவி  இஸ்லாமியர்களை பயன்படுத்துகின்றனர். நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது நடந்தது தவறான முன்னுதாரணமாகும். போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து  இதை சரியான முறையில் கையாள வேண்டும்.
 திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் சுயலாபம் தேடுவதற்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டி விடவும் முயற்சி செய்கிறார். இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்களில் தேசத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும். எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். நேற்றிரவு மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டம் காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஸ்டாலின் நேற்றைய இரவு கருப்பு இரவு என்று கூறியது சரிதான். அதிகமான பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கிக்காக திமுக இது போன்று செயல்படுகிறது. குடியுரிமை சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரம் செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டிவிடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. இது கண்டிக்கத்தக்கது. வெளிநாட்டு இஸ்லாமியர்கள் நம் நாட்டிற்குள் ஊடுறுவுவதற்காக ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்தி உள்ளார். திமுக கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்கிறது. இது பின்னாளில் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பிப் 15

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தலைவர்
செ.கு. தமிழரசன் தலைமை வகித்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் தாக்கல் செய்த பட்ஜெட் ஒன்றோடு ஒன்று சார்ந்து உள்ளது. இரண்டு கருத்துக்களும் ஒரே கருத்தாக அமைந்துள்ளது. ஆனால் இரண்டு பட்ஜெட்களிலும் தலித் சமூக வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வில்லை. இது ஏமாற்றமளிக்கிறது. தலித் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தலித்களுக்கு என்று மத்திய மாநில அரசுகள் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். பட்ஜெட்டில் தலித் நலன் சார்ந்த அறிவிப்புகள் இல்லாதது கண்டனத்திற்குரியது. குறிப்பாக தலித்களின் உயர் கல்விக்கு எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தான் ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரஜினிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், எதிர்பார்ப்பும் உள்ளது. அதனால் தான் அவரது கருத்துக்கள் அரசியல்வாதிகள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இத்தகைய விமர்சனங்கள் ரஜினிக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது. ரஜினி கட்சி துவங்கி கொள்கைகளை அறிவித்தால் அவரது கூட்டணி குறித்து வரவேற்போம். இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

Friday, February 14, 2020

On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த விசிக பிரமுகர்கள். காரணம் என்ன ?

மோசடி பேர்வழிகள் டெல்லியில் தஞ்சமா தமிழக காவல்துறைக்கு சவாலா

திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிறுவனம் எல்பின் .
இந்நிறுவனத்தின் இயக்குனர் அழகர்சாமி ( எ ) ராஜா மற்றும் அவரது தம்பி SRK (எ) ரமேஷ் குமார் ஆகிய இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பதவி வகித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்து வருபவர் இந்நிலையில் அவரது கட்சியின் மாநில பொறுப்பில் இருக்கும் ராஜா , ரமேஷ் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் ஹெச். ராஜா அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

எல்பின்  நிறுவனம் சட்டத்துக்கு புறம்பான வகையில் செயல்பட்டு வருவதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு தெரியவந்ததாலும் மேலும் அழகர்சாமி ( எ ) ராஜாவுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க தலைவருக்கு அவர்கள் அளித்த கோரிக்கைக்கு அவர் செவி சாய்க்காததால் திருமாவளவன் அவர்கள் மீது அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் ரமேஷ் ரமேஷ் குமார் சகோதரர்கள் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்தையும் அறிந்தவர் அண்ணன் திருமாவளவன், இவர்களின் தில்லுமுல்லு அவருக்குத் தெரியாதா என உள்ளூர் கட்சியினர் கூறி வருகின்றனர்.


மேலும் மதுரையில் வெடி வியாபாரியிடம்  வெடி வியாபாரம் மோசடியில் ஈடுபட்டனர் பல்வேறு மோசடி வழக்குகள் இவர்கள் மீது தொடர்ந்த வண்ணம் உள்ளது பாதிக்கப்பட்டார்கள் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை தமிழக காவல்துறையினரால் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுத்து தீவிரமாகி வருகிறது என்ற தகவலை மோசடி சகோதரர்கள் தற்போதுகூட  டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின்  தலைவர் ஒருவருடன் கைதில் இருந்து  தப்பிப்பதற்கான வழி முறைகளைப் பற்றி பேசி வருவதாக தகவல் .

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திருவெங்கடம் யாதவ் அவர்களை இன்று டிஜிபி திரிபாதி அவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி சென்னை வரவைத்து என்பின் நிறுவனம் பற்றி டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஐஜி இடம் நேரடியாக புகார் மனுவினை  வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி உறுதி அளித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

தமிழகம் முழுவதும் இவர்கள் மீது ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளது எல்பின் நிறுவனம் முடக்கப்பட்டு பல ஆண்டு ஆகியும் அதில் பணம் முதலீடு செய்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர் அதில் பாஜகவை சேர்ந்த சில பிரமுகர்களும் நிறுவனத்தில் பண முதலீடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது இந்நிலையில் அரசியலில் நேர்மையாக செயல்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இவர்களுக்கு சாதகமாக நடக்காததால் இவர்களுடைய மோசடியை மறைக்க மத்தியில் ஆளும்  அரசை நாடி உள்ளனரா இவர்கள் மோசடியில் பொதுமக்கள்  மற்றும் பாஜக பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது
On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார்.


மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார்.
 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜவகர், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் சமையல் எரிவாயு உருளை உடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசை கண்டித்தும், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஜவகர் செய்தியாளரிடம் பேசுகையில், கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு மக்களுக்கு எவ்விதமான

நன்மைகளையும் செய்யவில்லை. சமையல்  விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  செயல்களை சமாளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்தம், காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்து
மத்திய பாஜக அரசு மக்களை திசை திருப்புகிறது.

 இவற்றை கண்டிக்கும் வகையில் தான் மகிளா காங்கிரஸ் சார்பில் தற்போது நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.
On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

திருச்சி மாவட்ட இறுதி வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

திருச்சியில் இறுதி வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு  வெளியிட்ட பின்னர் செய்தியாளரகளுக்கு அளித்த பேட்டியில்

 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 22 லட்சத்து 97 ஆயிரத்து 106 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 11 லட்சத்து 18 ஆயிரத்து 900. பெண்கள் 11 லட்சத்து 77 ஆயிரத்து 997. மூன்றாம் பாலினமாக 209 பேரும் உள்ளனர். அதிக வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதியாக ஸ்ரீரங்கம் விளங்குகிறது. இந்நிலையில் குறைவான வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதியாக லால்குடி இருக்கிறது. புதிதாக 50 ஆயிரத்து 992 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 1741 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என கூறினார்.
On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 
                  

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.
                

திருச்சி மாவட்ட மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் இந்திய மக்கள் நலச் சங்கம் ஆகியவை இணைந்து ஜங்ஷன் அருகில் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்  என்பதை வலியுறுத்தி காலை 
முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமையில் மக்கள் நலச் சங்கத்தின் சட்ட ஆலோசகர் மார்ட்டின்  முன்னிலையில் 
ஈடுபட்டனர்.

                    

ஆர்ப்பாட்ட உரையை மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநில பொதுச்செயலாளர்
ஜான் குமார்,
லோக் தந்திரிக்  ஜனதா தளத்தின் மாநில பொதுச்செயலாளர் ஹேமநாதன். மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மற்றும் 
லோக் தந்திரிக்  ஜனதா தளத்தின் நிர்வாகி வையாபுரி உட்பட பலர் வழங்கினார்.

Thursday, February 13, 2020

On Thursday, February 13, 2020 by Tamilnewstv in ,    

திருச்சியில் காணாமல்போன மக்கள் நல சங்கங்கள் எங்கே? கருப்பு ஆடுகள்  
களை எடுக்கப்படுமா ?





கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையரிடம் எல்பின் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் 45 பேர்  எல்பின் நிறுவனம் ஏற்கனவே  RMWC  என்ற பெயரில் ஓர் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர் . இவர்களால் நாங்கள் பாதிப்படைந்து விட்டோம் நாங்கள் கட்டிய பணத்தை இது நாள் வரை அவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை என புகார் அளித்தனர்.

அந்த புகார் மனுவை வைத்து திருச்சி மாநகர் முழுவதும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் வகையில் ? அந்த மக்கள் நல சங்கத்தினரால் அரசு மற்றும் அரசு அதிகாரிகளை எச்சரிக்கும் வண்ணம் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. 


இதனைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி எல்பின் நிறுவன பங்குதாரர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். குற்ற பொருளாதாரப் பிரிவு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்ட பொழுது உரிமையாளர்களான ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் மற்றும் இவருடன் உள்ள எல்பின் பங்குதாரர்கள் எங்கு சென்றனர் ஆய்வின் போது எங்கே இருந்தனர்? இன்று  வரை கேள்விக்குறியாகவே உள்ளது இவ்வழக்கு விசாரணை இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

(இதுபோன்று திருச்சி தில்லை நகர் பகுதியில் செந்தூர் பின்கார்ப் என்ற நிறுவனம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது)

இந்நிலையில்  பொதுநலன் கருதும் மக்கள் நல சங்கத்தை தான் வசப்படுத்தி விட்டதாகவும் மேலும் தன்னைப் பற்றி செய்தி வெளியிட்ட இரு முன்னணி நாளிதழுக்கு விளம்பரம் கொடுத்து வாயை அடைத்து விட்டதாகவும் மார்தட்டி வருகிறார்கள் அழகர்சாமி என்கிற ராஜா, ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்.


தற்போது எல்பின் நிறுவனத்தில் அடிக்கடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் நேற்று கூட தஞ்சை போலீசார் சோதனை மேற்கொண்டனர் இதில் எந்த முக்கிய ஆவணங்களும் சிக்க இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உரிமையாளர்கள் அங்கு இருப்பதில்லை.
இதற்கு காரணம் நேர்மையாக பணியாற்றும் காவல் துறையினர்  இவர்களை ஆய்வுசெய்யும்  பல்வேறு துறைகள் இடையே ஒரு சில கருப்பு ஆடுகள்  எல்பின் நிறுவனத்திற்கு முன்னதாகவே தகவல் தருவதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.

இந்த கருப்பு ஆடுகளை தமிழக அரசும்  திறன்பட  செயல்பட்டுக் கொண்டிருக்கும் டிஜிபி  களை எடுப்பார என பாதிப்படைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  எதிர்பார்க்கின்றனர்.

மேலும் எனக்கு கோடி ரூபாய் விலை பேசி அரசியல் பிரமுகர்களிடம் அழுத்தம் செய்வதாக வெளியில் கூறிக்கொண்டே திரிகிறார்கள் இது முற்றிலும் தவறான தகவல் இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறை மூலமாக தகுந்த நடவடிக்கை எடுப்பேன் மேலும் என்னிடம் உள்ள ஆதாரங்களை  ஒவ்வொன்றாக வெளியுலகிற்கு கொண்டுவருவேன் இப்படிக்கு சத்தியமூர்த்தி ஜெய்ஹிந்த் என தெரிவித்தார்
On Thursday, February 13, 2020 by Tamilnewstv in ,    
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

 திருச்சி காந்தி மார்க்கெட் பழைய பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமின் துவக்க விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டார்.


 மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் கைத் தெளிப்பான் கருவி வழங்கப்பட்டது.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. சிறந்த பட்ஜெட்டை தமிழக அரசு வழங்கும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். எந்த திட்டமாக இருந்தாலும் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பதையே தனது அன்றாட பணியாகக் கொண்டுள்ளார். பலரும் பாராட்டக்கூடிய வேளாண் மண்டல அறிவிப்பை குறை கூறினால், அதற்கு எப்படி நான் பதில் கூறுவது.
 தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது  மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தமிழக விவசாயிகளின் நண்பனாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் பலரும் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். விவசாயிகளின் நண்பனாக, ஒரு விவசாயியின் தலைமையில் ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. டாஸ்மாக் மதுபான கடைகளில் அனுமதியில்லாத நேரங்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வகையில் ஆக்கிரமிப்புகளும் உரிய முறையில் அகற்றப்படும். ஆக்கிரமிப்பாளர்களை அழைத்து பேசி அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பொழிவான நகரமாக உருவாக்குவோம் என்றார்.