Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
விலையில்லா மடிக் கணினி வழங்கக் கோரி கூடலூரில் கல்லூரியின் நுழைவு வாயிலில் 3-ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற் பட்டது.

மாணவர்கள் போராட்டம்

கூடலூர் கோழிப்பாலம் பாரதியார் பல்கலைக் கழக கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணிக்கு திடீரென கல்லூரி நுழைவு வாயிலில் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். இது பற்றி மாணவர்கள் கூறியதாவது:-

எங்கள் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட வில்லை. மேலும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கல்வி உதவி தொகையும் வழங்கவில்லை. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றோம்.

கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கல்லூரி மாணவர்கள் சென்று வர போதிய பஸ் வசதி அமைத்து தர வேண்டும் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்ததும் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) லி.ரமேஷ் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்களின் முக்கிய பிரச்சினையான பஸ் வசதி குறித்து கல்லூரி முதல்வர், தாசில்தார், போக்குவரத்து அலுவலர் ஆகியோர் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும். மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என மாணவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதில் சமரசம் அடைந்த மாணவர்கள் நுழைவு வாயில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
குன்னூரில் நடுரோட்டில் மலைரெயில் நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

4 சாலைகள் சந்திப்பு

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் தினந்தோறும் சென்று வருகிறது. குன்னூரில் மலை ரெயில் பாதை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியில் உள்ளது. குன்னூர் -மேட்டுப் பாளையம் சாலை, குன்னூர்- ஊட்டி சாலை, மவுண்ட் ரோடு செல் லும் சாலை, ஓட்டுப்பட்டறை செல்லும் சாலை ஆகிய 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் ரெயில் பாதை அமைந்து உள்ளது.

உள்ளூர் பஸ் நிலையம், மார்க் கெட், மவுண்ட் ரோடு ஆகிய பகுதிகளுக்கு இந்த ரெயில் பாதை தண்ட வாளத்தை தாண்டி தான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் நேற்று சுமார் காலை 10.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூரை நோக்கி மலை ரெயில் வந்து கொண்டு இருந் தது.ரெயில் வருவதற்காக ரெயில்வே கேட் ஏற்கனவே மூடப்பட்டு இருந்தது.

ரெயில்வே கேட் அருகே வந்த போது திடீரென்று என்ஜினால் பெட்டிகளை தள்ளி செல்ல முடிய வில்லை. தண்டவாளத்தில் என்ஜினின் சக்கரங்கள் வழுக்கியதால் சக்கரங்கள் மட்டுமே சுற்றியது.ஆனால் பெட்டிகள் நகர வில்லை. உடனடியாக அந்த இடத்தில் மலை ரெயில் நிறுத்தப் பட்டது. மலை ரெயில் நடுரோட்டில் நின்ற தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட் டது.

மேலும் தண்ட வாளத்தில் மணல் மற்றும் சாம்பல் போடப்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மலை ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டு சென்றது.

இதன் காரணமாக ரெயில்வே கேட்டின் இரு புற மும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகினர். ரெயில்வே கேட் திறக்கப்பட்ட பின்னர் போலீசார் மிகுந்த சிரமத்து டன் வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.

நடைபாதை மேம்பாலம்

மலை ரெயில் செல்லும் நேரங்களில் ரெயில்வே கேட் மூடப்படும் போது பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. ரெயில்வே கேட் மூடப்படும் போது பொது மக்கள் சிறிய கேட்டினுள் நுழைந்து தண்ட வாளத்தை கடந்து செல்வது பெரும் சிரம மாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகபொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
நாகை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 8½ கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து அதிகாரிகள் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் அதிகாரிகள் மேலசாலை பகுதியில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் காரில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. எனவே அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது காரின் கியர் பாக்ஸ் அடியில் 19 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தங்க கட்டிகளை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவற்றை காரில் இருந்து வெளியே எடுத்து ஆய்வு செய்தனர்.
தங்க கட்டிகளின் மொத்த எடை 8 கிலோ 536 கிராம் என தெரியவந்தது. இதன்மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 30 லட்சம் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தங்க கட்டிகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது பாசில் (வயது 25) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த யாசர் அராபத் (20) என்பதும் தெரியவந்தது.
முகமது பாசில், யாசர் அராபத் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டதா? இந்த கடத்தலில் மேலும் யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா? என பிடிபட்ட 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்கும் வரை, பூம்புகார் பகுதி மீனவர்கள் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. நாகை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயன் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரைநேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோகன அன்பழகன், நகர செயலாளர் சுப்புராயன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் தியாக விஜயேஸ்வரன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் அம்பலவாணன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சசிக்குமார், துரைராஜன், கட்சிப்பிரமுகர்கள் மாரிமுத்து, குணசேகரன், முல்லைவேந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
நாகை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முனுசாமி மாணவ-மாணவிகளுக்கு கலவை சாதம் வழங்கினார்.

கலவை சாதம்

நாகை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவு மையத்தில் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவில் கலவை சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கலவை சாதங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 5 வயது வரை உள்ள முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கும் மதிய உணவில் பலவகை கலவை சாதம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு திங்கட்கிழமை தக்காளி சாதம் மற்றும் வேகவைத்த முட்டை, செவ்வாய்க்கிழமை காய்கறி கலவை சாதம் மற்றும் சுண்டல், புதன்கிழமை காய்கறி புலவு சாதம் மற்றும் வேகவைத்த முட்டை, வியாழக்கிழமை எலுமிச்சை சாதம் மற்றும் வேகவைத்த முட்டை, வெள்ளிக்கிழமை பருப்பு சாதம் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காய்கறி கலவை சாதம் ஆகியவை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளி

அதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு முதல் மற்றும் 3-ம் வாரம் திங்கட் கிழமை வெஜிடபிள் பிரியாணி, மிளகு முட்டை, செவ்வாய்க்கிழமை கொண்டக்கடலை, புலாவு, தக்காளி மசாலா முட்டை, புதன்கிழமை தக்காளி சாதம், மிளகு முட்டை, வியாழக்கிழமை சாம்பார் சாதம், சாதா முட்டை, வெள்ளிக்கிழமை கறிவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், உருளை கிழங்கு தக்காளி சேர்த்து வேகவைத்த முட்டையும், 2-வது மற்றும் 4-வது வாரத்தில் திங்கட்கிழமை பிசிபேளாபாத், வெங்காயம், தக்காளி முட்டை மசாலா, செவ்வாய்க்கிழமை மிக்சர்ட் மீல் மேக்கர் மற்றும் காய்கறிகள் சாதம், மிளகு முட்டை, புதன் கிழமை புளி சாதம், தக்காளி மசாலா முட்டை, வியாழக்கிழமை எலுமிச்சை சாதம், மசாலா முட்டை, வெள்ளிக்கிழமை சாம்பார் சாதம், வேகவைத்த முட்டை அல்லது வறுத்த உருளைக்கிழங்கும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சர்க்கரை பொங்கல்

நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் செயல்படும் ஆயிரத்து 325 அங்கன்வாடி மையங்களில் 28 ஆயிரத்து 109 குழந்தைகளுக்கும், மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படும் ஆயிரத்து 162 சத்துணவு மையங்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 45 மாணவ, மாணவிகளுக்கும் பலவகை கலவை சாதங்கள் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பள்ளியில் மதிய உணவாக மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கலும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு தக்காளி சாதத்துடன் முட்டை மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை கலெக்டர் முனுசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவஞானபாரதி, நகரசபை தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நகராட்சி ஆணையர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
அரவக்குறிச்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயந்தி நேரில் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கிறது. அதன்படி நாகம்பள்ளி ஊராட்சி மலைக்கோவிலூரில் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயந்தி பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அதே போன்று நவமணி நகர் பகுதியில் தனி நபர் கழிப்பறை அமைக்கும் திட்டத்தை பார்வையிட்டார். அப் போது அங்கிருந்த பொது மக்களிடம் கழிப்பறையை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
அதே போன்று தங்கள் குழந்தைகளையும் கழிப் பறையை பயன்படுத்தும் பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து மலைக் கோவிலூரில் உள்ள அங்கன் வாடி மையத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்குவதை பார்வையிட்டார். அப் போது குழந்தைகளின் எடையை பராமரிக்கும் பதிவேடுகளை ஆய்வு செய்து, சரியான எடை யில் குழந்தைகள் இருக்கும் அளவிற்கு இணை உணவுகள் வழங்கி குழந்தைகளை நல்ல முறையில் கண்காணிக்க வேண் டும் என்று அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தர விட்டார்.
ஆய்வு
அதே போன்று மலைக்கோவிலூரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது எடை அளவு, இருப்பு சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். தொடர்ந்து தடா கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு படித்து வரும் மாணவ–மாணவிகளின் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள மாணவ– மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை ஆய்வு செய் தார்.இதே போன்று கொடை யூர் ஊராட்சி கரப்பாளை யம் கிராமத்தில் ஊரக உட்கட்டமைப்பு திட்டத் தில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்தில் கட்டப்ப ட்டு வரும் தடுப் பணை யை பார்வை யிட்டார்.
அப்போது அந்த பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்க அந்த பகுதியில் உள்ள ஆழ் குழாய் கிணறுகளை சீரமைக்க கோரி வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் நுகர்வு பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அதிகாரி லியாகத், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி செந்தமிழ்செல்வி, அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தண்ட பாணி, தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு இழப் பீட்டு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து குளித்தலை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இறந்தார்

திருச்சி மாவட்டம் தொட் டியம் ஒன்றியம் பவுத்திரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது42) கடந்த3.8.2010 அன்று சொந்த வேலை காரண மாக முசிறிக்கு சென்றார். பின்னர் அன்று இரவு முசிறி யில் இருந்து பவுத்திரம் செல்வதற்காக அரசு பஸ்சின் முன் படிக்கட்டில் ஏறினார்.அப்போது அரசு பஸ் டிரை வர் திடீரென்று பஸ்சை எடுத்த தால் பஸ் படியில் இருந்து செல்வம் கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரம் செல்வத்தின் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வம் இறந்தார்.

முறையீட்டு மனு

இதைத்தொடர்ந்து இழப்பீடு தொகை கேட்டு செல்வம் மனைவி மேகலா கடந்த 5.6.2012 அன்று குளித்தலை சப்-கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்ப பிள்ளை விபத்தில் இறந்து செல்வம் குடும்பத்திற்கு தமிழக போக்குவரத்து கழகம் ரூ. 6 லட்சத்து 45 ஆயிரம் இழப் பீட்டு தொகை வழங்க வேண் டும் என்று கடந்த 24.7.2013-ந் தேதி தீர்ப்பளித்தார். ஆனால் பல மாதங்கள ஆகியும் இழப்பீடு தொகை வழங்க வில்லை. இதைத் தொ டர்ந்து மேகலா முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த குளித் தலை சப்-கோர்ட்டு நீதிபதி ஐயப்பப்பிள்ளை வட்டியுடன் சேர்த்து ரூ. 7 லட்சத்து 35 ஆயிரத்து 477 இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இந்த தொகைக்காக அரசு பஸ்சை ஜப்தி செய்ய கடந்த 5.9.14-ந்தேதி உத்தரவிட் டார்.

ஜப்தி

நீதிமன்ற உத்தரவின்படி குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்த அரசு பஸ்சை ஒன்றை நேற்று காலை 12 மணிக்கு கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இவரது மனைவி லட்சுமி(வயது 45). தங்கவேல் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். லட்சுமி வீட்டை பூட்டிவிட்டு ஆடு மேய்ப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுவிட்டார். மதியம் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 400 மதிப்பிலான 51 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் குளித்தலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
புதிய தொழில் முனை வோரை ஊக்குவிக்கும் விதமாக 25 சதவீதம் மானியத்தில் தொழிற் கடனுதவிகள் வழங்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்மையத்தின் பொதுமேலாளர் ஏகாம் பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தொழில்முனைவோர்

படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர் களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் வளர்ச்சித் திட்டம் (நீட்ஸ்) என்ற புதிய திட்டத்தை அறி வித்து செயல்படுத்தி வரு கிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ, பட்டய படிப்பு (டிப் ளமோ), இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு 1 மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கி கள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.

25 சதவீதம் மானியம்

இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சத வீதம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானி யமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படு கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு ( டிப்ளமோ) இளங் கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரி வினர்களான மகளிர், பட்டிய லினத்தோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகி யோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏது மில்லை.

ரூ.1 கோடி வரை...

இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.5 லட்சத்திற்கு மேல் அதிகபட்ச மாக ரூ.1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் தொடங் கலாம். பொதுப் பயனாளி தனது பங்காக திட்ட மதிப் பீட்டில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட் டில் 5 சதவீதம் செலுத்த வேண் டும்.

தகுதியுள்ள படித்த இளை ஞர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமை யிலான தேர்வுக் குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப் படுவார்கள். மேற்குறிப்பிட்ட தகுதிகளையுடைய, தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.