Wednesday, September 17, 2014
நாகர்கோவில் கீழபெருவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மகள் தேவிகலா (வயது 17) பிளஸ்–2 படித்துள்ளார். இவர் கடந்த 9–ந்தேதி முப்பந்தல் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் சுப்பிரமணியம் புகார் செய்தார். இந்தநிலையில் மறுநாள் போலீஸ் நிலையத்தில் தேவிகலா ஆஜரானார். அப்போது தோவாளை கமல் நகரை சேர்ந்த சரவணன் (31) என்பவரை காதலிக்கிறேன். வீட்டில் கண்டித்ததால், உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வந்தேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து தேவிகலாவை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று தோவாளையில் திருமண வயதை எட்டாத தேவிகலா–சரவணன் ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராஜபதிக்கு தகவல் வந்தது. உடனே அவர் உத்தரவின் பேரில் அலுவலர் அஜிதா, தோவாளை கிராம நிர்வாக அதிகாரி கலைவாணி, ஆரல்வாய்மொழி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அந்த வீட்டில் திருமண ஏற்பாடு நடந்தது தெரிய வந்தது. தேவிகலாவுக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து தேவிகலா மற்றும் சரவணன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். தேவிகலாவுக்கு 18 வயது முடிந்த பிறகு திருமணம் செய்யலாம். அதற்கு முன்பு திருமணம் செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், திலகர் திடல் பின்புறமும் தலா ரூ.30 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த 2 உணவகங்களையும் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சை மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்க பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் அவர்கள் சமையலுக்கு தேவையான உபகரணங்களையும் பார்வையிட்டனர்.
இவர்களுடன் தஞ்சை மாநகராட்சி ஆணையர் குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சந்திரபோஸ், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், காவேரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி துணை தலைவர் புண்ணியமூர்த்தி, நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன், 38–வது வட்ட அ.தி.மு.க. செயலாளர் பூவை.சரவணபவன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு விசாரணை முகாமில் ஒரே நாளில் 323 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
சிறப்பு விசாரணை முகாம்
தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலு வையில் இருக்கும் மனுக்களை சிறப்பு முகாம்கள் நடத்தி தீர்வு காண மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தர விட்டார். அவருடைய உத்தர வின் பேரில் தேனி, போடி, சின்னமனூர், உத்தம பாளை யம், ஆண்டிப்பட்டி, கட மலைக்குண்டு, பெரியகுளம் ஆகிய 7 இடங்களில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடத்தப்பட்டது.
இந்த முகாமிற்கு அந்தந்த பகுதி போலீஸ் துணை சூப்பி ரண்டுகள் தலைமை தாங்கி னர். தேனியில் நடந்த முகாமில் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் முத்துக்குமார், வெங்கடாசல பதி, சப்-இன்ஸ்பெக்டர் உதய குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையம் வாரியாக தனித்தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டன. இதில் 130 மனுக்கள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, 115 மனுக்கள் தீர்வு காணப்பட்டன.
323 மனுக்கள் தீர்வு
அதேபோன்று போடி, சின்னமனூர் பகுதிகளில் 79 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 54 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. உத்தம பாளையத்தில் 87 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, 67 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. ஆண்டிப்பட்டி, கடமலைக் குண்டு ஆகிய இடங்களில் 85 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 58 மனுக்களும், பெரியகுளத்தில் 52 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு 29 மனுக்களும் தீர்வு காணப்பட்டன. மாவட் டம் முழுவதும் மொத்தம் 533 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 323 மனுக்கள் ஒரே நாளில் தீர்வு காணப் பட்டது.
இந்த முகாம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் கூறுகையில், ‘பொது மக்களுக்கு காலதாமதம் இல் லாமல், நேரம் மற்றும் அலைச் சலை குறைக்கவும், விரைவில் நீதி கிடைக்கவும் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை குறைக்கவும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேனி மாவட்டத் தில் இதுபோன்ற சிறப்பு முகாம் கள் நடத்தப்படும்’ என்றார்.
சிறப்பு விசாரணை முகாம்
தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலு வையில் இருக்கும் மனுக்களை சிறப்பு முகாம்கள் நடத்தி தீர்வு காண மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தர விட்டார். அவருடைய உத்தர வின் பேரில் தேனி, போடி, சின்னமனூர், உத்தம பாளை யம், ஆண்டிப்பட்டி, கட மலைக்குண்டு, பெரியகுளம் ஆகிய 7 இடங்களில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடத்தப்பட்டது.
இந்த முகாமிற்கு அந்தந்த பகுதி போலீஸ் துணை சூப்பி ரண்டுகள் தலைமை தாங்கி னர். தேனியில் நடந்த முகாமில் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் முத்துக்குமார், வெங்கடாசல பதி, சப்-இன்ஸ்பெக்டர் உதய குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையம் வாரியாக தனித்தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டன. இதில் 130 மனுக்கள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, 115 மனுக்கள் தீர்வு காணப்பட்டன.
323 மனுக்கள் தீர்வு
அதேபோன்று போடி, சின்னமனூர் பகுதிகளில் 79 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 54 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. உத்தம பாளையத்தில் 87 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, 67 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. ஆண்டிப்பட்டி, கடமலைக் குண்டு ஆகிய இடங்களில் 85 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 58 மனுக்களும், பெரியகுளத்தில் 52 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு 29 மனுக்களும் தீர்வு காணப்பட்டன. மாவட் டம் முழுவதும் மொத்தம் 533 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 323 மனுக்கள் ஒரே நாளில் தீர்வு காணப் பட்டது.
இந்த முகாம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் கூறுகையில், ‘பொது மக்களுக்கு காலதாமதம் இல் லாமல், நேரம் மற்றும் அலைச் சலை குறைக்கவும், விரைவில் நீதி கிடைக்கவும் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை குறைக்கவும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேனி மாவட்டத் தில் இதுபோன்ற சிறப்பு முகாம் கள் நடத்தப்படும்’ என்றார்.
தேனி மாவட்டத்தில், சட்டவிரோதமாக திராவகம் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
திராவகம் விற்பனை
கல்லூரி மாணவிகள் மீது திராவகம் (ஆசிட்) வீசப்படும் சம்பவம் எதிர்பாராத வகை யில் நடந்து வருகிறது. இத னால் திராவகம் விற்பனை செய்ய ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 2 கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் திராவகம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்ப வத்தின் எதிரொலியாக சட்ட விரோதமாக திராவகம் விற் பனை செய்வதை தடுக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் திராவகம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ரசாயன பொருட்கள் விற்பனை செய் யும் கடைகளில் சோதனை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தர விட்டார்.
அதன்படி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மேற்பார்வை யில் அந்தந்த உட்கோட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர சோதனை நடத்தினர். மாவட்டம் முழு வதும் போலீசார் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கடைகளில் சோதனை
தேனியில் போலீஸ் இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் தலை மையில், சப்-இன்ஸ் பெக்டர் ரேகா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ரசாயன பொருட்கள் விற்பனை செய் யும் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். கடைகளில் திராவகம் விற் பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதா? என்றும், திராவகம் விற்பனை செய்யும் கடைகளில் அதற்கான உரிமம் பெற்றுள் ளனரா? என்றும் சோதனை நடத்தப்பட்டது. ரசாயனம் வைக்கப்பட்டு உள்ள குடோன் களுக்கு சென்றும் போலீசார் சோதனை செய்தனர்.
திராவகம் விற்பனை செய் யும் உரிமம் பெற்ற சில்லறை கடைகளில் அதன் உரிமையா ளர் யாருக்கு, எவ்வளவு திராவ கம் விற்பனை செய்கிறார் என்ற விவரம் அடங்கிய விவர பதி வேட்டை பராமரிக்க வேண் டும். 18 வயதுக்கு குறைவான வர்களுக்கு திராவகம் விற்பனை செய்யக்கூடாது. உரிமம் பெறாமல் சட்ட விரோ தமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோதனையின் போது போலீசார் அறிவுறுத்தினர்.
திராவகம் விற்பனை
கல்லூரி மாணவிகள் மீது திராவகம் (ஆசிட்) வீசப்படும் சம்பவம் எதிர்பாராத வகை யில் நடந்து வருகிறது. இத னால் திராவகம் விற்பனை செய்ய ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 2 கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் திராவகம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்ப வத்தின் எதிரொலியாக சட்ட விரோதமாக திராவகம் விற் பனை செய்வதை தடுக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் திராவகம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ரசாயன பொருட்கள் விற்பனை செய் யும் கடைகளில் சோதனை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தர விட்டார்.
அதன்படி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மேற்பார்வை யில் அந்தந்த உட்கோட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர சோதனை நடத்தினர். மாவட்டம் முழு வதும் போலீசார் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கடைகளில் சோதனை
தேனியில் போலீஸ் இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் தலை மையில், சப்-இன்ஸ் பெக்டர் ரேகா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ரசாயன பொருட்கள் விற்பனை செய் யும் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். கடைகளில் திராவகம் விற் பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதா? என்றும், திராவகம் விற்பனை செய்யும் கடைகளில் அதற்கான உரிமம் பெற்றுள் ளனரா? என்றும் சோதனை நடத்தப்பட்டது. ரசாயனம் வைக்கப்பட்டு உள்ள குடோன் களுக்கு சென்றும் போலீசார் சோதனை செய்தனர்.
திராவகம் விற்பனை செய் யும் உரிமம் பெற்ற சில்லறை கடைகளில் அதன் உரிமையா ளர் யாருக்கு, எவ்வளவு திராவ கம் விற்பனை செய்கிறார் என்ற விவரம் அடங்கிய விவர பதி வேட்டை பராமரிக்க வேண் டும். 18 வயதுக்கு குறைவான வர்களுக்கு திராவகம் விற்பனை செய்யக்கூடாது. உரிமம் பெறாமல் சட்ட விரோ தமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோதனையின் போது போலீசார் அறிவுறுத்தினர்.
ஆளில்லாத ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்டதை கண்டித்து அந்த வழியை பயன்படுத்திய பொதுமக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திடீர் மறியல்
அரக்கோணம் அருகே திருத்தணி ரெயில் நிலைய பகுதியில் எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் டி.புதூர்மேடு பகுதிகளை இணைக்கும் ரெயில் பாதையை இணைக்கும் இடத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் அந்த கேட்டை நிர்வாக காரணங்களுக்காக ரெயில்வே நிர்வாகத்தினர் மூடி விட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள் திருத்தணியில் இருந்து சென்னை செல்ல தயாராக இருந்த ரெயிலின் முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
‘‘நாங்கள் செல்வதற்கு வேறு வழி கிடையாது. ரெயில்பாதைக்கு கீழே இருக்கும் சிறிய சுரங்கப்பாதை பகுதியில் மழை பெய்து தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த வழியாக நாங்கள் செல்ல முடியாது. எனவே கேட்டை திறந்து விடுங்கள்’’ என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த அரக்கோணம் தொகுதி எம்.பி. கோ.அரி மற்றும் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மனோகரன், ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதன் பின்னர் மறியல் செய்தவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். விரைவில் ரெயில்வே கேட்டை திறப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட வேண்டிய மின்சார ரெயில் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்த மறியல் தொடர்பாக 10 பெண்கள், 30 ஆண்கள் மீது அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டையை சேர்ந்த பாலாஜி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பாலாஜியின் அண்ணன் தியாகராஜன் என்பவரின் செல்போனுக்கு யாரோ ஒருவர் பேசினார்.
தியாகராஜன் பேசிய போது, எதிர்முனையில் பேசியவர், ‘‘உன் தம்பி பாலாஜியை இன்று இரவிற்குள் கொலை செய்து விடுவார்கள்’’ என கூறியுள்ளார். போனில் பேசிய நபரை நீயார் என கேட்டதற்கு, ‘‘எனக்கு பாலாஜியை தெரியும், பாலாஜிக்கும் என்னை தெரியும் பாலாஜியைத்தான் தொடர்பு கொள்ள முயன்றேன் அவர் போனை எடுக்கவில்லை’’ என கூறியுள்ளார்.
கொலை செய்வதற்கு பாலாஜி என்ன செய்தார் என கேட்டதற்கு போனில் பேசிய மர்ம நபர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மர்ம நபரின் இந்த மிரட்டல் தொடர்பாக தியாகராஜன் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செஞ்சியில் 57 மில்லிமீட்டர் மழை பதிவானது.
வெப்பச்சலனம்
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையிலும் வானம் மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி தெளிவாக காணப்பட்டது. பின்னர் மாலை 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து லேசான மழை பெய்தது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. திடீர் மழையை எதிர்பார்க்காத சிலர் ஒதுங்க இடமின்றி நனைந்தபடிசென்றதை காணமுடிந்தது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பிரதான சாலைகளில் வழக்கமாக செல்வதை காட்டிலும் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றது.
சுவர் இடிந்து விழுந்தது
இந்த கனமழையின் காரணமாக விழுப்புரம் கே.கே.ரோடு, பூந்தமல்லி தெரு, நேருஜி ரோடு ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது. மேலும் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங் கப்பாதையில் வெள்ள நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதியான மணி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நேருஜி சாலையில் கனமழைக்கு பொதுபணித்துறை அலுவலக மதில்சுவரானது இடிந்து விழுந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வெப்பச்சலனம்
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையிலும் வானம் மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி தெளிவாக காணப்பட்டது. பின்னர் மாலை 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து லேசான மழை பெய்தது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. திடீர் மழையை எதிர்பார்க்காத சிலர் ஒதுங்க இடமின்றி நனைந்தபடிசென்றதை காணமுடிந்தது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பிரதான சாலைகளில் வழக்கமாக செல்வதை காட்டிலும் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றது.
சுவர் இடிந்து விழுந்தது
இந்த கனமழையின் காரணமாக விழுப்புரம் கே.கே.ரோடு, பூந்தமல்லி தெரு, நேருஜி ரோடு ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது. மேலும் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங் கப்பாதையில் வெள்ள நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதியான மணி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நேருஜி சாலையில் கனமழைக்கு பொதுபணித்துறை அலுவலக மதில்சுவரானது இடிந்து விழுந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ரிஷிவந்தியம் அருகே பிரபல ரவுடி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றில் பிணம்
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டு சாலை ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜி, பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற் கு விரைந்து சென்றனர். அங்கு கிணற்றில் பிணமாக மிதந்த, உடலை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டவர் ரவுடி
விசாரணையில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டவர் ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் மகன் அருளானந்தபாண்டியன்(வயது 50) என்பதும், பல்வேறு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது.
இது குறித்த தகவலின் பேரில் அருளானந்தபாண்டியன் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்த அருளானந்த பாண்டியனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல, அப்பகுதி முழுவதும் பரவியது. எனவே கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்
இதையடுத்து அருளானந்தபாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருளானந்தபாண்டியன் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கழுத்தை அறுத்து படு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி அருளானந்த பாண்டியன் மீது, நிலத்தகராறு காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவரை கடந்த 23-9-2009 அன்று கொலை செய்தது, குடிபோதை தகராறில் கடந்த 14-10-2010 அன்று அரியலூர் கிராமத்தை சேர்ந்த புகைப்படகலைஞர் பீட்டர் என்பவரை கொலை செய்தது ஆகிய 2 வழக்குகளும் பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையத்திலும், புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் நகை அடகு கடைக்காரர் சீனுவாசனை கடத்த முயன்ற வழக்கும், மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட 7 வழக்குகளும், சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
காரணம் என்ன?
மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பகண்டை கூட்டு சாலை போலீசாரால் கடந்த 18-11-2009 அன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறை தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்த அருளானந்தபாண்டியன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
எனவே அவரது செயலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அருளானந்த பாண்டியனின் தலையில் தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பிணத்தை கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
இந்த கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருளானந்த பாண்டியனை கொலை செய்து விட்டு, பிணத்தை கிணற்றில் வீசி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அருளானந்தபாண்டியனுக்கு மீரா(45) என்ற மனைவியும், சிந்துஜா(21) என்ற மகளும், கார்த்தி(19) என்ற மகனும் உள்ளனர்.
கிணற்றில் பிணம்
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டு சாலை ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜி, பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற் கு விரைந்து சென்றனர். அங்கு கிணற்றில் பிணமாக மிதந்த, உடலை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டவர் ரவுடி
விசாரணையில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டவர் ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் மகன் அருளானந்தபாண்டியன்(வயது 50) என்பதும், பல்வேறு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது.
இது குறித்த தகவலின் பேரில் அருளானந்தபாண்டியன் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்த அருளானந்த பாண்டியனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல, அப்பகுதி முழுவதும் பரவியது. எனவே கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்
இதையடுத்து அருளானந்தபாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருளானந்தபாண்டியன் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கழுத்தை அறுத்து படு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி அருளானந்த பாண்டியன் மீது, நிலத்தகராறு காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவரை கடந்த 23-9-2009 அன்று கொலை செய்தது, குடிபோதை தகராறில் கடந்த 14-10-2010 அன்று அரியலூர் கிராமத்தை சேர்ந்த புகைப்படகலைஞர் பீட்டர் என்பவரை கொலை செய்தது ஆகிய 2 வழக்குகளும் பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையத்திலும், புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் நகை அடகு கடைக்காரர் சீனுவாசனை கடத்த முயன்ற வழக்கும், மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட 7 வழக்குகளும், சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
காரணம் என்ன?
மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பகண்டை கூட்டு சாலை போலீசாரால் கடந்த 18-11-2009 அன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறை தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்த அருளானந்தபாண்டியன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
எனவே அவரது செயலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அருளானந்த பாண்டியனின் தலையில் தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பிணத்தை கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
இந்த கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருளானந்த பாண்டியனை கொலை செய்து விட்டு, பிணத்தை கிணற்றில் வீசி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அருளானந்தபாண்டியனுக்கு மீரா(45) என்ற மனைவியும், சிந்துஜா(21) என்ற மகளும், கார்த்தி(19) என்ற மகனும் உள்ளனர்.
வல்லனி, வண்டவாசி கண்மாய் பகுதியில் தனி நபருக்கு பட்டா வழங்க கூடாது என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
தனிநபருக்கு பட்டா
சிவகங்கையை அடுத்த வல் லனி மற்றும் வண்டவாசி கிராம மக்கள் கலெக்டர் ராஜா ராமனிடம் கொடுத் துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:–
வல்லனி மற்றும் வண்டவாசி கிராம கண்மாய் மூலமாக சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடைந்து வரு கிறது. இந்த நிலையில் இந்த கண்மாயில் நீர்பிடிப்பு பகுதி மற்றும் வல்லனி சுடுகாட்டு பகுதி அடுத்தடுத்து உள்ளது.
தற்போது இந்த இடத்தை சில தனிநபர்களுக்கு பட்டா கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு பட்டா கொடுத்தால் இந்த பகுதி விவசாயம் பாதிக்கப் படும். எனவே விவசாயத்தை நம்பியுள்ள இந்த பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த இடத்தை தனிநபர்களுக்கு பட்டா கொடுக்க கூடாது.
எப்போதும் போல பொது மக்களின் பயன்பாட்டுக்கு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள் ளனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...







