Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
திருவண்ணாமலை மாவட்டத்தில் உண்மை யான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண் டும் என்று குறைதீர்வு கூட்டத் தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறை தீர்வுநாள் கூட்டம் கலெக்டர் அ.ஞானசேகரன் தலைமை யில் நேற்று கலெக்டர் அலுவ லக கூட்டரங்கில் நடை பெற் றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி மற்றும் அனைத்துத்துறை அதிகாரி கள் கலந்து கொண் டனர்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். விவசாயிகள் பேசியதாவது:-

நீர்மட்டம் குறைவு

திருவண்ணாமலை மாவட் டத்தில் வறட்சியின் காரண மாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. காற்றின் ஈரப்பதமும் குறைந்து விட்டது. எனவே திருவண் ணாமலை மாவட்டத்தை கறுப்பு பட்டியலில் சேர்த்துள் ளனர்.

நாங்கள் உழைப்பதற்கு தயா ராக இருக்கிறோம். அதற்கு மாவட்ட நிர்வாகம் எங்க ளுக்கு பயிர்காப்பீடு திட்டம், இன்சூரன்சில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். அதற்கு வங்கியா ளர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

வறட்சி நிவாரணம்

கிணற்று பாசனத்தை பொறுத்தவரை திருவண்ணா மலை மாவட்டம்தான் மக சூலில் முன்னணியில் இருக்கி றது. கரும்புக்கு தேவையான உரங்கள், சொட்டு நீர் பாசனம் ஆகியவற்றை கணக்கெடுத்து வழங்க வேண்டும்.

கலசபாக்கம் தாலுகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பசுமைவீடு வழங்கப் பட்டுள்ளது. இதுகுறித்து விசா ரணை நடத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட் டத்தில் வறட்சியின் காரண மாக விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். வருவாய்த் துறை, வேளாண்மைத்துறை, புள்ளியியல்துறை சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப் பில் வேறுபாடுகள் உள்ளன.

எனவே உண்மையான கணக்கெடுப்பு நடத்தி பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

முன்னுரிமை

தண்டராம்பட்டு பகுதியில் விவசாய நிலங்களுக்குள் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வரு கின்றன. அதற்கு வனத்துறை வழங்கும் இழப்பீடு போது மானதாக இல்லை. எனவே வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுக்க பள்ளம் தோண்ட வேண்டும்.

ஏரி நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள் ளதை சரிசெய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கை களை ஆராய்ந்து முக்கியமான கோரிக்கைகளுக்கு முன்னு ரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு விவசாயி கள் வலியுறுத்தினர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
போளூர் அருகே மாயமான டிராக்டர் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அவருடைய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிராக்டர் டிரைவர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கீழ்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 38). இவரது மனைவி சாந்தி (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஏழுமலை அதே கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் மகன் பரசுராமனிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பரசுராமனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

திடீர் மாயம்

இந்த நிலையில், பரசுராமனிடம் வேலை பார்த்து வந்த ஏழுமலையை கடந்த 19-7-2014 அன்று முதல் காணவில்லை. இது குறித்து அவருடைய தாய் தனம் போளூர் போலீசில் 25-7-2014 அன்று புகார் செய்தார். அதில் தனது மகனை காணவில்லை என்றும், கண்டு பிடித்து தருமாறும் கூறியிருந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். ஆனால் ஏழுமலை என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்து வந்தது.

கள்ளக்காதல் ஜோடி சரண்

இந்த நிலையில், ஏழுமலையின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை காணாமல்போன ஏழுமலையின் மனைவி சாந்தி, பரசுராமன் ஆகிய இருவரும் கிராமநிர்வாக அலுவலர் கண்ணகி முன்பு சரண் அடைந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து ஏழுமலையை கொலைசெய்ததாக தெரிவித்தனர். அதனால் அவர்கள் போளூர் போலீசில் ஒப்படைக் கப்பட்டனர்.

அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இடைஞ்சலாக இருந்தார்

ஏழுமலை, பரசுராமனிடம் வேலைபார்த்ததால் ஏழுமலை வீட்டிற்கு பரசுராமன் அடிக்கடி சென்றுவந்துள்ளார். அப்போது சாந்திக்கும், பரசுராமனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இதற்கு ஏழுமலை இடைஞ்சலாக இருந்துள்ளார். இதனால் அவரை கள்ளக்காதல் ஜோடி கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படி கடந்த 19-7-2014 அன்று இரவு ஊரில் நாடகம் நடந்துள்ளது. அப்போது ஏழுமலை தனது நிலத்துக்கு சென்றுள்ளார்.

கொன்று புதைப்பு

இதை அறிந்த சாந்தியும், கள்ளக்காதலன் பரசுராமனும் அங்கு கடப்பாரையுடன் சென்று ஏழுமலையின் தலையில் கடப்பாரை கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் கொலை செய் தது தொரியாமல் இருக்க அங்கேயே குழி தோண்டி புதைத்துவிட்டு எதுவும் தெரியாதது போன்று வீடுக்கு வந்துவிட்டனர்.

தற்போது போலீஸ் விசாரணை தீவிரமடைந்ததை தொடர்ந்து பயந்து போய் இருவரும் சரண் அடைந்துள்ளனர்.

பிணம் தோண்டி எடுப்பு

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று மாலை தாசில்தார் கோபு, துணை சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் ஏழுமலையை புதைத்ததாக கூறப்பட்ட இடத்தில் தோண்டிப்பார்த்தனர்.

அங்கு ஏழுமலையின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் ராணி, பழனி ஆகியோர் அங்கேயே ஏழுமலையின் உடலை பிரேதபரிசோதனை செய்தனர்.

மேலும் சாந்தி, பரசுராமன் ஆகிய இருவரையும் கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மனைவியே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலைசெய்து புதைத்த இந்த சம்பவம் போளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
சாக்கடை, சாலை வசதிகளை செய்து தரக்கோரி சேலம் களரம்பட்டி பகுதியில் நேற்று இரவு பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.


சேலம் மாநகராட்சி 57–வது வார்டுக்குட்பட்ட களரம்பட்டி பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிகள் தோண்டப்பட்டதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று இரவு களரம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சிறிதுநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாக்கடை கழிவுநீருடன், மழை தண்ணீரும் சேர்ந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ரோடு முழுவதும் சாக்கடை கழிவுநீர் சென்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதியடைந்தனர்.
இதையடுத்து களரம்பட்டி ஆட்டோ நிறுத்தும் பகுதியில் ஒரு வருடத்திற்கு மேலாக பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்கக்கோரியும், சாக்கடை வசதிகள் செய்து தரக்கோரியும் நேற்று இரவு 8.30 மணிக்கு பொதுமக்களுடன் இந்திய வாலிபர் சங்கத்தினர் சேர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், பல ஆண்டுகளாக சாலை மற்றும் சாக்கடை வசதிகளை செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர
இது குறித்து தகவலறிந்த கிச்சிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும், இந்திய வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகளையும் சமாதானப்படுத்தினர். அப்போது வார்டு கவுன்சிலரிடமும், மாநகராட்சி மேயரிடமும் எடுத்துக்கூறி சாலை மற்றும் சாக்கடை வசதிகள் செய்துதர உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தரப்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இரவில் நடந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து களரம்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் கூறுகையில், களரம்பட்டி–எருமாபாளையம் மெயின்ரோட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிகள் தோண்டப்பட்டது. அதன்பிறகு பிரதான குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகும் இதுவரை சாலையை சீரமைக்கவில்லை. இதனால் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
இந்த சாலையை சீரமைக்கவும், சாக்கடை வசதிகளை செய்து தரக்கோரியும் அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு கவுன்சிலர் மல்லிகாவிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 57–வது வார்டில் தான் மாநகராட்சி மேயரின் வீடும் உள்ளது. மழைக்காலங்களில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலையை காணமுடியும். ஓட்டுபோட்ட பொதுமக்களை பற்றி மாநகராட்சி நிர்வாகம் கவலைபடுவது இல்லை. இந்த மறியல் போராட்டத்திற்கு பிறகாவது களரம்பட்டி பகுதியில் சாலை, சாக்கடை வசதிகளை செய்து தரவில்லை என்றால் அடுத்தகட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம், என்றனர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
வாழப்பாடி அருகே பிரபல திருடர்கள் 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் சிக்கினார்
வாழப்பாடி அருகே உள்ள பேளூரில் ஓட்டல் நடத்தி வருபவர் பாலமுருகன். இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு சோளக்காட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சோளக்காட்டின் நடுவே சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் குடிபோதையில் படுத்திருந்தார். இதுகுறித்து அவர், உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் கூறினார். அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு ஓட்டலின் கடன் அட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து நடந்த விசாரணையில் அவன், விழுப்புரம் மாவட்டம் மேல்வள்ளியூர் கிராமத்தைச்சேர்ந்த பிரபல திருடன் கோவிந்தன் (வயது 24) என்பதும், அவனது கூட்டாளிகள் குமரவேல் (23), குமார் (18) ஆகிய 2 பேரும் பேளூர் பகுதியில் வசிப்பதும், 3 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் திருட்டில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து பொதுமக்கள் கோவிந்தனின் கூட்டாளிகளையும் அங்கு அழைத்து வந்து பொதுஇடத்தில் வைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவிந்தன் வாழப்பாடி செல்லியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் சிறையில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் விடுதலையாகி வந்தது தெரியவந்தது. மேலும், குமார், குமரவேல் ஆகிய 2 பேரும் பேளூர் பகுதியில் செல்போன், நகை, மோட்டார் சைக்கிள் ஆகிய திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபல திருடர்களான இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
கிராமப்புற தபால் ஊழியர்கள் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர், பென்சனருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வாரிசு நியமனத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் பழைய பஸ்நிலையம் அருகேயுள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர்கள் ரவீந்திரன், சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓய்வூதிய சங்கத்தின் செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் நேதாஜிசுபாஷ், ஜெயராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தபால்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு துறையில் தனியார்மயம், காண்ட்ராக்ட் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், ரூ.3500 போனஸ் உச்சவரம்பை நீக்கி வாங்கும் சம்பள அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும், 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை 1.1.2014 முதல் அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சேலம் மாநகருக்கு மேட்டூரில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தனிக்குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் கெங்கவல்லி கூட்டுகுடிநீர் மூலமும் சேலம் மாநகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் குழாய்களின் ஆயுட்காலம் முடிந்து விட்டப்படியால், ஆங்காங்கே உடைவது சகஜமாகி விட்டது.
இதனால், சேலம் மாநகரில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி விட்டது. வாரம் ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்பட்ட பகுதியில் தற்போது 10 நாட்கள் ஆன பின்னரே சப்ளை செய்யப்படுகிறது. இதுபோல பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை உருவாகி வருகிறது.
சாரதா கல்லூரி சாலை
இந்த நிலையில் நேற்று சேலம் சாரதா கல்லூரி சாலையில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. குழாய்,ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வெளியேறுவதாக ரோட்டில் கொப்பளங்கள் ஏற்பட்டதுபோல காணப்படுகிறது. சேலம் அழகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே குழாயின் பல இடங்களில் இருந்து வெளியேறும் குடிநீரை சிலர், குடங்களில் பிடித்து சென்றனர்.
மேலும் குடிநீர், குழாயின் அடியில் ஊற்றுப்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள் புகுந்தது. அழகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நர்சிங்ஹோமிற்குள், குடிநீர் கசிந்து பெருக்கெடுத்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் நனைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சேலம் மாநகராட்சியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது என்று புகார் சொன்னால் யாரும் வருவதில்லை. வந்து பார்க்கிறோம் என பதில் சொல்வதுடன் சரி. அப்புறம் வருவதில்லை. எனவே, பொதுமக்கள் நலன்கருதி, சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும்‘‘ என்றனர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
தேவையில்லாத பிரச்சினையில் தலையிட்டால் தலை இருக்காது என்று சேலம் உணவு பாதுகாப்பு நியமன பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குடிநீரில் விஷம் கலந்து பொதுமக்களை கொல்லப்போவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன பெண் அதிகாரி டாக்டர் அனுராதா. இவர், சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து கலப்படம் செய்ததை பலமுறை கண்டறிந்துள்ளார். கிழங்கு மாவில் மக்காச்சோள மாவு கலந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்த 5–க்கும் மேற்பட்ட ஆலைகளை பூட்டி ‘சீல்‘ வைத்தவர்.
இதுபோன்ற செயலுக்காக ஒருமுறை இடமாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் தடை உத்தரவு பெற்று அதே இடத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதை சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முகமதுரபீக் என்பவர் எழுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடிதத்தின் தொடக்கத்தில், பிறை நிலா படம் வரைந்து 786 என்ற எண் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் தொடர்ந்து கூறப்பட்டு இருப்பதாவது:–

 கொண்டப்பநாயக்கன்பட்டி ஜீவா நகர் 4 வார்டில் சுமார் 19 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று உள்ளோம். அதேபோல் 4–வது வார்டு மக்களையும் குடிநீரில் விஷம் கலந்து அனைவரையும் கொல்லுவோம். இவர்கள் எங்கள் தொழிலுக்கு போட்டியாக உள்ளனர். அனுராதா...,உன்னால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நம்பிக்கை இல்லை என்றால், ஜீவா நகருக்கு நீங்கள் வந்தால் தெரியும் இந்த முகமதுரபீக் பற்றி. கண்டிப்பாக இவர்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்கில் வரும் வாரம் விஷம் கலக்கப்படும். உன்னால் முடிந்தால் தடுத்துப்பார். எங்களுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களை உயிருடன் விட மாட்டோம். கண்டிப்பாக ஜீவா நகரில் ஒரு வாரத்தில் பெரிய விபரீதம் நடக்கும். கரட்டில் ஆயுத பயிற்சிக்கு இரவு நேரங்களில் வந்தால் நாய்களில் தொல்லை தாங்க முடியவில்லை. அதனால், 19 நாய்களையும் முடித்து விட்டோம். தேவையில்லாமல் பிரச்சினையில் தலையிட்டால் உன்தலை இருக்காது. நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்த
 தனக்கு வந்த கடிதத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திற்கு அனுப்பினார். அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவும், கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தெரிவிக்க உத்தரவிட்டார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் பாலம்மாளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றிலும் டாக்டர் அனுராதா புகார் செய்தார்.

 கடிதம் தொடர்பாக கொடண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபு கூறுகையில்,‘‘மிரட்டல் கடிதம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. மேலும் டேங்க் ஆப்பரேட்டர்கள் விழிப்புடன் இருக்க உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 4 வார்டில் உள்ள மேல்நிலை நீர்தக்க தொட்டி உள்ள தண்ணீர் ஆய்வு செய்த பின்னரே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடித்ததில் குறிப்பிட்டபடி 19 நாய்கள் இறந்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்‘‘ என்றார்.

அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடிநீர் டேங்க்கை ஆபரேட்டர்களும், வார்டு உறுப்பினர்களும் கண்காணித்து வருகிறார்கள். கடிதத்தை எழுதியவர் யார்? என்றும், அயன்கரட்டுப்பகுதியில் ஆயுதப்பயிற்சி ஏதேனும் நடந்து வந்ததா? என்றும் கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா எடுத்து வரும் நடவடிக்கையால், அவர் மீது ஏற்பட்ட விரோதம் காரணமாக யாராவது இதுபோன்ற கடிதத்தை எழுதி இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
கூடலூர் அருகே அரசு பஸ்களை காட்டு யானை கள் வழிமறித்ததால் பய ணிகள் பீதி அடைந்த னர். பின்னர் 1½ மணி நேரத்துக்கு பிறகு காட்டு யானைகள் அங்கிருந்து சென்றன.

காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானைகள் செல்லும் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு மின்வேலிகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், வனப்பகுதியில் விலங்குகளுக்கு உணவு தட்டுப் பாடு நிலவுவதால் குடியிருப்பு கள், விவசாய நிலங்களை நோக்கி காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன.இதனால் பொருட்சேதமும், உயிரிழப்பு சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வரு கின்றன.

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட கிளன் வன்ஸ் பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக குட்டியுடன் கூடிய 3 காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள், தோட்ட தொழி லாளர்கள் மத்தியில் பீதி நிலவி வந்தது.

அரசு பஸ்களை வழிமறித்தது

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 8¼ மணிக்கு கூட லூரில் இருந்து பெரியசோலை, மூலக்காடு பகுதிக்கு பயணிக ளுடன் அரசு பஸ்கள் புறப் பட்டு சென்றது. அப்போது கிளன்வன்ஸ் பகுதியில் செல் லும் சாலையில் குட்டியுடன் 3 காட்டு யானைகள் நின்றன. மேலும் அரசு பஸ்களை வழி மறித்தது. இதனால் பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள், போக்குவரத்து கழக ஊழியர் கள் மத்தியில் பீதி ஏற்பட் டது.

இதையடுத்து, பஸ் டிரைவர் கள் தங்கள் பஸ்சில் இருந்த ஓலிப்பான்களை அடித்தனர். ஆனால் காட்டு யானைகள் அதை பொருட்படுத்தாமல் பஸ்களை நோக்கி வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர்கள அரசு பஸ்களை சற்று தூரம் பின்னோக்கி ஓட்டி சென்றனர்.இதனை தொடர்ந்து சுமார் 1½ மணி நேரம் கழித்து அருகே இருந்த தோட்டத்துக் குள் காட்டு யானைகள் புகுந் தன. அதன்பிறகு அரசு பஸ்கள் அங்கிருந்து புறப்பட்டு சென் றது. இது குறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறை யினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் நேற்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானை களை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
ஊட்டி, 

ஒருங்கிணைந்த தோட் டக்கலை இயக்கத்தின் கீழ் பல்வேறு மானிய திட்டங்களை செயல் படுத்த ரூ.8½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சங்கர் தெரிவித்து உள் ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தோட்டக்கலை துறை

நீலகிரி மாவட்டத்தில்தோட் டக்கலை துறையின் மூலமாக ஒருங்கிணைந்த தோட்டக் கலை இயக்க திட்டத்தின் கீழ் மலர் சாகுபடியினைஊக்குவித் தல், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், வாசனை திர விய பயிர் சாகுபடியினை ஊக் குவித்தல், மனிதவள மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்க ளுக்கு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின் றன. நடப்பு நிதியாண்டு 2014- 15-ல் ஒருங்கிணைந்த தோட் டக்கலை இயக்கத்தின் கீழ் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ரூ.8 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள் ளது.

பசுமை குடில்

இதன்படி உயர் தொழில் நுட்ப பசுமை குடில் அமைக்க ஒரு விவசாயிக்கு 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு வரை, சதுர மீட்டருக்கு ரூ.422 முதல் 467 ரூபாய் 50 காசுவரை மானியமாக வழங்க திட்ட மிடப்பட்டு 31 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிற்கு மானியம் வழங்க ஒருங்கிணைந்த தோட் டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.

மலர் சாகுபடி செய்யும் விவ சாயிகளுக்கு நடவு பொருள் மானியமாக ஒரு விவசாயிக்கு 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பு வரை 50 சதவீதம் மானியமாக ரூ.305 வீதம் 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிற்கு ரூ.91 லட் சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.

வாசனை திரவிய பயிர்கள்

நாற்றுகள் தயாரிப்பினை ஊக்குவிக்க நிழல்வலை கூடா ரம் அமைக்க 50 சதவீத மானியமாக சதுர மீட்டருக்கு ரூ.355 வீதம் வழங்க 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிற்கு ரூ.7 லட் சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. இதேபோல் கூடலூர், குன்னூர், கோத்தகிரி, தாலுகாவில் வாசனை திரவிய பயிர்களான இஞ்சி, குறுமிளகு பயிர்களை சாகுபடியினை ஊக்குவிக்க நடவு பொருள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை மேற்கொள்ள தேவைப்படும் செல வினங்களுக்காக 40 சதவீதம் மானியம் வழங்கப் படுகிறது.

இஞ்சி பயிர் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டர் பரப்பிற்கு ரூ.12 ஆயிரம் வீதம் 100 ஹெக்டர் பரப்பிற்கு ரூ.12 லட்சமும், குறுமிளகு பயிருக்கு ஒருஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம்வீதம் 200 ஹெக்டர் பரப்பிற்கு 40 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.

பண்ணை இயந்திர கருவிகள்

பண்ணை எந்திர கருவி கள் பயன்பாட்டினை ஊக்கு விக்க ரூ.8 லட்சத்து 29 ஆயிரம் நிதி ஒதுக்கீடும், மனித வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் நிதி ஒதுக்கீடும் பெறப் பட்டு உள் ளது. மனித வள மேம்பாட்டு திட்டத் தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி, மாநில அளவிலான பயிற்சி, வெளி மாநில அளவிலான பயிற்சிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. அறுவடை பின் செய்நேர்த்தி தொழில் நுட்பத்தினை கடை பிடிக்க ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடுபெறப்பட்டு உள்ளது.

இத்திட்டங்களில் பயன்பெற வட்டார தோட்டக்கலைஉதவி இயக்குனரிடம் நில உரிமை ஆவணம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங் களுடன் நேரில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.