Saturday, August 21, 2021
திருச்சி தெற்கு,சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் ஒண்டிவீரரின் 250வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்டம் சுதந்திர போராட்ட தியாகி ஒண்டிவீரரின் 250 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன்
வண்ணைஅரங்கநாதன் மதிவாணன், கே எஸ் எம் கருணாநிதி செந்தில் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Friday, August 20, 2021
கணவரை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்
Tuesday, August 17, 2021
முன்னாள் மத்திய அமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கிய முன்னாள் மத்திய அமைச்சர்
முரசொலி மாறனின் 88 வது பிறந்த நாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது
தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அமைச்சரும்மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட கழக திமுக அலுவலகத்தில் முரசொலிமாறன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முரசொலிமாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், செந்தில் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் உட்பட கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
Monday, August 16, 2021
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ்ரீ, ஆகியோர் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் என்பதை அறிந்து மனம் வேதனையுற்ற மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன்
மீளாத்துயரில் இருக்கும் சக்திவேல் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும், தமிழக அரசின் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒருவருக்கு ரூ.4 லட்சம் வீதம் இரண்டு பேருக்கும் ரூ. 8 லட்சம் நிவாரண நிதியையும் நேரில் வழங்கினார்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்
ஆணையர் திரு.ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து
பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (15.08.2021) சுதந்திர தின விழா இவ்விழாவில் ஆணையர் திரு.ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் கொரானா (covid - 19) நோய் தடுப்பு பணியில் அர்பணிப்புடன் சிறப்பாக பணிபுரிந்த 16 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
ஆதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி புரிந்து நிறைவு செய்த 12 பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் ஆணையர் அவர்கள் வழங்கினார்.
பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு காந்தி சந்தைஅருகில் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி பின்பு காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.
மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகரப் பொறியாளர் திருமதி. எஸ் . அமுதவள்ளி, , நகர் நல அலுவலர் திருமதி. மரு. எம்.யாழினி , செயற்பொறியாளர்கள் திரு.பி.சிவபாதம், திரு.ஜி.குமரேசன், உதவிஆணையர்கள் திரு.ச.நா.சண்முகம், திரு.எம்.தயாநிதி, திரு.எஸ்.திருஞானம், திரு.சு.ப.கமலக்கண்ணன், திரு.எஸ், செல்வபாலாஜி மற்றும் உதவிசெயற்பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவாரசு தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக பணியாற்றிய 323 பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்திய திருநாடனாது விடுதலை பெற்று இன்று 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொடியேற்றி கொரோனா கட்டுப்பாடுகளுடன் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் காலை 09:05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அணிவகுப்பின் படை தளபதியுடன் வாகனத்தில் பயணித்து. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் மூவர்ணக் கலர் கொண்ட பலூன்களை வானில் பறக்கவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 323 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன்,மாநகர காவல் ஆணையர் அருண், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான்,திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது
திருச்சி 75 சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி கோ அபிஷேகத்திற்கு உட்பட்ட கோட்டத்தில் உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியின் போது உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியம் இளநிலை பொறியாளர்கள் இப்ராஹிம் புஷ்பராணி ராஜ்பெரியசாமி நிர்வாக அலுவலர்கள் ரஷீதா பேகம் புவனேஸ்வரி மற்றும் ஊழியர்கள் உதவியாளர்கள் மாநகராட்சிகோட்டை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மல்லியம்பத்து பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா குடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியின் போது ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலக அலுவலர்கள் பள்ளி குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Sunday, August 15, 2021
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூர் பஞ்சாயத்தில் 75வது சுதந்திர தின விழா முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
முத்தரசநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு கௌரவித்து ஓய்வு பெற்ற நபருக்கு மரியாதை அன்பளிப்பு கொடுக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பகுதியை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் பேனா பென்சில் பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது .
மேலும் இந்நிகழ்ச்சியில் முத்தரசநல்லூர் வார்டு உட்பட்ட நம்பர் கணேசன் மற்றும் சதீஷ் பஞ்சாயத்து அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tuesday, August 10, 2021
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோரிடம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் ஏற்பாட்டின் படி
ரூபாய் 3 கோடி மதிப்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை பகுதிகளுக்கும், தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு லட்சம் முகக் கவசங்கள் மற்றும் 83 வென்டிலேட்டர் கருவிகளையும் இன்று வழங்கினார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு. சிவராசு அவர்களும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன்
இனிகோஇருதயராஜ் அப்துல்சமத் மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கு கொண்டனர்
Monday, August 09, 2021
பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா இன்று (09.08.2021) அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, திருச்சியில் நடைபெற்றது.
பெரு நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் பொதுமக்களுக்கான இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் துவக்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே. என். நேரு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. ம. சுப்ரமணியன் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரால் இன்று (09.08.2021) அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். சிவராசு அவர்கள் திருச்சி மாவட்டத்திலுள்ள பல்வேறு பெரு நிறுவனங்கள் தங்களது சிஎஸ்ஆர் நிதியை இது போன்ற பொன்னான காரணத்திற்காக கொரோனா தடுப்பூசியினை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க தங்கள் சிஎஸ்ஆர் நிதியை தாராளமாக முன்வந்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நிறுவனங்கள் அளிக்கும் நிதியை திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு எஸ் சிவராசு அவர்கள் பெற்றுக்கொண்டு அவர் மூலமாக அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, திருச்சியில் செலுத்தப்பட்டு பயனாளிகளுக்கு இம்மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உதவியுடன் தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவமனை பொது மேலாளர் திரு. சாமுவேல் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
Friday, June 18, 2021
திருச்சி
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு
இன்று 18/ 6 /2021 வெள்ளிக்கிழமை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
காலை 10 மணியளவில் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார் பள்ளியில் மாணவர்களுக்கு செயற்கை விண்ணப்பம் வழங்கி என்ன பாடப்பிரிவு வேண்டும் வேண்டுகிற பாடப்பிரிவு கிடைக்கிறதா எவ்வளவு கட்டணம் என்பது போன்ற விவரங்களை கேட்டறிந்தார் தலைமையாசிரியரிடம் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதா மாணவர்களுக்கு பாடப் பிரிவு எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது சுயநிதி பாட பிரிவுகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது போன்ற விபரங்களை கேட்டறிந்தார் பின்னர் ஆசிரியர்களிடம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் என கேட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்
அடுத்து திருச்சி மரக்கடை சையதுமுதர்ஷா மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு மாணவர்கள் சேர்க்கை நடைமுறையை கேட்டறிந்தார் பள்ளியில் உள்கட்டமைப்பு கழிவறை போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தார் மேலும் அங்கு நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார் அதன்பின்னர் திருச்சி ஏர்போர்ட் ஆபர்ட் மார்சல் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் செயற்கை குறித்தும் எத்தனை ஆசிரியர்கள் பணி செய்கின்றனர் என்பதையும் ஆய்வு செய்தார்
இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அதிகாரி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்
Saturday, June 05, 2021
தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இந்த சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனை படியும் , இந்து சமய ஆணையர் அவர்களின் அறிவுரைப்படியும் , இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் அர்ச்சகர் சுந்தர் பட்டர் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்டது .
முதல் நாளான இன்று ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையம் ஒருங்கிணைப்பாளர்கள் புலவர் கிருஷ்ணா மற்றும் Dr ஜெயவித்யா ஆகியோர் குழந்தைகளுக்கு விளக்கினார் ,
முதல் வகுப்பான இன்று தமிழ்நாடு , வெளி மாநிலம் , மற்றும் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளும் பக்தர்களும் கலந்து கொண்டனர்
, ஆன்மிக வகுப்பை துவக்கி வைத்த இணை ஆணையர் திரு செ .மாரிமுத்து ஆன்மிக வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 வரை நடைபெறும் என்று கூறினார் .*
திருச்சியில் நகல் எரிப்பு போராட்டம்
ஜீன் 5−ந் தேதி 2020 ஆண்டு மத்திய அரசு கொன்டு வந்த 3−வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற கோாி கடந்த 6−மாத காலமாக டெல்லியில் பனி,வெயில்,மழை என பாராது தொடா் போராட்டம் நடத்தி வரும் அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்பு குழு சட்டம் இயற்றி ஓராண்டான
இன்று நாடு முழுவதும் 3−வேளாண் சட்ட நகல் எாிப்பு போராட்டத்திற்க்கு அறைகூவல் விட்டு இருந்தது .அதன் அடிப்படையில் இன்று திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் வட்டம் அயிலாப்பேட்டையில் திருச்சி மாவட்ட அகில இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளா்
அயிலை சிவசூாியன் தலைமையில் நகல் எாிப்பு போராட்டம் நடைபெற்றது, நடைபெற்ற போராட்டத்தில் சி.பி.ஐ ஒன்றிய செயலாளா் வீரமுத்து,சி.பி.எம் ஒன்றிய செயலாளா் வினோத்மணி,தமிழ் நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள்,பிரகாசமூா்த்தி,நடராஜன்,துரை ,கோப்பு அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Friday, June 04, 2021
திருச்சி முன்னாள் முதல்வர் திமுக தலைவர் டாக்டர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8,9அ வார்டுகளில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
திருச்சி ஈபி ரோடு தாரநல்லூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் டாக்டர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் 200 மேற்பட்ட நபர்களுக்கு மேல் கொரானா பேரிடர் கால நிவாரணப் பொருட்களை திமுக கிழக்கு சட்டமன்ற வழங்கினார்.
அப்போது அங்கிருந்த முதியோர் ஒருவர் உயர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வை மங்கிய நிலையில் இருந்த ஒரு முதியவருக்கு இனிகோ இருதயராஜ் திமுக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் கூறி மேல் சிகிச்சை செய்வதற்கான ஆலோசனைகளை கூறி மேல் சிகிச்சை நடவடிக்கை உதவிகளை தான் செய்வதாக முதியவருக்கு மனிதநேயத்துடன் இனிகோ இருதயராஜ் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் போது தலைமை கழகம் அறிவிப்பின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு நிவாரண பொருட்கள் பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் மலைக்கோட்டை பகுதியைச் சார்ந்த மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடைபெற்றது
நடைபெற்ற நிகழ்ச்சியில் 14 வட்டச் செயலாளர் சிலம்பரசன் 8 வட்ட செயலாளர் தசரதன் மற்றும் நிர்வாகிகள் 9அ வட்டச் செயலாளர் சண்முகம் நிர்வாகிகள் ஜம்புலிங்கம் கணேசன் நவம் கந்தன் மோகன் தீனதயாளன் சக்திவேல் குமார் பரிமனம் மருத்துவர்விஜயலட்சுமி, ராஜ்குமார் பிரபாகரன் பரமசிவம் பெரியசாமி தேவராயன் பிரதீப் திராவிட பண்ணை முத்து தீபக் செல்வராஜ் அருண் ஸ்ரீதர் தினேஷ் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
திருச்சி தெற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 ஆவது பிறந்த நாள் விழா
திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி கலைஞர்நகர் பாலக்கரை மலைக்கோட்டை பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் கொரோனாவல் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்களின் ஏற்பாட்டில்நடைபெற்றது.
தெற்கு மாவட்டகழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உணவுப் பொருட்களையும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன், ராஜசேகர், பாலமுருகன், அரங்கநாதன், செந்தில், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்துகொண்டனர்
திருச்சி திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் படத்திற்கு மலர் தூவி EB ரோட்டில் வீடற்றொர் தங்கும் இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உணவு, நலத்திட்ட உதவி வழங்கினார்.
Thursday, June 03, 2021
திருச்சி
"ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட்" சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக மக்களை தாக்கி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வற்ற ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது
அதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடி வாழ்ந்து வருகின்றனர். அப்படி கஷ்டப்படும் 100 மேற்பட்ட ஏழை எளிய நபர்களுக்கு திருச்சியைச் சேர்ந்த ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட் சார்பில் நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் 120 பேருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், பிஸ்கட், சேமியா அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் தினேஷ்பாபு, காவல்துறை உதவி ஆய்வாளர் மதியழகன், தர்கா ஜமாத் தலைவர் ஜாகீர் உசேன், என்டிஎஃப் மாநிலச் செயலாளர் ஆல்பா நசீர், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இலியாஸ், ஆசிரியர் காஜாமைதீன், எஸ்டிபிஐ முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் இப்ராஹிம், தலைவர் முகமது ரசூல், பொருளாளர் சாகுல் ஹமீது, அறங்காவலர்கள் சையது முஸ்தபா, அப்துல்லா, பாஸ்கர், ஜோ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நலிவடைந்த பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நிவாரண பொருட்களை பெற்று சென்றனர்.
சோழா ரோட்டரி கிளப் சார்பில் மருத்துவ உபகரணங்களை EVR பள்ளியில் அரசு மருத்துவமனை டீன் இடம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி இ. ஆர் மேல்நிலைப் பள்ளியில் திருச்சி சோழா ரோட்டரி சங்கம் சார்பில் உறவின் உயிர் காப்போம் என்ற தலைப்பில் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 100 யூனிட் ஆக்சிஜன் செரி யூட்டிகள், 75 யூனிட் ப்ளோ மீட்டர், 175 யூனிட் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் கருவி மற்றும் முக கவசம்கள் உள்ளிட்டவைகளை,திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா அவர்களிடம் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வழங்கினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி சோழா ரோட்டரி சங்க தலைவர் ஜோசப் பாக்கியராஜ், செயலாளர் அமலச்சந்திரன்/ திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ். இணை இயக்குனர் லட்சுமி, நோடல் ஆபீசர் முத்துக்குமார் மற்றும் சிறப்பு திட்டங்கள் இயக்குனர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 98வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. திமுக திருச்சி தெற்கு மாவட்டம் 9அ வட்டம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி அண்ணாசிலை அருகே பூசாரி தெருவில் கொடியேற்றி வெடிகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
திமுக மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். அங்கு கட்சி கொடியை அவர் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து முனிசிபல் காலனியில் 50 பேருக்கு தலா 5 கிலோ அரிசியை பகுதி செயலாளர் மதிவாணன் வழங்கினார். முன்னதாக அங்கு திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி திருவுருவ படத்திற்கு பகுதி செயலாளர் மதிவாணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் திமுக 9அ வட்ட செயலாளர் சண்முகம், ஜம்புலிங்கம், செபாஸ்டின், கணேசன், கந்தன், மோகன், சக்திவேல், பிரபாகரன், பெரியசாமி, காட்டு நாயக்கர் சங்க கவுரவத் தலைவர் செல்வராஜ், செயலாளர் லட்சுமணன், திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிக்கண்ணன், நிர்வாகிகள் மாணிக்கம், ஸ்ரீதர், ஆதி அரசு, மலைக்கோட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் திராவிட பண்ணை என்கிற முத்து தீபக், வட்ட பிரதிநிதி தீனதயாளன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சாத்தூர் ஒன்றியத்தில் 2–ம் கட்டமாக மக்கள் குறை கேட்கும் முகாம் 8 ஊராட்சிகளில் நடைபெற்றது. பெரிய கொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்...
-
பாஜகவை சேர்ந்த எச் ராஜா எஸ் வி சேகர் கைது செய்யப்பட வேண்டும் திருச்சி நெல்லை முபாரக் பேட்டி (மாநிலத் தலைவர் எஸ்டிபிஐ கட்சி) திருச்சி வ...