Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Friday, August 01, 2014

On Friday, August 01, 2014 by Anonymous in    
thala55_002








தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தல-55 தான். இப்படத்தை முன்னணி இயக்குனர் கௌதம் மேனன் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது பிரச்சனையே கௌதம் தானாம், ஆம் தீபாவளிக்கு படத்தை எப்படியாவது ரிலிஸ் செய்யவேண்டும் என்று சொல்லி தான் ஏ.எம்.ரதனம் இப்படத்தை தயாரிக்க சம்மதித்துள்ளார்.
ஆனால் இப்படத்தை முடிப்பதற்குள் சிம்பு, விக்ரம் படத்தின் அறிவிப்புகளை கௌதம் வெளியிட ரத்னம் கடும் கோபத்தில் இருக்கிறார், அஜித் தான் இந்த படத்தின் வாய்ப்பை கௌதமிற்கு வழங்கியதால் இவர்களுக்கிடையே என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறாராம்.
On Friday, August 01, 2014 by Anonymous in    
dhanush_yuvan_raja001








தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றி விட்டார், குறிப்பாக தனுஷின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணையவுள்ளனர். இந்த முறை இவர்களுடன் இசைஞானியும் இணைந்து கலக்கப்போகிறார்.
வை ராஜா வை படத்தில் தனுஷ் ஒரு பாடல் எழுதுகிறார், அப்பாடலுக்கு யுவன் இசையமைக்க, இளையராஜா பாடவுள்ளார் என நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
On Friday, August 01, 2014 by Anonymous in    
idhu_namma_aalu001








சிம்பு ரசிகர்களுக்கு இந்த வருடம் செம்ம விருந்து இருக்கிறது என்று நினைத்தால் ஏமாற்றம் தான். கௌதம், பாண்டிராஜ், செல்வராகவன் என பெரிய இயக்குனர்கள் படங்களில் கமிட் ஆகி, இதில் எந்த படமும் முடிவடையாமல் இருப்பது தான் வருத்தம்.
ஏற்கனவே செல்வா படம் ட்ராப் ஆகிவிட்டது, தற்போது பாண்டிராஜ் படமும் அப்படியே நிற்கிறது, இதை பற்றி விசாரித்தால், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.
கண்டிப்பாக விரைவில் இது நம்ம ஆளு திரைக்கு வரும், சில காட்சிகள் மட்டுமே மீதி இருக்கிறது, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.(தயாரிப்பாளர் நம்ம டி.ஆர் தான்).
On Friday, August 01, 2014 by Anonymous in    
thala55_ol003








நாளுக்கு நாள் தல பற்றியும், தலயின் 55வது படத்தை பற்றியும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
தற்போது தலயின் 55வது படத்தை பற்றிய ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது கௌதம் மேனன் படத்தில் அஜீத்திற்கு சத்யதேவ் பெயர் என்பதால் படத்திற்கும் அப்பெயரே இருக்கும் என வதந்திகள் வந்தன.
ஆனால் தற்போது தல படத்திற்கு சத்யா என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபெயரில் 1988ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் சத்யா என்ற படம் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
On Friday, August 01, 2014 by Anonymous in    
007








தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிகர் என்று குறுகிய வட்டத்தை தாண்டி, வெளியே தெரியாமல் பல சமூக நலன்களை செய்து வருகிறார்.
சமீபத்தில் இவர் செய்த உதவி ஒன்று யாருக்கும் தெரியாமல் இருக்க, எப்படியோ கசிந்துவிட்டது, ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நன்றாக படிக்கும் மாணவியின் படிப்பு வசதியின்மை காரணமாக நின்றது.
இது எப்படியோ தன் ரசிகர் மன்றத்தின் வாயிலாக விஜய் காதுக்கு செல்ல, அந்த பெண்ணின் முழு படிப்பு செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். தற்போது அந்த பெண் இன்ஜினியராகி, ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
அவரது ரசிகர்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ‘தலைவா யு ஆர் கிரேட்’.
On Friday, August 01, 2014 by Anonymous in    
anjaan009








சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா, லிங்குசாமி இயக்கத்தில் நடித்திருக்கும் படம் அஞ்சான்.
இப்படத்தில் சூர்யா முதன் முதலாக சமந்தாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மும்பையை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷன் படமாக உருவான அஞ்சான் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன.
இந்நிலையில் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்தனர். மும்பையில் தணிக்கை செய்யப்பட்ட அஞ்சான் படத்திற்கு, தணிக்கை குழுவினர், படத்தில் ஒரு கட் கூட கொடுக்காமல் யு சான்று அளித்துள்ளனர்.
யு சான்றிதழ் கிடைத்துள்ளதால் படத்திற்கு வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும். இதனால் லிங்குசாமி, சூர்யா, தனஞ்செயன் உள்ளிட்ட அஞ்சான் டீமே மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன், தனது டிவிட்டர் பக்கத்தில், படம் சொன்ன தேதியில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும்.
அஞ்சான் படத்திற்கான புது டிரைலரும் தயாராகி வருகிறது. அடுத்தவாரம் புது டிரைலரை வெளியிட உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    






ஆயிரம் கைகள் தடுத்தாலும் ஆதவன் மறைவதில்லை, என்ற வார்த்தைக்கு நிகராக சினிமா உலகத்தில் ஆயிரம் தடைகளை தாண்டி சுட்டெரிக்கும் சூரியனாக நேருக்கு நேரில் அறிமுகமானார் சூர்யா. அன்றிலிருந்து இன்று வரை ஒளி மங்காமல் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பல பேர், பல கருத்துகளை இவர் மீது திணித்தாலும் தனக்கு என்ன வருமோ, அதை மட்டும் செய்துக் கொண்டிருந்த இந்த வெற்றிக்குதிரையில் கடிவாளத்தை அவிழ்த்து எறிந்தவர் இயக்குனர் பாலா. இவரின் பார்வை நந்தாவாக சூர்யா மீது விழுந்ததால் தான், இவரின் திரைப்பயணம் அடுத்தக்கட்டத்திற்கு சென்றது, ரசிகர் பலமும் அதிகமாகியது.இந்த ரசிகர் படை இன்றும் குறையாமல் இவருக்கு ஆதரவாக சிங்கமாக கர்ஜித்துக் கொண்டிருக்கின்றனர். எதற்கும் அஞ்சாதவானாக, தமிழ் திரையுலகில் வாரணம் ஆயிரம் சூடி, இன்று முடி சூட மன்னனாக திகழ்கிறார்.சினிமா நடிகன் என்றாலே கூத்து, கும்மாளம் என்று சொல்லப்படும் இந்த சமுதாயத்தில் , தனக்கென்று ஒரு குறுகிய வட்டம் அமைத்து அதில் ஒழுக்கமாக வாழும் நடிகர்களுக்கெல்லாம் இவர் ஒரு முன்னோடி. தான் சம்பாதிக்கும் பணத்தை தேவையில்லாத ஆடம்பர செலவு செய்யாமல் நாளை ‘சிகரம்’ தொடும் என்னும் இளைஞர்களின் எண்ணங்களை ‘அகரம்’ வாயிலாக நிகழ்த்திக்காட்டியவர்.யாருக்கும் புரியாத ‘பிதாமகனாக’ இருந்த இவரின் வாழ்க்கையில் சில்லென்று தோன்றியது ஜோதிகாவுடன் காதல், இந்த காதல் பின் திருமணமாகி இன்று குடும்ப வாழ்க்கையிலும் மிஸ்டர்.பெர்ஃபெக்ட்டாக இருந்து வருகிறார்.ஆறு போல் இன்னல்கள் வந்தாலும் அஞ்சானாக அதை வென்று எட்டாத உயரத்தில் இருக்கும் சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் ‘சினி உலகம்’ பெருமையடைகிறது


On Thursday, July 24, 2014 by Anonymous in    


இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் நட்ராஜ். ஆனால் அப்படி சொல்வதை விட முத்துக்கு முத்தாக, மிளகா, சதுரங்க வேட்டை படத்தின் கதாநாயகன் என்றால் அனைவருக்கும் தெரியும்.

இவர் ஹிந்தியில் பல முன்னணி இயக்குனர்களின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு இவர் தான் ஒளிப்பதிவாளர்.

ஆனால் இந்த படத்திற்காக தனக்கு வந்த பாலிவுட் படங்களின் வாய்ப்புகளை தவிர்த்துள்ளார். இவர் விஜய் நடித்த யூத் படத்தில் இதற்கு முன்பு பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: 
On Thursday, July 24, 2014 by Anonymous in    

Charmi Bubly Photos (2)சிம்பு கதாநாயகனாக அறிமுகமான படம் – காதல் அழிவதில்லை. டி.ராஜேந்தர் இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. காதல் அழிவதில்லை படத்தைத் தொடர்ந்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு என சில படங்களில் நடித்தார்.
இப்படங்களுக்குப் பிறகு சார்மிக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்பு வரவில்லை. எனவே வேறு வழி இல்லாமல் தெலுங்குப் பக்கம் போனார் சார்மி. அங்கே அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக பல படங்களிலும் நடித்து சில வருடங்களுக்கு முன்பு வரை நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக இருந்தார்.
பிறகு மார்க்கெட் இழந்த சார்மி, சின்ன பட்ஜெட் படங்களில் நடிப்பது, ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது, கன்னடப் படங்களில் நடிப்பது என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கங்கணா ரணாவத் நடித்து ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன ‘குயின்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் சார்மி. குயின் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீ-மேக் செய்யப்பட உள்ளது. நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் இப்படத்தின் ரீ-மேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்.
‘குயின்’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க த்ரிஷா, நயன்தாரா உட்பட பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் தியாகராஜன். அவர்கள் கேட்ட சம்பளம் அதிகமாக இருந்ததாலும், அவர்களிடம் குறிப்பிட்ட நாட்கள் தொடர்ந்து டேட்ஸ் இல்லாததாலும் நடிகை சார்மியை அணுகி உள்ளனர்.
குயின் ரீமேக்கில் சார்மி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். சார்மி தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பிரபலமான நடிகை என்பதால் மூன்று மொழிகளிலும் அவரையே நடிக்க வைக்க இருக்கிறார்களாம்.
On Thursday, July 24, 2014 by Anonymous in    
velai-illa-pattathari (5)கடந்த வாரம் (ஜூலை 18) வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துக்கு அனைத்து ஏரியாக்களிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடப்பட்ட வேலையில்லா பட்டதாரி முதல் மூன்று நாட்களில் மட்டும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது.
நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தின் வசூல் நிலவரம் திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இதுவரை தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்களிலேயே வேலையில்லா பட்டதாரி படம்தான் மிகப்பெரிய வசூல் செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கினர் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
அது மட்டுமல்ல, இந்த வருடம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்த கோலிசோடா உட்பட அனைத்து படங்களின் வசூலையும் வேலையில்லா பட்டதாரி படம் முறியடித்துவிட வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சும் அடிபடுகிறது.
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வந்த தனுஷுக்கு, வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி மிகப்பெரிய தெம்பைக் கொடுத்திருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள வேலையில்லா பட்டதாரி படம், வெளிநாடுகளிலும் முதல் வாரத்தில் சுமார் 8 கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளதாம். தனுஷ் நடித்த படத்திலேயே வெளிநாட்டில் மிகப்பெரிய வசூலை அள்ளிய படமும் வேலையில்லா பட்டதாரி படம்தானாம்.
On Thursday, July 24, 2014 by Anonymous in    
download

சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுடன் இருந்தபோது பழைய மாடல் ஓடன் கார் ஒன்றை வைத்திருந்தார்.
சித்தியிடமிருந்து பிரிந்த பிறகு அவருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை. கம்பெனிகள் ஏற்பாடு செய்யும் கார்களையே பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் அஞ்சலி பி.எம்.டபிள்யூ எனப்படும் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். அவருக்கு பிடித்த கருப்பு நிறத்திலேயே அதனை வாங்கியுள்ளார்.
“பி.எம்.டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது, இப்போது அது நிறைவேறியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார் அஞ்சலி.
On Thursday, July 24, 2014 by Anonymous in    

Yuvan-shankar-raja-2

கார்த்தி, லட்சுமிமேனன் நடிக்கும் படம் கொம்பன். குட்டிப்புலி இயக்குனர் முத்தையா இயக்குகிறார். பருத்தி வீரனுக்கு பிறகு கார்த்திக் நடிக்கும் வில்லேஜ் சப்ஜெக்ட்.
ஜாலியான வில்லேஜ் காமெடி லவ் ஸ்டோரி. படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் நடந்து வருகிறது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பதாக இருந்தது. தற்போது அவர் படத்திலிருந்து விலகி விட்டார்.
அவருக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். கொம்பனுக்கு தான் இசை அமைக்கும் விஷயத்தை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
கிராமிய பாடல்கள் என்பதால் தான் யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது அவர் விலகியதற்கான காரணம் தெரியவில்லை.

Wednesday, July 23, 2014

On Wednesday, July 23, 2014 by Anonymous in    
Kaththi in trouble - students oppose movie

துப்பாக்கி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைந்துள்ள கத்தி படத்தை ஐங்கரன் இண்டர்னேஷனல் நிறுவனமும், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி திரைப்படத்தை தயாரிப்பவர்களில் ஒருவரான லைகா மொபைல் அதிபர் சுபாஸ்கரனை ராஜபக்சேவின் கூட்டாளி என குற்றம்சாட்டி வருகின்றனர் இலங்கைத் தமிழர்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆர்வலர்களும் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால், கத்தி படத்திற்கு பெரும் பிரச்சனை ஏற்படும் என்று கருதிய தயாரிப்பாளர்களின் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தி, சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களைச் அழைத்து, "லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவான நிறுவனம் என்ற தகவல், முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது" என்று மறுத்தார். அதைத் தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் நிறுவனரான சுபாஸ்கரன் அல்லிராஜா, ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர்தான் என்பதற்கான பல ஆதாரங்கள் இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், சிங்கள இனவெறியர்களின் பணத்தில், தயாராகும் கத்தி திரைப்படத்தை வெளியிடக் கூடாது" என்று மாணவர்களின் அமைப்பான முற்போக்கு மாணவர் முன்னணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாணவர் முன்னணியின் பிரதிநிதிகள் இது தொடர்பாக, திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தினரையும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரையும் சந்தித்து அறிவுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன் சுசீந்திரம் அடங்காத் தமிழன் இது பற்றி தமது முகநூல் பக்கத்தில்.... "தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்து, சிங்கள இனவெறியர்களின் பணத்தில் தயாராகி இருக்கும் கத்தி திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்த உள்ளோம். முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாய் கத்தி படத்துக்கு எதிராக அனைத்து கல்லூரி மாணவர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவும் மாணவர்கள் அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன.

Tuesday, July 22, 2014

On Tuesday, July 22, 2014 by Anonymous in    
003கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் சமீபத்தில் தான் முடிவடைந்தது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
அண்மையில் இப்படத்திற்காக எடுக்கப்பட்ட சண்டை காட்சியில் ரஜினி எந்தவித டூப் இல்லாமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்த சண்டை காட்சி படப்பிடிப்பின் போது ரஜினி திடீரென்று எதிர்ப்பாராத விதமாக மயங்கி விட்டாராம். உடனே படக்குழுவினர் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பின் ரஜினிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், ஓய்வு இல்லாத காரணத்தால் தான் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், இரண்டு நாட்கள் அவர் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதனால் அடுத்தடுத்த படப்பிடிப்பை படக்குழுவினர் மாற்றி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
On Tuesday, July 22, 2014 by Anonymous in    
nazriya_anushka_samantha001நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நஸ்ரியா நசீம்.
இவர் முன்னணி நடிகைகளின் ஃபேஸ்புக் கணக்குகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் இருக்கிறாராம்.
நடிகை அனுஷ்கா 2007 ஆம் ஆண்டு தனக்கான ஃபேஸ்புக் பக்கத்தைத் துவங்கி இதுவரை 59 லட்சம் ரசிகர்களை பெற்றிருக்கிறார்.
அதேபோல் நடிகை சமந்தா கடந்த 2011ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்திற்கு இதுவரை 58 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
ஆனால், நஸ்ரியா நசீம் கடந்த 2012ஆம் ஆண்டு தான் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தைத் துவங்கினார்.
ஆரம்பித்த இரண்டு வருடத்திற்குள் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக் செய்திருக்கின்றனர்.
அதிலும் அம்மணி கூடிய விரைவில் திருமணமும் செய்து கொள்ள இருக்கிறார்.
ஆனாலும் மலையாள பெண்குட்டிக்கு ரசிகர்கள் கூட்டம் அள்ளுது…
On Tuesday, July 22, 2014 by Anonymous in    
vijay_dhanush001கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
தனுஷ் தன் டுவிட்டர் வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடலின் போது, கத்தி படத்தில் நீங்கள் எழுதிய பாட்லகள் பற்றி கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.
இதற்கு நான் எழுதவில்லை என்றும், மேலும் விஜய் கேட்டால் நான் எழுதி பாடுகிறேன் எனவும் பதில் அளித்துள்ளார்.
On Tuesday, July 22, 2014 by Anonymous in    
sathuranga_001நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை.
இப்படத்தின் டிரைலரை இளையதளபதி விஜய் அவர்கள் வெளியிட்டார்.
இங்க பணம் இருந்தா ஹீரோ ஆகலாம், எம்.பி. ஆகலாம், பிடிக்காதவனை அடிக்கலாம் பணம் இருந்தா என்ன வேண்ணா பண்ணலாம்னா நான் ஏன் பணம் சம்பாதிக்க என்ன வேண்ணா பண்ணக் கூடாது என்று நினைக்கிற ஒரு இளைஞனின் கதையே இப்படம்.
“இந்த வெள்ளை சட்டை போட்டாலே அடுத்தவன ஏமாத்த தனி தைரியம் வந்துருதுல” என அரசியல்வாதிகளின் நெற்றியில் அடித்தார் போல் வசனங்களுடன் முடிவு அடைகிறது ட்ரைலர். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாம்.
அதிலும் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘என்னது விஜய் தாக்கப்பட்டாரா’ டீசர் எல்லோர் கவனைத்தையும் எளிதில் ஈர்த்துள்ளது.
மேலும் இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான நட்ராஜ் கிராமத்து கதையில் இருந்து விலகி வித்தியாசமாக நடித்துள்ளார். கண்டிப்பாக நம்மில் தோன்றும் பல சந்தேகங்களுக்கு, படம் பார்த்து முடித்த பின் நல்ல விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல் பல சுவாரசியங்கள் உள்ளடக்கிய இப்படம் நாளை மறுதினம் திரையரங்குகளில் வெளியாகிறது.