Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
சிவகங்கை நகர் தெப்பக் குளத்திற்கு மழை தண் ணீர் வரும் வரத்துக் கால் வாய் சீரமைக்கப்பட்டது.
தெப்பக்குளம்
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற தெப்பக் குளம் உள்ளது. இந்த தெப்பக் குளம் சிவகங்கை நகர் முதன் முதலில் உருவானபோது அமைக்கப்பட்டது. இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் தற்போது கலெக்டர் அலுவலக வளாகம் அமைந்துள்ள பகுதி யில் இருந்து மழைபெய்யும் காலங்களில் வரத்துக்கால் வாய் மூலமாக வந்து சேரும்.
சமீபகாலமாக இந்த வரத்துக் கால்வாய் முழுமை யாக அடைப்பட்டதால் தெப் பக்குளத்திற்கு மழைநீர் கிடைக் காத நிலை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து நக ராட்சி சார்பில் இந்த வரத் துக்கால்வாயை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
சீரமைப்பு
நகராட்சி ஊழியர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தெப்பக்குளத்திற்கு மழை நீர் வரும் வரத்துக் கால்வாயில் தேங்கி கிடந்த மண் மற்றும் குப்பைகளை அகற்றி வரத்துக்கால்வாயை சீரமைக்கும் பணியில் ஈடு பட்டனர். நகராட்சி தலைவர் அர்ச்சுனன், ஆணையாளர் சரவணன், பொறியாளர் குருசாமி, சுகாதார அதிகாரி ராஜ் மோகன் மற்றும் அதி காரிகள் இந்த பணியினை பார்வை யிட்டனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவி
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திகா(வயது 22, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் பி.பி.எம். படித்து வருகிறார். கீர்த்திகா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
அங்கு அவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று குடும்பத்தினருடன் மீண்டும் பெங்களூர் திரும்பினார். கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்தினர் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் செல்லும் கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

அதே பெட்டியில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் மகன் அஜித்(வயது 26) என்பவர் பயணம் செய்தார். இவர் ராணுவத்தில் சமையல்காரராக திரிபுரா மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அந்த ரெயில் சேலம் அருகே வந்த போது, அஜித் பக்கத்து சீட்டில் இருந்த மாணவி கீர்த்திகாவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வந்ததும் கீர்த்திகா இதுதொடர்பாக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் விசாரணை நடத்தினார். இதையடுத்து மாணவியை சில்மிஷம் செய்ததாக அஜித்தை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான ராணுவ வீரருக்கு கடந்த 8–ந் தேதி தான் திருமணம் நடந்தது. ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புதுமாப்பிள்ளையான ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில் தத்தளித்தனர். இவர்கள் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அந்தோணிசாமி என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற 5 மீனவர்கள் கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் காப்பாற்றி தங்கள் படகில் ஏற்றிக்கொண்டனர்.
இந்தநிலையில் அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகையும் 9 மீனவர்களையும் பிடித்துச் சென்றனர். அவர்களை ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். நேற்று 9 மீனவர்களும் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 30–ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து சிறையில் அடைத்தனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
உள்ளாட்சி இடைத்தேர் தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் சங் கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுபானங்களை விற்கக்கூடாது
நீலகிரி மாவட்டத்தில் கீழ்குந்தா பேரூராட்சி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங் களில் வருகிற 18–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறு கிறது. இதனால் இன்று (செவ் வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் 18–ந் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண் ணிக்கை நடைபெறும் 22–ந் தேதியும் கீழ்குந்தா பேரூராட்சி வார்டு எண் 1 மற்றும் 7, கூடலூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 3–க்குட்பட்ட பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.
மேலும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003–ன் படி மஞ்சூர் பஜார், அய்யங்கொல்லி, உப்பட்டி மற்றும் சேரம்பாடி பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும் என பொதுமக்களுக்கு தெரிவிக் கப்படுகிறது.
கடும் நடவடிக்கை
மேற்குறிப்பிட்ட தினங்களில் எந்தவித மதுபானங்களும் விற் பனை செய்யக் கூடாது. அன் றைய தினங்களில் கட்டாயமாக டாஸ்மாக் மது பான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்படு கிறது. இந்த உத்தரவை மீறி மது பானங்கள் விற்பனை செய்யும் கடை பணியாளர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக் கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
விலையில்லா மடிக் கணினி வழங்கக் கோரி கூடலூரில் கல்லூரியின் நுழைவு வாயிலில் 3-ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற் பட்டது.

மாணவர்கள் போராட்டம்

கூடலூர் கோழிப்பாலம் பாரதியார் பல்கலைக் கழக கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணிக்கு திடீரென கல்லூரி நுழைவு வாயிலில் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். இது பற்றி மாணவர்கள் கூறியதாவது:-

எங்கள் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட வில்லை. மேலும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கல்வி உதவி தொகையும் வழங்கவில்லை. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றோம்.

கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கல்லூரி மாணவர்கள் சென்று வர போதிய பஸ் வசதி அமைத்து தர வேண்டும் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்ததும் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) லி.ரமேஷ் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்களின் முக்கிய பிரச்சினையான பஸ் வசதி குறித்து கல்லூரி முதல்வர், தாசில்தார், போக்குவரத்து அலுவலர் ஆகியோர் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும். மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என மாணவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதில் சமரசம் அடைந்த மாணவர்கள் நுழைவு வாயில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
குன்னூரில் நடுரோட்டில் மலைரெயில் நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

4 சாலைகள் சந்திப்பு

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் தினந்தோறும் சென்று வருகிறது. குன்னூரில் மலை ரெயில் பாதை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியில் உள்ளது. குன்னூர் -மேட்டுப் பாளையம் சாலை, குன்னூர்- ஊட்டி சாலை, மவுண்ட் ரோடு செல் லும் சாலை, ஓட்டுப்பட்டறை செல்லும் சாலை ஆகிய 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் ரெயில் பாதை அமைந்து உள்ளது.

உள்ளூர் பஸ் நிலையம், மார்க் கெட், மவுண்ட் ரோடு ஆகிய பகுதிகளுக்கு இந்த ரெயில் பாதை தண்ட வாளத்தை தாண்டி தான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் நேற்று சுமார் காலை 10.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூரை நோக்கி மலை ரெயில் வந்து கொண்டு இருந் தது.ரெயில் வருவதற்காக ரெயில்வே கேட் ஏற்கனவே மூடப்பட்டு இருந்தது.

ரெயில்வே கேட் அருகே வந்த போது திடீரென்று என்ஜினால் பெட்டிகளை தள்ளி செல்ல முடிய வில்லை. தண்டவாளத்தில் என்ஜினின் சக்கரங்கள் வழுக்கியதால் சக்கரங்கள் மட்டுமே சுற்றியது.ஆனால் பெட்டிகள் நகர வில்லை. உடனடியாக அந்த இடத்தில் மலை ரெயில் நிறுத்தப் பட்டது. மலை ரெயில் நடுரோட்டில் நின்ற தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட் டது.

மேலும் தண்ட வாளத்தில் மணல் மற்றும் சாம்பல் போடப்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மலை ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டு சென்றது.

இதன் காரணமாக ரெயில்வே கேட்டின் இரு புற மும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக் குள்ளாகினர். ரெயில்வே கேட் திறக்கப்பட்ட பின்னர் போலீசார் மிகுந்த சிரமத்து டன் வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.

நடைபாதை மேம்பாலம்

மலை ரெயில் செல்லும் நேரங்களில் ரெயில்வே கேட் மூடப்படும் போது பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. ரெயில்வே கேட் மூடப்படும் போது பொது மக்கள் சிறிய கேட்டினுள் நுழைந்து தண்ட வாளத்தை கடந்து செல்வது பெரும் சிரம மாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகபொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
நாகை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 8½ கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து அதிகாரிகள் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் அதிகாரிகள் மேலசாலை பகுதியில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் காரில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. எனவே அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது காரின் கியர் பாக்ஸ் அடியில் 19 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தங்க கட்டிகளை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவற்றை காரில் இருந்து வெளியே எடுத்து ஆய்வு செய்தனர்.
தங்க கட்டிகளின் மொத்த எடை 8 கிலோ 536 கிராம் என தெரியவந்தது. இதன்மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 30 லட்சம் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தங்க கட்டிகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது பாசில் (வயது 25) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த யாசர் அராபத் (20) என்பதும் தெரியவந்தது.
முகமது பாசில், யாசர் அராபத் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டதா? இந்த கடத்தலில் மேலும் யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா? என பிடிபட்ட 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்கும் வரை, பூம்புகார் பகுதி மீனவர்கள் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. நாகை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயன் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரைநேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோகன அன்பழகன், நகர செயலாளர் சுப்புராயன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் தியாக விஜயேஸ்வரன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் அம்பலவாணன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சசிக்குமார், துரைராஜன், கட்சிப்பிரமுகர்கள் மாரிமுத்து, குணசேகரன், முல்லைவேந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
நாகை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முனுசாமி மாணவ-மாணவிகளுக்கு கலவை சாதம் வழங்கினார்.

கலவை சாதம்

நாகை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவு மையத்தில் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவில் கலவை சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கலவை சாதங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 5 வயது வரை உள்ள முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கும் மதிய உணவில் பலவகை கலவை சாதம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு திங்கட்கிழமை தக்காளி சாதம் மற்றும் வேகவைத்த முட்டை, செவ்வாய்க்கிழமை காய்கறி கலவை சாதம் மற்றும் சுண்டல், புதன்கிழமை காய்கறி புலவு சாதம் மற்றும் வேகவைத்த முட்டை, வியாழக்கிழமை எலுமிச்சை சாதம் மற்றும் வேகவைத்த முட்டை, வெள்ளிக்கிழமை பருப்பு சாதம் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காய்கறி கலவை சாதம் ஆகியவை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளி

அதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு முதல் மற்றும் 3-ம் வாரம் திங்கட் கிழமை வெஜிடபிள் பிரியாணி, மிளகு முட்டை, செவ்வாய்க்கிழமை கொண்டக்கடலை, புலாவு, தக்காளி மசாலா முட்டை, புதன்கிழமை தக்காளி சாதம், மிளகு முட்டை, வியாழக்கிழமை சாம்பார் சாதம், சாதா முட்டை, வெள்ளிக்கிழமை கறிவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், உருளை கிழங்கு தக்காளி சேர்த்து வேகவைத்த முட்டையும், 2-வது மற்றும் 4-வது வாரத்தில் திங்கட்கிழமை பிசிபேளாபாத், வெங்காயம், தக்காளி முட்டை மசாலா, செவ்வாய்க்கிழமை மிக்சர்ட் மீல் மேக்கர் மற்றும் காய்கறிகள் சாதம், மிளகு முட்டை, புதன் கிழமை புளி சாதம், தக்காளி மசாலா முட்டை, வியாழக்கிழமை எலுமிச்சை சாதம், மசாலா முட்டை, வெள்ளிக்கிழமை சாம்பார் சாதம், வேகவைத்த முட்டை அல்லது வறுத்த உருளைக்கிழங்கும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சர்க்கரை பொங்கல்

நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் செயல்படும் ஆயிரத்து 325 அங்கன்வாடி மையங்களில் 28 ஆயிரத்து 109 குழந்தைகளுக்கும், மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படும் ஆயிரத்து 162 சத்துணவு மையங்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 45 மாணவ, மாணவிகளுக்கும் பலவகை கலவை சாதங்கள் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பள்ளியில் மதிய உணவாக மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கலும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு தக்காளி சாதத்துடன் முட்டை மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை கலெக்டர் முனுசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவஞானபாரதி, நகரசபை தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நகராட்சி ஆணையர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.