Monday, September 29, 2014
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளன.
புதிய கூட்டணிகளை உருவாக்கவும் தயார் ஆகின்றன. வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர் முகாம்களில் இருக்கும் கட்சிகள் கை கோர்க்கலாம். புது கட்சிகளும் தலை தூக்கலாம் என்கின்றனர். அரசியல் நோக்கர்கள். இந்த நிலையில ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்பதிலும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் அரசியலில் ஈடுபட இது தகுந்த நேரம் என்றும் எனவே கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் ஆந்திர பத்திரிகைகளும் இணைய தளங்களும் செய்திகள் வெயிட்ட வண்ணம் உள்ளன.
ரஜினிக்கு ஏற்கனவே அரசியல் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் இருக்கிறது. 1996–ல் திமு.க. தமிழ் மாநில கூட்டணியை உருவாக்கினார். அந்த அணி சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. 1998 தேர்தலிலும் அதே கூட்டணியை ஆதரித்தார்.
2004 பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க. வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது தனிக்கட்சி துவங்கி அரசியலில் குதிப்பார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இறங்கவில்லை. மாறாக பாரதீய ஜனதாவை ஆதரித்து ஓட்டு கேட்டார். அதன் பிறகு எல்லா தேர்தல்களிலும் நடுநிலை வகித்தார். எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க வில்லை.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். இதையடுத்து பாரதீய ஜனதாவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழக பாரதீய ஜனதா தலைவர்களும் ரஜினி தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆனால் ரஜினி அமைதியாக இருந்து விட்டார்.
தற்போது அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்க்க மீண்டும் முயற்சிகள் டெல்லி தலைவர்கள் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்த்தால் தமிழகத்தில் கட்சியை வலுவாக்கிவிடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். ரஜினி ஏற்பாரா என்பது உறுதியாக தெரிய வில்லை.
புதிய கூட்டணிகளை உருவாக்கவும் தயார் ஆகின்றன. வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர் முகாம்களில் இருக்கும் கட்சிகள் கை கோர்க்கலாம். புது கட்சிகளும் தலை தூக்கலாம் என்கின்றனர். அரசியல் நோக்கர்கள். இந்த நிலையில ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்பதிலும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் அரசியலில் ஈடுபட இது தகுந்த நேரம் என்றும் எனவே கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் ஆந்திர பத்திரிகைகளும் இணைய தளங்களும் செய்திகள் வெயிட்ட வண்ணம் உள்ளன.
ரஜினிக்கு ஏற்கனவே அரசியல் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் இருக்கிறது. 1996–ல் திமு.க. தமிழ் மாநில கூட்டணியை உருவாக்கினார். அந்த அணி சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. 1998 தேர்தலிலும் அதே கூட்டணியை ஆதரித்தார்.
2004 பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க. வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது தனிக்கட்சி துவங்கி அரசியலில் குதிப்பார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இறங்கவில்லை. மாறாக பாரதீய ஜனதாவை ஆதரித்து ஓட்டு கேட்டார். அதன் பிறகு எல்லா தேர்தல்களிலும் நடுநிலை வகித்தார். எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க வில்லை.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். இதையடுத்து பாரதீய ஜனதாவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழக பாரதீய ஜனதா தலைவர்களும் ரஜினி தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆனால் ரஜினி அமைதியாக இருந்து விட்டார்.
தற்போது அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்க்க மீண்டும் முயற்சிகள் டெல்லி தலைவர்கள் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்த்தால் தமிழகத்தில் கட்சியை வலுவாக்கிவிடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். ரஜினி ஏற்பாரா என்பது உறுதியாக தெரிய வில்லை.
சென்னை, செப். 29–
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல்–அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார்.
இதனால் அவருக்குப் பதிலாக புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது. புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசரக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார்.
அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார்.
இன்று மதியம் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல் – அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்புபிரமாணமும் செய்து வைத்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
1. நத்தம் விசுவநாதன் 2. வைத்திலிங்கம் 3. எடப்பாடி பழனிச்சாமி 4. பி.மோகன் 5. பா.வளர்மதி 6. பி.பழனியப்பன் 7.செல்லூர் கே.ராஜு 8. ஆர்.காமராஜ் 9. பி.தங்கமணி 10. வி.செந்தில்பாலாஜி 15. கோகுலஇந்திரா 16. சுந்தர்ராஜ் 17. செந்தூர்பாண்டியன் 19. என்.சுப்பிரமணியன் 20.ஜெயபால் 21. முக்கூர் என்.சுப்பிரமணியன் 22. ஆர்.பி.உதயகுமார் 23. கே.டி.ராஜேந்திர பாலாஜி 24. பி.வி.ரமணா 25. கே.சி.வீரமணி 26. ஆனந்தன் 27. தோப்பு வெங்கடாசலம் 28. பூனாட்சி 29. அப்துல்ரகீம் 30. விஜயபாஸ்கர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தலைமை செயலாளர் மோகன்வர்கீஸ், சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, கொறடா மனோகரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல்–அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார்.
இதனால் அவருக்குப் பதிலாக புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது. புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசரக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார்.
அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார்.
இன்று மதியம் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல் – அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்புபிரமாணமும் செய்து வைத்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
1. நத்தம் விசுவநாதன் 2. வைத்திலிங்கம் 3. எடப்பாடி பழனிச்சாமி 4. பி.மோகன் 5. பா.வளர்மதி 6. பி.பழனியப்பன் 7.செல்லூர் கே.ராஜு 8. ஆர்.காமராஜ் 9. பி.தங்கமணி 10. வி.செந்தில்பாலாஜி 15. கோகுலஇந்திரா 16. சுந்தர்ராஜ் 17. செந்தூர்பாண்டியன் 19. என்.சுப்பிரமணியன் 20.ஜெயபால் 21. முக்கூர் என்.சுப்பிரமணியன் 22. ஆர்.பி.உதயகுமார் 23. கே.டி.ராஜேந்திர பாலாஜி 24. பி.வி.ரமணா 25. கே.சி.வீரமணி 26. ஆனந்தன் 27. தோப்பு வெங்கடாசலம் 28. பூனாட்சி 29. அப்துல்ரகீம் 30. விஜயபாஸ்கர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தலைமை செயலாளர் மோகன்வர்கீஸ், சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, கொறடா மனோகரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி சட்டமன்றக் கட்சி தலைவாக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தனர். இதையடுத்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது.
பதவியேற்றதும் நேராக தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் இன்று மாலை பெங்களூர் செல்லும் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில் அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடகா நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறி அதனை கண்டித்து, ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் சிலை அருகில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான மேயர் சு.குணசேகரன் தலைமையில், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன்,முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் கூறியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கபட்ட தீர்ப்பு துரோகமான தீர்ப்பாகும்.காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடக அரசு மற்றும் கர்நாடக நீதிமன்றம் பழி வாங்கியுள்ளது.அவருக்கு வழங்கிய அபராத தொகை உலகில் எந்த வழக்கிற்கும் இதுவரை வழங்கப்படவில்லை.சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனி கூட அரசியல் பிழை செய்துள்ளதாக விமர்சித்துள்ளார். ஒட்டு மொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்காக 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டு இருக்கும் ஜெயலிதாவிற்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பினை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். ஜெயலலிதா எபோதும் சட்டத்தை மதிப்பவர்.எனவே, இந்த தீர்ப்பிற்கு பின்னால் தி.மு.க.,காங்கிரஸ், பி.ஜே.பி.,போன்ற கட்சிகளின் பழிவாங்கும் போக்காவே இந்த தீர்ப்பு உள்ளது. எத்தனை கட்சிகள் பழிவாங்க நினைத்தாலும் ஜெயலலிதாவை யாராலும் அசைக்க முடியாது. சட்டப்படி ஜெயலலிதா வெளியே வருவார். தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி புரிவார்.
அதுவரை அறவழியில் அண்ணா தி.மு.க.வின் போராட்டம் தொடரும். இவ்வாறு துணை மேயர் சு.குணசேகரன் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எம்..ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன் எம்.சி.,தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன்,இணை செயலாளர் வசந்தாமணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் சுப்பிரமணியம், பாசறை செயலாளர் சதீஷ், மாநகராட்சி 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம்,அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, அய்யாசாமி, கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் வளர்மதி கருணாகரன், கோமதி சம்பத்,அன்னாபூரணி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித் ரத்தினம், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சடையப்பன், ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், பட்டுலிங்கம்,பூளுவபட்டி பாலு, பிரியாசக்திவேல், கலைமகள் கோபால்சாமி, சண்முகசுந்தரம், பேபி தர்மலிங்கம் ஆனந்தன் ஆகியோர்களும், கண்ணபிரா ன், ஏ.எஸ்.கண்ணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உடுமலை கிருஷ்ணன், ராஜசேகரன், பொன்னுசாமி, கண்ணபிரான், ராஜேந்திரன், சரவணன், ரவிகுமார்,சிவகுமார், கணேஷ், முருகன், முன்னாள் செயலாளர் பழனிசாமி, உள்ளிட்டவர்களும், ரத்தினகுமார், அசோக்குமார், லோகநாதன், யுவராஜ் சரவணன், நீதிராஜன், தேவராஜ், கேபிள் பாலு, பங்க்.என்.ரமேஷ், வளர்மதி கூட்டுறவு கரு.ராமச்சந்திரதேவர் , பாஸ் என்கிற பாஸ்கரன், வே,சரவணன், ஆண்டவர் பழனிசாமி, அகமது பைசல்,ஜாகிர் அகமது, மகளிர் அணியினர் முன்னாள் கவுன்சிலர்கள் சு.கேசவன், தேவராஜ், ருக்குமணி, செல்வம் தங்கவேல், மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தரம்பாள்,சரஸ்வதி, முத்துலட்சுமி, மல்லிகா, மும்தாஜ், தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், எம்.ஜி.குணசேகர் தீக்கனல் விஜயகுமார், பரதிதிபிரியன், பலகுரல் வெள்ளியங்கிரி, வேங்கை விஜயகுமார் உள்ளிட்டவர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களு ம், தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.
திருப்பூர் டவுன் பஸ்களில் விதிமுறைக்குப் புறம்பாக
அதிக கட்டணம் நிர்ணயித்து போக்குவரத்து அதிகாரிகள் முறைகேடு:
கட்டணத்தைக் குறைக்க மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருப்பூர், செப்.29-
திருப்பூர் நகர, புறநகரப் பேருந்துகளில் விதிமுறைக்குப் புறம்பாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சாமானிய மக்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் கடிதம் எழுதியுள்ளார். இதில் கூறப்பட்டுள்ளதாவது: மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் கடந்த 26 அன்று நடைபெற்றது. இதில், திருப்பூர் வட்டாரத்தில் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகரம் மற்றும் சுற்றியுள்ள அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி,நம்பியூர், பெருமாநல்லூர், சேவூர், கருவலூர், கருமத்தப்பட்டி,சோமனூர், கொடுவாய் உள்ளிட்ட ஊர்களுக்கும், சுற்றுவட்டார கிராமங்களுக்கும் இயக்கப்படும் 127 நகர, புறநகர பேருந்துகளில்எல்.எஸ்.எஸ் ஆக 120-ம், எக்ஸ்பிரஸாக 6ம், சாதாரணக்கட்டணத்தில் ஒரேயொரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதாகவும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டபபடி பெறப்பட்ட கடிதத்தில் 42பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு வகையினங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கொடுத்திருக்கும் பட்டியலில்எல்எஸ்எஸ் வகையினங்கள் என குறிப்பிடப்பட்டிருக்கும் பேருந்துவழித்தடங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பட்டியலில்சாதாரணக் கட்டணப் பேருந்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.இதன்மூலம் மேற்படி 42 பேருந்துகள் விதிமுறைக்குப் புறம்பாககூடுதல் கட்டணப் பேருந்துகளாக இயக்கப்படுவது உறுதியாகிறது.
அதேபோல் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தகவல் பெறும் உரிமை சட்டப்படி பெறப்பட்ட கடிதத்தில், 137நகரப் பேருந்துகள் இயக்க அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் அவை எந்த வகையினத்தில்இயக்கப்படுகின்றன என்று எழுத்துப்பூர்வமாக பட்டியல் தரமறுத்துவிட்டார். அந்த நகரப் பேருந்துகளை சாதாரணக்கட்டணத்தில்தான் இயக்கப்பட வேண்டும் என்றும் தெரிகிறது.இதிலும் விதிமுறைக்குப் புறம்பாக எல்எஸ்எஸ், எக்ஸ்பிரஸ்பேருந்துகளை அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் இயக்குவது உறுதியாகிறது.
இது மட்டுமின்றி, அந்த எல்எஸ்எஸ்., எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கும் சட்டப்படி நிர்ணயித்துள்ள கட்டணங்களைவிட கூடுதல் கட்டணங்களை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தன்னிச்சையாக வசூலித்து வருகின்றனர். அரசாணைப்படி சாதாரண பேருந்துகளில் ரூ.3.00, எல்.எஸ்.எஸ் பேருந்துகளில் ரூ.3.50ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ.4.50ம் என குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சராசரியாக இரண்டு கி.மீ. தூரத்திற்கு ஒரு நிலை (ஸ்டேஜ்) என வரையறுத்து, ஒரே வீத கட்டணம்தான் வசூலிக்க வேண்டுமென்று அரசாணை சொல்கிறது.
ஆனால் திருப்பூரில் சாதாரண பேருந்து சேவை என்பதே நடைமுறையில் இல்லை. கிட்டத்தட்ட அனைத்துப் பேருந்துகளிலும் ரூ.4 வீதமும், அதிவிரைவுப் பேருந்துகளில் ரூ.5 வீதமும் குறைந்தபட்சக் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், ஸ்டேஜ் நிர்ணயத்திலும் போக்குவரத்து துறை முறைகேடு செய்து கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது.
மற்ற மாநகரங்கள், மாவட்டங்களில், குறிப்பாகச் சென்னையில் கூட குறைந்தபட்ச பயணக் கட்டணம் ரூ.3ஆகத்ததான் உள்ளது. இங்கு மட்டும் கடும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. கடந்த செப்டம்பர் 11ம் தேதியிட்ட அரசுப்போக்குவரத்துக் கழகம் கோவை மண்டல அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அவினாசி புதிய பேருந்து நிலையத்திற்கு எல்.எஸ்.எஸ் பேருந்தில் ரு.6.00ம், சாதாரண பேருந்தில் ரு.5.00ம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் நடைமுறையில் எல்.எஸ்.எஸ் பேருந்துகளில் ரூ.8.00-ம்,எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரு.11.00-ம் வசூலிக்கப்படுகிறது.
முதல்வரின் தனிப்பிரிவிற்கு எமது கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவுக்கு பதில் அளித்துள்ள போக்குவரத்து துறை அதிகாரிகள் 2011ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு அமலில் இருந்து வருவதாக கூறியுள்ளனர். ஆனால் வேறெங்கும் இல்லாமல் திருப்பூரில் மட்டும் அரசாணை மற்றும் விதிமுறைகளை மீறி கட்டண உயர்வு செய்து பயணிகளின் நம்பிக்கைக்கு மோசடி செய்துள்ளனர்.
போக்குவரத்து அதிகாரிகள் விதிமீறல் செய்துள்ளது தெரியவந்த நிலையில், கட்டண உயர்வைக் குறைத்து சீர்செய்வதற்கு மாறாக, சமாளித்து ஏமாற்றக்கூடிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒரு அரசுத்துறையின் இத்தகைய அணுகுமுறை எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. ஏற்கனவே பலவித நெருக்கடியில் உள்ள சாதாரண ஏழை, எளிய மக்களை மேலும் கஷ்டப்படுத்தும் நடவடிக்கையாகவே போக்குவரத்து துறையின் செயல்பாடு அமைந்துள்ளது.
லட்சக்கணக்கான சாமானிய தொழிலாளர்கள் திருப்பூருக்கு வேலைநிமித்தமாக தினந்தோறும் வந்து செல்லும் நிலையில் இது போன்ற கட்டணச் சுரண்டலை ஏற்க முடியாது. ஆகவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சாதாரணக் கட்டணப் பேருந்துகளுக்கான விதிமுறைப்படி குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
(இத்துடன் கடிதம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி, மண்டல போக்குவரத்து அதிகாரி ஆகியோரிடம் பெறப்பட்ட விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)
---------------------
திருப்பூர், செப்.29-
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் நகருக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 கிளைகளில் வெற்றிகரமாக மாநாடுகள் நடத்தப்பட்டு செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கிளை மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம்: பெரியார் காலனி - ஜார்ஜ் வர்கீஸ், முத்துகோபால்நகர் - ஆர்.சுகுமார், நேதாஜிநகர் - பி.பாபு, அனுப்பர்பாளையம் புதூர் - சேகர், அனுப்பர்பாளையம் (கிழக்கு) - எம்.பாண்டியராஜன், அனுப்பர்பாளையம் (மேற்கு) - பெரியசாமி, தண்ணீர்பந்தல் - ஏ.உமாநாத், திலகர்நகர் ஏ - கே.குப்புசாமி, திலகர்நகர் பி - சின்னசாமி, புதுக்காலனி - சந்திரமோகன், வேலம்பாளையம் ஏ - வெள்ளியங்கிரி, வேலம்பாளையம் பி - என்.சுப்பிரமணியம், பிடிஆர் நகர் - எம்.பாலசுப்பிரமணியம், சிறுபூலுவபட்டி - மணி, ரங்கநாதபுரம் - செல்வகுமார், அணைப்பாளையம் - மோகன், பெரியார் காலனி மாதர் ஏ - டி.இந்திராணி, பெரியார்காலனி மாதர் பி - ஆர்.கவிதா, வேலம்பாளையம் மாதர் - எஸ்.குணசுந்தரி, அணைப்பாளையம் மாதர் - பி.செல்வி, ரங்கநாதபுரம் மாதர் - வி.லட்சுமி, அனுப்பர்பாளையம் மாதர் - ஏ.கிருஷ்ணவேணி, மாணவர் அரங்கம் - டி.உமாசங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நியூயார்க்: ""21ம் நூற்றாண்டு இந்தியாவுடையது'' என நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் பிரதமர் மோடி பேசினார்.அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற, இந்திய வம்சாவளி பெண்ணான நீனா தவ்லூரி தொகுத்து வழங்கினார். இந்த பங்கேற்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. எல்.சுப்ரமணியம் வயலின் இசைக்க அவரது மனைவி கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடினார். குச்சிப்புடி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன. கலைநிகழ்ச்சிகளின் நடுவே மோடியின் உருவத்தை ஒருவர் தத்ரூபமாக வரைந்தார். நிகழ்ச்சியில் அமெரிக்க எம்.பி.,க்கள் பலர் முதலில் மேடைக்கு வந்தனர். பின் மோடி கூட்டத்திலிருந்து வந்து மேடையேறினார். அமெரிக்க, இந்திய தேசிய கீதங்கள் பாடப்பட்டன.
பின் மோடி அமெரிக்க சகோதர, சகோதரிகளே என பேச்சை துவங்கினார். (அப்போது கை தட்டலில் அரங்கமே அதிர்ந்தது). அவர் இந்தியில் பேசியதாவது: "இந்த பெரிய விழாவை ஏற்பாடு செய்த அமெரிக்க வாழ் இந்திய மக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நவராத்திரி விழா வாழ்த்துக்கள். தகவல் தொழில்நுட்பத்தால் உலகம் சுருங்கிவிட்டது. பாம்பாட்டிகளின் நாடு என்று கூறப்பட்ட நமது நாடு, ஒரு "மவுஸ் கிளிக்'கில் உலகையே நகர்த்தி கொண்டு செல்கிறது. அமெரிக்க வாழ் இந்தியர்களாகிய உங்களது நடவடிக்கை, கலாச்சாரம் மற்றும் திறமைகளால் அமெரிக்காவில் கவுரவத்தை சம்பாதித்துள்ளீர்கள். இந்தியாவின் கவுரவத்தை உயர்த்தியுள்ளீர்கள். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்தியர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். இங்குள்ளவர்கள் எனக்காக ஓட்டளிக்கவில்லையெனினும், வெற்றி பெற்ற போது கொண்டாடினர். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எந்த ஒரு பதவிக்கோ அல்லது நாற்காலிக்கோ அல்ல. நான் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இதுவரை 15 நிமிடம் கூட ஓய்வெடுக்கவில்லை. 21ம் நூற்றாண்டு ஆசியாவின் வளர்ச்சியை நம்பியே உள்ளது. ஆசியாவின் வளர்ச்சி இந்தியாவை நம்பி உள்ளது. இந்தியா பழமையான கலாசாரத்தை கொண்ட இளமையான நாடு. இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதத்தினர் 35 வயதுக்கு கீழ் உள்ளனர். இந்த இளைஞர் சக்தி வேறு எந்த நாட்டுக்கும் இல்லை. உலகில் இந்தியர்கள் இல்லாத நாடே இல்லை. இந்த இளைய இந்தியா உலகத்துக்கு சேவையாற்ற தயாராக இருக்கிறது. ஜனநாயகம் இந்தியாவின் பெரிய பலம். அந்த ஜனநாயகத்தில் சிறந்த நிர்வாகம் இருந்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அனைவருக்காகவும் நாட்டை கட்டமைக்க வேண்டும். எந்த நிலையிலும் இந்தியாவை விட்டு கொடுக்கக் கூடாது.
பின் மோடி அமெரிக்க சகோதர, சகோதரிகளே என பேச்சை துவங்கினார். (அப்போது கை தட்டலில் அரங்கமே அதிர்ந்தது). அவர் இந்தியில் பேசியதாவது: "இந்த பெரிய விழாவை ஏற்பாடு செய்த அமெரிக்க வாழ் இந்திய மக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நவராத்திரி விழா வாழ்த்துக்கள். தகவல் தொழில்நுட்பத்தால் உலகம் சுருங்கிவிட்டது. பாம்பாட்டிகளின் நாடு என்று கூறப்பட்ட நமது நாடு, ஒரு "மவுஸ் கிளிக்'கில் உலகையே நகர்த்தி கொண்டு செல்கிறது. அமெரிக்க வாழ் இந்தியர்களாகிய உங்களது நடவடிக்கை, கலாச்சாரம் மற்றும் திறமைகளால் அமெரிக்காவில் கவுரவத்தை சம்பாதித்துள்ளீர்கள். இந்தியாவின் கவுரவத்தை உயர்த்தியுள்ளீர்கள். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்தியர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். இங்குள்ளவர்கள் எனக்காக ஓட்டளிக்கவில்லையெனினும், வெற்றி பெற்ற போது கொண்டாடினர். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எந்த ஒரு பதவிக்கோ அல்லது நாற்காலிக்கோ அல்ல. நான் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இதுவரை 15 நிமிடம் கூட ஓய்வெடுக்கவில்லை. 21ம் நூற்றாண்டு ஆசியாவின் வளர்ச்சியை நம்பியே உள்ளது. ஆசியாவின் வளர்ச்சி இந்தியாவை நம்பி உள்ளது. இந்தியா பழமையான கலாசாரத்தை கொண்ட இளமையான நாடு. இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதத்தினர் 35 வயதுக்கு கீழ் உள்ளனர். இந்த இளைஞர் சக்தி வேறு எந்த நாட்டுக்கும் இல்லை. உலகில் இந்தியர்கள் இல்லாத நாடே இல்லை. இந்த இளைய இந்தியா உலகத்துக்கு சேவையாற்ற தயாராக இருக்கிறது. ஜனநாயகம் இந்தியாவின் பெரிய பலம். அந்த ஜனநாயகத்தில் சிறந்த நிர்வாகம் இருந்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அனைவருக்காகவும் நாட்டை கட்டமைக்க வேண்டும். எந்த நிலையிலும் இந்தியாவை விட்டு கொடுக்கக் கூடாது.
ஆட்டோ செலவை விட குறைவு:ஆமதாபாத்தில் ஆட்டோவில் ஒரு கி.மீ., பயணம் செய்ய 10 ரூபாய் செலவாகிறது. ஆனால் ஒரு கி.மீட்டருக்கு 7 ரூபாய் மட்டுமே செலவு செய்து செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பி உள்ளோம். ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கும் செலவை விட, குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்திற்கு சென்றுள்ளோம். மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் மனித வளத்தை விரும்பினால், குறைந்த கட்டணத்தில் பொருட்களை தயாரிக்க விரும்பினால், இந்தியா தான் உங்களுக்கு உகந்த நாடு. மகாத்மா காந்தி, சுகாதாரத்தில் ஒரு போதும் சமரசம் செய்து கொண்டதில்லை. அவர் நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்துள்ளார். அவருக்கு நாம் சுத்தமான இந்தியாவை பரிசாக அளிப்போம். வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும். அவர்களுக்கான வேலையை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும். 2022ம் ஆண்டுக்குள் நாட்டுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசு மக்களுக்காக மட்டுமே செயல்படும். நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும். மகாத்மா காந்தியும் தென்ஆப்ரிக்காவில் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தவர் தான். அதன்பின் நாடு திரும்பி சுதந்திரம் பெற்று தந்தார்.'' இவ்வாறு மோடி பேசினார்.
பெங்களூரு: பெங்களூரு சிறை அருகே போலீசை மீறி சென்ற டிரக்ஸ் வேனால் பரபரப்பு ஏற்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் ஜெ., அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்க்க இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் நம்பர் பிளேட் இல்லாத வேன் வந்ததால் சிறை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூருவில் ஜெ.வை பார்க்க கட்சி தொண்டர்கள் பலரும் நள்ளிரவு முதல் காத்திருக்கின்றனர். ஆனால் யாருக்கும் இன்று அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் திங்கட்கிழமை பார்க்க சட்டப்பூர்வ அனுமதி இருந்தாலும் பாதுகாப்பு காரணமாக அ.தி.மு.,கவினரை 100 மீட்டருக்கு முன்னதாக தடுத்து நிறுத்தி விட்டனர். சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டடனர்.
இந்நிலையில் காலையில் நம்பர் பிளேட் இல்லாத டிரக்ஸ்வேன் ஒன்று சிறை அருகே வந்தது. போலீசார் தடுத்து நிறுத்தியும் , நிற்கவில்லை. மேலும் சிறை அருகே 10 க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்திய போது வண்டி பின்வாங்கி பறந்து சென்றது. இந்த வேன் வந்தது ஏன்? இதில் யார் இருந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் இந்த வேனில் நம்பர் பிளேட் இல்லாததால் மேலும் பல்வேரு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலுக்கு வந்த குடும்ப டாக்டர்கள் : பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை பார்க்க குடும்ப டாக்டர்கள் சாந்தாரம் மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் ஜெயிலுக்கு வந்தனர் . இவர்கள் ஜெ.,வை சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர். இவர்கள் சந்தித்தார்களா அல்லது சிறைத்துறை அனுமதி மறுத்து விட்டதா என்ற தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
பிரட்- சான்வெட்ஜ்: இன்று காலையில் ஜெ.,வுக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பிரட் மற்றும் சான்வெஜ் அயிட்டங்களே அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. ஏ.சி., பேன் வசதி: ஜெ., தங்கி இருக்கும் அறையில் ஏ.சி., மற்றும் விசிறி பொருத்தப்பட்டுள்ளன. எடியூரப்பா இருந்த சிறையில் ஜெ., அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெ., தரப்பில் இங்குள்ள ஐ கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது. சசிகலா, இளவரசி, சுதாகரனும் ஜாமின் மனு வை தாக்கல் செய்துள்ளனர்.
பெங்களூருவில் ஜெ.வை பார்க்க கட்சி தொண்டர்கள் பலரும் நள்ளிரவு முதல் காத்திருக்கின்றனர். ஆனால் யாருக்கும் இன்று அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் திங்கட்கிழமை பார்க்க சட்டப்பூர்வ அனுமதி இருந்தாலும் பாதுகாப்பு காரணமாக அ.தி.மு.,கவினரை 100 மீட்டருக்கு முன்னதாக தடுத்து நிறுத்தி விட்டனர். சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டடனர்.
இந்நிலையில் காலையில் நம்பர் பிளேட் இல்லாத டிரக்ஸ்வேன் ஒன்று சிறை அருகே வந்தது. போலீசார் தடுத்து நிறுத்தியும் , நிற்கவில்லை. மேலும் சிறை அருகே 10 க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்திய போது வண்டி பின்வாங்கி பறந்து சென்றது. இந்த வேன் வந்தது ஏன்? இதில் யார் இருந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் இந்த வேனில் நம்பர் பிளேட் இல்லாததால் மேலும் பல்வேரு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலுக்கு வந்த குடும்ப டாக்டர்கள் : பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை பார்க்க குடும்ப டாக்டர்கள் சாந்தாரம் மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் ஜெயிலுக்கு வந்தனர் . இவர்கள் ஜெ.,வை சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர். இவர்கள் சந்தித்தார்களா அல்லது சிறைத்துறை அனுமதி மறுத்து விட்டதா என்ற தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
பிரட்- சான்வெட்ஜ்: இன்று காலையில் ஜெ.,வுக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பிரட் மற்றும் சான்வெஜ் அயிட்டங்களே அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. ஏ.சி., பேன் வசதி: ஜெ., தங்கி இருக்கும் அறையில் ஏ.சி., மற்றும் விசிறி பொருத்தப்பட்டுள்ளன. எடியூரப்பா இருந்த சிறையில் ஜெ., அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெ., தரப்பில் இங்குள்ள ஐ கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது. சசிகலா, இளவரசி, சுதாகரனும் ஜாமின் மனு வை தாக்கல் செய்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தன. அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில இடங்களில் அ.தி.மு.க.–தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் சின்னப்பன், அ.தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார், நகர்மன்ற தலைவர் கலாவதி ஞானசேகர், தொகுதி செயலாளர் கோவிந்தராஜ், வர்த்தக கழக தலைவர் ஞானசேகர் ஆகியோர் தலைமையில் திரண்டனர்.
அங்கு அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் தாராபுரத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மூடும்படி வலியுறுத்தினர். இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
அண்ணாசிலை அருகே தி.மு.க நகர அலுவலகம் உள்ளது. அங்கே சென்ற அ.தி.மு.க.வினர் அலு வலகத்தை மூடும் படி கூறினார்கள். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் தி.மு.க. அலுவலகம் முன் வைக்கப் பட்டிருந்த கருணாநிதி, மு.க.ஸ்டாலின் பிளக்ஸ் போர்டுகளுக்கு தீ வைத்தனர். கருணாநிதியின் உருவ பொம்மையையும் எரித்தனர்.
தாராபுரம் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சன் பாலுவுக்கு சொந்தமான பழைய வாகனங்கள் விற்பனை நிலையம் அருகே வந்த அ.தி.மு.க.வினர் கடையை உடனே மூடுமாறு கூறினார்கள்.
தகவல் அறிந்ததும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். கடையை மூடச்சொல்லி வற்புறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.–தி.முக.வினரிடையே மோதல் உருவானது. இந்த களேபரத்தில் அந்த கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கும் தீ வைக்கபட்டது. காரில் இருந்த கியாஸ் சிலிண்டர் திறந்து விடப்பட்டதால் தீ மளமளவென பரவியது. அப்போது தி.மு.க.வினர் சிலர் உயிர் தப்புவதற்காக கடைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டு உயிர் பிழைத்தனர்.
காருக்கு தீவைக்கபட்ட தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்பு வாகனத்தையும் அ.தி.மு.க.வினர் முன்னேறிச்செல்ல விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி.இளங்கோவன், இன்ஸ் பெக்டர்கள் சிவக்குமார், பொம்மு மற்றும் போலீசார் விரைந்து வந்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அதன் பின்னர் காரில் எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகியின் மோட்டார் சைக்கிளுக்கு வைக்கப்பட்ட தீயையும் அணைக்கப்பட்டது. அ.தி.மு.க.–தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட மோதலின் போது கடைக்குள் ஓடி பதுங்கிய சிலரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார்சிங் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது.
பல்லடம் கல்லாம் பாளையத்தில் இன்று காலை பல்லடம் உழவர் பணி கூட்டுறவு சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி, சித்ராதேவி, நகர அவைத்தலைவர் தங்கவேல் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர்.
அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொடும் பாவியை எரித்தனர்.
அவினாசியிலும் அ.தி.மு.க.வினர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். சேவூர் கைகாட்டி அருகே தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி தலைமையில் கருணாநிதியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
கருவலூரில் ஊராட்சி செயலாளர் காத்தவராயன் தலைமையில் சாலை மறியல் நடந்தது.
அம்மாபாளையத்தில் கருணாநிதி உருவபொம்மை எரிக்கப்பட்டது. அம்மா பாளையத்திலும், அவினாசி புதிய பஸ் நிலையம் அருகேயும் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...




.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)
.jpg)




