Wednesday, September 17, 2014
ஆளில்லாத ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்டதை கண்டித்து அந்த வழியை பயன்படுத்திய பொதுமக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திடீர் மறியல்
அரக்கோணம் அருகே திருத்தணி ரெயில் நிலைய பகுதியில் எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் டி.புதூர்மேடு பகுதிகளை இணைக்கும் ரெயில் பாதையை இணைக்கும் இடத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் அந்த கேட்டை நிர்வாக காரணங்களுக்காக ரெயில்வே நிர்வாகத்தினர் மூடி விட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள் திருத்தணியில் இருந்து சென்னை செல்ல தயாராக இருந்த ரெயிலின் முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
‘‘நாங்கள் செல்வதற்கு வேறு வழி கிடையாது. ரெயில்பாதைக்கு கீழே இருக்கும் சிறிய சுரங்கப்பாதை பகுதியில் மழை பெய்து தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த வழியாக நாங்கள் செல்ல முடியாது. எனவே கேட்டை திறந்து விடுங்கள்’’ என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த அரக்கோணம் தொகுதி எம்.பி. கோ.அரி மற்றும் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மனோகரன், ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதன் பின்னர் மறியல் செய்தவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். விரைவில் ரெயில்வே கேட்டை திறப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட வேண்டிய மின்சார ரெயில் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்த மறியல் தொடர்பாக 10 பெண்கள், 30 ஆண்கள் மீது அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டையை சேர்ந்த பாலாஜி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பாலாஜியின் அண்ணன் தியாகராஜன் என்பவரின் செல்போனுக்கு யாரோ ஒருவர் பேசினார்.
தியாகராஜன் பேசிய போது, எதிர்முனையில் பேசியவர், ‘‘உன் தம்பி பாலாஜியை இன்று இரவிற்குள் கொலை செய்து விடுவார்கள்’’ என கூறியுள்ளார். போனில் பேசிய நபரை நீயார் என கேட்டதற்கு, ‘‘எனக்கு பாலாஜியை தெரியும், பாலாஜிக்கும் என்னை தெரியும் பாலாஜியைத்தான் தொடர்பு கொள்ள முயன்றேன் அவர் போனை எடுக்கவில்லை’’ என கூறியுள்ளார்.
கொலை செய்வதற்கு பாலாஜி என்ன செய்தார் என கேட்டதற்கு போனில் பேசிய மர்ம நபர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மர்ம நபரின் இந்த மிரட்டல் தொடர்பாக தியாகராஜன் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செஞ்சியில் 57 மில்லிமீட்டர் மழை பதிவானது.
வெப்பச்சலனம்
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையிலும் வானம் மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி தெளிவாக காணப்பட்டது. பின்னர் மாலை 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து லேசான மழை பெய்தது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. திடீர் மழையை எதிர்பார்க்காத சிலர் ஒதுங்க இடமின்றி நனைந்தபடிசென்றதை காணமுடிந்தது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பிரதான சாலைகளில் வழக்கமாக செல்வதை காட்டிலும் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றது.
சுவர் இடிந்து விழுந்தது
இந்த கனமழையின் காரணமாக விழுப்புரம் கே.கே.ரோடு, பூந்தமல்லி தெரு, நேருஜி ரோடு ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது. மேலும் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங் கப்பாதையில் வெள்ள நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதியான மணி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நேருஜி சாலையில் கனமழைக்கு பொதுபணித்துறை அலுவலக மதில்சுவரானது இடிந்து விழுந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வெப்பச்சலனம்
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையிலும் வானம் மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி தெளிவாக காணப்பட்டது. பின்னர் மாலை 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து லேசான மழை பெய்தது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. திடீர் மழையை எதிர்பார்க்காத சிலர் ஒதுங்க இடமின்றி நனைந்தபடிசென்றதை காணமுடிந்தது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பிரதான சாலைகளில் வழக்கமாக செல்வதை காட்டிலும் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றது.
சுவர் இடிந்து விழுந்தது
இந்த கனமழையின் காரணமாக விழுப்புரம் கே.கே.ரோடு, பூந்தமல்லி தெரு, நேருஜி ரோடு ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது. மேலும் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங் கப்பாதையில் வெள்ள நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதியான மணி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நேருஜி சாலையில் கனமழைக்கு பொதுபணித்துறை அலுவலக மதில்சுவரானது இடிந்து விழுந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ரிஷிவந்தியம் அருகே பிரபல ரவுடி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றில் பிணம்
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டு சாலை ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜி, பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற் கு விரைந்து சென்றனர். அங்கு கிணற்றில் பிணமாக மிதந்த, உடலை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டவர் ரவுடி
விசாரணையில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டவர் ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் மகன் அருளானந்தபாண்டியன்(வயது 50) என்பதும், பல்வேறு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது.
இது குறித்த தகவலின் பேரில் அருளானந்தபாண்டியன் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்த அருளானந்த பாண்டியனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல, அப்பகுதி முழுவதும் பரவியது. எனவே கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்
இதையடுத்து அருளானந்தபாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருளானந்தபாண்டியன் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கழுத்தை அறுத்து படு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி அருளானந்த பாண்டியன் மீது, நிலத்தகராறு காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவரை கடந்த 23-9-2009 அன்று கொலை செய்தது, குடிபோதை தகராறில் கடந்த 14-10-2010 அன்று அரியலூர் கிராமத்தை சேர்ந்த புகைப்படகலைஞர் பீட்டர் என்பவரை கொலை செய்தது ஆகிய 2 வழக்குகளும் பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையத்திலும், புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் நகை அடகு கடைக்காரர் சீனுவாசனை கடத்த முயன்ற வழக்கும், மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட 7 வழக்குகளும், சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
காரணம் என்ன?
மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பகண்டை கூட்டு சாலை போலீசாரால் கடந்த 18-11-2009 அன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறை தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்த அருளானந்தபாண்டியன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
எனவே அவரது செயலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அருளானந்த பாண்டியனின் தலையில் தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பிணத்தை கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
இந்த கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருளானந்த பாண்டியனை கொலை செய்து விட்டு, பிணத்தை கிணற்றில் வீசி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அருளானந்தபாண்டியனுக்கு மீரா(45) என்ற மனைவியும், சிந்துஜா(21) என்ற மகளும், கார்த்தி(19) என்ற மகனும் உள்ளனர்.
கிணற்றில் பிணம்
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டு சாலை ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜி, பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற் கு விரைந்து சென்றனர். அங்கு கிணற்றில் பிணமாக மிதந்த, உடலை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டவர் ரவுடி
விசாரணையில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டவர் ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் மகன் அருளானந்தபாண்டியன்(வயது 50) என்பதும், பல்வேறு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது.
இது குறித்த தகவலின் பேரில் அருளானந்தபாண்டியன் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்த அருளானந்த பாண்டியனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல, அப்பகுதி முழுவதும் பரவியது. எனவே கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்
இதையடுத்து அருளானந்தபாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருளானந்தபாண்டியன் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கழுத்தை அறுத்து படு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி அருளானந்த பாண்டியன் மீது, நிலத்தகராறு காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவரை கடந்த 23-9-2009 அன்று கொலை செய்தது, குடிபோதை தகராறில் கடந்த 14-10-2010 அன்று அரியலூர் கிராமத்தை சேர்ந்த புகைப்படகலைஞர் பீட்டர் என்பவரை கொலை செய்தது ஆகிய 2 வழக்குகளும் பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையத்திலும், புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் நகை அடகு கடைக்காரர் சீனுவாசனை கடத்த முயன்ற வழக்கும், மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட 7 வழக்குகளும், சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
காரணம் என்ன?
மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பகண்டை கூட்டு சாலை போலீசாரால் கடந்த 18-11-2009 அன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறை தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்த அருளானந்தபாண்டியன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
எனவே அவரது செயலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அருளானந்த பாண்டியனின் தலையில் தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பிணத்தை கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
இந்த கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருளானந்த பாண்டியனை கொலை செய்து விட்டு, பிணத்தை கிணற்றில் வீசி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அருளானந்தபாண்டியனுக்கு மீரா(45) என்ற மனைவியும், சிந்துஜா(21) என்ற மகளும், கார்த்தி(19) என்ற மகனும் உள்ளனர்.
வல்லனி, வண்டவாசி கண்மாய் பகுதியில் தனி நபருக்கு பட்டா வழங்க கூடாது என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
தனிநபருக்கு பட்டா
சிவகங்கையை அடுத்த வல் லனி மற்றும் வண்டவாசி கிராம மக்கள் கலெக்டர் ராஜா ராமனிடம் கொடுத் துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:–
வல்லனி மற்றும் வண்டவாசி கிராம கண்மாய் மூலமாக சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடைந்து வரு கிறது. இந்த நிலையில் இந்த கண்மாயில் நீர்பிடிப்பு பகுதி மற்றும் வல்லனி சுடுகாட்டு பகுதி அடுத்தடுத்து உள்ளது.
தற்போது இந்த இடத்தை சில தனிநபர்களுக்கு பட்டா கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு பட்டா கொடுத்தால் இந்த பகுதி விவசாயம் பாதிக்கப் படும். எனவே விவசாயத்தை நம்பியுள்ள இந்த பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த இடத்தை தனிநபர்களுக்கு பட்டா கொடுக்க கூடாது.
எப்போதும் போல பொது மக்களின் பயன்பாட்டுக்கு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள் ளனர்.
சிவகங்கை நகர் தெப்பக் குளத்திற்கு மழை தண் ணீர் வரும் வரத்துக் கால் வாய் சீரமைக்கப்பட்டது.
தெப்பக்குளம்
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற தெப்பக் குளம் உள்ளது. இந்த தெப்பக் குளம் சிவகங்கை நகர் முதன் முதலில் உருவானபோது அமைக்கப்பட்டது. இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் தற்போது கலெக்டர் அலுவலக வளாகம் அமைந்துள்ள பகுதி யில் இருந்து மழைபெய்யும் காலங்களில் வரத்துக்கால் வாய் மூலமாக வந்து சேரும்.
சமீபகாலமாக இந்த வரத்துக் கால்வாய் முழுமை யாக அடைப்பட்டதால் தெப் பக்குளத்திற்கு மழைநீர் கிடைக் காத நிலை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து நக ராட்சி சார்பில் இந்த வரத் துக்கால்வாயை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
சீரமைப்பு
நகராட்சி ஊழியர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தெப்பக்குளத்திற்கு மழை நீர் வரும் வரத்துக் கால்வாயில் தேங்கி கிடந்த மண் மற்றும் குப்பைகளை அகற்றி வரத்துக்கால்வாயை சீரமைக்கும் பணியில் ஈடு பட்டனர். நகராட்சி தலைவர் அர்ச்சுனன், ஆணையாளர் சரவணன், பொறியாளர் குருசாமி, சுகாதார அதிகாரி ராஜ் மோகன் மற்றும் அதி காரிகள் இந்த பணியினை பார்வை யிட்டனர்.
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவி
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திகா(வயது 22, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் பி.பி.எம். படித்து வருகிறார். கீர்த்திகா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
அங்கு அவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று குடும்பத்தினருடன் மீண்டும் பெங்களூர் திரும்பினார். கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்தினர் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் செல்லும் கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
அதே பெட்டியில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் மகன் அஜித்(வயது 26) என்பவர் பயணம் செய்தார். இவர் ராணுவத்தில் சமையல்காரராக திரிபுரா மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அந்த ரெயில் சேலம் அருகே வந்த போது, அஜித் பக்கத்து சீட்டில் இருந்த மாணவி கீர்த்திகாவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வந்ததும் கீர்த்திகா இதுதொடர்பாக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் விசாரணை நடத்தினார். இதையடுத்து மாணவியை சில்மிஷம் செய்ததாக அஜித்தை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான ராணுவ வீரருக்கு கடந்த 8–ந் தேதி தான் திருமணம் நடந்தது. ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புதுமாப்பிள்ளையான ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில் தத்தளித்தனர். இவர்கள் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அந்தோணிசாமி என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற 5 மீனவர்கள் கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் காப்பாற்றி தங்கள் படகில் ஏற்றிக்கொண்டனர்.
இந்தநிலையில் அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகையும் 9 மீனவர்களையும் பிடித்துச் சென்றனர். அவர்களை ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். நேற்று 9 மீனவர்களும் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 30–ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து சிறையில் அடைத்தனர்.
உள்ளாட்சி இடைத்தேர் தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் சங் கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுபானங்களை விற்கக்கூடாது
நீலகிரி மாவட்டத்தில் கீழ்குந்தா பேரூராட்சி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங் களில் வருகிற 18–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறு கிறது. இதனால் இன்று (செவ் வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் 18–ந் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண் ணிக்கை நடைபெறும் 22–ந் தேதியும் கீழ்குந்தா பேரூராட்சி வார்டு எண் 1 மற்றும் 7, கூடலூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 3–க்குட்பட்ட பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.
மேலும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003–ன் படி மஞ்சூர் பஜார், அய்யங்கொல்லி, உப்பட்டி மற்றும் சேரம்பாடி பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும் என பொதுமக்களுக்கு தெரிவிக் கப்படுகிறது.
கடும் நடவடிக்கை
மேற்குறிப்பிட்ட தினங்களில் எந்தவித மதுபானங்களும் விற் பனை செய்யக் கூடாது. அன் றைய தினங்களில் கட்டாயமாக டாஸ்மாக் மது பான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்படு கிறது. இந்த உத்தரவை மீறி மது பானங்கள் விற்பனை செய்யும் கடை பணியாளர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக் கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அவர் வெளி யிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுபானங்களை விற்கக்கூடாது
நீலகிரி மாவட்டத்தில் கீழ்குந்தா பேரூராட்சி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங் களில் வருகிற 18–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறு கிறது. இதனால் இன்று (செவ் வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் 18–ந் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண் ணிக்கை நடைபெறும் 22–ந் தேதியும் கீழ்குந்தா பேரூராட்சி வார்டு எண் 1 மற்றும் 7, கூடலூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 3–க்குட்பட்ட பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.
மேலும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003–ன் படி மஞ்சூர் பஜார், அய்யங்கொல்லி, உப்பட்டி மற்றும் சேரம்பாடி பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும் என பொதுமக்களுக்கு தெரிவிக் கப்படுகிறது.
கடும் நடவடிக்கை
மேற்குறிப்பிட்ட தினங்களில் எந்தவித மதுபானங்களும் விற் பனை செய்யக் கூடாது. அன் றைய தினங்களில் கட்டாயமாக டாஸ்மாக் மது பான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்படு கிறது. இந்த உத்தரவை மீறி மது பானங்கள் விற்பனை செய்யும் கடை பணியாளர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக் கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...








