Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்டட அண்ணா தி.மு.க.மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அறிஞர் அண்ணாவின் 106வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன் எம்.சி.தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் கலைமகள் எம்.கோபால்சாமி எம்.சி.வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை இன்று பட்டி தொட்டி எங்கும் அண்ணா தி.மு.க.கொண்டாடி வருகிறது.அவரது கொள்கைகளையும், கனவுகளையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் உரிமை அண்ணா தி.மு.க.இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற இடைதேர்தலில் தேர்தலில் தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா நிறுத்திய அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ள்ளனர். தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என அவர் நிறுத்திய அனைத்து வேட்பாளர்களையும் எதிர் அணியினர் டெபாசிட் இழக்கும் அளவில் அமோக வெற்றியை தந்துள்ளனர். மூன்றாவது முறையாக முதல்வர் ஆனபிறகு தமிழக மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றியுள்ளார்.அவரது ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும்  வகையில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.இதுபோன்று வருகின்ற 2016 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234. தொகுதிகளிலும் முதல்வர் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்
மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான  அ.விசாலாட்சி பேசியதாவது:​-
அண்ணாவின் தத்துவங்கள், அவரது கருத்துக்கள் இப்பொழுதும் மெய் சிலிர்க்க வைக்கும்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம், தம்பி எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.ஒன்றே குலம்,ஒருவனே தேவன், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.என்பது போன்ற தத்துவங்கள் கேட்க, கேட்க சிந்திக்க வைக்கும். நிலச்சுவான்கள், மிட்டா மிராசுதார்கள் தேர்தலில் போட்டியிட்ட நிலைகளை மாற்றி சாதாரண மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தவர் அண்ணா. 1967 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தன் கட்சி மீது நம்பிக்கை இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். குண்டடிபட்ட எம்.ஜி.ஆர் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டார்.அந்த தேர்தலில் இருவரும் வெற்றி பெற்றனர்.அவரது மறைவுக்கு பின்னால் முதல்வர் ஜெயலலிதா ஆள்வதற்கு மட்டுமே பிறந்தவர்கள் அண்ணா திமுகவினர் என்பதை மாற்றி காட்டினார். இன்று அவரது உருவம் பதித்த அண்ணா தி.மு.க. கொடி பறக்காத இடமே இல்லை என்று கூறும் வகையில் முதல்வர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை கட்டி காத்து வருகிறார். எனவே, வருகின்ற காலங்களில் இதுபோன்று ஆதரவை அவருக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி பேசினார்.
கூட்டத்தில் தலைமை  பேச்சாளர் கோபி காளிதாஸ், கருப்பசாமி எம்.எல்.ஏ, துணை மேயர் சு.குணசேகரன்  வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினார். 
சார்பு அணி செயலாளர்கள் கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே,என்.சுப்பிரமணியம், ஸ்டீபன் ராஜ், ஜெகதாம்பாள்,கருணாகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், அட்லஸ் லோகநாதன்,எஸ்பி.என்.பழனிசாமி, உஷா ரவிக்குமார், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், ராஜேஷ்கண்ணா, கண்ணபிரான், சடையப்பன், சாகுல் ஹமீது, அண்ணா தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜசேகர், பொன்னுசாமி, நகர நிர்வாகிகள் ராஜேந்திரன், சரவணா, ரவிகுமார் உள்ளிட்டவர்கள், அவினாசி நகர செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணி, தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி, கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம்,பிரியா சக்திவேல், உள்ளிட்டவர்களும், ரத்தினகுமார், அசோக்குமார், ராஜ்குமார், நீதிராஜன், பி.லோகநாதன்,சுந்தராம்பாள் கேசவன், கோமதி, மும்தாஜ் ரசூல்,பரமராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தவும், சிகிச்சைக்கான உபகரணங்கள், மருந்துகளை தேவைக்கேற்ப வைத்திருக்கவும், லஞ்ச ஊழலைக் களையவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சனியன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்க தெற்கு மாநகரத் தலைவர் ஆறுக்குட்டி தலைமை வகித்தார். இதில் ஏழை மக்களின் ஒரே ஆதாரமாகத் திகழும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள், சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லாமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக இம்மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பியும், அனைத்து மருத்துவ வசதிகளையும் உறுதிப்படுத்த கோரிக்கை விடப்பட்டது 
இத்துடன் திருப்பூர் மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்தும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவர் நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர் போல் சித்திரித்து தலை மற்றும் உடலில் கட்டுப் போட்டு படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். பலரும் தங்கள் தலையிலும், கைகள், உடலிலும் கட்டுப் போட்டுக் கொண்டு மருத்துவமனை சீர்கேட்டைக் களைய ஆவேச முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், மாநகரச் செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர். மாவட்டத் தலைவர் வை.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி உள்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்பட பெருந்திரளான இளைஞர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக ஞானசேகரன் நன்றி கூறினார்.
----------
On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் வேலை செய்யும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகளை காவல் துறை குற்றவாளிகளைப் போல் பாவிக்கக் கூடாது. இடம்பெயரும் தொழிலாளர்களுக்கான சட்டத்தை அரசு நிர்வாகம் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் சிஐடியு மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளியன்று வடமாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு இங்கே தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்துத் தெரிவித்தனர். சீனிவாசன் இந்தியில் அவர்களிடம் சிஐடியு செயல்பாடு குறித்து விளக்கிக் கூறினார்.
இதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வடமாநிலத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சமமான கூலி வழங்க வேண்டும், கூலி வழங்குவதில் காலதாமதம் செய்வது, பாரபட்சம் காட்டுவது கூடாது. இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, தங்குமிட வசதி, மருத்துவ வசதி மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை அனைத்து மாவட்டங்களிலும், திருப்பூர் மாவட்டத்திலும் முறையாக அமல்படுத்த வேண்டும். வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை காவல் துறையினர் பல்வேறு வகையிலும் துன்புறுத்துவது, சந்தேகக் கண்ணோடு பார்ப்பது என அணுகுமுறை உள்ளது. வடமாநிலத் தொழிலாளர்களை பாரபட்சமாகவோ, குற்றவாளிகளைப் போலோ காவல் துறை பார்க்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் யாரேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அனைவரையும் குற்றவாளிகளாக நினைக்கக் கூடாது. இந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும். ஜனஸ்ரீ பீம யோஜனா காப்பீட்டுத் திட்டத்தில் இத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பது என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
அக்டோபர் 5ம் தேதி மிகப்பெருமளவில் வடமாநிலத் தொழிலாளர்களைத் திரட்டி அவர்கள் கோரிக்கை குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
---------------
ஜெயலலிதாவுக்கு தண்டனை
தலித் விடுதலை இயக்கம் வரவேற்பு
திருப்பூர், செப்.27-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 4 ஆண்டு தண்டனை வழங்கியிருப்பது நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாக தலித் விடுதலை இயக்க இணைப் பொதுச் செயலாளர் ச.கருப்பையா சனியன்று தெரிவித்தார்.
-----------

On Monday, September 29, 2014 by farook press in ,    






திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,கழகம் சார்பில், முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு கர்நாடகா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து, மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில் ஈடுபட்டனர். அங்கு சுப்பிரமணியசுவாமி உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.இதில் 500க்கும் மேற்பட்ட கழகத்தினர் கைதாகி காங்கயம் ரோட்டில் உள்ள காயத்திரி திருமண மஹாலில் போலீசாரால் சிறைவைக்கப்பட்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன் எம்.சி., கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் நா.சக்திவேல், வளர்மதி கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன், தம்பி மனோகரன், கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், கலைமகள் எம்.கோபால்சாமி எம்.சி.,உஷா ரவிக்குமார்,எஸ்பி.என்.பழனிசாமி, டி.பார்த்திபன், எம்.ஹரிஹரசுதன், சி.கண்ணபிரான், பி.கே.எஸ்.சடையப்பன்,மாமன்ற உறுப்பினர்கள் கே.செல்வம், பிரியா சக்திவேல், நீதிராஜன், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,பரமராஜன், பங்க் ரமேஷ்,வளர்மதி கூட்டுறவு ராமச்சந்திரதேவர், முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன்,பாரதிபிரியன் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், மகளிர் அணி நிர்வாகிகள் ருக்குமணி, கோமதி சம்பத்,சுந்தராம்பாள் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இந்த நிலையில் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தீவிர விசுவாசியும், அண்ணா தி.மு.கழக தொண்டருமான திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சைக்கிள் பூபதி என்பவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அளித்த தீர்ப்பை கேட்டு தனது பெருவிரலை அறுத்துக்கொண்டார்.அவரை அண்ணா தி.மு.கழக மூத்த நிர்வாகிகள் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.

Sunday, September 28, 2014

On Sunday, September 28, 2014 by Unknown   

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் (TUJ) -ன் விருதுநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் 28.09.2014 காலை 10 மணி அளவில், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட �TUJ தலைவர் ஜனசக்தி நிருபர் s.பழனிக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் கு.வெங்கட்ராமன் வரவேற்பு உரை நிகழ்த்த மாவட்ட செயலாளர் m.சடையப்பன் முந்நிலை வகித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நவம்பர் 8 தேதி குற்றாலத்தில் 14வது மாநில மாநாடு நடத்த முடிவு செய்ய பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் தினமணி நிருபர் கோ.ஜெயக்குமார் அவர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கபட்டதை குறித்து மாநில தலைவரால் பாராட்டப்பட்டது. மாநில தலைவர் டி.எஸ்.ஆர் . சுபாஷ். பேசுகையில், "ஒருவர் சமூகத்திற்காக ஆசிரியராக பணி புரிவது பெரிய பேறு, பத்திரிகையாளராக பணி புரிவது அதைவிட பெரிய பேறு. இந்த இரண்டும் கலந்த ஒரு சிறந்த நபராக அதாவது ஆசிரியராகவும் பத்திரிகையாளராகவும் விளங்கி கொண்டிருக்கும் தோழர்.ஜெயக்குமார் அவர்களுக்கு அகில இந்திய அளவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும், அதற்கான விழாவை நம்முடைய TUJ சங்கமே நடத்த வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் இவ்விழாவில் TUJ அமைப்பு செயலாளர் நெல்லை G.பரமசிவம், �S.K.ராஜேந்திரன், சக்திவேல், ராஜா, J.பரமசிவம், M.திருமூர்த்தி, N.பாலமுருகன், P.மணிகண்டன், கார்த்திக் ராஜா, M.கார்த்திகேயன், J.செந்தில்குமார், பிரபாகரன், சிவா, M.ஜெயராஜ், L.முருகன், திலீபன், மணிகண்டன், M.கண்ணன்,  கேப்டன் செந்தில்குமார், �V.சரவணன், தீக்கதிர் முத்துகுரி உட்பட விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
தீர்மானம் 1.
இந்த கூட்டத்தில் மறைந்த விருதுநகர் மூத்த பத்திரிகையாளரும் TUJ ன் பொது செயலாளருமான சுந்தர்ராஜன் அவர்களின் மறைவிற்கும், ஆனந்த முரசு J.ராஜா மற்றும் தினபூமி நிருபர் கமலநாதன் ஆகியோரின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானம் 2.
ஆதித்தனார் அவர்களின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு மூத்த பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் அவருடைய பெயரில் விருதுகள் தருவது என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 3.
TUJ ன் கோரிக்கையை ஏற்று 24மணி நேரத்தில் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்து வந்த சென்னை மாநகராட்சியின் சூளை ராட்லர் தெருவில் இருந்த TUJ ன் பழைய தலைமை அலுவலகத்தை சீல் வைத்து, போலியான நிர்வாகிகளை வெளியேற்றிய சென்னை மாநகர மேயருக்கு TUJன் நிர்வாக குழு நன்றி தெரிவித்து கொண்டது.
தீர்மானம் 4.
மறைந்த தலைவர் டி.எஸ்.ஆர். -ன் பெயரில் ஒதுக்கப்பட்ட பழைய அலுவலக கட்டிடத்தை தலைவரின் வாரிசும், அகில இந்திய தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட TUJ ன் மாநில தலைவருமான டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து முறையாக சங்கத்தை அதே இடத்தில் நடத்த நிலுவை தொகையில் சலுகை அளித்து உதவ வேண்டும் என மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்தது.
தீர்மானம் 5.
குற்றாலத்தில் நவம்பர் 8ல் நடைபெற இருக்கும் 14வது மாநில மாநாட்டிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

-செய்தி
உதயகுமார்

Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., தொண்டர்கள் குவிந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் கார் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் அவரை வாழ்த்தி அவர்கள் கோஷமிட்டனர்

On Saturday, September 27, 2014 by farook press in ,    
சென்னை : பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதால், வழக்கில் நேரில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வழக்கு நடைபெறும் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல உள்ளார்.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பரப்பன அக்ரஹாரத்திற்கு அருகில், ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஒசா ரோடு சந்திப்பில் அருகே தடுப்புக்களை தாண்டி, கோர்ட் வளாகம் அருகே சிலர் செல்ல முயன்றனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூர் : "மக்காச்சோளத்துக்கு யூரியா தேவைப்படும் நேரத்தில், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலை கடுமையாக உயர்த்தப்படுகிறது,' என, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வேளாண் துறை இணை இயக்குனர் சந்தான கிருஷ்ணன், நேர்முக உதவியாளர் அல்தாப் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க பிரதிநிதிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அவர்கள் பேசியதாவது:
துரைசாமி, தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் : உடுமலை உதவி வேளாண் அலுவலக வளாகத்தில், வீணாகக் கிடக்கும் நான்கு எக்டர் நிலத்தில், கிடங்கு அமைக்க வேண்டும். பி.ஏ.பி., தண்ணீர் திறப்பில், தலா 3.5 சுற்று என்ற முடிவை, ஐந்து சுற்றுகளாக மாற்றி, கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும்.
பாலசுப்ரமணியம், உழவர் <உழைப்பாளர் கட்சி மாநில நிர்வாகி: அருள்புரம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு உட்பட்ட சாய ஆலைகள், கழிவுநீரை நிலத்துக்குள் இறக்குவதால், அமராவதிபாளையம், அவரப்பாளையம், வீரபாண்டி, நொச்சிபாளையம் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரமூர்த்தி, தாராபுரம் பாசன சபை சங்க தலைவர்: தாராபுரம் தாலுகாவில் உள்ள நான்கு வாய்க்கால்களை, ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரிப்பதற்கு பதிலாக, பாசன சங்கத்துக்கு நிதி ஒதுக்கி, அதன் மூலம் பராமரிக்க வேண்டும். நெல்லுக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்காச்சோளத்துக்கு யூரியா உரம் தேவைப்படும் நேரத்தில், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, உரம் விலை உயர்த்தப்பட்டுள்ளது; விலை பட்டியலும் வைக்கப்படுவதில்லை.
லோகநாதன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க அமைப்பாளர் : ஆவின் பால் விலை கட்டுப்படியாகாமல் உள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தில், 2.40 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் கொள்முதல், 1.60 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. மாட்டுப்
பாலுக்கு லிட்டருக்கு ஐந்து ரூபாய், எருமைப்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த வேண்டும்.
பழனிசாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர்: திருப்பூர் தெற்கு உழவர் சந்தை அருகே, ரோட்டில் வியாபாரிகள் கடை வைக்கின்றனர்; ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. விவசாயிகள் பாதிக்காத வகையில், உழவர் சந்தையை முறைப்படுத்த வேண்டும்.
பரமசிவம், உடுமலை
விவசாயி: தோட்டக்கலைத்துறை திட்டங்கள் குறித்து, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கூடுதல் மானியம் பெற்று, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.வெங்கடாசலம், பொங்கலூர் விவசாயி: வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டு வராத நிலையில், கடன் வசூலிப்பில் வங்கிகள் நெருக்கடி கொடுக்கின்றன. வங்கி நடவடிக்கைகளை தளர்த்த வேண்டும்.ரமேஷ்குமார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவசாயிகள் நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்பு
செயலாளர் : திருப்பூர் விவசாயிகள் பாதிக்கும் வகையில் ஓடைகள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில், சாயக்கழிவுகளை கொட்டுவதால், நிலத்தடி நீர் மாசுபடு
கிறது. இதை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொன்னுசாமி, பி.ஏ.பி., மங்கலம் பாசன சபையின் முன்னாள் தலைவர்: ஆண்டிபாளையம் மின் அலுவலகம் அருகே உள்ள கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டம்பாளையம், குளத்துப்புதூர் பகுதிகள், இடுவம்பாளையம் மின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இடையூறு ஏற்படுவதால், ஆண்டிபாளையம் அலுவலகத்துக்கே மாற்ற வேண்டும்.இவ்வாறு, விவசாயிகளின் பிரதிநிதிகள் பேசினர்.