Tuesday, September 30, 2014
பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தர வேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜிடம் ஒரு பெண் மனு கொடுத்தார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது உடுமலையை அடுத்த போடிபட்டி பகுதியை சேர்ந்த அம்பிகாவதி என்பவர் பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தனது கணவரை மீட்க கோரி மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் உடுமலையை அடுத்த போடிபட்டி பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சத்தியநாராயணன். எங்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் இருக்கிறார்கள். எனது கணவர் கடந்த 1–11–2010–ந்தேதி பக்ரைன் நாட்டில் உள்ள தனியார் கணினி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில், மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலைக்காக சேர்ந்தார்.
கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து எனது கணவர் இந்தியாவுக்கு திரும்பி வர தயாரான சமயத்தில், அவர் வேலை பார்த்த நிறுவனம் எனது கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை திரும்ப கொடுக்காமல் முடக்கி வைத்து மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்காக பல ஆதாரமற்ற பொய்யான காரணங்களையும் கூறி வருகின்றனர்.
இதை தொடர்ந்து பக்ரைனில் சிக்கிதவிக்கும் எனது கணவரை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வர எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் விளைவாக, எனது கணவர் வேலை பார்த்த அந்த நிறுவனம் பழைய பாஸ்போர்ட்டை முடக்கி விட்டு புதிய பாஸ்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளது. ஆனால் விசா திரும்ப கிடைக்காததால் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
மேலும் பல பொய்யான வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளதால் அந்த நாட்டு சட்டத்தின்படி அவர் கைது செய்யப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளார். தூதரகத்தை தொடர்பு கொண்டு இது குறித்து முறைபடி தகவல் தெரிவித்த பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எனது கணவரை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய–மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
உடுமலை கார்த்திகை விழா மன்றத்தின் சார்பில் 53–ம்ஆண்டு நவராத்திரி இசை இலக்கிய கலை விழா உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் கடந்த 25–ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவையொட்டி தினசரி மாலையில் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி திருமுறை இசை அரங்கம், சிறப்பு இசை நிகழ்ச்சி, சிறப்பு வீணை இசை நிகழ்ச்சி ஆகியவை நடந்தன.
நேற்று முன்தினம் உடுமலை டாக்டர்கள் எம்.தாமரைச்செல்வன், பி.கே.ஸ்ரீதேவி தாமரைச்செல்வன் தம்பதியினரின் மகன் 6–ம் வகுப்பு மாணவர் டி.அதீதன் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் எம்.அசோக் தலைமை தாங்கினார். கார்த்திகை விழா மன்ற செயலாளர் அங்கு பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கார்த்திகை விழா கமிட்டி உறுப்பினர் எம்.சாய்சரவணகுமார், சத்யம்பாபு உள்பட பலர் வாழ்த்தி பேசினார்.
உடுமலை ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டராக்ட் மற்றும் இண்டராக்ட் சங்கங்கள் தொடக்க விழா உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிட ஹாலில் நடந்தது. விழாவிற்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் ஸ்ரீதரன்நம்பியார் தலைமை தாங்கினார். விழாவில் ஸ்ரீ ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், உடுமலை அரசு கலைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்.கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், ஸ்ரீ ஜி.வி.ஜி மேல்நிலைப்பள்ளி இண்ட்ராக்ட் சங்கம், வித்யநேத்ரா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இண்ட்ராக்ட் சங்கம், ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி இண்ட்ராக்ட் சங்கம், செப்பைரஸ் பள்ளி இண்ட்ராக்ட் சங்கம் ஆகிய சங்கங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த சங்க நிர்வாகிகளுக்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் ஸ்ரீதரன்நம்பியார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரிடம் ஜம்முகாஷ்மீர் வெள்ள நிவாரண தொகையாக வித்யநேத்ரா மற்றும் செப்ரைஸ் இண்ட்டராக்ட் சங்கம் ரூ.1லட்சத்து 16ஆயிரத்து 600–ம், ஸ்ரீ ஆதர்ஷ் பள்ளி இண்ட்ராக்ட் சங்கம் ரூ.1லட்சத்து 13 ஆயிரத்து 380–ம், சைனிக் பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் ரூ.5ஆயிரம், ஸ்ரீ ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் ரூ.45 ஆயிரமும், காந்திநகர் ரோட்டராக்ட் சங்கம் ரூ.25ஆயிரம், உடுமலை ரோட்டரி சங்கம் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 100 வழங்கியது. விழாவில் ரோட்டர் சங்க மாவட்ட செயலாளர்கள் டி.ஜெகதீசன், வக்கீல் மோகன்ராஜ், ஸ்ரீ.ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி முதல்வர் ஜி.சுகுணா, ரோட்டராக்ட் இளைஞர் பிரிவு தலைவர் ஆர்.அருண்கார்த்திக், உடுமலை ரோட்டரி சங்க தலைவர் தேவசிகுட்டி ஜோஸ், ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் டி.ரத்தினவேல் ஆகியோர் பேசினர். முடிவில் சங்க செயலாளர் ஆடிட்டர் எஸ்.சிவப்பிரகாஷ் நன்றி கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் 5–ந்தேதி வரை நடக்கிறது
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட வக்கீல் பிரிவு அவைத்தலைவர் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு அளித்த தீர்ப்புக்கு காரணமாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் சுப்பிரமணியசாமியை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டிக்கும் வகையில் அ.தி.மு.க. வக்கீல்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளையும் நேற்று முதல் வருகிற 5–ந்தேதி வரை புறக்கணிப்பு செய்வது, இது சம்பந்தமான அடுத்தகட்ட கூட்டத்தை வருகிற 5–ந்தேதி கூட்டி அடுத்த கட்ட முடிவு செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள 150–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. வக்கீல்கள் நேற்று முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கோர்ட்டு வழக்கு பணிகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு அளித்த தீர்ப்புக்கு காரணமாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் சுப்பிரமணியசாமியை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டிக்கும் வகையில் அ.தி.மு.க. வக்கீல்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளையும் நேற்று முதல் வருகிற 5–ந்தேதி வரை புறக்கணிப்பு செய்வது, இது சம்பந்தமான அடுத்தகட்ட கூட்டத்தை வருகிற 5–ந்தேதி கூட்டி அடுத்த கட்ட முடிவு செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள 150–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. வக்கீல்கள் நேற்று முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கோர்ட்டு வழக்கு பணிகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு கடந்த 27–ந்தேதி பெங்களூர் கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததன் எதிரொலியாக தாராபுரத்தில் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்தியது தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் மோதிக்கொண்டனர்.
அப்போது கார் மற்றும் சில மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க.வை சேர்ந்த சிவசங்கர், மகாமுனி, பெருமாள்சாமி ஆகிய 3 பேரை நேற்று தாராபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னை,
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் நேற்று கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜோனாஷா டி சன்னா (வயது 19) சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்து மிகுந்த வேதனை அடைந்து, தனது வீட்டு சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்போல, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள வங்கி நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நாகலட்சுமி (17) தனது உடலில் தானே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சென்னை நந்தனத்தில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஜெயலலிதா மீதான தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் ஜெயலலிதாவை விடுதலை செய் என்று கோஷம் எழுப்பியதுடன், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு மையத்தின் மாணவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே வகுப்புகளுக்கு செல்லாமல் மாணவ-மாணவிகள் ஆய்வு மையத்தின் வெளியே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களது ஆராய்ச்சி மையத்தின் தரத்தை உயர்த்தியதில் முதல்-அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் கைது செய்யப்பட்டது மாணவ-மாணவிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’’, என்றனர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக நேற்று மதியம் 12 மணி அளவில் கல்லூரி நுழைவு வாயிலில் மாணவ, மாணவிகள் திரண்டனர். அங்கு ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.
கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி, கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, பாடப்புத்தகங்கள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கிய ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் 1,800 பேரும், குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் 3,925 பேரும், அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 1,490 பேரும் வகுப்புகளை புறக்கணித்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையை அடுத்த மேலூரில் உள்ள அரசினர் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் நேற்று கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜோனாஷா டி சன்னா (வயது 19) சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்து மிகுந்த வேதனை அடைந்து, தனது வீட்டு சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்போல, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள வங்கி நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நாகலட்சுமி (17) தனது உடலில் தானே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சென்னை நந்தனத்தில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஜெயலலிதா மீதான தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் ஜெயலலிதாவை விடுதலை செய் என்று கோஷம் எழுப்பியதுடன், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு மையத்தின் மாணவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே வகுப்புகளுக்கு செல்லாமல் மாணவ-மாணவிகள் ஆய்வு மையத்தின் வெளியே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களது ஆராய்ச்சி மையத்தின் தரத்தை உயர்த்தியதில் முதல்-அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் கைது செய்யப்பட்டது மாணவ-மாணவிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’’, என்றனர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக நேற்று மதியம் 12 மணி அளவில் கல்லூரி நுழைவு வாயிலில் மாணவ, மாணவிகள் திரண்டனர். அங்கு ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.
கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி, கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, பாடப்புத்தகங்கள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கிய ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் 1,800 பேரும், குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் 3,925 பேரும், அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 1,490 பேரும் வகுப்புகளை புறக்கணித்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையை அடுத்த மேலூரில் உள்ள அரசினர் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.
தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பெங்களூர் வந்தார். அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சசிகலா, இளவரசியும் சிறையில் உள்ளனர்.ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள் மற்றும் பல்வேறு பதவிகளில் உள்ளவர்கள், நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அவருடன் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சில அமைச்சர்களும் வந்தனர். அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் ஜெயிலில் உள்ள கைதிகளை சந்திக்க அனுமதி இல்லை.
இதனால் அவர்கள் நேற்று இரவு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினர். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தனது தலைமையில் புதிய அரசு அமைந்து உள்ளது குறித்து விளக்கி கூறுகிறார். தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையையொட்டி பெங்களூர் நகர போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Monday, September 29, 2014
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்குபாளையம் முத்து நகரைச் சேர்ந்தவர் சின்னான்(வயது 51). இவர் பல்லடம் நகராட்சியில் குடிநீர் வினியோக ப்பாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை 4.30 மணி அளவில் பல்லடம்–மங்கலம் சாலையில் உள்ள கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் திறந்து விட்டார். பின்னர் அருகில் உள்ள குறிஞ்சிநகர் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கல்லம்பாளையத்தில் இருந்து பல்லடம் நோக்கி பாரம் ஏற்றி வந்த வேன் எதிர் பாராதவிதமாக சின்னான் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த சின்னான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவரை கைது செய்தனர். விபத்தில் பலியான சின்னானுக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இன்று உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து இன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் உண்ணாவிரதம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் நகராட்சி துணை தலைவர் விஜயகுமார், அவைத்தலைவர் வெங்கடாச்சலம், கவுன்சில ர்கள் ஜேம்ஸ்ராஜா, வசந்த், நகர மீனவர் அணி செயலாளர் செல்வமுரளி, குரு, கிட்டான் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் திருப்பூர் ரெயில் நிலையம் அருகில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில் 1000–க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், எம்..ஜி.ஆர்., மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், தம்பி மனோகரன், இணை செயலாளர் சி.பி.வசந்தா மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மீனவரணி செயலாளர் தங்கமுத்து, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ்,
வக்கீல் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணி, சதீஷ், பி.கே.முத்து, வி.கே.பி.மணி, வே.அய்யாசாமி, வே.கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், அன்னபூரணி, கோமதி,. கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, கீதா, சந்திரசேகர், கலைமகள் கோபால், சண்முகசுந்தரம், சுபா மோகன், ஆனந்தன், பேபி தர்மலிங்கம், கேபிள் சிவா, பிரியா சக்திவேல், சபரி, விஜயகுமார், வேலுசாமி, அமுதா வேலுமணி, நகர இளைஞரணி கண்ணபிரான், ஹரிஹரசுதன், உஷா ரவிக்குமார், அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, ஏ.எஸ்.கண்ணன், ராஜசேகரன், பொன்னுசாமி, சரவணன், நீதி ராஜன், தேவராஜ், கேபிள் பாலு,
பாஸ் என்கிற பாஸ்கரன், ருக்குமணி, சத்யா, சரஸ்வதி, முத்துலட்சுமி, வசந்தி, செல்வம் தங்கவேல், கருத்தம்மா, பனியன் ருக்குமணி, மல்லிகா, சாரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து இன்று (திங்கட் கிழமை) காலை 9 மணியளவில் அவினாசி புதிய பஸ் நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் சுப்ரமணியம் தலைமையில் 150–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர், நகர செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...






