Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts
Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் சினிமாவின் பயணத்தை தன் மைனா, கும்கி மூலம் அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றவர் பிரபு சாலமன். இவர் தற்போது சுனாமியை மையப்படுத்தி கயல் படத்தை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கான தகவலும் கசிந்துள்ளது. இதில் காட்டிற்கு செல்லும் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் சிங்கத்திடம் மாட்டிக்கொள்கிறது.
பசி வரும் வரை அந்த குழந்தை ஏதும் செய்யாமல், பசி வந்தவுடன் என்ன ஆகிறது என்பதை மிக சுவாரசியமாக 3D ல் எடுக்கயிருக்கிறாராம்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக 90களில் வலம் வந்தவர் குஷ்பு. இவரது பெயரில் இட்லி, கோவில் என்று அனைவரும் பைத்தியம் பிடித்து அலைந்தார்கள்.
ஆனால் திடீரென்று திருமணம் செய்துக்கொண்டு நடிப்பதை குறைத்து, பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் தலைக்காட்டி வந்தார். ஆனால் இனி அதற்கு முழுக்கு போட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் இவருக்கு ஏற்ப்பட்ட தயாரிப்பாளர் ஆசை தான், அஜித், சிவாகார்த்திகேயன் படங்களை தயாரிப்பது மட்டும் இல்லாமல் இன்னும் பல படங்களை தயாரிக்கவுள்ளார்.
இதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவை குஷ்பு எடுத்துள்ளார்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் காலில் சலங்கையை கட்டி நடிக்க ஆரம்பித்தார் அஞ்சலி. ஏன் இந்த இடைவேளி என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.
தன் சித்தியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று தன் அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார் போல அஞ்சலி. சமீபத்தில் இவரது சித்தியின் மகனுக்கு திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
ஆனால் திடீரென்று அத்திருமணம் நின்றது, யார் செய்த வேலை என்று யாருக்கும் தெரியாமல் இருக்க, அவரது சித்தி மட்டும் ‘இது அஞ்சலியின் சதி வேலை தான்’ என்று சொல்லிவருகிறாராம்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
இன்றைய நடிகர்களின் பெரிய கனவே அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால் தேடி வந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் சூரி.
கௌதம் தற்போது அஜித்தை வைத்து இயக்கும் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க சூரியை அழைத்தார்களாம், ஆனால் இவர் எனக்கு இந்த கதாபாத்திரம் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டாராம்.
விசாரித்தால் படத்தில் அஜித்தை திட்டுவது போல் ஒரு சீன் வருகிறது, அதில் நடிக்க தான் இவரை அழைத்தார்களாம், உடனே சூரி படத்தில் கூட அவரை திட்டுவது போல் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதை அறிந்த அஜித் சூரியை அழைத்து சிவா இயக்கத்தில் நான் நடிக்கும் அடுத்த படத்தில் நீ முழுப்படமும் நடிக்கிறார் என்று கூற சூரி சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டாராம்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் அனுபமா குமார். இவர் தற்போது தமிழில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டதாக அவர் கூறினார்.
இது பற்றி அனுபமா கூறுகையில், முதன்முறையாக வேறுபட்ட கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நான் நடிக்கிறேன். இது மோசமான தன்மையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம்.
இப்படிபட்ட தன்மை கொண்ட மக்கள் இருப்பதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். ஏனென்றால் இப்படம் உண்மையாக நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதாபாத்திரத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் என்னுடைய வேடத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். இப்படம் என் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று கூறினார்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் படங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏதாவது ஒரு படம் வெளியாகிறது. ஒரு சில நேரங்களில் 3 அல்லது 4 படங்கள் ஒரே நாளில் வெளியாவது உண்டு.
அதேபோல் தான் ஆகஸ்ட் 29ம் தேதி 3 படங்கள் வெளிவந்து மோத இருக்கின்றன.
பார்த்திபன் இயக்கத்தில் சந்தோஷ், அகிலா கிஷோர், தம்பிராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’.
இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்து பின்பு ஆகஸ்ட் 29க்கு தள்ளிவைக்கப்பட்டது.
யுவராஜ் போஸ் இயக்கத்தில் அதர்வா, ப்ரியா ஆனந்த், லட்சுமி ராய் ஆகியோர் நடித்திருக்கும் படம் இரும்புகுதிரை. இப்படமும் 29ம் தேதி வெளிவரவுள்ளது.
அதேபோல் நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அக்ஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘சலீம்’. விஜய் ஆண்டனி இசையமைத்து, தயாரித்திருக்கும் இப்படமும் 29ம் தேதியே வெளிவரவுள்ளது.
இம்மூன்று படங்களும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்கள். ஆகவே எந்த படம் வெற்றி பெரும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் திரையுலகையும், தமிழக அரசியலையும் என்றும் பிரிக்க முடியாது. இந்நிலையில் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களை அவதூறாக பேசி இலங்கை இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டதால் தமிழகமே கொதித்து போய் உள்ளது.
இதற்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் விதத்தில் தமிழ் திரையுலகத்தினர் நேற்று இலங்கை தூதரகத்தை மூடக்கோரி போராட்டம் நடத்தினர். இதில் நடிகர்கள் விஜய், சூர்யா, ஜீவா மற்றும் இயக்குனர்களில் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், பார்த்திபன், சீமான் போன்று பலர் கலந்து கொண்டனர்.
பெரிதும் எதிர்பார்த்த ரஜினிகாந்த் வராதது அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, இதேபோல் கமலும் வரவில்லை, அஜித் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனால் இதற்கு என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியாமலே இருந்து வருகிறது.
இது பற்றி நெருங்கிய வட்டாரங்களை விசாரித்தால் ரஜினி லிங்கா படத்திலும், கமல் உத்தம் வில்லன் படத்திலும் பிஸியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதே போல் சென்ற வருடம் இலங்கைக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவு தரும் நோக்கத்தில் தமிழ் திரையுலகம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.
இதில் அஜித் காலையிலிருந்து போராட்டம் முடியும் வரை கலந்து கொண்டார், ஆனால் நேற்றைய போராட்டத்தில் இவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை.
பெரும்பாலும் ஈழத்து மக்கள் பிரச்சனை என்றால் கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்வார்கள், ஆனால் இது தனி மனிதருக்கான நிகழ்வு என்பதால் தவிர்த்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
பார்த்திபன் என்றாலே வித்தியாசத்துக்கு பெயர் போனவர் என்பது எல்லாருக்கும் தெரியும். தற்போது இவர் இயக்கி முடித்து இருக்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் பல புது முகங்கள் இருந்தாலும் சில காட்சிகளில் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களான ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, அமலாபால் போன்றவர்களும் கௌரவ வேடத்தில் நடித்து உள்ளனர்.
படத்தை பொறுத்த வரை தம்பி ராமையா படத்திலும் இயக்குனராக நடித்து உள்ளனர். அவர் எடுக்கும் படத்தில் தான் இந்த புது முகங்களும் மற்றும் சினிமா நடிகர்களும் நடிப்பது போல் காட்சி உள்ளது. என்ன தான் பல பிரபலங்கள் நடித்து இருந்தாலும் விஷால் ஒரு படி மேல் போய் தான் அன்பை பார்த்திபனிடம் காட்டியுள்ளார்.
அதாவது கதைப்படி விஷால் குறிப்பிட்ட இரண்டு மூன்று நிமிடங்கள் மட்டுமே படத்தில் தோன்றுவார். அவரது போர்ஷன் எடுக்கும் போது 11 மணிக்கு வர சொன்னால் காலை 9 மணிக்கே ஆஜராகி பார்த்திபனுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதோடு, வந்த வேகத்திலேயே தான் நடிக்க வேண்டிய காட்சியைப்பற்றி கேட்டு விட்டு டயலாக் பேப்பரை கையில் வாங்கிய விஷால், அரை மணி நேரத்தில் கேமரா முன்பு வந்து நின்று விட்டாராம்.
இதை பார்த்த பார்த்திபனுக்கு ரொம்ப சந்தோசம், சரி அவர் போர்ஷன் முடிந்ததும் கவரில் 2 லட்ச ருபாய் செக்கை கொடுத்தாராம், ஆனால் அதை விஷால் வாங்காமல் மறுத்து நான் உங்கள் இயக்கத்தில் நடிக்க மட்டும் தான் வந்தேன் என்று சொல்லி விடாப்பிடியாக வாங்க மறுத்து விட்டாராம்.
ஆனால் விஷாலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை பார்த்திபனுக்கு இருந்து கொண்டே இருந்தது. ரூ. 2 லட்சம் மதிப்பில் ஒரு பரிசு பொருளோடு அவர் வீட்டுக்கு என்ட்ரி கொடுத்தாராம் பார்த்திபன்.
பணம் கொடுத்த தானே வாங்க மாட்டிங்க அதான் பரிசோடு வந்திருக்கிறேன் என்று தனக்கே உரிய கலகலப்பான பேச்சால் சொல்லியுள்ளார். வேறு வழியில்லாமல் அந்த பரிசை வாங்கி கொண்டாராம் விஷால்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
ஸ்ருதிஹாசன் என்றாலே சமீப காலமாக சர்ச்சை தான் போல, தன் கவர்ச்சி படங்களில் ஆரம்பித்து, மாலில் சண்டை போட்டது வரை, பிரச்சனைகள் அவரை பின் தொடர்கிறது.
ஆனால் சமீபத்தில் ஒரு அங்காடியில் தன் தங்கையுடன் பாட்டு பாடிக்கொண்டே பொருட்களை வாங்குவது போல் ஒரு வீடியோ வந்துள்ளது.
இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தன் துறுதுறு கதாபாத்திரத்தால் அனைவரையும் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழில் இவர் நடித்த ரன், சண்டைகோழி போன்ற படங்கள் இன்று ரசிகர்களால் மறக்க முடியாதவை.
இவர் தன் சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் என்பவரை கடந்த பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்கள் திருமணத்திற்கு மாநகராட்சி சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது, ஏனெனில் ஜானுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாகவும், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இந்த திருமணத்தை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ஓம்புரி, நஸ்ருதீன்ஷா, ஜாக்கி உள்பட பலருடன் ஜோடியாக நடித்திருந்தவர் மல்லிகா செராவத்.
இவர் டர்டி பாலிடிக்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் தேசியக் கொடியை மேலாடையாக அணிந்து கொண்டு ஒரு கார் மீது அமர்ந்திருப்பது போன்று நடித்துள்ளார்.
இதை கண்டித்து டி.தனகோபால் ராவ், தேசிய கொடியை மேலாடையாக அணிந்து நடித்திருப்பது, நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம். இதனால் அவர் ஹைதராபாத் நீதமன்றத்தில், மல்லிகா ஷெராவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை மல்லிகா ஷெராவத், மத்திய அரசு உள்துறை அமைச்சகம் மற்றும் தணிக்கை வாரியத்திற்கு ஒரு மாதத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் ஆகிவிட்டார் தனுஷ். இவரது படங்கள் எல்லாம் பெரும்பாலும் இளைஞர்களை மையப்படுத்தி எடுப்பதால், இளைஞர் வட்டாரத்தில் இவருக்கு ரசிகர் அதிகம்.
அதேபோல் சமீபத்தில் வந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படமும் அந்த வகையை சார்ந்தது தான், ஆனால் இப்படத்தில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்களை தனுஷ் அவமானப்படுத்தி விட்டதாக நீதி மன்றத்தில் வழக்கு கொடுத்தனர்.
தற்போது தனுஷை கைது செய்யவேண்டும் என்று தமிழ்நாடு இந்து மகாசபையினர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து பல இடங்களில் அவர் கைதானார் என வதந்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் சினிமா கலைஞர்கள் எப்போதுமே அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக இருப்பர்.
அந்தவகையில் சமீபத்தில் இலங்கை இணையதளம் தமிழக முதல்வரை தவறாக சித்தரித்து இருந்ததால் தமிழ் திரையுலகம் முழுவதும் இணைந்து இலங்கைக்கெதிராக இன்று போராட்டம் நடத்தியது.
இலங்கை தூதரகத்தை மூடச்சொல்லி நடந்த இந்த போராட்டத்தில் நடிகர் விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கோத்தபய ராஜபக்சே பெயரை அழுத்தமாக சொல்லி கெட்டவார்த்தை போல திட்டினார்.
கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்று கூறிவருவதால் முருகதாசுக்கு பிரச்சனை வலுத்துவரும் நிலையில் இவரின் பேச்சு இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கஸ்தூரிராஜா. இவர் சமீப காலமாக படம் இயக்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். இதற்கு காரணம் தனுஷ் தானாம்.
’நீங்க வீட்டில் ரெஸ்ட் எடுங்க’ என்று சொல்லி வீட்டிலேயே உட்கார வைத்துவிட்டாராம் தனுஷ். ஆனால் ஆடிய கால்கள் சும்மா இருக்குமா? என்று சொல்வது போல் மீண்டும் ஒரு கதையை ரெடி செய்து அதில் ஜெய்யை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தாராம்.
இதற்காக அவரை போனில் தொடர்புக்கொள்ள, போனை அட்டண்ட் செய்யவே இல்லையாம், இந்த செய்தி எப்படியோ தனுஷ் காதுக்கு போக ஜெய் மீது செம்ம கடுப்பில் இருக்கிறாராம்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தமிழக அரசியலையும் சினிமாவையும் என்றும் பிரிக்கவே முடியாது என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில் தமிழக முதல்வரை, இலங்கை இணையதளம் ஒன்றில் தேவையில்லாத வார்த்தைகளால் சித்தரித்து வெளியிட்டதால் தமிழகமே கொதித்து போய் உள்ளது.
இதை கண்டித்து இலங்கை தூதரகத்தை மூடச்சொல்லி, இன்று தமிழ் திரையுலகினர் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
On Thursday, August 07, 2014 by Anonymous in News
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் தற்போது விஜய், சூர்யா, என்.டி.ஆர் போன்ற பிரபல நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் ரஜினிமுருகன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கேட்ட போது, நான் முன்னணி நடிகர்களுடன் மட்டும் தான் நடிப்பேன் என்று சமந்தா மறுத்துவிட்டாராம்.
தற்போது இக்கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்க போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
Friday, August 01, 2014
On Friday, August 01, 2014 by Anonymous in News
சிம்பு என்றாலே வம்பு என்று தான் அர்த்தம் போல, சமீபத்தில் சிம்புவின் போட்டி நடிகர் கொடுத்த பிறந்தநாள் விருந்தில் பல நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் கேக் வெட்டிய அடுத்தன் கனம் ’தண்ணீர்’ பார்ட்டி ஆரம்பித்தது, போதை தலைக்கு ஏறிய சிம்பு சும்மா இருப்பாரா, அந்த பக்கம் அமைதியாக நின்றுக் கொண்டிருந்த சூரியை கலாய்க்க ஆரம்பித்துவிட்டாராம். இதில் சில சென்ஸார் வார்த்தைகளையும் பேசியுள்ளார்.
இதனால் சூரி மிகவும் மனவருத்தம் அடைந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
On Friday, August 01, 2014 by Anonymous in News
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி கட்டியவர்கள் குறைவு, அந்த வகையில் கலக்கியவர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன்.
அதே வரிசையில் தற்போது வருபவர் செந்தில். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் படம் வெண்நிலா வீடு. இப்படத்தை வெற்றி மகாலிங்கம் இயக்க தன்ராஜ் மானிக்கம் இசையமைத்துள்ளார்.
மேலும் இதில் இவருக்கு ஜோடியாக சென்னை-28 புகழ் விஜயலட்சுமி நடித்துள்ளார், இன்னும் சில தினங்களில் உங்களை மகிழ்விக்க வருகிறது இந்த வெண்நிலா வீடு.
On Friday, August 01, 2014 by Anonymous in News
தனுஷ் தற்போது முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் நிலைமைக்கு வந்துவிட்டார், இதற்கு எல்லாம் காரணம் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் தான்.
இப்படத்தின் வெற்றி இவரை பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது, பல முன்னணி நடிகர்களே இப்படத்தை பாராட்டியுள்ளனர்.
இதில் புதிதாக இணைந்திருப்பவர் இயக்குனர் ஷங்கர், சமீபத்தில் இப்படத்தை பார்த்த இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ தனுஷுன் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது , மேலும் அனிருத்தின் இசை என்னை ஈர்த்துவிட்டது’ என டுவிட் செய்துள்ளார்.
On Friday, August 01, 2014 by Anonymous in News
தமிழ் திரையுலகின் மாபெரும் இளைஞர் படையை ரசிகர்களாக கொண்டவர் விஜய். இவர் தன் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவர்.
அந்த வகையில் தற்போது மதுரையை சார்ந்த ஒரு சிலை செய்பவர் ஒருவர், விஜய்யை சிலையாக செய்திருந்தார், அதை பார்த்த இளைய தளபதி யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு போன் செய்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.
அந்த ரசிகர் ஆனந்தத்தில் திகைத்து போய்விட்டார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
-
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதய...