Showing posts with label 9443086297. Show all posts
Showing posts with label 9443086297. Show all posts

Friday, February 28, 2020

On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி தினமலர் பங்குதாரர் மறைந்த ராகவன் அவர்களின் மனைவி சுப்புலெட்சுமி உடல் நல குறைவால் காலமானார்.அவரது உடலுக்கு தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
                   

தமிழ்நாட்டில் முக்கால்வாசி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  


தே.மு.தி.க விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்ந்து கேட்டு வருகிறோம்.எல்லா   கட்சிகளிலும் மூத்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.அ.தி.மு.க தலைமை கழகம் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தே.மு.தி.க விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போதே பேசியுள்ளோம்.

சி.ஏ.ஏ,என்.ஆர்.சி யால் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காக தான் இத்தகைய சட்டங்கள் என்பதனைவரும் உணர வேண்டும்.இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு என்றால் அவர்களுக்காக களத்தில் இறங்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க இருக்கும்


தி.மு.க,அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் கடன் சுமையை மாறி மாறி ஏற்றுவதை நிறுத்தி விட்டு வேலைவாய்ப்பிற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்
On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி மாவட்டம், காஜாமலையில்
ஓம் ஹரிஸ் மருத்துவமனையை

 மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,

சுற்றுலாத்துறை அமைச்சர்
திரு.வெல்லமண்டி நடராஜன்,

 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
திருமதி.வளர்மதி

மாவட்ட கழக செயலாளர்கள்,
திரு.பா.குமார் Ex.MP, திரு.ரெத்தினவேல் Ex.MP

ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள்.
On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில்  கனரா வங்கி அதிகாரிகள் சங்க  பொதுச் செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டார்.


முன்னதாக அவர்  திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வங்கி அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அரசு அளிக்கும் ஊதிய உயர்வுக்கு எங்களுக்கு சம்மதம் இல்லை. அதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அடுத்தகட்டமாக மார்ச் மாதத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஏ' கிரேடு அதிகாரிகளுக்கு இணையான ஊதியம் வங்கி அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக நாளை ஐபிஏ சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடத்தும் ஐபிஏ.க்கு பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே அதிகாரம் உள்ளது. ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை  என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சூழ்நிலையில் ஐபிஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பேச்சுவார்த்தை எவ்வாறு முடிகிறது என்பதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.
On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
தமிழகத்தில் கொள்ளையடித்த பணத்தை துபாய் மற்றும்  பல நாடுகளுக்கு  பணப்பரிவர்த்தனை  செய்ய  நூதன திட்டம்  மத்திய புலனாய்வு நடவடிக்கை எடுக்குமா

தமிழகத்தில் இருந்து 450 எல்பின் குடும்பத்தினர் துபாய் பயணம் அப்படி பயணம் செய்ய IATA முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதா


(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )


திருச்சி மன்னார்புரதில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் எல்பின் நிதி நிறுவனம். இந்நிறுவனத்தின் மீது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் எல்பின் குடும்பத்தினர் 450  பேர் வரும் 3 ,4 , 5,  தேதிகளில் துபாயில் உள்ள உலகிலேயே உயரமான கட்டிடத்தில் கூட்டம் நடத்த உள்ளோம் எனக்கூறி என்பின் உரிமையாளர் அழகர்சாமி (எ) ராஜா அனைவரையும் வருமாறு அழைத்துள்ளார்.

இங்கு மாபெரும் மாற்றம் நமக்கு நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார். இந்த 450 பேர் இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் தனியாரால் நடத்தப்படும் நிறுவனத்தின் கூட்டத்தில் பங்குபெற முறையான அனுமதி வாங்கி உள்ளனரா ? அல்லது இதற்கு அனுமதி எதுவும் தேவையில்லையா.? தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த தடைவிதித்து இருந்தும் தஞ்சையில் கைது நடவடிக்கை எடுத்தும் மேலும் தஞ்சையில்  ஒருவர் தேடப்பட்டு வரும் நிலையில்



  காவல்துறை முறையாக நடவடிக்கை எடுத்து வரும் போதே திருச்சியில் நேற்று காலை மன்னார் புரத்தில் ஓர் புதிய ஹோட்டலில் கூட்டம் நடத்தப்பட்டது. முறையாக காவல்துறை அனுமதி பெற்றதா  இப்படி கூட்டம் நடத்தி வரும் பொழுது திருச்சியில்  எல்பின் நிறுவனத்தால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டால் யாரை குற்றம் கூறுவார்கள் திருச்சி காவல் துறையால் முறையாக அனுமதி வழங்கப்பட்டதா ? இன்று காலை  முதல் திருச்சி சங்கம் ஹோட்டலில் கூட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சியில் ELFIN நிதி நிறுவனம் மக்கள் கூட்டம் நடத்த காவல்துறை டிஜிபி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் கண்டொன்மெண்ட் காவல்துறை இன்ஸ்பெக்டரிடம் ஸ்பெஷல் அனுமதி வாங்கி விட்டதாக எல்பின் சகோதரர்கள் கூறி வருவதாக தகவல்.



பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*


On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

அமைதியாக போராட்டம் நடத்திய இஸ்லாமியா்களுக்கு எதிராக வன்முறை நடைபெற்றதை கண்டித்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.   

                                                                                                                                        குடியுாிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தொிவித்து இஸ்லாமியா்கள் போராட்டம் நடத்தி வந்தனா். அப்போது குடியுாிமை சட்டத்திற்கு ஆதரவு தொிவித்து மறுபுறம் போராட்டம் நடைபெற்றது. இது வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 21 போ் உயிாிழந்தனா். இந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியில் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு திரண்ட மக்கள் அதிகாரத்தினா், வன்முறை சம்பவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினா். அமைதியான வழியில் போராட்டம் நடத்திய இஸ்லாமியா்கள் மீது திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டு உள்ளது என்று அவா்கள் குற்றம் சாட்டினா். மக்கள் அதிகாரத்தினா் ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது..

Thursday, February 27, 2020

On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

திருச்சி ஜமால் முகமது கல்லுாாி மாணவா்கள் தலைகளில் துணி பட்டை அணிந்து குடியுாிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
                                                                                                   
                                                                                                    குடியுாிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜமால் முகமது கல்லுாாியிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுாிமை திருத்த சட்டம் வேண்டாம் என்ற வாசகம் பதிக்கப்பட்ட துணி பட்டையை தலையில் கட்டிக்கொண்டு வந்த மாணவா்கள் அச்சட்டத்தை கண்டித்தும், டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாணவா்களும், ஏராளமான மாணவிகளும் கலந்து கொண்டனா். மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசாா் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனா்.
On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

                

திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற நாணய கண்காட்சியினை ஏராளமான பள்ளி, கல்லுாாி மாணவ, மாணவிகள் ரசித்து மகிழ்ந்தனா். 

                 

                                                            
திருச்சி ஜெகன்மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் உலக நாணயம் மற்றும் பணத்தாள் கண்காட்சி இன்று நடைபெற்றது. 

இந்த கண்காட்சியினை பள்ளி தாளாளர் சகாயராஜ் தொடங்கி வைத்தார். பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான பணத்தாள்கள், காசோலை, வரைவோலை, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, பண வடிவ மற்ற பிட்காய்ன்கள் என பல்வேறு அம்சங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

 சங்க காலத்தில் மன்னா்களான சேர, சோழ, பாண்டியர் தங்கள் சின்னங்களான வில், மீன், புலி  முத்திரைகள் அடங்கிய நாணயங்கள், சங்க காலத்திற்கு பின் தமிழ் எழுத்துக்களுடன் பல்லவர் காலத்து நாணயங்களும் இடம் பெற்றிருந்தன. அமொிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 200 நாடுகளின் பணத்தாள்கள் , நாணயங்கள் மற்றும் தபால் தலைகளும் இக்கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. 

 இந்த கண்காட்சியினை ஏராளமான பள்ளி, கல்லுாாி மாணவா்களும், பொதுமக்களும் கண்டு ரசித்தனா். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார்,  முகமது சுபேர் உள்ளிட்டோா் இந்த நாணய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனா்.
On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் பணியாளா்கள் இன்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 
                                                                                                 
                                                               தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில், அச்சங்கத்தின் மாநில பொருளாளா் ஜெய்கணேஷ் தலைமையில் நடைபெற்ற 


இந்த ஆா்ப்பாட்டத்தில், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்,உயாி பணியாளா்களை இதர அரசு பணியிடங்களில் பணி அமா்த்திட வேண்டும், முறையற்ற ஆய்வுகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாநில தலைவா் சிவக்குமாா், மாநில செயலாளா்கள் முருகானந்தம், கோவிந்தராஜன், இளங்கோவன், கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலா் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    

                   

ஆளுங்கட்சிக்கு விளம்பரம் செய்யும்  எதிர்க்கட்சி அதன் ரகசியம் என்ன?


ஜாமீன் வாங்க பலகோடி ரூபாய் பணத்துடன் அலையும் எல்பின் சகோதரர்கள்.



தஞ்சையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கைதானவர் பிரசன்ன வெங்கடேஷ். 

                    
இவர் தந்த ரகசிய வாக்குமூலம் நேற்று முன்தினம் கைதானவர் கிங்ஸ்லி. கிங்ஸ்லி மூலமும் பல்வேறு தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்துவிடும் என்பதால் முதல்கட்டமாக பிரசன்ன வெங்கடேசை ஜாமினில் வெளியே எடுக்க ஒரு பலகோடி ரூபாய் பணத்துடன்  முக்கிய ஆளும் கட்சி  மூத்த  தலைமை வழக்கறிஞரிடம்ஆலோசனை கேட்டும் சிபாரிசு செய்யக்கோரி வருகிறார்களாம். 

                           
இதைத்தொடர்ந்து கிங்ஸ்லி ஜாமீனுக்கு எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை என கூறி வருகிறார்களாம் எல்பின் சகோதரர்கள். 


(இவர்கள் மீது திருச்சி குற்றப் பொருளாதார பிரிவு 1/19 வழக்கு தொடர்ந்த போது கோடிக்கணக்கில் செலவு செய்து ஜாமீன் பெற்றவர்கள் என்பதும் ஜாமின் முன்பணமாக கோடிக்கணக்கில் பிணைத்தொகை கட்டியதும் குறிப்பிடத்தக்கது)


தஞ்சை காவல்துறையினரால் தேடப்படும் சத்யபிரியா எல்பின்நிறுவனத்தின் உள்ள காவல்துறை நெருங்க முடியாத அளவிற்கு ஒரு VVIP பாதுகாப்பில் உள்ளதாகவும் சத்யபிரியா கைது நடவடிக்கை தடுக்க ஆளுங்கட்சி 
விஐபியிடம் பேரம் பேசப்படுவதாகவும் அவர்களுடைய எல்பின் வட்டாரத்தில் கூறி வருவதாக தகவல்
                    


 இத்தனை கோடி செலவு செய்வதற்கு காரணம் தங்களின் ரகசியம் வெளியில் கசிந்து விடக்கூடாது காவல்துறையை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே காரணம். ஜாமினில் வெளியில் வந்தாலும் பிரசன்னா மற்றும் கிங்ஸ்லி ஆகிய இருவர் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என தெரிகிறது.

கோடிக்கணக்கில் பணம் செலவழித்து காவல் துறையினரை விலைக்கு வாங்கி விடலாம் என நினைத்து செயல்பட்டு வருகின்றனர் எல்,பின் சகோதரர்கள் அழகர்சாமி  என்கிற ராஜா மற்றும் ரமேஷ் குமார்  என்கிற ரமேஷ்.

இவர்களின் நினைப்பு நிறைவேறுமா ? அல்லது காவல்துறையினர் செயல்பாடு வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.






பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*


On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சியில் பாராளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி
                 

டில்லியில் அதிகாரத்தை கையில் வைத்துள்ள மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் வன்முறை உள்ளிட்ட அசம்பவங்களை தவிர்த்திருக்கலாம். நீதிமன்ற நீதிபதிகள் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். மத்திய அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். குண்டர்களையும்  ராணுவம்,  போலீசையும் வைத்து எந்த போராட்டத்தையும் அரசு ஒடுக்கி விட முடியாது.

                 

சட்டம் என்பது சாதி மதம் மொழி இவற்றின் அடிப்படையில்  இல்லாமல் தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருக்கவேண்டும். மேலும் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் கூடிய வகையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் மக்களை நாடற்றவர்களாக மாற்றுவது கூடாது. இத்தகைய அச்சத்தால் தான் மக்கள் போராடி வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருக்கக்கூடிய சட்டம்தான் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றால் எதற்காக திருத்த சட்டம் கொண்டு வந்தார்கள். புது சட்ட வடிவில் பிரச்சனை இருக்கிறது என்பதைத்தான் மக்கள் போராட்டம் காட்டுகிறது. மக்களை தூண்டிவிட்டு யாரும் போராட வைக்க முடியாது. மக்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள்.

 திமுக சட்டமன்ற உறுப்பினர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்  மக்களுக்காக குரல் கொடுத்து வந்த திறமையான சட்டமன்ற உறுப்பினர். நல்ல மனிதர் .

உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களில் மட்டுமில்லாமல், தமிழகத்தில் 65 விழுக்காடு தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது இத்தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் நிதி மக்களுக்கு சென்று சேரும்.

 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் இடம் கேட்கிறதா?  திமுக கொடுக்கிறதா? என்பதெல்லாம் தெரியாது. அது இரு கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்ய வேண்டிய ஒன்று. அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

 மக்களுக்கு பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் பணிகள் நிறைய கிடைக்கின்றன.வளர்ச்சி நிதி  5 கோடியைக்கொண்டு  மக்களை திருப்திப்படுத்த முடியாது. அந்த நிதியை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் அல்லது அந்த நிதியை நீக்கிவிட வேண்டும். வளர்ச்சி நிதியை கொண்டு தான் மக்களுக்கு ஒரு சில நன்மைகளை செய்ய முடிகிறது. என  பாராளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

Wednesday, February 26, 2020

On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
திருச்சிராப்பள்ளி திருவரங்கம் வட்டம் வெள்ளித்திரு முத்தம் கிராமம் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வளாகத்தில் சிறிய காசுகள் சிறிய உண்டியலில் அடைக்கப்பட்டு இன்று கண்டெடுக்கப்பட்டது 
                      

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் அம்பாள் சன்னதி எதிர்ப்புறம் பிரசன்ன விநாயகர் சன்னதி பின்புறம் அமைந்துள்ள கொட்டாரம் வாழைத்தோட்டம் பகுதியில் செடிகொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி திருக்கோயில் பணியாளர்கள் இன்று காலைமுதல் நடைபெற்றது மேற்படி இடத்தை சுத்தம் செய்து நந்தவனம் அமைத்து பூச்செடிகள் அமைப்பதற்காக முன்னேற்பாடுகள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் செய்து வரப்பட்டது 
                    

மேற்படி பகுதியில் அமைந்துள்ள உதிய மரம் கீழ்ப்புறத்தில் உள்ள மணல் பகுதியில் சிறிய செம்பினால் ஆன உண்டியல் ஒன்று இருந்தது நண்பகல் 12.30 மணி அளவில் கண்டறியப்பட்டது மேற்படி உண்டியலில் சிறிய அளவிலான சுவாமி உருவம் பதித்த 504 சிறிய காசுகளும் சற்று பெரிய அளவிலான ஒரு காசும் இருந்தது ஆக மொத்தம் 505 பொற்காசுகள் இருந்து கண்டெடுக்கப்பட்டது சுத்தம் செய்யும் பணி திருக்கோயில் உதவி ஆணையர் செயல் அலுவலர் திருக்கோயில் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களால் செய்யப்பட்டது 
                 

திருச்சிராப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நகை சரிபார்க்கும் அலுவலக பணியாளர்கள் வழியாக நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நேரில் வந்து மேற்படி காசுகளை பார்வையிட்டு மேற்படி இனங்கள் அனைத்தும் இனங்கள் என உறுதி செய்துள்ளதாகவும் மேற்படி சிறிய உண்டியலில் கீழ்காணும் விவரப்படி பெண்கள் இருந்ததாகவும் தெரிய வருகிறது மேற்கண்ட 504 சிறிய பெண் காசுகளும் ஒரு பெரிய காசு காவல் ஆய்வாளர் மற்றும் இரு சாட்சிகள் முன்னிலையில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் உதவி ஆணையரிடம் இருந்து இன்று ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான
வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார்

திருச்சிராப்பளளி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல -2020க்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் இன்று 26.02.2020) மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டார். மேலும், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும்   கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்களில் உதவி ஆணையர்கள் மூலம் பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.
 
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண்.1 முதல் 65 வரை மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளில் மொத்தம் 771 வார்குச்சாவடிகள் உள்ளன. வாக்காளர்கள் மொத்தம் 7,59,284 உள்ளார்கள்,  ஆண் வாக்காளர்கள் 3,68,806 பெண் வாக்காளர்கள் 3,90,380 திருநங்கைகள்89 வாக்காளர்கள் உள¦ளார்கள்என்ற விவரத்தினை ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்.
On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
காவல்துறையினருக்கு   ராஜா என்கிற அழகர்சாமி எச்சரிக்கை.

                    

பொறுமையாக இருக்கிறோம் இறங்கினால் தாங்க மாட்டீர்கள்.
               

திருச்சி மன்னார்புரம் அருகே தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிறுவனம் எல்ஃபின். இந்நிறுவனத்தின் மீது திருச்சி தஞ்சை மற்றும் பல்வேறு ஊர்களில்  குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.


இந்நிலையில் கடந்த வாரம்  தஞ்சையில் லீடர் பிரசன்னா வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் இன்னும் ஜாமீன் கூட வெளிவர முடியவில்லை. இவருடன் கிங்ஸ்லி மற்றும் 



சத்யபிரியா இருவரும் தலைமறைவு ஆனார்கள்.


( தற்போது இவர்  ELFIN நிறுவனத்தில் உள்ள ஒரு vvip இடம் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் காவல்துறை நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாப்பில் இருப்பதாகவும் அவர்களது வட்டாரங்கள் கூறிவருகின்றது)

நேற்று காலை கிங்ஸ்லி என்பவர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரால்  கைது செய்யப்பட்டார்.

கிங்ஸ்லி என்பவருக்கு அழகர்சாமி ( எ ) ராஜா மற்றும் ரமேஷ் என்கிற ரமேஷ்குமார் ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர். மேலும் எல்பின் நிதி நிறுவனத்தின் நிதி எங்கு எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது, யாரிடம் எல்லாம் உள்ளது என்ற விபரங்கள் அறிந்தவர் என கூறப்படுகிறது. இவர் கைது செய்யப்பட்டதால் காவல்துறையினர் அனைத்தையும் அறிந்து விடுவார்கள் என்பதால் கடும் அப்செட் ஆன ராஜா என்கிற அழகர்சாமி தங்களது வாட்ஸ்அப் குரூப்களில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார் அதில்


(கெட்டவர்கள் போராட்டம் நடத்தி பார்த்துள்ளார்கள் என்றால் போராட்டக்காரர்கள் அனைவரும் கெட்டவர்களா)

நாங்கள் ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லாதவர்கள், சாலையோரம் உள்ளவர்களை கோடீஸ்வரராக மாற்றி வருகிறோம். இது ஏன் காவல்துறைக்கு பிடிக்கவில்லை


 ( இவர்கள் நிறுவனத்தில் உறுப்பினராக 12,500/ 55,000/1 லட்சம்  அதற்கு மேலும் பணம் இருந்தால்  தான் உறுப்பினராகவே முடியும் ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லாதவர்கள் பிச்சைக்காரர்கள் எப்படி இவ்வளவு பெரிய தொகையை கட்டுவார்கள்🤔)


நாங்கள் பல கஷ்டங்களை சந்தித்து விட்டோம். காவல்துறை ,டிஐஜி,எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ அனைவருக்கும் இது பொய்யான வழக்கு என்று தெரிந்தும் பொய் வழக்கு பதிந்து உள்ளார்கள். இதைக் கேட்கப் போனால் லத்தி சார்ஜ் செய்கிறார்கள். நாங்கள் இதுவரை மிகவும் அமைதி காத்து வருகிறோம். நான் ஒருவரை வரச் சொன்னால் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து போராடக்கூடிய கூடியவர்கள் எங்கள் நிறுவனத்தினர்.


இனியும் நாங்கள் பொறுமை காக்க மாட்டோம் இனி எங்கள் உறுப்பினர்கள் யார் மீதாவது பொய்வழக்கு பதிந்தால் , டிஐஜி,எஸ்பி,டிஎஸ்பி,இன்ஸ்பெக்டர், எஸ்ஐ நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் நாங்கள் இறங்கினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.

நீங்கள் இதற்காகத்தான் இந்தப் பணிக்கு வந்தீர்களா. உங்கள் ஆசிரியர்கள் உங்களுக்கு நல்லதை கற்றுத் தரவில்லையா ? அடுத்தவர்களை அடித்து வாழ்பவர்கள்  .


நாங்கள் அறவழியில் செல்வதற்காக தான் அறம் மக்கள் நல சங்கம் தொடங்கினோம் இதேபோல் பொய்வழக்கு பதிந்தால் ... எங்கள் மக்கள் அமைதியான அவர்கள் நல்லவர்கள் அவர்கள் போராட முடிவெடுத்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். எதற்கும் துணிந்து விட்டேன். எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக எனது உயிரை வேண்டுமானாலும் கொடுப்பேன் என எல்பின் உறுப்பினர்களை கவரும் விதமாகவும் அந்த ஆடியோவில் பேசியுள்ளார். நீங்களும்  வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் உங்களையும் வாழ வைக்கிறேன் என்று காவல்துறையினருக்கு லஞ்சம் தருவதாகவும் கூறியுள்ளார். இனியும் பொய் வழக்கு பதிவு செய்வதை கைவிடுங்கள் என  காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் எல்பின் ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்

இவர் மீது காவல்துறை டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா ?
அல்லது எல்பின் ராஜா சொன்னது போல் காவல்துறையினரை வாழ வைப்பாரா ?


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*
On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
*திருச்சி மக்கள் ஏமாந்தல் காவல்துறை பொறுப்பேற்குமா ? டிஜிபி அனுமதி அளித்தாரா?  உண்மையை கண்டு பிடிக்குமா திருச்சி காவல்துறை ?*

தஞ்சை காவல்துறையினர் பொய்யான வழக்கு தொடுத்துள்ளனர்.

நாங்கள் டிஜிபி சந்தித்து வந்துவிட்டோம் நம்முடைய கூட்டங்கள் தமிழகத்திலிருந்து அனைவரும் திருச்சி மையமாக வைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்று டிஜிபியிடம் நாங்கள் உத்தரவு பெற்றுள்ளோம் அதனை திருச்சி காவல்துறை அதிகாரிகளுக்கு அதனை காண்பித்து விட்டோம் நான் தொடர்ச்சியாக திருச்சியில் கூட்டம் நடத்துவோம் என அழகர்சாமி என்கிற ராஜா, ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் இருவரும் தங்கள்  டீம் லீடர் களிடம் கூறி வருவதாக எல்பின் வட்டாரத்தில் கூறப்படுகிறது. உண்மையில் டிஜிபியிடம் அனுமதி வாங்கினர்களா என்பது அவர்களுக்கும் டிஜிபிக்கும் மட்டுமே தெரியும்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது திருச்சியில் இவர்கள் எப்படி கூட்டம் நடத்தி வருகிறார்கள் உண்மையாகவே காவல்துறை உயர் அதிகாரியிடம் (DGP) அனுமதி பெற்று உள்ளனரா ? இவர்களை பழிவாங்கும் எண்ணத்தில் தஞ்சையில் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து எல்பின் நிறுவனத்திற்கு எதிராக அழுத்தம் கொடுப்பது ஏன் என்பது பொதுமக்களுக்கு புரியாத புதிராக உள்ளது. திருச்சியில் இன்று கூட பீரிஸ் ஹோட்டலில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

 காவல்துறை உயரதிகாரிகள் இதுபோன்ற நபர்களை தீவிர விசாரணை செய்து பொதுமக்களை காக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து



பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் என்னை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*
On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி:



திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது உடைந்தது. இதற்கு பதிலாக தற்காலிக ஏற்பாடுகள் மூலம் உடைப்பு சரிசெய்யப்பட்டது. சேதமடைந்த தடுப்பணைக்கு பதிலாக அருகில் 387.60 கோடி ரூபாய் செலவில் புதிதாக தடுப்பணை கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தடுப்பணை கட்டுமான பணி நிறைவடைய வேண்டும். இந்நிலையில் இந்த பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டுமான பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து முதலமைச்சருக்கு விளக்கி கூறினர். இதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் வலுவிழந்து உடைந்த பாலத்திற்கு  மாற்றாக புதிய தடுப்பணை அறிவிக்கப்பட்டு 387.60 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வேகமாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தற்போது 35 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. பணிகள் விரைந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதனால் திட்டமிட்டபடி பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிகள் காரணமாக விவசாயம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை தெளிவாக வழங்கியுள்ளார்கள். அதனால் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறிக்கொண்டே தான் இருக்கவேண்டும். ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. நீர் வழங்காமலும் இருக்க முடியாது. நீரை திருப்பி விடவும் முடியாது. கர்நாடகாவின் இத்தகைய செயல்பாடுக்காக யாரையும் குறை சொல்ல முடியாது. டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த பகுதிகளில் மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதோ அந்தந்த பகுதிகள் அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் மட்டும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது.  10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்.  என்பிஆர்.ல் தற்போது மூன்று கேள்விகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்று மொழி, இரண்டாவதாக பெற்றோர் பிறப்பிடம், மூன்றாவதாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவை சேர்க்கப்பட்டு உள்ளது.  நாங்கள் மக்களை செல்கிறோம்.   கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள்  ஆகியோர்தான் தேர்தலை நிர்ணயம் செய்வார்கள். ஒரு பொருளுக்கு ஏஜென்சி அளிப்பது போல் உள்ளது.  ராஜ்யசபா தேர்தலில் யார்? யார்? போட்டியிடுவது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும். சீட்டு கேட்பதற்கு அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் உரிமை உள்ளது.  குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது அரசின் பரிசீலனையில் உள்ளது. காவிரியாற்றில் எந்த இடத்தில் மணல் அள்ளலாம் என்பதை கமிட்டிதான் முடிவு செய்கிறது. அந்தந்த பகுதிகளில் மட்டுமே மணல் எடுக்கப்படுகிறது. எனினும் தற்போது அனைத்து இடங்களிலும் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது. எம் சாண்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்த அரசு பணிகளுக்கு மட்டுமே தற்போது மணல் பயன்படுத்தப்படுகிறது என்றார்.

On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
  காவல்துறை அதிரடி நடவடிக்கை தஞ்சாவூரில் மேலும் ஒருவர் கைது

                   

திருச்சி எல்பின் நிறுவன உரிமையாளர்கள் ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் காலையில் டிஜிபி அவர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகிறது

எதை நோக்கி சந்தித்தார்கள் உள்ளே  என்ன நடந்தது என்று தெரியவில்லை அவர்களுடைய டீம் லீடர் இடையே நாம் இனி கூட்டங்கள் நடத்தலாம் அதில் எந்த பிரச்சனையும் இருக்காது காவல்துறை தலைவர் அவர்களை சந்தித்து உள்ளோம் என்றும் கூட்டம் நடத்த எந்தப் பிரச்சினையும் இருக்காது  என பொய்யானதகவலை பரப்பி வருகிறார்கள்

காவல்துறை திறம்பட செயல்பட்டு வருகிறது அதிலும் தற்போது காவல்துறை தலைவர் பொறுப்பேற்றதில் இருந்து குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அமைதியான சூழலில் காணப்படுகிறது
தஞ்சாவூரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 7ஆம் தேதி ஒருவர் கைது செய்யப்பட்ட தற்போது கிங்ஸ்லி என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

                             

எல்பின் நிறுவன உரிமையாளர் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் திருச்சியை நோக்கி வந்துள்ளார் தஞ்சாவூரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிந்தவர் உடனடியாக திரும்பி சென்றுள்ளார்
திருச்சி வராமல் எங்கு தலைமறைவாக உள்ளனர்
காலையில் டிஜிபி யை சந்தித்து வந்தார்கள் ஆனால் தற்போது அழகர்சாமி என்கிற ராஜா ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் எங்கே சென்றனர் வெளிநாடு ஏதும் சென்று விட்டார்களா என்று தெரியவில்லை காவல் துறையைப் பற்றி
பொய்யான தகவல்களை பரப்பி வருவதே இவர்களுடைய வேலையாக இருக்கிறது
தமிழக காவல்துறை திறம்பட செயல்பட்டு தெளிவாக வருகிறது
வழக்குப்பதிவு செய்து திறம்பட செயல்பட்டு வருகிறார்கள் தஞ்சாவூர் காவல் அதிகாரிகள் மேலும் எல்பின் நிறுவன உரிமையாளர்கள் தற்போது திரைப்படம் எடுத்ததாக தகவல்கள் வெளிவருகிறது இவர்களுக்கு  எதுஇந்த பணம் எங்கிருந்து இருக்க பணம் வருகிறது
கோடிக்கணக்கில் செலவு செய்து கூட்டங்கள் நடைபெறுகிறது இவர்களுக்கு பணம் எப்படி கிடைக்கிறது ஏதேனும் வெளிநாட்டு பணம் வருகிறதா என்று ஒன்னும் புரியவில்லைஇவை அனைத்தும் காவல்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள் வெகுவிரைவில் நீதியின் பிடியில் சிக்குவார்கள்

....................................................................................

பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பெரகம்பி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (36), இவரது மனைவி லதா (33). இருவருக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதே பகுதியில் வீடு கட்டி வசித்துவந்தனர். இந்நிலையில் 2018 ஏப்ரல் 24ஆம் தேதியன்று அதிகாலை கணவன் மனைவி இருவரும் வீட்டின் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.


அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், கணவன் மனைவி இருவரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் லதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிய ரமேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கே ரமேஷ் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிறுகனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். மேலும் கொலைசெய்யப்பட்ட அன்று வீட்டிலிருந்த 7 பவுன் நகை, 3,000 ரூபாய் பணம், ஒரு இருசக்கர வாகனமும் திருடு போயிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு திருடுபோன ரமேஷின் இருசக்கர வாகனம், சிறுகனூர் அருகே வேப்பூர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. ஓட்டிவந்த பழனிச்சாமி என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

தகவலறிந்த சிறுகனூர் காவல் துறையினர், பழனிச்சாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பழனிச்சாமியும் அவரது நண்பரான பெரம்பலூர் சத்திரமணி பகுதியைச் சேர்ந்த கிஷாந்த் (21) ஆகிய இருவரும் சேர்ந்து ரமேஷ் - லதா தம்பதியை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலைசெய்தது

ரமேஷ் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் மீது கொண்ட ஆசை காரணமாக இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக இருவரும் ஒப்புக்கொண்டனர். இருவரும் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்றுவந்தனர். இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்கு விசாரணையை முடித்த சிறுகனூர் காவல் துறையினரை, திருச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் இன்று பாராட்டி கௌரவித்தார்

Tuesday, February 25, 2020

On Tuesday, February 25, 2020 by Tamilnewstv in ,    
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம், லங்கோரா பகுதியைச் சேர்ந்தவர் நர்பத் சிங் ராஜபுரோகித். (34).

இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்  பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
 கடந்த ஜனவரி 27-ஆம் தேதி ஜம்மு விமான நிலையத்திலிருந்து இந்த சைக்கிள் பயணத்தை இவர் தொடங்கினார். உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, வழியாக தமிழகம் வந்துள்ளார்.
 இந்த வகையில் திருச்சிக்கு வருகை தந்த அவரை திருச்சியில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பளித்தனர். 12 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் நோக்கத்தோடு இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

பேட்டி: பிரதீப்குமார்
On Tuesday, February 25, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி வைணவ திவ்ய ஸ்தலங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தெப்பத்திருவிழா



ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா

தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பதிருவிழா வரும் 5-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வரும் 27-ந் தேதி தொடங்கி வருகிற 6ம் தேதி வரை நடைபெறும்.
தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்திருவிழாவின் 7ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான 5-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில்; நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து  சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
9ம் திருநாளான 6-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன்,  ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில்  ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தண்ணீர் நிரப்பும் பணி
ஸ்ரீரங்கம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளம் ஐந்தரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வரும் 5-ந்தேதி மாசி தெப்ப உற்சவம் நடைபெறுவதால் தெப்பக்குளத்திற்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
On Tuesday, February 25, 2020 by Tamilnewstv in ,    

மக்கள் பணத்தில் செயல்படுகிறதா அறம் மக்கள் நல சங்கம் ?
                  

நேற்று சென்னை மகாபலிபுரம் ரோட்டில் உள்ள ஒர் 7 ஸ்டார் ரெசார்ட்ல் தமிழகம் முழுவதும் உள்ள டாப் லீடர் கள் இக்கூட்டத்தில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர் தகவல் இதற்கு  அறம் மக்கள் நல சங்கம் சார்பில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து உள்ளனர். இந்தப் பணம் எங்கிருந்து இவர்களுக்கு வந்தது ? இதுதான் அனைத்து பொது மக்களுக்கும் ஓர் மில்லியன் டாலர் கேள்வி? அறம் மக்கள் நல சங்கம் சார்பில் போன மாதம் 23 அல்லது 24 ஆம் தேதி தஞ்சையில் இதேபோல் கூட்டம் நடத்தினார்.

தற்போது சென்னையில் அரசுக்கு எதிராக எனக்கூறி தற்போது மாமபல்லபுரத்தில் கூட்டம் நடத்தி உள்ளனர்.. இந்த பணத்துக்கு அறம் மக்கள் நல சங்க தலைவர் ராஜா ( எ ) அழகர்சாமி மற்றும் எஸ்ஆர்கே ரமேஷ்குமார் என்கிற ரமேஷ் அவர்களுக்கு வெளிச்சம்.. கோடிக்கணக்கில் செலவு செய்ய வெளிநாட்டிலிருந்து ஏதும் நிதி வருகிறதா என தெரியவில்லை.

 இதை காவல்துறையினர் மற்றும் மத்திய புலனாய்வு துறை ஆராய வேண்டும். தமிழகம் முழுவதும் எல்பின் நிறுவனம் சார்பில் கூட்டம் நடத்த தடை விதித்து இருப்பதால் சென்னை தலைமை இடத்தை தேர்ந்தெடுத்து கூட்டம் நடத்தினார். காவல்துறை டிஜிபி ஐயா அவர்கள்  செயற்குழு பொதுக்குழு என்ற பெயரில் ELFIN நிதி நிறுவனம் நடத்தும் கூட்டத்தை ஆராயவேண்டும்.


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*