Showing posts with label Break. Show all posts
Showing posts with label Break. Show all posts
Friday, June 17, 2016
உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் க.லெனின்பாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனப் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக உடுமலை நகர்ப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் சிலர் சாலையின் இருபுறங்களிலும் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியுள்ளனர்.
இதன் காரணமாக சாலைகள் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் உடுமலை நகரில் நான்கு வழிச் சாலை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்ட நான்கு வ ழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். எனவே எந்த நிலையிலும் திட்டப் பணிகளைத் தாமதப்படுத்தாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி சா லைகளை அகலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Friday, May 20, 2016
சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற சு.குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), ப.தனபால் (அவிநாசி), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்) ஆகியோர் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மையமான எல்.ஆர்.ஜி. கல்லூரியில் இருந்து திறந்த ஜீப்பில் ஊர்வலமாகப் புறப்பட்டு எம்ஜிஆர் சிலைக்கு வந்தனர். வெற்றி பெற்ற 4 பேரும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் சண்முகம், சட்டப் பேரவை உறுப்பினர் கருப்பசாமி, அதிமுக நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அன்பகம் திருப்பதி, ஜெ.ஆர்.ஜான், தம்பி மனோகரன், சடையப்பன், அதிமுகத் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக உடுமலையில் அதிமுக சார்பில் வெற்றி ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஊர்வலம் தாராபுரம் சாலை வழியாக அதிமுக தலைமைத் தேர்தல் அலுவலகத்தைச் சென்றடைந்தது. இதில், உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுக அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். அதன்பின்னர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், அவர் பேசியதாவது: இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலமாக, கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு மக்கள் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கொங்கு மண்டலத்தில் பொதுமக்கள் அதிமுகவுக்கு தங்கள் வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளனர். உடுமலைத் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளில் முழு கவனம் செலுத்துவேன் என்றார்.
மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ சி.சண்முகவேலு, உடுமலை டிஎஸ்பி விவேகானந்தன், ஆய்வாளர் தவமணி, அதிமுக நகரச் செயலாளர் கேஜி.சண்முகம், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் கே.ஆறுச்சாமி, நா.அண்ணாதுரை, ஆர்.ஜி.ஜெகநாதன், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம் உள்ளிட்டோர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளில் அதிமுகவும், இரு தொகுதிகளில் திமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் எட்டுத் தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்களில் 15 லட்சத்து 29,818 வாக்காளர்கள மட்டுமே வாக்களித்தனர். இது 72.68 சதவீதம் ஆகும்.
வாக்கு எண்ணிக்கை திருப்பூர், எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இதில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வந்தனர். மடத்துக்குளத்தில் 14 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றார். தாராபுரம் தொகுதியில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த அதிமுக வேட்பாளரும், இத் தொகுதியின் சட்டப் பேர உறுப்பினருமான கே.பொன்னுசாமி எட்டாவது சுற்றின்போது பின்தங்கினார்.இந்த இரு தொகுதிகள் தவிர பிற 6 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர்.
காங்கயம் தொகுதி: இந்தத் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட யு.தனியரசு 83,325 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.கோபி 70,190 வாக்குகள் பெற்று, இரண்டாம் இடம் பிடித்தார்.
அவிநாசி (தனி) தொகுதி: இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் ப.தனபால் 93,366 வாக்குகள் பெற்று வென்றார். திமுக வேட்பாளர் இ.ஆனந்தன் 62,692 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
திருப்பூர் வடக்குத் தொகுதி: இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.என்.விஜயகுமார் ஒரு லட்சத்து 6,717 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் எம்.பி.சாமிநாதன் 68,943 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.
திருப்பூர் தெற்குத் தொகுதி: இந்தத் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.குணசேகரன் 73,351 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.செல்வராஜ் 57,418 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
பல்லடம் தொகுதி: இத்தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.நடராஜன் ஒரு லட்சத்து 11,866 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி 79,692 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
உடுமலை தொகுதி: இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ராதாகிருஷ்ணன் 81,817 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மு.க.முத்து 76,130 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
தாராபுரம் தொகுதி: இத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வீ.எஸ்.காளிமுத்து 82,401 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.பொன்னுசாமி 73,308 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
மடத்துக்குளம் தொகுதி: இந்தத் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன் 76,619 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.மனோகரன் 74,952 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
Tuesday, May 17, 2016
இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ் நாட்டின் பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பதிவாகியது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
இலங்கை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் அருகே தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள் ளது. அதன்காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம்.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். தென் தமிழகத்திலும், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழகத்தை நோக்கி மெதுவாக நகர்கிறது. கடல் பகுதியில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. அதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தூத்துக்குடி, குளச்சல், நாகை, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இரவு முழுவதும் நகரில் பரவலாக பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கடந்த 2 மாதங்களாக கடும் வெயிலால் அவதியுற்ற சென்னைவாசிகள் இந்த மழையால்
கண்டிப்பாக இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல் தான் என்று சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை. கண்டிப்பாக இம்முறை வித்தியாசமான தேர்தல் தான்" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "அது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
திருப்பூரில் கண்டெய்னரில் பிடிபட்ட ரூ.570 கோடி தொகையானது அரசியல் பேர பணமாக இருக்கலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டத்தில் பிடிபட்ட, அவர்கள் கணக்குப் படி ரூ.570 கோடி குறித்த மிகக் கடுமையான ஊழலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுடன், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வகைகளில் முயன்று அரசியல் பேரம் பேசுகிறார் என்பது மிக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு இந்த மோசடிக்குத் துணை போனால், உண்மை விசுவரூபம் எடுத்து வெளியே வரும். எனவே, இன்னும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் கண்டெய்னர்களில் இருக்கும் பணத்தை எண்ணும்போது, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்தான் பணம் எண்ணப்பட வேண்டும்.
அண்ணா திமுக ஊழல் அம்பலத்துக்கு வந்துவிட்டதால், திமுக ஊழல் பிரச்சினையில் தப்பிவிட்டதாக எவரும் எண்ண வேண்டாம். ஒரு இலட்சத்து எழுபத்து ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டுமின்றி, கிரானைட் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளையிலும் திமுக கற்பனை செய்ய முடியாத கோடிகள் ஊழலில் கொள்ளையடித்ததை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
திமுகவினரும், அண்ணா திமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள். அதற்கு சரியான உதாரணம்தான் அரவக்குறிச்சி தொகுதி.
கடந்த 14-ம் தேதி மாலை முதல் இன்று காலை வரை பணம் கொடுக்கப்பட்டது. ஒப்புக்காக சில இடங்களில் பறக்கும் படை சோதனையிட்டபோது, கண்டுபிடிக்கப்பட்ட பணத்தைத் தவிர, ராஜேஷ் லக்கானி ஒட்டுமொத்தமாக பணம் கொடுப்பதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மையான ஜனநாயகம் வெல்லுமா என்பது மே 19-ம் தேதி தான் தெரிய வரும். பண வெள்ளத்தை எதிர்த்து தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி -தமிழ் மாநிலக் காங்கிரஸ் இணைந்து அமைத்த மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி ஜனநாயகத்தைக் காத்து வெற்றி பெரும் என நம்புகிறேன்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை தி.நகரில் சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோர் தங்களது வாக்கை பதிவு செய்தார்கள்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சிவகுமார், "எல்லா கட்சியுமே மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். யார் ஜெயிப்பாங்க என்பது தெரியாது. யார் ஜெயித்தாலும் முதல் வேலையாக அதை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் 40 வருடத்தில் 1 கோடி பேரைக் குடிகாரர்களாக ஆக்கிவிட்டோம். 50 லட்சம் பேர் குடி நோயாளியாக இருக்கிறார்கள். குடும்பத்தலைவனைக் குடிகாரனாக்கி அவன் ஈரலைப் பெரிதாக்கி அவனை சாகடித்துவிட்டு இலவசங்கள் என்ற பெயரில் ஏன் வாக்கரிசிப் போடுகிறீர்கள்.
பாலியல் பலாத்காரம் என்று சொல்றோமே அதற்கு காரணம் மது. எவ்வளவு பெரிய கோழையாக இருந்தாலும் 400 மில்லி மது குடித்தான் என்றால் அசாத்திய தைரியம் வருகிறது. அதன் விளைவு அவனுடைய மிருக வெறிக்கு அம்மா, மகள், மனைவி என எந்த வித்தியாசமும் தெரியாது.
95 வருடமாக எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பெரியார் கஷ்டப்பட்டாரோ அந்த இனம் தான் டாஸ்மாக்கில் செத்துக் கொண்டிருக்கிறது. 7 கோடி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். முதல் வேலையாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள் இல்லையென்றால் படிப்படியாக அமல்படுத்துங்கள்" என்று தெரிவித்தார்.
இவர்களில் இருவர் ஒட்டு மொத்தமாக மாநில அளவில் முதலிடம் பிடித்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் முதலிடம் பெற்ற 4 பேர் விவரம்:
ஆர்த்தி - கிருஷ்ணகிரி, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
ஜஸ்வந்த் - கிருஷ்ணகிரி, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
ஜெனிபர் ஜெயநந்தினி - நாமக்கல் க்ரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
கீர்த்தனா - நாமக்கல் க்ரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
திருப்பூர், : பனியன் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக, நேற்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்று வாக்களித்தனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திருப்பூரில் உள்ள அனைத்து கம்பெனிகளும் ஊதியத்துடன் விடுமுறையை அறிவித்திருந்தன.
இதனால், பெரும்பாலான தொழிலாளர்கள், நேற்று முன்தினம் தங்கள் சொந்த ஊருக்கு வாக்களிக்க சென்றனர். நேற்று முன்தினம் முதலே பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் மதுரை, தேனி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் வழக்கத்தை விட கூட்ட நெரிசலுடன் காட்சியளித்தது.தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல போதுமான பஸ் இல்லாததால் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
திருப்பூர், : திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அவிநாசிகவுண்டம்பாளையம் வாக்குச் சாவடியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியதும் மெஷினில் கோளாறு ஏற்பட்டது. எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதற்கான சமிக்கை விளக்கு எரியவில்லை என புகார் எழுந்தது. மேலும், வாக்குப் பதிவு எண்ணிக்கையும் தவறாக காண்பித்தது. 12 வாக்கு மட்டுமே பதிவானதாக காட்டியது. இதனால், மெஷின்கள் மாற்றப்பட்ட பிறகு 2 மணி நேரம் தாமதமாக இந்த வாக்குச் சாவடியில் 9 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது.
திருப்பூர், :
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பட்டாபுரத்தை சேர்ந்தவர் சத்தியப்பிரியா (21). பி.காம்., பட்டதாரி. இவருக்கும், பனியன் தொழிலாளியான குமரேசன் என்பவருக்கும் தொரவலூரில் உள்ள அங்காளம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்தவுடன், மணமகள் சத்தியப்பிரியா, தனது கணவர் குமரேசனுடன், வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு ெசய்தார். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மணமகள் சத்தியப்பிரியா கூறுகையில், முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், காங்கயம் ஆகிய எட்டு சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 10 லட்சத்து 53,486 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 51 ஆயிரத்து 70 பெண் வாக்காளர்கள், 209 இதர வாக்காளர்கள் என மொத்தம் 21 லட்சத்து 4,765 வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்த வாக்காளர்களில் 15 லட்சத்து 29,818 வாக்காளர்கள மட்டுமே வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப் பதிவு சதவீதம் 72.68 ஆகும்.
தொகுதி வாரியான வாக்குப் பதிவு விவரம:
தாராபுரம்: இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 38 ஆயிரத்து 16 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 81,174 பேர் வாக்களித்துள்ளனர். இதில், ஆண்கள் 91,795 பேர், பெண்கள் 89,370 பேர் அடங்குவர். வாக்குப் பதிவு 76.12 சதவீதம்.
காங்கயம்: மொத்தமுள்ள 2 லட்சத்து 33,763 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 83,211 பேர் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இதில், 92,156 ஆண்களும், 91 ஆயிரத்து 49 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 78.37 சதவீதம்.
அவிநாசி: மொத்தமுள்ள 2 லட்சத்து 49,556 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 92,936 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 97,774 ஆண்களும், 95,162 பெண்களும்
வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 77.31 சதவீதம்.
திருப்பூர் வடக்கு: மொத்தமுள்ள 3 லட்சத்து 29,833 வாக்காளர்களில், 2 லட்சத்து 19,129 பேர் வாக்களித்துள்ளனர். இதில், ஒரு லட்சத்து 13,729 ஆண்களும், ஒரு லட்சத்து 5,370 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 66.44 சதவீதம்.
திருப்பூர் தெற்கு: மொத்தமுள்ள 2 லட்சத்து 47,643 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 63,619 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 85,662 ஆண்களும், 77,957 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 66.07 சதவீதம்.
பல்லடம்: மொத்தமுள்ள 3 லட்சத்து 31,962 வாக்காளர்களில், 2 லட்சத்து 37 ஆயிரத்து 205 பேர் வாக்களித்துள்ளனர். இதில், ஒரு லட்சத்து 22,288 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 14,915 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 71.46 சதவீதம்.
உடுமலை: மொத்தமுள்ள 2 லட்சத்து 48,615 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 81,739 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 90 ஆயிரத்து 918 ஆண்களும், 90 ஆயிரத்து 820 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 73.1 சதவீதம்.
மடத்துக்குளம்: மொத்தமுள்ள 2 லட்சத்து 25,377 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 205 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 85,480 ஆண்களும், 85,324 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 75.79 சதவீதம் ஆகும்.
மாவட்டதில் உள்ள இதர வாக்காளர்கள் 209 பேரில் 40 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பனப்பாளையம் வாக்குச் சாவடியில் ஏற்பட்ட மின் தடை காரணமாக மெழுவர்த்தி வெளிச்சத்தில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
பல்லடம் நகராட்சி 8-ஆவது வார்டு பனப்பாளையத்தில் உள்ள டி.இ.எல்.சி. துவக்கப் பள்ளியில் 117-ஆவது மற்றும் 118-ஆவது வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச் சாவடிகளில் காலை 7.15 மணி முதல் காலை 8.45 மணி வரை மின் தடை ஏற்பட்டது.
ஆனாலும், வாக்குப் பதிவு பாதிக்காத வகையில் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து வாக்குப் பதிவு நடைபெற்றது. மெழுகுவர்த்தியின் குறை அளவு வெளிச்சத்தில் சிரமத்துடன் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
அவிநாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதானக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் பெருபாலானவர்கள் பிற தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரவர் சொந்தத் தொகுதிக்குச் சென்று வாக்களித்தனர்.
அவிநாசி(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் ப.தனபால், திமுக வேட்பாளர் இ.ஆனந்தன், பாஜக வேட்பாளர் சி.பெருமாள், பாமக வேட்பாளர் கே.கே.மாரிமுத்து உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், பிரதானக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெவ்வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அவரவர் சொந்தத் தொகுதிக்குச் சென்று வாக்களித்து வந்தனர். வாக்களித்து வந்ததற்குப் பிறகு அவிநாசி தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்குச் சென்று பார்வையிட்டனர்.
காங்கயம் அருகே வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோது, முதன்மை வாக்குச் சாவடி அலுவலருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடுமலை அருகே, கரட்டுமடம் ஜி.கே.என். அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் செல்வராஜ் (54). அவர், காங்கயம் தொகுதி, வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியின் முதன்மை வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, காலை 11.30 மணி அளவில் ஆசிரியர் செல்வராஜுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள், உடனடியாக அவரை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவிச் சிகிச்சைக்குப் பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் செல்வராஜ் உயிரிழந்தார். அதையடுத்து அவரது சடலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
இத்தகவல் அறிந்ததும் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் என்.ராஜன், துணைத் தேர்தல் அலுவலர் கே.ராஜகோபால் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து ஊதியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாக்குப் பதிவின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு, முதன்மை வாக்குச் சாவடி அலுவலர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்வராஜுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு மகள் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
திருப்பூர் அருகே தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட, மூன்று கன்டெய்னர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட ரூ.570 கோடி ரொக்கம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அவிநாசி அருகே சேவூரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமைக் கிளையின் முதன்மைத் தகவல் அதிகாரிக்கு ரூ.570 கோடி குறித்த விவரங்களைக் கேட்டு மனு அளித்துள்ளார்.
அதில், ரூ.570 கோடி தொடர்பாக ரிசர்வ் வங்கி அளித்த ஆவணங்களின் நகல், இந்தப் பணம் எங்கிருந்து, எதற்காகக் கொண்டு செல்லப்பட்டது போன்ற பணப் பரிவர்த்தனை விவரங்களைத் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...