Showing posts with label Trichy sabarinathan 9443086297. Show all posts
Showing posts with label Trichy sabarinathan 9443086297. Show all posts

Wednesday, June 10, 2020

On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 10

28லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு 
ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது - அமைச்சர், மருத்துவமனை டீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

திருச்சி மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படும் வகையில் பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கின்றனர். 


இதன் ஒரு பகுதியாக இன்று காலை 
2அல்ட்ரா சவுண்ட்,  கலர்டாப்ளர் மற்றும் ஏழு டிஜிட்டல் வரைபட கருவி உட்பட சுமார் 
28லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி, தொட்டியம், ஓமந்தூர் , தொட்டியம் துவரங்குறிச்சி  மண்ணச்சநல்லூர் மணப்பாறை தாலுக்காவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு டைமன்சிட்டி ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம்,  சோழா  ரோட்டரி சங்கம் மற்றும் இலங்கை யாழ்பானம் ரோட்டரி சங்கத்தினர்   இணைந்து தமிழக சுற்றுலா துறை, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,  திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் வனிதா ,  திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் டாக்டர் லட்சுமி  ஆகியோரிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஜமீர்பாஷா, விஸ்வநாத், கோவிந்தராஜ், 
அமலச்சந்திரன் மற்றும் இலங்கை யாழ்பாணம் ரோட்டரி சங்க நிர்வாகி
ஜெயக்குமாரன்
அருமைநாகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in    
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,  தமிழக அரசு பல்வேறு வழிகளில்  சிறப்பாக செயல்பட்டு கொரோனா வை சிறப்பாக கையாண்டு வருகிறது. 

ஜூன் 8ம் தேதிக்கு பிறகு வழிபாட்டு தளங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தாலும் தமிழக அரசு கொரோனா வை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகே கோவில்கள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தும் என தெரியவருகிறது. 


 சமயபுரம் கோவிலுக்கு பக்தர்கள் வந்தவண்ணமே இருக்கின்றனர் , மக்கள் கூட்டம் கூடுவதை அரசு தவிர்க்க வலியுறுத்தி வருகின்ற து, சமயபுரம் தேர் நிற்கும் இடத்தை சுற்றி தரை கடை அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர், தரை கடை வைத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் சமூக இடைவெளி இல்லாமல் நெரிசலாக கடைகள் அமைத்து உள்ளனர்.  

 கட்டனமில்ல காலனி பாதுகாப்பு அறைக்கு செல்ல இயலாதவாறு சிறுது இடம் கூட இல்லாமல்  முழுவதும் கடைகள் அடைத்துள்ளதாக பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.  

 அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது, இதனால் கொரோனோ தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், கோவில் திறப்பதற்கு முன்பே இப்படி இருக்கும் வேளையில் கோவில் திறந்தாள் பாதிப்பு  அதிகமாகும் அச்சம் பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது,  


  பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகமும் பக்தர்கள் நலன் கருதி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றி பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in    
*E.E.குமரேசன் மீது லஞ்ச ஒழிப்பு* **விசாரணைக்கு* *உத்தரவு* *


திருச்சி மாநகராட்சி,  அரியமங்கலம் கோட்டம்,  அரியமங்கலம் பொறியியல் பிரிவில் டீசல் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக லோக் தந்த்ரிக் ஜனதா தளம் சார்பில் கடித எண். *LJD / TN /* *117 / 2020, நாள் :* *16.03.2020* தேதியிட்ட கடிதத்தின் மூலம் அனைத்து அலுவலர்களுக்கும் புகார் மனு அனுப்பியதோடு, சட்டசபை முன்பு சங்கு ஊதி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தோம். 
 அதனையொட்டி  திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் 14.03.2020 அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில்  சுமூக முடிவு எதுவும் எட்டப்படாததால் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் முன்பு 16.03.2020 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில் மாநகராட்சி சார்பில் கலந்து கொண்ட உதவி ஆணையர் அவர்கள் *டீசல்* *கொள்முதலில் 58,662 ரூபாய் மாநகராட்சிக்கு இழப்பீடு* ஏற்படுத்தியாக தெரிவித்துள்ளார்.  இதனடிப்படையில் *லஞ்சம்ஊழல்* *தடுப்புமற்றும்* *கண்காணிப்புத்துறையின்* *இயக்குநர்* அவர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.  புகாரின் அடிப்படையில்  *petn* . *No.3272/* *2020 / LB / TR,* *Dated: 23.05.2020* கடிதத்தின் மூலம் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு  உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்சம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இயக்குனர் அவர்கள் பரிந்துரைத்துள்ளது. 

இந்த பரிந்துரையின் மூலம் திருச்சி **மாநகராட்சியின்நிர்வாக* *பொறியாளர்* *குமரேசன்* அரியமங்கலம் கோட்டத்தின் உதவி செயற்பொறியாளராக இருந்த போது நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான *விசாரணை* *வளையத்திற்குள்* *சிக்குவார்* அதன் மூலம் டீசல் கொள்முதலில் நடைபெற்றுள்ள ஊழல் வெளிச்சத்திற்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

*ஆ.வையாபுரி,*
*மாநில பொதுச்செயலாளர்,*
**லோக்தந்திரிக்* *ஜனதாதளம்* . * எனத் தெரிவித்துள்ளார்
*Cell :95002 - 99882.*

Tuesday, June 09, 2020

On Tuesday, June 09, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

மத்திய அரசு ரூ. 7500ம், மாநில அரசு ரூ. 5000ம் கரோனா நிவாரண நிதியாக
அனைவருக்கும் வழங்கவேண்டும்,
விவசாயத்தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.


விவசாயிகள்,நெசவாளர்களுக்கான 
இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது,
தொழிற்சங்க உரிமைகளை பறிக்ககூடாது,
பொதுத்துறைகளை தனியார் மயமாக்கக்கூடாது.
ரேஷன் கடைகளில் அனைவருக்கும்
முறைகேடு இல்லாமல் பொருட்கள் வழங்கவேண்டும்.
காவிரி ஆனணயத்தை ஜல்சக்தி அமைப்போடு இனணக்கக்கூடாது.
அனைவருக்கும் இலவசமாக கரோனா
பரிசோதனை நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
On Tuesday, June 09, 2020 by Tamilnewstv in    
திருச்சி நாடாளுமன்றத்  உறுப்பினர் திரு நாவுக்கரசர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் செலவில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார். 

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வழங்கினார். அதன் பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கொரோனா வைரஸ் உண்மையாக பாதித்தவர்களுக்கு இன்னும் பரிசோதனை செய்யப்படவில்லை. 

 உண்மையாக பாதித்தவர்களுக்கு எல்லாம் பரிசோதனை செய்து இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடம் இருந்திருக்காது. அதனால் தான் தற்போது தனியார் மருத்துவமனைகள் வசமுள்ள 25 சதவீத படுக்கைகளை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. 

 ஆனால் இது போதுமானது கிடையாது. 50 சதவீத படுக்களை கையகப்படுத்த வேண்டும். அதேபோல் அனைவரிடமும் தமிழக முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அட்டை இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் தனியார் மருத்துவமனைகளில் 15 நாட்கள் வரை ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தால் பல ஆயிரம் ரூபாய் செலவாகும். இதனால் கொரோனா மேலும் தீவிரமடையும். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகையால் கரோனா சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். மக்களுக்கு உடனடியாக ரொக்கம் தேவைப்படுகிறது. அதனால் மாநில அரசு 7,500 ரூபாய், மத்திய அரசு 5,000 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும். வீட்டு இணைப்புக்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதாக இல்லை. 

 அரசு உத்தரவை மக்கள் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களும் மூன்று மாதமாக மூடிக் கிடப்பதால் அவர்களால் சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்குறைப்பு செய்கிறார்கள். ஆகையால் நலிந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்யவேண்டும். சலுகைகளை அறிவிக்க வேண்டும். கடன் கொடுக்க வேண்டும். கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.  கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தி இல்லை. குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டும். அரசின் உத்தரவை தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும் என்றார்.

Monday, June 08, 2020

On Monday, June 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜீன் 08

மருத்துவக் கல்வியில் ஓபிசி மாணவர் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

 எழுச்சி தமிழர் திருமாவளவன் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம்   முழுவதும்  கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.  இதன் ஒரு பகுதியாக திருச்சி
மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள் 
தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் மாவட்ட பொருளாளர் சந்தனமொழி,  செய்தி தொடர்பாளர் சிவதண்டபாணி, .அன்பரசு, காந்தி ஆகியோர்
முன்னிலையிலும்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில நிர்வாகிகள்   சுஜாஅருள்,  அரசு,ஆகியோர்
கண்டன உரை  ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கல்வியில்  ஓபிசி மாணவர்களுக்கு   இட ஒதுக்கீடும், தனியார் துறையில் சிறப்பு கல்வி நிறுவனங்களில் இட
ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில்  நிர்வாகிகள் வழக்கறிஞர் திவாகரன், ஆல்பர்ட்ராஜ், சிறுத்தை சதீஷ், தில்லை குணா,  
தில்லை முரசு, கலியமூர்த்தி, துரை வளவன் பெரியசாமி, முருகேசன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Monday, June 08, 2020 by Tamilnewstv in    

திருச்சி வியாபாரம் தொடங்க அனுமதி கோரி திருச்சி காந்தி மார்க்கெட் நிலையான கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


                     


திருச்சி காந்தி மார்க்கெட் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிலையான கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளில் வெல்லம், பானை, கூடை, மிட்டாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்த கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 


                    


 இதனால் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டது. காந்தி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகளுக்கு மாற்றாக வெவ்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிலையான கடைகளுக்கு எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் நிலையான கடை வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமையில் சங்கத்தினர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திருச்சி ஆட்சியர் சிவராசுவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

பேட்டி; பாலகிருஷ்ண
On Monday, June 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி முத்தம்மாள். இவர்களின் மகன் மணி. மருமகள் சுமதி ராணி உள்ளிட்ட குடும்பத்தினர் ஏலச்சீட்டு மற்றும் பிடி சீட்டு, குலுக்கல் சீட்டு ஆகியவற்றை நடத்தி வந்துள்ளனர். 

இவர்களிடம் திருச்சி கருவாட்டு பேட்டை, ஜான் தோப்பு, நாயுடு மஹால், கமலா நேரு நகர், என்எஸ்பி ரோடு, சத்யமூர்த்தி நகர், வடக்கு தாராநல்லூர், சின்ன செட்டி தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் சீட்டு சேர்ந்துள்ளனர்.

 மேலும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். இந்த வகையில் 34 பேரிடம் தலா ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்றுள்ளனர். அதேபோல் ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கும் பணம் கொடுக்காமலும், வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுத்தவர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுக்காமல் பழனிச்சாமி குடும்பத்தினர் மோசடி செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


 இந்த வகையில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டால் தரக்குறைவாக பேசுவதோடு, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இந்து மகா சபா மாநில துணைத் தலைவர் பரமானந்தன் தலைமையில் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆணையர் வரதராஜுவை  சந்தித்து மனு கொடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உத்தரவாதம் அளித்தார். இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

 பேட்டி: இந்து மகா சபா மாநிலத் துணைத் தலைவர் பரமானந்தன்.

Saturday, June 06, 2020

On Saturday, June 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி சரகத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் எலி மருந்து சாப்பிட்டு 2018-ல் 138 பேரும், 2019-ல் 165 பேரும், 2020 மே மாதம் வரை 63 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

எனவே, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுக்கும் வகையில் திருச்சி சரகத்தில் சட்ட விரோதமாக எலி மருந்து விற்பனை செய்யும் 228 கடைகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் 160 கடைகளும், புதுக்கோட்டையில் 68 கடைகளும் அடங்கும்.

இதற்கிடையே எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காவலர் நல ஆய்வாளர்கள், தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எலி மருந்து விற்பனை செய்யும் கடைக்காரர்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கியுள்ளனர். 

திருச்சிக்கு அஜீம் -94981 10803, புதுக்கோட்டைக்கு லட்சுமி - 94981 06582, கரூர் கார்த்திகா - 94981 61860, பெரம்பலூர் கார்த்திகாயினி - 94875 56866, அரியலூர் சுமதி - 94981 10774 ஆகியோர் இந்த சிறப்புப் பிரிவின் ஆய்வாளர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்

கடைகளில் யாரேனும் எலி மருந்து வாங்கினால், கடைக்காரர்கள் உடனடியாக தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு ஆய்வாளர்களுக்கோ அல்லது அவரால் நடத்தப்படும் குழு வுக்கோ தகவல் கொடுக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுக்க முடியாதபட்சத்தில் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகங்களை திருச்சிக்கு 0431-2333629, புதுக்கோட்டைக்கு 04322-255299, பெரம்பலூருக்கு 04328-224962, அரியலூருக்கு 04329-222106 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

அதைத் தொடர்ந்து தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார், எலி மருந்து வாங்கிச் சென்றவர்களைத் தொடர்புகொண்டு, காரணத்தை அறிந்து, யாருக்கேனும் தற்கொலை எண்ணம் இருந்தால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அதிலிருந்து விடுபட உதவி செய்வர்"

என  தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட மனித நேய செயலில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி
On Saturday, June 06, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் 
மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றதை மாவட்ட 
ஆட்சித்தலைவர் சிவராசு இன்று (06.06.2020) பார்வையிட்டு 
ஆய்வு செய்தார். 

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு இன்று (06.06.2020) குவைத் நாட்டில் 
இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 103 பயணிகள் திருச்சிராப்பள்ளி 
விமான நிலையத்திற்கு வருகைபுரிந்தனர்.

இதில் அரியலூர் 2 சென்னை 2 கோயம்புத்தூர் 1 கடலூர் 5 கள்ளக்குறிச்சி 2
கன்னியாகுமரி 3 கரூர் 1மதுரை 2 நாகப்பட்டிணம் 3 பெரம்பலூர் 5 புதுச்சேரி 2 
புதுக்கோட்டை 6 இராமநாதபுரம் 13 சேலம் 2 சிவகங்கை 4 தஞ்சாவூர் 13
திருவண்ணாமலை 3 தூத்துக்குடி 1 திருவாரூர் 9திருச்சிராப்பள்ளி 10 திருநெல்வேலி 
4 திருப்பட்டூர் 1 வேலூர் 2விழுப்புரம் 7 என 24 மாவட்டங்களை சார்ந்த ஆக
மொத்தம் 103 பயணிகள் வருகைபுரிந்தனர். கொரோனா வைரஸ் நோய்தடுப்பு 
முன்னெச்சரிக்கையாக மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதலின்படி
சுகாதாரத்துறையினர் மூலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை 
செய்யப்பட்டது. இதில் எவருக்கும் கொரோனா வைரஸ் நோய்தொற்று இல்லை என 
உறுதி செய்யப்பட்டது. அந்தந்த மாவட்டங்களுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் மூலம்
பயணிகளை அனுப்பி வைக்கப்பட்டனர். 
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாச்சியர் 
விஸ்வநாதன் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சுப்ரமணி பயிற்சி 
ஆட்சியர் செல்வி சரண்யா திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர் மோகன் 
 மற்றும்பலர் உடனிருந்தனர்.
On Saturday, June 06, 2020 by Tamilnewstv in    
*ஜி - கார்னரில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.* 

 *தியாகி வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் கோரிக்கை* 

    உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரசின் கோரத் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக திருச்சியின் மையப் பகுதியில் இயங்கி வந்த காந்தி மார்க்கெட்டை மக்களின் நலன் கருதி தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் 1.4.2020 முதல் பூட்டி சீல் வைத்தது.  

     மக்களை காப்பாற்றுவதற்காக அரசு எடுத்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்த அனைத்து காய்கறி வியாபாரிகளும் பொன்மலை ஜி - கார்னரில் வியாபார செய்து வருகின்றனர். இடையில் மழை பெய்த போதும் பொது படுத்தாது தங்கள் வியாபாரம் மூலம் பொதுமக்களுக்கும், நுகர்வோருக்கும் தரமான காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். 

     இதனிடையே ஒரு சில அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்த பலமுறை முயன்றும் முடியாமல் போனதால் தற்போதுள்ள சூழ்நிலையை  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வியாபாரிகளின் ஒரு பிரிவினரை அரசுக்கு எதிராகவும், பொது மக்களுக்கு தரமான காய்கறிகள் கிடைப்பதை தடை செய்யும் விதமாகவும், எச்சரிக்கை விடுக்கின்ற வகையில் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.  

     இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள தலைவர் மார்க்கெட்டை பூட்டும் போது வராமல் இருந்து விட்டு இப்போது வந்து *7.6.2020-ல்  காந்தி மார்க்கெட் திறக்கவில்லை என்றால் 8.6.2020 முதல் காலவரையின்றி காய்கறி வியாபாரம் செய்ய மாட்டோம்* என்று அறிவித்துள்ளனர். 

     அந்த தலைவரின் இந்த அறிவிப்பானது  மொத்தம், கமிஷன் மண்டி வியாபாரிகளை விட சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதோடு நுகர்வோரும், பொது மக்களும் காய்கறி கிடைக்காமல் சிரமப்படுகின்ற சூழல் ஏற்படும் என்பதை அந்த தலைவர் புரிந்து கொள்ளவில்லை.  

     சில நபர்களின் சுயநலத்தால் சில்லரை வியாபாரிகள், வியாபாரம்  செய்ய முடியாத நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுகின்ற அபாயகரமான சூழலும் நிலவுகிறது. ஆனால் சில்லரை வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வியாபாரம் செய்திட முயற்சிக்கும் போது, பாதுகப்பற்ற சூழல் ஏற்படவும், வாய்ப்புகள் அதிகம் உள்ளனர். பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் தங்களின் வாழ்வாதரத்தை எண்ணியும் வியாபாரம் செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு மாநில அரசும்,மாவட்ட நிர்வாகமும் உரிய போலீஸ் பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

     சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனைக்காக வருகின்ற  லாரிகளை தடுப்பதற்கான முயற்சிகளும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு பெரும் பண முதலைகள் தலைமை தாங்குவதாகவும் ஒரு குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. 

 *வியாபாரிகளை நசுக்க துடிக்கும் சேகரன்* 

     நுகர்வோர் சேவை அமைப்பு என்கிற பேரில் இயக்கம் நடத்துகின்ற சேகரன் அவர்கள் நுகர்வோர் நலன் சார்ந்து செயல்படாமல் இல்ல வையாபாரிகளை நசுக்குவதிலேயே குறியாக இருந்து வருகிறார்.  வியாபாரிகள் வரிகளை முறையாக செலுத்தினால்தான் அரசுக்கு வருவாய். அதைக் கொண்டுதான் மக்கள் நல திட்டங்களையும் நுகர்வோர் நலன் சார்ந்த திட்டங்களையும் அரசு செயல்படுத்த முடியும். அரசின் வருவாயை கெடுக்கின்ற வகையில் செயல்பட்டு இல்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கெடுப்பதிலேயே குறியாக உள்ள சேகரன் அவர்கள் நுகர்வோர்களுக்கு தேவையான பொருள்கள் கிடைப்பதை தடை செய்ய முயற்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை.  

     வியாபாரிகளின் வாழ்வோடு விளையாடும் சேகரன் பசுமை தினமான இன்று (6.6.2020) எத்தனை மரக்கன்றுகள் நட்டார் என்பதை சொல்ல முடியுமா?  

      நாட்டில் மாசுக்களை ஏற்படுத்துகின்ற எத்தனையோ தொழிற்சாலைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. மதுப்பழக்கத்தால் நாட்டில் எவ்வளவோ குற்ற செயல்கள் நடக்கின்றன.  அந்த ஆலைகளையெல்லாம் இழுத்து மூட சேகரன் அவர்கள் போராட்டம் நடத்த வேண்டியது தானே?  அவர்களுக்கு எதிராக அந்த போராட்டத்த எந்த போராட்டத்தையும் நடத்த மாட்டார். ஏனெனில், அவர் எப்போதும் ஏழைகளுக்கெதிரான போராட்டத்தை மட்டுமே கையில் எடுப்பார் என்பதற்கு வேறு அன்று தேவையில்லை.  பண முதலைகள் பக்கம் மட்டுமே எப்போதும் நிற்பார். 

     ஒரு காலத்தில் வியாபாரியாக இருந்து பல முறைகேடுகளை செய்து அதில் தொடர்ந்து நீடிக்க முடியாமல் அந்த தொழிலை விட்டு ஓடி வந்தவர் தான் இந்த சேகரன்.  அதனால்தான் என்னவோ வியாபாரிகளை, அதிலும் குறிப்பாக சில்லரை வியாபாரிகளை நசுக்குவதையே தொழிலாக கொண்டுள்ளார்.

     இவரைப் போன்றவர்களிடமிருந்து சில்லரை வியாபாரிகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 

 *ஆ.வையாபுரி* , 
 *நிறுவனர் / தலைவர்,* 
" *தியாகி" வ.உ.சி.* *ஒர்க்கர்ஸ் யூனியன்* ,
*Cell: 95002 - 99882.*

Friday, June 05, 2020

On Friday, June 05, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் இன்று மட்டும் 12 பேருக்கு நோய் தொற்று உறுதி*
    

திருச்சியில் இன்று திருவானைக்கோவில் சொக்கநாதபுரம், மணப்பாறையில் உள்ள குமரன் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர், கல்லுப்பட்டி , பீமநகா் யானைகட்டி மைதானம், கொட்டப்பட்டு, முத்தரசநல்லுாா் ஆகிய பகுதிகளை சோ்ந்த 12 போ் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதன் காரணமாக திருச்சியில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளானோாின் எண்ணிக்கை மொத்தம் 112 ஆக உயா்ந்து உள்ளது. கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
On Friday, June 05, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 05

திருச்சியில் மீண்டும் வாழ்வாதாரத்தை துவக்கியுள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்யை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

 கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 


 ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் மீண்டும் துவங்கியுள்ள அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் திருச்சி, காந்தி மார்க்கெட், பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில், கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, மலைக்கோட்டை, பாலக்கரை, மற்றும் மாநகர பகுதியில் ஆட்டோக்களை இயக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள்  தொகுப்பினை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

ஆட்டோ ஓட்டுனர்களின் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக, ஓட்டுனர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி,  முகக்கவசம் வழங்கப்பட்டு, சமூக இடைவெளி, உடல் மற்றும் சுற்றுப்புறத்தூய்மை குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அமைச்சர் வெல்லமண்டி நடராஐன் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
On Friday, June 05, 2020 by Tamilnewstv in    
தொடர்ச்சியாக மக்களை உயிர் பாதுகாக்கும் மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்
துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பேட்டி

திருச்சி தீயணைப்புத்துறை துணை மண்டல இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் கூறுகையில் ஜீவராசிகளுக்கும் நாங்கள் மனிதநேயத்தோடு உணவு அளித்து வருகிறோம். கொரோனா தொற்று ஏற்பட்ட காலங்கள் முதல் தீயணைப்புத்துறையினர் எத்தனையோ மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். அதில் சிலர் இறந்தும் உள்ளனர். மேலும் உயிரிழந்த நிலையில் உள்ள பிணங்களை மீட்கும் பொழுது கிணறுகளில் விஷவாயு கசிவு களில் மீட்பு பணியில் ஈடுபடும் போது எங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்துதான் நாங்கள் எங்கள் உயிரையும் பெரிதாக கருதாமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் எங்களிடையே மீட்பு பணிகளை செய்தியாக வெளியிடும் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.




மேலும்தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்கள் வழிகாட்டுதல்படி பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.  



  இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தமிழகத்தில் முதல் முறையாக காணொளி காட்சி மூலம் தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்த ஓவிய போட்டிகளில் பல நாட்களாய் வீட்டில் முடங்கிக் கிடந்த மாணவ மாணவியர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக அமைந்தது திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Monday, June 01, 2020

On Monday, June 01, 2020 by Tamilnewstv in    

திருச்சி நவல்பட்டு பூலாங்குடி காலனியில் பரிதாப சம்பவம்


மகன் இறந்ததால் அதிர்ச்சி எரி வாயு உருளையை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை


  திருச்சியில், மகன் இறந்த அதிர்ச்சியை தாங்காமல், எரிவாயு உருளையை திறந்து வெடிக்கவைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார். 

  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த நவல்பட்டு பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 59). ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை. இவரது கணவர் முருகேசன் ஏற்கெனவே இறந்து விட்டார். இவர்களது மகள்கள் விஜயலட்சுமி (28), விஜயவாணி (26), மகன் விஜயகுமார் (25). இதில் டிப்ளமோ படித்து முடித்த விஜயகுமார் கடந்த 9 மாதத்துக்கு முன் விபத்தில் சிக்கி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

 இந்தநிலையில், நேற்று இரவு 7 மணியளவில் விஜயகுமாரின் உடல்நிலை மோசமானதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்


 மருத்துவ குழுவினர் வந்து பரிசோதித்ததில் விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த செய்தியை அருகில் உள்ளவர்களிடம் சொல்லாமல் மனதுக்குள்ளேயே வைத்து வேதனையில் இருந்த விஜயலட்சுமி குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக இரவு  மணிக்கு வீட்டில் உள்ள அறையில் விஜயகுமாரின் உடலை எடுத்து சென்றனர். அங்கு சமையல்  எரிவாயு உருளையை திறந்து விட்டு மூவரும் சிலிண்டர் அருகே நின்று கொண்டு தீயை பற்ற வைத்தனர்.

 தீ பற்றியவுடன் எரிவாயு உருளை வெடித்து சிதறியது. இதில் 3 பேரும் உடல் கருகி இறந்தனர். எரிவாயு உருளை வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருப்பதாகக் கூறி, திருச்சி அண்ணா சிலை ரவுண்டானா நெடுஞ்சாலைத் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை இடிக்கப்பட்டது.

திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் நிறுவப்பட்ட பேரறிஞா் அண்ணாவின் உருவச் சிலையை கடந்த 1968- ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக அமைச்சா்கள் மு. கருணாநிதி, இரா. நெடுஞ்செழியன் ஆகியோா் திறந்து வைத்தனா். தொடா்ந்து இப்பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது

இதனால் ரவுண்டானாவின் அளவைக் குறைக்க வேண்டும் என பல்வேறு சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அண்ணா சிலை ரவுண்டாவை இடிக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்டனா். உள்ளேயிருந்த செடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் அனைத்தும் முடிந்த பின்னா், ரூ.40 லட்சம் செலவில் மிக குறுகிய அளவிலான ரவுண்டானா இதே பகுதியில் அமைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

திருச்சி அண்ணா சிலை ரவுண்டானாவை இடித்து அகற்றியது போன்று, போக்குவரத்து நெரிசல்களுக்கும், விபத்துகளுக்கும் காரணமாக இருக்கும் நீதிமன்றம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா்.சிலை ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரிஸ்டோ ரவுண்டானா போன்றவற்றையும் இடித்து அகற்றி, அங்கு குறுகிய அளவில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
*தமிழக முதல்வர் அறிவிப்பின்படி திருச்சி *மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் பொது பேருந்து போக்குவரத்து நாளை (ஜீன் 1- ம் தேதி ) துவங்குகியது*

*மக்கள் பயன்பாட்டிற்காக  இந்த பேருந்துகள்* *திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்*


  • *அரியலூர்*பெரம்பலூர்* *புதுக்கோட்டை* *ஆகிய 7 மாவட்டங்களை  *உள்ளடக்கியும்,


நாலாவது மண்டலத்துக்கு அருகில் உள்ள மாவட்டங்களின் எல்லை வரையிலும் காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை இயக்கப்படும்*

*திருச்சி மாவட்ட *பகுதிகளில்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (கும்பகோணம் ) லிட் திருச்சி மண்டலம் மூலம் 50 சதவீத பேருந்துகளும்*

*60 சதவீத பயணிகளுடன்  180 நகர் பேருந்துகளும்  150 புறநகர் பேருந்துகள் என மொத்தம்  330 பேருந்துகள் இயக்கப்படும்*

*பேருந்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்*

*பேருந்தில் பின்படிக்கட்டில் ஏறும்போதும் ,முன்படிக்கட்டில் இறங்கும் போதும் நிச்சயமாக பயணிகள் சமூக இடைவெளியை பயன்படுத்திட* *வேண்டும்* போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இன்று முதல் பேருந்து இயக்கப்பட்டது
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
*பட்டியல் இன மக்களை அவதூறு பேசி வரும் திமுக எம்பி களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈபி ரோடு அம்பேத்கர் சிலை அருகே 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் தற்போது மாநகர மாவட்ட செயலாளர் குமார் ஆதரவு தெரிவித்தார்* 

திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என தலைமை கழகம் அறிவித்ததையடுத்து கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில்  திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 


இதில் பட்டியல் இன மக்களை குறித்து அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து பதாகைகள் ஏந்தி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் சகாதேவன் பாண்டியன் அதிமுக பகுதி மற்றும்  வட்ட கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  அகில இந்திய மின்ஊழியர்களின் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிப்பதை முன்னிட்டு மின்வாரிய ஊழியர்கள் அனைத்து மின்வாரிய அலுவலகங்களின் முன்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மின் துறையை தனியார் மயமாக்க கூடாது. 2020 மின்சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் தொழிலாளரின் உரிமையை பறிக்கக்கூடாது, மின் வாரியங்கள் பிரிக்கக் கூடாது, விவசாயம், குடிசை, நெசவு போன்றவைகளுக்கு சமூக அக்கறையுடன் செயல்படுத்தி வரும் மானிய திட்டங்களை வழங்கி வரும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 1

திருச்சியில்
விவசாயிகள்
சங்கத்தினர் போராட்டம்.

தமிழக விவசாயிகள் சங்கம், பொதுநல அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பட்டத்திற்கு 
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள்  கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு 
உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு காவிரி பாசன உரிமையில் தமிழகத்தை வஞ்சித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார செயல்பாட்டை முடக்கி மத்திய அரசின் நீர் ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் செயல்படும்
கீழமை ஆணையமாக
மாற்றி அவசர சட்டம் பிறப்பித்தது ரத்து செய்யும் வலியுறுத்தியும், மேலும் மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்து தனியாரிடம் மின் திட்டங்களை ஒப்படைத்து மாநில உரிமைகளை பறிப்பது கைவிட்டு அச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர்.

பேட்டி :  சின்னதுரை
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர்.