Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts
Wednesday, April 15, 2015
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு, கனடா நாட்டு சட்ட அமைச்சரும், தலைமை வழக்குரைஞருமான பீட்டர் மாகேவிடம், அந்த நாட்டில் வாழும் "நீதிக்கான சீக்கியர்கள்' (எஸ்எஃப்ஜே) என்ற அமைப்பு புகார் கொடுத்துள்ளது.
பிரதமர் மோடி, அடுத்த வாரம் கனடா செல்லவுள்ள நிலையில் இந்தப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நரேந்திர மோடி கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த கலவரத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை பரவுவதற்கு உதவி புரிந்தார்.
எனவே மோடி மீது மனித உரிமை மீறல் குற்ற வழக்கு தொடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு கடந்த ஆண்டு மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்த நாட்டு நீதிமன்றத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக அவர்மீது வழக்குத் தொடுத்தது.
ஒரு நாட்டின் தலைமைப் பதவியில் ஒருவர் இருக்கும்போது, அவர் மீது, அமெரிக்கச் சட்டத்தின்படி மனித உரிமை மீறல் வழக்குத் தொடுக்க இயலாது.
மேலும், இந்தியப் பிரதமர் மீது மனித உரிமை வழக்கு தொடுக்க இயலாதவாறு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு அந்த நாட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கூறியது.
அதனையடுத்து, அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால், மனித உரிமை மீறல் குற்ற வழக்கில், ஒரு தேசத்தின் தலைவருக்கு அமெரிக்க, இந்திய சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, கனடா நாட்டு சட்டத்தில் வழங்கப்படவில்லை என்று காரணம் கூறி, மோடி மீது வழக்கு தொடுக்கவேண்டும் என்று நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு (எஸ்எஃப்ஜே), கனடா நாட்டு சட்ட அமைச்சரும், தலைமை வழக்குரைஞருமான பீட்டர் மாகேவிடம் புகார் கொடுத்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அப்பு லூனா (வயது 28) இவர் பக்ரைனில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்து உள்ளார். இவர் தன்னை தனது முதலாளி மகன் கற்பழித்து விட்டதாகவும். தினமும் அடித்து உதைப்பதாகவும் சமூக வலைதளமான பேஸ் புக்கில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவை 19 ஆயிரம் பேர் லைக் செய்து இருந்தனர். 78 ஆயிரம் ஷேர் செய்யபட்டு இருந்தது. இதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அரசு அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பில்லைன்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது இதை தொடர்ந்து தூதரக அதிகாரிகளால் அவர் மீட்கபட்டார்.
3 நிமிடம் ஓடக்கூடிய இந்தவீடியோவில் லூனா கூறி இருப்பதாவது:-
தனது முதலாளியின் போதைக்கு அடிமையான மகன் தன்னை கற்பழித்து விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் நான் வெளிவர உதவி செய்யுங்கள், இப்போது வரை, நான் மிகவும் பயந்து போய் உள்ளேன். என் பிறப்புறுப்பு காயமடைந்து உள்ளது. நான் தடுத்ததற்காக எனது காலில் அடித்து உள்ளார். அதனால் காலில் காயமாக உள்ளது. எனது முதலாளி மகன் என்னை திட்டினார். இதை யாரிடமாவது கூறினால் என்னை கொன்று புதைத்து விடுவதாக மிரட்டினார் என கூறி உள்ளார்.
அவரது முதலாளி அவரது மகன் கற்பழித்ததையும் அடித்து உதைப்பதையும் நம்ப வில்லை. ஓப்பந்தம் மீதம் முள்ள 2 மாதங்களையும் முடித்து விட்டு நீ உன் வீட்டுக்கு போ என கூறியதாக கூறியுள்ளார். நீ கர்ப்பமாக இருந்தால் கருகலைப்பு செய்து விடு என முதலாளி கூறியதாக கூறி உள்ளார்.
லூனா இது குறித்து எழுத்துபூர்வமாகவும் பிலிப்பைன்ஸ் தூதரகத்துக்கு ஒரு புகார் அளித்து உள்ளார்.
மீட்கபட்ட பிறகு அப்பு லூனா வெளியிட்டு இருந்த வீடியோவில் தான் தூதரக பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பில்ப்பைன்ஸ் தூதரக அதிகாரி கூறும் போது லூனாவை வேலைவாய்ப்பு நிறுவன ஊழியர்கள் அவர் வேலை செய்யும் வீட்டில் இருந்து அழைத்து வந்ததாக கூறினார். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் கூறி உள்ளார்.
லூனா தாக்கபட்ட குற்றச்சாட்டை காவல்துறையினர் மறுத்து உள்ளதாக பிலிப்பைன்ஸ் தூதர துணை அதிகாரி ரிக்கி ஆரகன் தெரிவித்து உள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக அந்நாட்டை சேர்ந்த 1 கோடி பேர் உலகம் முழுவதும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இது நாட்டின் 10 கோடி பேரில் 10 சதவீதமாகும். அவர்கள் அங்கு கேவலாமான மற்றும் ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர்
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐநா கோரியுள்ளது.
காப்பாற்ற மேலும் நடவடிக்கை தேவை"
படகு ஒன்று கடலில் மூழ்கியதில், சுமார் 400 குடியேற்றக்காரர்கள் திங்களன்று கடலில் மூழ்கி இறந்ததாக அஞ்சப்படும் நிலையில் இந்தக் கோரிக்கை வந்துள்ளது.
குடியேற்றக்காரர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று ஐநா அகதிகளுக்கான அமைப்பின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
அப்படியான மீட்பு முயற்சிகள் குடியேற்றக்காரர்களை ஊக்குவிக்கும் என்று சிலர் வாதிடும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் தனது மீட்பு நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டது.
லிபியாவில் இருக்கும் ஒரு குடியேற்றக்காரர்களுக்கான தடுப்பு நிலையம் ஒன்றுக்கு சென்ற பிபிசியின் செய்தியாளர் ஒருவர், அங்கு ஒரு மலசல கூடத்தை 500 பேர் பகிர்ந்துகொள்ளும் நிலையை கண்டுள்ளார்.
ஆனால், தமது வாழ்க்கை மிகுந்த ஆபத்தில் இருப்பதனாலேயே, தாம் ஐரோப்பாவுக்கான அபாயகரமான பயணத்தை தேர்ந்தெடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசூப்சாயி போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் சிபோக்கில் 270க்கும் மேற்பட்ட மாணவிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்தி ஒராண்டாகிவிட்டது.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசூப்சாயி போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர், "உங்களை மீட்பதில் நைஜீரிய தலைவர்களும், சர்வதேச சமூகமும் போதிய உதவி செய்யவில்லை. உங்களை மீட்பதற்கு அவர்கள் நிறைய மெனக்கிட்டிருக்க வேண்டும்.
நீங்கள் பத்திரமாக விடுதலையாக வேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கும் பலரில் நானும் ஒருவர்.
நீங்கள் இதுநாள் வரை தீவிரவாதிகள் பிடியில் சிக்கிக் கொண்டு படும் வேதனைகளை யூகித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. ஆனால், நாங்கள் உங்களை மறந்துவிடவில்லை. இதை மட்டும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரையும் ஆரத் தழுவி, உங்களுடன் சேர்ந்து இறைவனைத் தொழுது, உங்கள் குடும்பத்தினர் உங்கள் விடுதலையை கொண்டாடும் போது நானும் அதில் பங்கேற்க வேண்டும். அந்த நாளை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனது சகோதரிகள். அதுவும் துணிச்சலான சகோதரிகள்" என குறிப்பிட்டுள்ளார்.
போகோ ஹராம் தீவிரவாதிகளால் நைஜீரிய மாணவிகள் கடத்தப்பட்ட ஓராண்டு கடந்ததை நினைவுகூரும் வகையில் ('Bring Back Our Girls') பிரிங் பேக் அவர் கேர்ள்ஸ் என்ற பிரச்சாரக் குழு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Friday, April 10, 2015
இத்தாலிய நகரமான மிலனில் உள்ள நீதி அரண்மனை என்று அழைக்கப்படும் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நீதிபதி ஒருவரும், வழக்கறிஞர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டினை, மோசடி மற்றும் திவால் வழக்கு ஒன்றின் பிரதிவாதியே நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், அந்த நீதிமன்ற விளாகத்தில் தஞ்சம் புகுந்து இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் ஏஞ்சலீனோ அல்ஃபானோ கூறினார்.
பின்னர் மிலனின் வடக்கு பகுதியில் அந்த துப்பாக்கிதாரி பிடிக்கபட்டதாகத் தெரிகிறது.
நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சூழலில் அங்கிருந்து வழங்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் வெளியேற்றப்பட்ட பிறகு அவர்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் இறங்கி ஓடினர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர்.
துப்பாக்கிதாரியை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டபோது, மூன்றாவதாக இறந்து போன ஒருவருடைய சடலம் கிடைக்கப் பெற்றதாகவும் , ஆனால் அவர் எப்படி இறந்தார் எனத்தெளிவாகத் தெரியவில்லை எனவும் இத்தாலிய ஊடகம் ஒன்று கூறுகிறது.
பிரசவ நேரத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது போன்று ஆண்களுக்கும் 25 வாரங்கள் பிரசவ விடுமுறை வழங்கலாம் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
பிரசவ நேரத்தின் போது இங்கிலாந்தில் பெண்களுக்கு 50 வாரங்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனை கணவன் மற்றும் மனைவி இருவரும் 25 – 25 வாரங்களாக பிரித்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தால் ஆண்டுதோறும் 2,85,000 தம்பதிகள் பயனடைவார்கள் என்று இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமர் நிக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ’பெரும்பாலும் குழந்தைகளை தாய்மார்கள் மட்டுமே கவனித்து வளர்த்து வருகின்றனர். ஆண்களும் தங்களின் குழந்தையை அருகில் இருந்தே கவனித்துக் கொள்ள விரும்புவதாகவும், இந்த முடிவால் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியடைவார்கள்’ என்று கூறினார்
மலேசியத் தலைநகரில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டார்கள் எனும் சந்தேகத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய காவல்துறையின் தலைவர் கூறுகிறார்.
கோலாலம்பூரில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த இவர்களில் இருவர் அண்மையில்தான் சிரியாவில் மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து திரும்பியிருந்தனர் என காலித் அபு பகர் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையங்கள், இராணுவப் பாசறைகள் ஆகியவை அவர்களது திட்டமிட்ட இலக்குகளாக இருந்தன என்று மலேசியாவின் உள்துறை அமைச்சர் அஹ்மத் ஜாகித் ஹமீது கூறுகிறார்.
மலேசியாவில் தீவிரவாதத்துக்கு எதிரான புதிய சட்ட வழிமுறைகள் தொடர்பிலான பிரேரணைகளை கடந்த வாரம் அரசு முன்வைத்திருந்தது.
அதன் அடிப்படையில் தீவிரவாத சந்தேக நபர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் காலவரையற்ற காவலில் வைக்க வழியுள்ளது.
அரசு கொண்டுவந்துள்ள அந்தப் பிரேரணை ஒடுக்குமுறை நோக்கம் கொண்டது என மனித உரிமை அமைப்புகளும், எதிர்கட்சிகளுக்கும் கூறி அதை விமர்சித்துள்ளன.
ஒரே நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் ஸ்பான் போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஒரு நிமிடத்தில் சார்ஜ் ஆகும் புதிய ரக பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது செல்போன்களில் பயன்பாடடில் இருப்பது லித்தியம் மற்றும் அல்காலின் பேட்டரிகள். இந்த வகை பேட்டரிகளுக்குப் பதிலாக அலுமினியம் பேட்டரியை அமெரிக்க விஞ்ஞானிகள் புதிதாக வடிவமைத்துள்ளனர். இதில் அதிவிரைவாக சார்ஜ் செய்ய முடியும். அத்துடன் இதில் தீப்பிடிப்பது போன்ற அபாயம் இருக்காது.
இந்த அலுமினியம் பேட்டரி மற்ற பேட்டரிகளை போல சுற்றுச்சூழலையும் கெடுக்காது. இந்த வகை பேட்டரிகளை செல்போன் மட்டுமின்றி லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களில் பயன்படுத்தலாம் என்று அந்த விஞ்ஞானிகள் குழு தலைவர் ஹாங்கி டாஸ் தெரிவித்துள்ளார்.
இனி விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்போன்களுக்கு சார்ஜ்செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணிந்த நபர்கள் கழுத்தை வெட்டிக்கொல்வதைக் காட்டும் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த தீவிரவாதிகள் இஸ்லாமிய அரசு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஊகங்கள் உலவினாலும், இந்த காணொளியில் இருந்தவர்கள் தங்களை உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1990களில் நிறுவப்பட்ட இந்த குழு தாலிபனுடன் இணைந்து செயற்பட்டு வந்தது. ஆப்கானின் சிறைகளில் இருக்கும் தங்களின் சகாக்களை விடுவிக்காவிட்டால் தங்களிடம் இருக்கும் பணயக்கைதிகளின் தலைகளை துண்டித்துக் கொல்வோம் என்று இந்த தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
உடலுறவின்போது முதல் மனைவியின் பெயரை உச்சரித்ததால் காதல் கணவனை காதலி கொலை செய்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த அனடோலி (47) என்பவருக்கு, ஸ்வெட்லனா இல்வினா (45 என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அனடோலி ஏற்கனவே முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இரவு உடலுறவின்போது அனடாலி, தனது முதல் மனைவின் பெயரை உச்சரித்துள்ளார். பிறகு இதற்காக தனது காதலியிடம் மண்னித்து விடும்படி கெஞ்சி கேட்டுள்ளார். ஆனாலும், இல்வினாவிற்கு முதல் மனைவியை மறக்காததால் ஆத்திரம் தாங்கவில்லை.
இதனால், இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த இல்வினா தூங்கிக் கொண்டிருந்த கணவனை வெறி தீர கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் கூறி சரணடைந்துள்ளார்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “இந்த ஜோடிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகியுள்ளது. தனது முதல் மனைவி ஓல்காவின் பெயரை உச்சரித்துள்ளார். இதனை பொறுக்க முடியாமல் இவள் கொலை செய்துள்ளார்” என்றார்.
ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் நீக்கினால்தான், இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என வல்லரசு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகத்தான் அணுசக்தி திட்டங்களை செயல்படுத்துவதாக ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. மேலும், ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன.
இது தவிர, மேற்கத்திய நாடுகள் ஈரானின் அணுசக்தி உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த 2ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் ஈரான் அதிபர் ஹஸன் ரௌஹானி நேற்று தொலைக்காட்சி ஒன்றிற்கு ஆற்றிய உரையில், ‘‘ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் அகற்றினால்தான் அணு ஆயுத விவகாரத்தில் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவோம்” என்று கூறியுள்ளார்.
இந்த திடீர் நிபந்தனையால், மேற்கத்திய நாடுகள் தங்களது பொருளாதார தடைகளை விலக்கிக் கொண்டு இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமா அல்லது ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட போகின்றனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Monday, March 02, 2015
துபாயில் நகரின் சலையில் பணம் பறந்ததால், வாகனங்களில் சென்றவர்களும், பொதுமக்களும் அள்ளிச் சென்றனர்.
துபாயின், ஜூமைரா பகுதியிலுள்ள பிரதான சாலையில், திடீரென சூறாவளி காற்று வீசியுள்ளது. இந்த காற்றில் 500 திர்ஹாம் மதிப்பு கொண்ட ஆயிரக்கணக்கான நோட்டுக்கள் சாலையில் பறந்து வந்து விழுந்தன.
அப்போது சாலையில் வந்துக்கொண்டிருந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு பணத்தை அள்ளத் தொடங்கினர். ஏராளமானோர் தங்கள் கை நிறைய பணத்தை அள்ளிக்கொண்டு சென்றனர்.
ஆனால், இந்த பணம் எங்கிருந்து வந்தது, அது யாருடையது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏறத்தாழ 2 முதல் 3 மில்லியன் திர்ஹாம் தொகை காற்றில் பறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
துபாயில் லிஃப்டுக்குள் ஜோர்டான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இந்திய வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
கடந்த டிசம்பர் 17ஆம் தேதி புர்ஜ் துபாய் பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாக லிஃப்ட்டினுள் ஏறியுள்ளார். அப்போது உள்ளே இருந்த அந்த பெண், நலம் விசாரிப்பதுபோல் நைசாக பேச்சுக் கொடுத்துள்ளார்.
பிறகு திடீரென்று அந்த வாலிபரை நெருங்கி வந்து கட்டிப்பிடித்துள்ளார். லிஃப்ட் நான்காவது மாடியை அடைந்ததும், வாலிபரின் சட்டையை பிடித்து உள்ளே இழுத்து லிஃப்டுக்குள்ளேயே போட்டுள்ளார். பிறகு, ஏழாவது மாடிக்கு செல்லும்படி லிப்ட்டின் பொத்தானை அழுத்தியுள்ளார்.
அபோது அந்த வாலிபரை பலவந்தமாக கட்டியணைத்து வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் லிஃப்ட் 7ஆவது மாடியை அடைந்துள்ளது. அந்த பெண் மீண்டும் நான்காவது மாடிக்கு செல்லும் பொத்தானை அழுத்தியுள்ளார். 4ஆவது மாடியில் லிஃப்ட் நின்றிருக்கிறது.
அப்போதுதான் அந்த வாலிபர் அவளிடம் இருந்து விடுபட்டு தப்பி வந்துள்ளார். ஆனால், வெளியே வந்து பாக்கெட்டில் இருந்த பர்சை எடுத்துப் பார்த்துள்ளார். அதில் வைத்திருந்த 4500 திர்ஹமை (இந்திய மதிப்புக்கு சுமார் 72 ஆயிரம் ரூபாய்) அபேஸ் செய்துள்ளார்.
ஜோர்டான் நாட்டுப் பெண் விசாரணையின்போது இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ”நான் கடவுளுக்கு பயந்து நடப்பவள். எந்த தவறையும் நான் செய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.
வாலிபரை அந்த பெண் லிப்ட்டினுள் இழுத்துப் போடுவதும், வெளியே தப்பித்து ஓடிவர முயற்சித்ததும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்து, அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
திருமண உறவையும் தாண்டி ஆணும், பெண்ணும் மற்றொரு நபருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை என்று தென் கொரிய அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென்கொரியா அரசியல் சாசன சட்டத்தின்படி, ஒரு ஆண் அல்லது பெண் தன் மனைவியைத் தவிர, அல்லது கணவரைத் தவிர இன்னொருவருடன் உடலுறவு வைத்துக்கொண்டால் அது குற்றமாகக் கருதப்பட்டு வந்தது. இதற்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும், முறைகேடான பாலுறவில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 500ஆக அதிகரித்தது. மாறாக, இந்த வழக்குகளில் தண்டிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதாவது கணவர், மனைவி தவிர்த்து இரண்டாவது நபருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்னும் சட்டத்துக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை 9 பேர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரணை செய்தது. முடிவில், முறைகேடான பாலுறவு கிரிமினல் குற்றம் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை 7 நீதிபதிகள் இணைந்து வழங்கினார்கள். 2 நீதிபதிகள் மட்டும் இதை எதிர்த்தனர். எனவே மெஜாரிட்டி தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது.
அமெரிக்காவில், கன்னியாஸ்திரி முகாம் நடத்தி 'நான் கடவுளின் மனிதன்' என்று கூறி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறவான பாதிரியாரை காவல்துறையினர் பிரேசிலில் கைது செய்தனர்.
அமெரிக்காவின் மின்னியபொலிஸ் அருகே உள்ளது ஃபின்லேசன் பகுதி. இங்கு கிறிஸ்துவ மத தொண்டூழியம் செய்யவரும் இளம் பெண்களுக்கான கன்னியாஸ்திரி முகாமை பாதிரியாரான விக்டர் அர்டன் பெர்ணார்ட் என்பவர் நடத்தி வந்தார்.
53 வயதுடைய அவர், அந்த முகாமில் பயிற்சிக்காக வந்த ஒரு சிறுமியை 13 வயதில் இருந்து சுமார் 10 ஆண்டுகள் வரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார்கள் எழுந்தன.
இதேபோல், அதே முகாமில் தங்கியிருந்த மற்றொரு பெண், தன்னையும் அவர் 12 வயது முதல் 20 வயது வரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
'நான் கடவுளின் மனிதன் என்னுடன் நெருக்கமாக இருந்தால் உங்களின் கன்னித்தன்மைக்கு பாதிப்பு வராது' என்று கூறி அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக அந்தப் பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
மேலும், அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கத் தயங்கி வந்ததகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விக்டர் அர்டன் பெர்ணார்ட் கடந்த 2010 ஆம் ஆண்டு திடீரென தலைமறைவானார். அவரை அமெரிக்க காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
மேலும், அமெரிக்க அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டிருந்த அவரை பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இருந்து சுமார் 2,100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ப்ரையாடா பிப்பா கடற்கரை பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் பிரேசில் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவருடன் சுமார் 33 வயது மதிக்கத்தக்க பிரேசில் நாட்டுப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், பென்டிரைவ்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்நது, அவர்கள் விரைவில் அமெரிக்க காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடவுளின் பெயரால் ஒரு பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அச்சத்தை எற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது
Friday, February 06, 2015
அம்மான்,
விமானி கொலைக்கு பழி வாங்கும் விதமாக பெண் தீவிரவாதி உள்பட 2 பேரை ஜோர்டான் தூக்கில் போட்டது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது வெற்றி ஆகாது என்று கூறியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜோர்டான் மீது படையெடுப்போம் என்று மிரட்டியுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் அரபு நாடான ஜோர்டானும் இணைந்து களமிறங்கி உள்ளது. இந்த நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம், ஜோர்டான் போர் விமானி லெப்டினன்ட் மூவாத் அல் கசாஸ்பே (வயது 26) என்பவர் ஓட்டிச்சென்ற எப்-16 ரக போர் விமானம், ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதையடுத்து அவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பணயக்கைதியாக பிடித்துச் சென்றனர்.
மூவாத்தை விடுவிக்க, ஜோர்டானின் பிடியில் இருந்த பெண் தீவிரவாதி சஜிதாஅல் ரிஷாவியை விடுவிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் கெடு விதித்தனர். இதை நிறைவேற்ற தயாராக இருந்தபோதும், தங்களது போர் விமானியை உயிரோடு வைத்திருப்பதை நிரூபிக்கும் சான்று வேண்டும் என்று தீவிரவாதிகளிடம் ஜோர்டான் கோரியது. ஆனால் தீவிரவாதிகள் அப்படி ஏதும் தரவில்லை.
இந்த நிலையில், ஜோர்டான் போர் விமானி மூவாத் அல் கசாஸ்பேயை தீவிரவாதிகள் ஈவிரக்கமின்றி ஒரு உலோகக் கூண்டில் வைத்து உயிரோடு எரித்துக் கொன்றனர். இது தொடர்பாக இப்போது வெளியான வீடியோ, ஜோர்டானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்கக்கோரிய பெண் தீவிரவாதி சஜிதாஅல் ரிஷாவியும், மற்றொரு தீவிரவாதியான ஜைத் அல் கர்போலியும், ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள சவாகா சிறையில் அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே தூக்கில் போடப்பட்டனர். இதன்மூலம் தனது விமானி படுகொலை செய்யப்பட்டதற்கு ஜோர்டான் பழி தீர்த்தது. பெண் தீவிரவாதி சஜிதா அல் ரிஷாவிக்கு அம்மானில் 2005-ம் ஆண்டு 60 பேர் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று மற்றொரு தீவிரவாதியான ஜைத் அல் கர்போலிக்கு, 2008-ம் ஆண்டு, ஈராக்கில் உள்ள ஜோர்டான் மக்களை கொல்ல சதி செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது இவர்கள் இருவரையும் ஜோர்டான் தூக்கில் போட்டு, மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது வெற்றி ஆகாது, விமானி அதிகபெண்களை கொலை செய்துள்ளார் என்று கூறியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜோர்டான் மீது படையெடுப்போம் என்று மிரட்டியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
விமானி கொலைக்கு பழி வாங்கும் விதமாக பெண் தீவிரவாதி உள்பட 2 பேரை ஜோர்டான் தூக்கில் போட்டது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது வெற்றி ஆகாது என்று கூறியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜோர்டான் மீது படையெடுப்போம் என்று மிரட்டியுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் அரபு நாடான ஜோர்டானும் இணைந்து களமிறங்கி உள்ளது. இந்த நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம், ஜோர்டான் போர் விமானி லெப்டினன்ட் மூவாத் அல் கசாஸ்பே (வயது 26) என்பவர் ஓட்டிச்சென்ற எப்-16 ரக போர் விமானம், ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதையடுத்து அவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பணயக்கைதியாக பிடித்துச் சென்றனர்.
மூவாத்தை விடுவிக்க, ஜோர்டானின் பிடியில் இருந்த பெண் தீவிரவாதி சஜிதாஅல் ரிஷாவியை விடுவிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் கெடு விதித்தனர். இதை நிறைவேற்ற தயாராக இருந்தபோதும், தங்களது போர் விமானியை உயிரோடு வைத்திருப்பதை நிரூபிக்கும் சான்று வேண்டும் என்று தீவிரவாதிகளிடம் ஜோர்டான் கோரியது. ஆனால் தீவிரவாதிகள் அப்படி ஏதும் தரவில்லை.
இந்த நிலையில், ஜோர்டான் போர் விமானி மூவாத் அல் கசாஸ்பேயை தீவிரவாதிகள் ஈவிரக்கமின்றி ஒரு உலோகக் கூண்டில் வைத்து உயிரோடு எரித்துக் கொன்றனர். இது தொடர்பாக இப்போது வெளியான வீடியோ, ஜோர்டானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்கக்கோரிய பெண் தீவிரவாதி சஜிதாஅல் ரிஷாவியும், மற்றொரு தீவிரவாதியான ஜைத் அல் கர்போலியும், ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள சவாகா சிறையில் அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே தூக்கில் போடப்பட்டனர். இதன்மூலம் தனது விமானி படுகொலை செய்யப்பட்டதற்கு ஜோர்டான் பழி தீர்த்தது. பெண் தீவிரவாதி சஜிதா அல் ரிஷாவிக்கு அம்மானில் 2005-ம் ஆண்டு 60 பேர் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று மற்றொரு தீவிரவாதியான ஜைத் அல் கர்போலிக்கு, 2008-ம் ஆண்டு, ஈராக்கில் உள்ள ஜோர்டான் மக்களை கொல்ல சதி செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது இவர்கள் இருவரையும் ஜோர்டான் தூக்கில் போட்டு, மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது வெற்றி ஆகாது, விமானி அதிகபெண்களை கொலை செய்துள்ளார் என்று கூறியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஜோர்டான் மீது படையெடுப்போம் என்று மிரட்டியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டதையடுத்து ஜோர்டான் அரசு ஜிகாதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார். அவரை பிணைக் கைதியாக வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதுதொடர்பான விடியோவையும் வெளியிட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோர்டான் அரசு தங்களது பிடியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு தீவிரவாதிகளின் தண்டனையை நிறைவேற்றியது.
ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவி, அல்-கொய்தா கமாண்டர் ஜியாத் கார்போலி ஆகியோரை ஜோர்டான் அரசு தூக்கிலிட்டது. முன்னதாக முயாத்தை விடுவிக்க ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார். அவரை பிணைக் கைதியாக வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். இதுதொடர்பான விடியோவையும் வெளியிட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோர்டான் அரசு தங்களது பிடியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு தீவிரவாதிகளின் தண்டனையை நிறைவேற்றியது.
ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவி, அல்-கொய்தா கமாண்டர் ஜியாத் கார்போலி ஆகியோரை ஜோர்டான் அரசு தூக்கிலிட்டது. முன்னதாக முயாத்தை விடுவிக்க ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தைபே
தைவான் நாட்டின் தலைநகர் தைபேவில் உள்ள சங்சான் விமான நிலையத்தில் இருந்து காலை டிரான்ஸ்ஏசியா ஏடிஆர் 72-600 ரக விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானிகள் இரண்டு பேர் உள்பட 58 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம் ஒன்றில் மோதி, கீலங் ஆற்றுக்குள் விழுந்தது. விமானத்தின் இடது புற இறக்கை சாலையில் சென்ற கார் டாக்சியின் மீது மோதியுள்ளது. விமானம் விழுந்ததை அடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் பயணம் செய்த 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 19 பேரின் உடல்கள் மீட்கபட்டன மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விமானம் விழுந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
விமானம் மோதிய டாக்சியில் இருந்த டிரைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தைவானில் காலையில் நடைபெற்ற இந்தவிபத்து தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் விபத்துக்குள் சிக்கியபோது வானிலை மிகவும் சீராகவே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து தொடர்பாக விசாரணையும் தொடங்கியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் வேடிக்கைபார்த்து கொண்டிருந்த ஒருவர் தனது செல்போன் மூலம் எடுத்த வீடியோவை சோஷியல் மிடியாக்களில் வெலியிட்டு உள்ளார். அது பார்ப்பவர்களின் மனதை பதற வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிரான்ஸ்ஏசியா விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது இதில் 48 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தைவான் நாட்டின் தலைநகர் தைபேவில் உள்ள சங்சான் விமான நிலையத்தில் இருந்து காலை டிரான்ஸ்ஏசியா ஏடிஆர் 72-600 ரக விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானிகள் இரண்டு பேர் உள்பட 58 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம் ஒன்றில் மோதி, கீலங் ஆற்றுக்குள் விழுந்தது. விமானத்தின் இடது புற இறக்கை சாலையில் சென்ற கார் டாக்சியின் மீது மோதியுள்ளது. விமானம் விழுந்ததை அடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் பயணம் செய்த 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 19 பேரின் உடல்கள் மீட்கபட்டன மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விமானம் விழுந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
விமானம் மோதிய டாக்சியில் இருந்த டிரைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தைவானில் காலையில் நடைபெற்ற இந்தவிபத்து தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் விபத்துக்குள் சிக்கியபோது வானிலை மிகவும் சீராகவே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து தொடர்பாக விசாரணையும் தொடங்கியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் வேடிக்கைபார்த்து கொண்டிருந்த ஒருவர் தனது செல்போன் மூலம் எடுத்த வீடியோவை சோஷியல் மிடியாக்களில் வெலியிட்டு உள்ளார். அது பார்ப்பவர்களின் மனதை பதற வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிரான்ஸ்ஏசியா விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது இதில் 48 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது.
அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர். தீவிரவாதிகள் கெடு
இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த அல்–கசாஸ்பெயை விடுவிக்குமாறு கோரிக்கை எழுந்தது.
அவரை சிறை வைத்த தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர். விமானி அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.
அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதை உறுதிசெய்தால் பெண் தீவிரவாதியை ஒப்படைத்து விடுகிறோம் என்று ஜோர்டான் அரசு கூறியது. இதற்கிடையே ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோவை தலையை வெட்டி படுகொலை செய்தனர். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை.
விமானி உயிருடன் இருக்கிறாரா? என்பதற்கான ஆதாரத்திகாக காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இந்நிலையில் தீவிரவாதிகள் விமானி முயாத்தை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். அந்த வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
விமானி முயாத் அல்–கசாஸ்பெக்கு ஆரஞ்சு நிறஉடை அணிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றிலும் முகத்தை மூடிக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் நிற்கின்றனர். தீவிரவாதிகள் முயாத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரிக்கும் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூரச் செயல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொன்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டு தாக்குதலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பக்ரைன் ஆகிய நாடுகள் பங்குபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, டென்மார்க் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது.
அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர். தீவிரவாதிகள் கெடு
இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த அல்–கசாஸ்பெயை விடுவிக்குமாறு கோரிக்கை எழுந்தது.
அவரை சிறை வைத்த தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர். விமானி அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.
அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதை உறுதிசெய்தால் பெண் தீவிரவாதியை ஒப்படைத்து விடுகிறோம் என்று ஜோர்டான் அரசு கூறியது. இதற்கிடையே ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோவை தலையை வெட்டி படுகொலை செய்தனர். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை.
விமானி உயிருடன் இருக்கிறாரா? என்பதற்கான ஆதாரத்திகாக காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இந்நிலையில் தீவிரவாதிகள் விமானி முயாத்தை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். அந்த வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
விமானி முயாத் அல்–கசாஸ்பெக்கு ஆரஞ்சு நிறஉடை அணிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றிலும் முகத்தை மூடிக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் நிற்கின்றனர். தீவிரவாதிகள் முயாத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரிக்கும் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூரச் செயல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொன்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டு தாக்குதலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பக்ரைன் ஆகிய நாடுகள் பங்குபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, டென்மார்க் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
Thursday, January 22, 2015
ஜப்பான் பிணையக் கைதிகளை விடுவிக்க அந்நாடு 200 மில்லியன் டாலர்களை தர வேண்டும். இல்லையெனில் அவர்களைக் கொன்று விடுவோம் என ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் கெடு விதித்துள்ளனர்.
அரபு நாடுகளான ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் இஸ்லாமிய நாடாக அறிவித்து வருகிறது. மறுபுறம், அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து கொண்டு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இதனால் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர், போரில் ஈடுபடும் நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் வண்ணம் பிணைக் கைதிகளின் தலைகளை துண்டித்து கொன்று வருகின்றனர். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கெதிரான நடவடிக்கைக்கு ஜப்பான் 200 மில்லியன் டாலர்களை நிதி உதவியாக அளிப்பதாக அறிவித்திருந்தார்.
எனவே, ஜப்பான் நாட்டிற்கு மிரட்டல் விடுக்கும் விதமாக கெஞ்சி கோட்டூ, ஹாருணா யுக்கவா என்ற 2 பேரை அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களின் காணொளியை வெளியிட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ், அதில், “எங்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளுடன் ஜப்பான் சேர்ந்துள்ளதால், ஜப்பானியர்களை குறி வைத்துள்ளோம். எங்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல, நீங்கள் 100 மில்லியன் டாலர் கொடுத்துள்ளீர்கள்.
ஐஎஸ்ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான முட்டாள் தனமான இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இந்த ஜப்பானியர்கள் அவர்களது அரசை நிர்ப்பந்திக்க 72 மணிநேரம் தருகிறோம். அதற்குள் 200 மில்லியன் டாலர் தர வேண்டும்.
இதற்கு நீங்கள்தான் நெருக்கடி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த கத்தி உங்களின் தூக்கத்தை கெடுக்கும்” என்று கூறியுள்ளனர்.
விடுவிக்க பிரதமர் கோரிக்கை:
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள ஜப்பானியர்கள் இரண்டு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய ஜப்பான் பிரதமர், “அவர்கள் பாதிக்கப்படக் கூடாது, எனவே அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நான் உறுதியாக வலியுறுத்துகிறேன்,” என்று ஜெருசேலத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...