Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    

ஆலந்தூர்,

விடுதியில் பெண்கள் குளிப்பதை செல்போனில் ஆபாச படம் எடுத்ததாக போலி சி.பி.ஐ. அதிகாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் மற்றும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.பெண்களை ஆபாச படம் எடுத்தார்

சென்னை திருவான்மியூர் பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன்(வயது 27). இவர், வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது.தாமோதரன், பெண்கள் தங்கும் விடுதியில் உள்ள குளியல் அறையில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருவான்மியூர் போலீசாருக்கு பெண்கள் விடுதி நிர்வாகி தகவல் தெரிவித்தார்.போலி சி.பி.ஐ. அதிகாரி

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருவான்மியூர் போலீசார், தாமோதரனிடம் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் அவர், தான் சி.பி.ஐ.யில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருவதாக கூறினார். ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், தாமோதரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் தீவிரமாக நடத்திய விசாரணையில் தாமோதரன் போலி சி.பி.ஐ. அதிகாரி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.போலி அடையாள அட்டைகள்

தாமோதரனிடம் சி.பி.ஐ. சப்–இன்ஸ்பெக்டர், வக்கீல், பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் என 3 போலியான அடையாள அட்டைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து அவரிடம் இருந்த போலி அடையாள அட்டைகள், அவர் பயன்படுத்திய சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கார், போலீஸ் சீருடைகள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.கைது

அவரது செல்போனில் விடுதியில் பெண்கள் குளிக்கும் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாமோதரனை போலீசார் கைது செய்து அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.தாமோதரனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறும்போது, ‘‘தாமோதரன் சி.பி.ஐ.யில் சப்–இன்ஸ்பெக்டராக இருப்பதாக போலியான அடையாள அட்டையை வைத்துக்கொண்டு சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரில் வலம் வந்து உள்ளார். தனக்கு அரசு வேலை கிடைத்து உள்ளதாக அவரது பெற்றோரையும் ஏமாற்றி வந்து உள்ளார். விடுதியில் தங்கி இருந்த பெண்களை தன் வலையில் சிக்க வைக்க அவர்களை செல்போனில் ஆபாச படம் எடுத்து உள்ளாரா?, சி.பி.ஐ. அதிகாரியாக நடித்து தவறாக நடந்து உள்ளாரா? என்பது குறித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    

மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கும்போது, ரயில் புறப்பட்டதால் குழந்தையுடன் தண்டவாளத்துக்குள் விழுந்த தாயின் கால் துண்டானது. குழந்தை பரிதாபமாக இறந்தது.

சென்னை கே.கே.நகரில் வசிப்பவர் சிங்காரவடிவேலன்(37). கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி லட்சுமி(33), இவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தை ஏகாஸ்ரீ. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிங்காரவடிவேலன் குடும்பத்துடன் சொந்தஊரான தஞ்சாவூருக்குச் சென்றார். மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் இரவு, தஞ்சாவூரில் இருந்து சிங்காரவடிவேலன் குடும்பத்துடன் ஏறினார். எஸ்.4 முன்பதிவு பெட்டியில் அவர்கள் பயணம் செய்தனர். இந்த ரயில் நேற்று காலை 5.32 மணிக்கு சென்னை மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வந்தது.   

அப்போது, பை மற்றும் உடமை களுடன் சிங்காரவடிவேலன் முதலில் இறங்கி விட்டார். குழந்தையுடன் லட்சுமி இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. இதனால் நிலை தடுமாறிய லட்சுமி, குழந்தையுடன் தவறி விழுந்தார். ரயில் பெட்டிக்கும்-நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளி வழியாக அவர் தண்டவாளத்துக்குள் விழுந்து விட்டார். கணவர் கண் முன் நொடிப்பொழுதில் இந்த சம்பவம் நடந்தது. சிங்காரவடிவேலனும், மற்ற பயணிகளும் இதைப் பார்த்து கூச்சல் போட்டனர். ஆனால் ரயில் நிற்காமல் சென்று விட்டது.

ரயில் சென்றதும் தண்டவாளங்க ளுக்கு இடையில் லட்சுமியும் குழந்தை யும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து சிங்காரவடிவேலன் கதறி துடித்தார். குழந்தையின் உடலில் ரயில் ஏறி இறங்கியிருந்ததால் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே குழந்தை பலியாகி விட்டது. லட்சுமியின் இடது காலில் ரயில் ஏறியதில் இடது கால் முட்டிக்கு கீழ் துண்டாகி விட்டது. வலது காலும் கடுமையாக சேதம் அடைந்து இருந்தது. பயணிகளும், போலீ ஸாரும் லட்சுமியை மீட்டு, 108 ஆம்பு லன்ஸ் மூலம் ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். குழந்தை ஏகாஸ்ரீ உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown in    

ஆதார் எண் வழங்கும் பணியை அக்டோபர் 1 முதல் தமிழக அரசின் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்திடம் அளிக்கப்பட உள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பு விவரங்களை பாரத மிகு மின் நிறுவனம் கணினியில் சேகரித்து வருகிறது. இந்த நிலையில், பாரத மிகு மின் நிறுவனத்திடம் இருந்து ஆதார் எண் வழங்கும் பணியை தமிழக அரசின் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதன்படி, அக்டோபர் 1 முதல் 400-க்கும் மேற்பட்ட இ. சேவை மையங்களில் ஆதார் எண் வழங்கப்பட உள்ளன.
ஆதார் எண் கிடைக்கப் பெற்றவர்களுக்கு பிளாஸ்டிக் வடிவிலான அடையாள அட்டைகளை அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்கெனவே வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

On Tuesday, September 06, 2016 by Unknown in    


சென்னை : வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(செப்.,6) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தென் மேற்கில் இருந்து மேற்கு நோக்கி 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் கடல் காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

On Tuesday, September 06, 2016 by Unknown in    

ஜம்மு: இந்திய - பாக்., எல்லையில் பாக்., படையினர் இந்திய துருப்புகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இந்திய படையினர் திருப்பி சுட்டனர். உயிர்ச்சேதம் ஏதுமில்லை.

காஷ்மீர் பூஞ்ச் மாவட்டதின் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை ஜம்மு காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். இந்த வாரத்தில் பாகிஸ்தான் நடத்தும் 2 வது தாக்குதல் ஆகும். 

பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்த மீறும் செயல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

On Tuesday, September 06, 2016 by Unknown in    

தமிழகத்திற்கு தினமும் 15,000 கன அடி வீதம் காவிரி நீரை 10 நாட்களுக்குத் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. 

மேலும் காவிரியில் இருந்து நீர் திறந்து விடுவதை காவிரி கண்காணிப்புக் குழு மேற்பார்வையிடவும், இதற்காக காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு 3 நாட்களுக்குள் அணுகவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

தங்களது கோரிக்கையை தமிழகம் 3 நாட்களுக்குள் குழுவிடம் அளிக்க வேண்டும். 3 நாட்களுக்குப் பிறகு கர்நாடக அரசின் நிலையை குழு கேட்டறிய வேண்டும். இரு மாநில நிலமைகளையும் கேட்டறிந்து 4 நாட்களில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். 

காவிரியில் 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிரக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ளது. அடுத்த விசாரணை 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக இந்த விசாரணையை முன்னிட்டு கர்நாடகாவில் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கட்டுப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Thursday, December 25, 2014

On Thursday, December 25, 2014 by farook press in ,    
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்த 19 வயது பெண், கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவரை காதலித்தார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை, நீலாங்கரை அருகே உள்ள அக்கரை கடற்கரைக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பும்போது, மோட்டார்சைக்கிளில் போலீஸ்போல் வந்த ஆசாமி, அவர்களை மிரட்டினார்.
இதைத்தொடர்ந்து மாணவியை மட்டும் விசாரணை என்று கூறி அழைத்துச்சென்ற அந்த ஆசாமி, ஒரு அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி புகார் அளித்தார். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மர்ம ஆசாமி குறித்து துப்புதுலக்குவதற்காக, 4 தனிப்படைகளை அமைத்து, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியில் கல்லூரி மாணவி, மோட்டார்சைக்கிளில் செல்வது பதிவாகி உள்ளது.
ஆனால் மோட்டார்சைக்கிளை ஓட்டிய நபர் முகம் தெளிவாக தெரியவில்லை. கல்லூரி மாணவியை மிரட்டி அழைத்து சென்று கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் மருத்துவபரிசோதனை அறிக்கை வந்த பிறகு உண்மை தகவல்கள் தெரியவரும் என்றும் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Wednesday, December 03, 2014

On Wednesday, December 03, 2014 by farook press in ,    
பாரதீய ஜனதா மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் வேலூர் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த்ரெட்டி, சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை பால்காரர் சுரேஷ், குடியாத்தம் நகைக்கடை ஊழியர் பஞ்சாட்சரம் ஆகியோர் கொலை வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 3 தீவிரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.இந்த கொலை வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரவாதிகள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்குகளின் விசாரணை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்காக 3 பேரும் பலத்த போலீஸ் காவலுடன் தனித்தனி வாகனங்களில் வேலூர் சிறையில் இருந்து பூந்தமல்லி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வந்தனர். இதில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் 3 பேரையும் புழல் சிறையில் அடைத்து, இங்கிருந்து பாதுகாப்பாக பூந்தமல்லி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என சிறைத்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், நேற்று காலை 9 மணிக்கு தீவிரவாதிகள் 3 பேரும் வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டனர்.
On Wednesday, December 03, 2014 by farook press in ,    
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் மலேசியா சென்றார். படப்பிடிப்பில் பங்கேற்ற அவர் நேற்று இரவு 11.40 மணி அளவில் மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது மகனின் படப்பிடிப்புக்காக நான் மலேசியா சென்றேன். படம் வெளியாவது எப்போது என்பது எனக்கு தெரியாது. அதை டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தான் கேட்க வேண்டும். நாளை (4–ந்தேதி) நடைபெறும் சட்டசபை கூட்டத்தில பங்கேற்பது பற்றி கேட்டதற்கு, தமிழகத்தில் உள்ள அரசியல் நிலைமை எதுவும் எனக்கு தெரியாது. எல்லாவற்றையும் அறிந்த பின்னர் தான் பதில் அளிக்க முடியும்
On Wednesday, December 03, 2014 by farook press in ,    
ஒரே நேரத்தில் 3 மொழிகளில் ரெயில்களின் பெயர், நேரம் அடங்கிய டிஜிட்டல் தகவல் பலகை எழும்பூர் ரெயில் நிலையத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
ரெயில்கள் வரும் நேரம், எந்த நடைமேடையில் வரும், ரெயில்களின் பெயர்கள் ஆகியவற்றை பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு ரெயில்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வசதியாக கூடுதலாக டிஜிட்டல் முறையில் தகவல்கள் பலகைகள் வைக்கப்பட உள்ளன.இதுகுறித்து சென்னை எழும்பூர் ரெயில் நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவதுசென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்களின் பெயர், வரும் நேரம் ஆகியவை அடங்கிய டிஜிட்டல் தகவல் பலகை 15 அடி அகலம், 10 அடி நீளம் அளவில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வைக்கப்பட்டது. இது பயணிகளின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து தற்போது சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேலும் 6 இடங்களில் டிஜிட்டல் தகவல் பலகை வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரெயில் நிலையத்தில் கார் மற்றும் ஆட்டோக்களில் வந்து இறங்குபவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாகவும், ரெயில் நிலையத்துக்கு நேர் எதிரே உள்ள சாலையில் இருந்தபடியே பார்ப்பதற்கு ஏதுவாகவும் 30 அடி நீளம், 10 அடி அகலத்தில் டிஜிட்டல் தகவல் பலகை வைக்கப்பட உள்ளது.இந்த டிஜிட்டல் தகவல் பலகையில் 8 ரெயில்களின் பெயர்கள், ரெயில்கள் வரும் நேரம், புறப்படும் நேரம், எந்தெந்த நடைமேடையில் நிற்கும் போன்ற தகவல்களை பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமானது என்னவென்றால் தெற்கு ரெயில்வேயிலேயே முதன் முறையாக 3 மொழிகளும் (தமிழ், ஆங்கிலம், இந்தி) ஒரே நேரத்தில் இந்த டிஜிட்டல் தகவல் பலகையில் ஒளிப்பரப்படுகிறது.ஏற்கனவே எழும்பூர் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தகவல் பலகை 3 மொழிகளும் மாறி மாறி வரும்படி, அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதற்கான பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. இந்த மாதம் (டிசம்பர்) தொடக்கத்தில் ஒளிபரப்ப இருக்கிறோம். மேலும் 5 டிஜிட்டல் தகவல் பலகைகளில் ஒன்று எழும்பூர் ரெயில் நிலைய நுழைவுவாயில் அருகிலும் (5 ரெயில்களின் பெயர்கள் இடம்பெறும்), 2 தகவல்பலகைகள் பயணிகள் நடந்து செல்லும் மேம்பாலத்திலும், அடுத்த 2 தகவல் பலகைகள் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் வரும் பகுதியில் வைக்கப்பட உள்ளது. மேற்கூறப்பட்ட 4 டிஜிட்டல் தகவல் பலகைகளில் 2 ரெயில் களின் பெயர்கள் இடம்பெறும் அளவுக்கு வைக்கப்படும்.

Monday, November 10, 2014

On Monday, November 10, 2014 by farook press in ,    
சென்னை  ஆலந்தூரில்  உள்ள  நங்கநல்லூரில் 30 ஆண்டு  பழமை  வாய்ந்த நல  மருத்துவ  மனையில்  spring  med spa என்ற   அதி  நவீன மருத்துவ அழகு  சாதன  நிலையம்  துவங்கபட்டது . இதில்  தமிழ்நாட்டில்  முதல் முறையாக  உயர்  தரமான  சிகிச்சைகளை  வெளிநாட்டில்  இருந்து  அதி நவீன  கருவிகள்  வரவளைக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்படும்  என்று சிகிச்சை  அளிக்கப்படும்  என்று Dr . ரஜினிகாந்த்  கூறுகிறார் .இங்கு  முடி , சருமம் ,முகம் ,கழுத்து ,வயிறு  மற்றும்  கால்களுக்கான  சிகிச்சை  அளிக்கப்படுகிறது . இங்கு    நடுத்தர  மக்களும்  இதில்  கலந்துகொண்டு  பயன்பயன்பெரலாம். 

Sunday, October 19, 2014

On Sunday, October 19, 2014 by farook press in ,    
மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாஸ்போர்ட் கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால், பாஸ்போர்ட் சேவா கேந்திரா என்று சென்னையில் சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போட் கிளை அலுவலகம் செயல்படுகின்றன. இந்த 3 அலுவலகத்திலும் நாள் ஒன்றுக்கு பாஸ்போட் கேட்டு 1,850 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. தற்போது, விண்ணப்பங்கள் அதிக அளவில் வருவதால், நாள் ஒன்றுக்கு 2,080 விண்ணப்பங்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வருகிற 30-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் அண்மை காலமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் கேட்டு வரும் விண்ணப்பம் நாள் ஒன்றுக்கு 110-ல் இருந்து 180 ஆக உயர்ந்துள்ளது. எனவே, சென்னையில் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் வருகிற நவம்பர் 1-ந் தேதி ‘பாஸ்போர்ட் மேளா’ நடத்தப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்களது இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களின் அசல் சான்றிதழ் மற்றும் அதனுடைய 2 நகல்களையும் கொண்டு வரவேண்டும்.

Friday, October 17, 2014

On Friday, October 17, 2014 by farook press in ,    
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதேபோல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

தையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரது சார்பிலும் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அவசரமாக ஜாமீன் வழங்கத் தேவையில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் வயது மற்றும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.
இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமியும் உச்ச நீதிமன்றம் வந்தார். ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக நான்தான் முதன்முதலாக‌ வழக்கு தொடுத்தேன். எனவே எனது கருத்தை கேட்ட பிறகே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (17ஆம் தேதி) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோகூர், பி.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வு முன்னர் நடைபெற்றது.
வாதத்தின்போது சுப்பிரமணியன் சுவாமி, " நீதிமன்றம் அதிமுகவினர் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து அதிமுகவினர் தமிழக்த்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக நீதிமன்றத்தையும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் அவமதித்து வருகின்றனர்.கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கன்னடர் என்பதாலேயே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததாகவும் அவதூறு பரப்புகின்றனர். நான், சென்னைக்கு சென்றால் எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.
ஜெயலலிதா, அவரது கட்சித் தொண்டர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்தால் மட்டுமே வன்முறைகள் முடிவுக்கு வரும். இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், "ஜெயலலிதா முக்கிய பதவி வகித்தவர் என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்க சொல்லித்தான் வாதம் செய்தோம். தண்டனைக்கு தடை தடை விதிக்கக் கோரி வாதாடவில்லை. சிறையில் இருப்பதால் மருத்துவ வசதிகளை ஜெயலலிதாவால் பெற முடியவில்லை. ஜாமீன் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என்றார்.
அப்போது நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைத்தால் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, தண்டனையை நிறுத்தி வைப்போம் என நினைக்க வேண்டாம் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.
ஜெயலலிதா தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு, "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 18 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்தார். அதை கருத்தில் கொண்டால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவை இன்னும் 20 ஆண்டுகள்கூட இழுத்தடிப்பார்.

எனவே, ஜாமீன் வழங்கியத்தில் இருந்து 6 வாரத்துக்குள், அதாவது டிசம்பர் 18 ஆம் தேதிக்குள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வதில் ஒரே ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது. மீறினால் ஜாமீன் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது வரும். குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 18 ல் கட்டாயம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும்.அதேபோல், ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
ஜெயலலிதா உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் ஜெயலலிதா கருத்துகள் வெளியிடக் கூடாது" என்றனர்.
இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் சுசில்குமார் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு டிசம்பர் 18 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனையையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். வழக்கையும் அன்றைய தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் உடல் நலக்குறைவை காரணம் காட்டியே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் வழங்கப்பட்டுள்ள 2 மாத காலத்திற்கும் ஜெயலலிதா வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்றும், சாதாரண நபர் போன்று வெளியில் செல்லக்கூடாது என்றும், டாக்டர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.மேலும் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தண்டனை வழங்கியதை தொடர்ந்தும், கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்ததை தொடர்ந்தும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என்றும், அதிமுகவினர் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தாமல் ஜெயலலிதா பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.முன்னதாக ஜெயலலிதாவுக்காக ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் பாலி நாரிமனும் இது தொடர்பான உத்தரவாதத்தை அளித்தார்.இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு வெளியேயும், ஜெயலலிதாவின் இல்லம் அமைந்திருக்கும் போயஸ் கார்டன், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திலும் திரண்டிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இன்றைய தினம் அதிமுகவின் 43 வது ஆண்டு விழா கொண்டாட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஜெயலலிதா சிறையில் இருப்பதால், அக்கட்சியினர் காலையில் உற்சாகமின்றியே காணப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பகல் 12.15 மணி அளவில் ஜாமீன் கிடைத்ததாக தகவல் கிடைத்த பின்னரே அதிமுகவினரிடம் உற்சாகம் காணப்பட்டது.ஜாமீன் உத்தரவாதத்தை நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவிடம் ஜெயலலிதா வழக்கறிஞர்கள் வழங்க உள்ளனர். இந்த உத்தரவாதத்தை ஏற்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா ஜாமீனில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்த பின்னரே ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் ஜாமீனில் விடுதலை ஆக முடியும். ஒருவேளை குன்ஹா இல்லையென்றாலும், சம்பந்தப்பட்ட நீதிமன்ற அலுவலகமே, தேவையான ஜாமீன் உத்தரவாத ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்கலாம். எனவே ஜெயலலிதா இன்று மாலை அல்லது நாளை விடுதலை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறதஇந்நிலையில் சிறையில் இருந்து வெளிவரும் ஜெயலலிதாவை விமானம் மூலம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சென்னை வரும் ஜெயலலிதா நேரடியாக தனது போயஸ்கார்டன் இல்லத்திற்கு செல்வாரா அல்லது உடல் நலக்குறைவுக்காக மருத்துவமனைக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.உடல்நலக்குறைவை காரணம் காட்டியே ஜாமீன் பெறப்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Monday, October 13, 2014

On Monday, October 13, 2014 by farook press in ,    
விசாகப்பட்டினம் அருகே புயல் கரையை கடந்தபோது, மெரினா கடற்கரையிலும் கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் எழுந்தது. இதனால் மெரினா வெறிச்சோடி காணப்பட்டது.
வங்க கடலில் நிலை கொண்ட ஹூட் ஹூட் புயல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு இடையே மையம் கொண்டிருந்தது. இந்தப்புயல் நேற்று பகல் விசாகப்பட்டினம் அருகே பலத்த காற்றுடன் கரையை கடந்தது.
இதனையொட்டி தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், ஆந்திராவில் புயல் கரையை கடக்க உள்ளது என்ற தகவல் காரணமாக நேற்று பகல் பொழுதில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது.
காலை வேளையில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது.
மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் பகல் நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் சாலை முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. போலீசார் மட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேப்பியர் பாலம் அருகில் உள்ள இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி அலுவலகத்திலும் கடற்படை வீரர்களும், மீட்பு படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
கடற்சீற்றம் காரணமாக ராட்சத அலைகளும் எழுந்ததால், கடற்கரைக்கு வந்த ஒரு சில இளைஞர்கள் செல்போன் மூலம் ராட்சத அலைகளை படம் எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கடலில் தண்ணீர் இருக்கும் பகுதிக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வழக்கமாக பகல் பொழுதில் மெரினா கடற்கரையில் அதிகம் காணப்படும் காதல் ஜோடிகளையும் காணமுடியவில்லை. புயல் கரையை கடந்துவிட்டது என்று அறிவிப்பு வந்த உடன் பொதுமக்கள் வழக்கம் போல் மெரினா கடற்கரையில் குளித்து ஆரவாரம் செய்தனர்.
On Monday, October 13, 2014 by farook press in ,    
சென்னையில் கந்து வட்டி கும்பலை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். நேற்று கணவன்-மனைவி இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நகரில் கந்து வட்டிக்கொடுமையில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்களை, சிறையில் தள்ளி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கந்து வட்டி வசூலித்து கோடிகளை அள்ளி, கொடுமை புரிந்து வந்த 9 பேர் கடந்த 2 மாதங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குண்டர் சட்டமும் இவர்கள் மீது பாய்கிறது.
இருந்தாலும் சென்னையில் கந்து வட்டிக்காரர்களின் அட்டூழியம் தொடர்கிறது. இதனால் கந்து வட்டி கொடுமை புரிபவர்களை தொடர்ந்து வேட்டையாடி பிடிக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் செயல்படும் தனிப்படை போலீசார், கந்து வட்டி வசூலித்த கணவன்-மனைவி இருவரை கைது செய்தனர்
நேற்று கைதான கல்யாணராமன், அவரது மனைவி தமிழ்செல்வி என்ற செல்வி ஆகியோர், சென்னை பள்ளிக்கரணை, துலுக்காணத்தம்மன் கோவில், பிரதான சாலையில் வசிக்கிறார்கள். கல்யாணராமன் எலக்ட்ரீசியன் வேலை பார்த்தவர். தமிழ்செல்வி, வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார்.
நாளடைவில், இவர்கள் ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு சீட்டு நடத்தி அதன்மூலம் சம்பாதித்த பணத்தை கந்து வட்டிக்கு கடன் கொடுத்து வந்தனர். 10 சதவீதம் வட்டி வசூலித்து வந்துள்ளனர்.
பள்ளிக்கரணை தனம் நகரைச் சேர்ந்த கற்பகம் என்பவர், இவர்களிடம் தனது குடும்ப செலவுக்காக ரூ.2.95 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு ரூ.6.89 லட்சம் வட்டியாக திருப்பி கொடுத்துள்ளார். ஆனால், மேலும் ரூ.3.55 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன கற்பகம், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து விட்டார். புகார் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவின் கந்து வட்டி தனிப்படை போலீசார், வழக்குப்பதிவு செய்து, கல்யாணராமனையும், அவரது மனைவி தமிழ்செல்வியையும் கைது செய்து சிறையில் தள்ளி விட்டனர்.
கந்து வட்டி கொடுமையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவாவுடன் இணைந்து புது படத்தில் நடிப்பேன் என்று நடிகர் விஷால் கூறினார்.விஷால், சுருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் பூஜை. ஹரி இயக்கியுள்ளார். தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகிறது.
 இதையொட்டி விஷால் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–பூஜை படம் தமிழ், தெலுங்கில் தீபாவளிக்கு வருகிறது. ஏற்கனவே நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு படங்களை தயாரித்தேன். பூஜை படத்தையும் நானே தயாரித்து இருக்கிறேன். குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக வந்துள்ளது. சத்யராஜும் இப்படத்தில் நடித்துள்ளார். அவரோடு நடிப்பது பெருமையாக இருந்தது.
சுருதிஹாசனுக்கு நல்ல கேரக்டர். ரொம்ப அழகாக தெரிவார். நல்ல காதலும் படத்தில் இருக்கிறது.ஹரியுடன் தாமிரபரணி படத்தில் இருந்தேன். இப்போது மீண்டும் சேர்ந்தது இருக்கிறோம். அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவை நகரை பின்னணியாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். கதை கோவையில் துவங்கி பாட்னாவில் முடியும். அரிவாள், துப்பாக்கியெல்லாம் தூக்கியுள்ளேன். தயாரிப்பாளரானதும் தூக்கம் குறைந்து விட்டது. நான் தயாரித்த படங்களில் பூஜை முக்கிய படமாக இருக்கும்.
 325 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறோம்.இப்படத்தை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கும் ஆம்பள படத்தில் நடிக்கிறேன். பிறகு சுசீந்திரன் படத்தில் நடிக்க உள்ளேன். அப்படத்தில் ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். லட்சுமிமேனனை ஜோடியாக்கும் படி டைரக்டர்களை நிர்ப்பந்திக்கவில்லை.மேலும் விஷால் கூறும் போது ‘‘நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட சம்பளம் வாங்காமல் புது படமொன்றில் நடிக்க இருக்கிறேன். இதில் என்னுடன் ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா உள்ளிட்ட மேலும் பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். யாரும் சம்பளம் வாங்க மாட்டார்கள். இலவசமாகவே நடிக்கிறார்கள். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு துவங்கும். டைரக்டர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை’’ என்றார்.சுருதி ஹாசன் பேசும் போது, பூஜை நல்ல படம். இதில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. புது அனுபவம் கிடைத்தது திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று நான் சொன்னதாக வெளி வந்த செய்தியில் உண்மை இல்லை. நான் அப்படி சொல்லவே இல்லை என்றார்.சத்யராஜ் கூறும் போது நான் நடிக்க வந்து 36 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது குணசித்திர வேடங்களில் வருகிறேன். ஒவ்வொரு படத்திலும் நல்ல கேரக்டர்கள் அமைகிறது. பூஜை படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன் என்றார்.

டைரக்டர் ஹரி, ஒளிப்பதிவாளர் ப்ரியன், தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோரும் பேசினார்கள்.

Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்படும்படியாக சென்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது கோணிப்பையில் 25 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார்(வயது 25) என்பதும், டாஸ்மாக் கடையில் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி டாஸ்மாக் கடை விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி அன்று திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது. சிவகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றினர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை தண்டையார்பேட்டை ரெயில்வே யார்டில் மின்வயரில் சிக்கிய காற்றாடியை எடுக்க சென்றபோது மின்சாரம் தாக்கி 10–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 15). இவன், அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 1–ந் தேதி தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் ரெயில்வே யார்டில் உள்ள மின்சார கம்பியில் சிக்கிய காற்றாடியை எடுக்க அங்கிருந்த ரெயில்வே பணி வண்டியில் ரமேஷ் ஏறினான். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்வயரில் அவனது உடல் உரசியது.
இதில் அவன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். படுகாயம் அடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி வ.உ.சி. நகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரம் கம்ப்யூட்டர் பழுதானது. இதனால் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென குடியுரிமை பகுதி, போர்டிங் பாஸ் வழங்கும் பகுதி ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர்கள் பழுதாகி செயல் இழந்தது.
அப்போது சென்னையில் இருந்து லண்டன், குவைத், கொழும்பு, மஸ்கட், பக்ரைன் உள்பட 10 நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. அதில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் பாதுகாப்பு சோதனை மற்றும் குடியுரிமை சோதனை செய்வதற்காக நீண்ட வரிசையில் கவுண்ட்டர்களில் காத்து இருந்தனர்.
ஆனால் கம்ப்யூட்டர் பழுதானதால் விரைவாக சோதனை நடத்த முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் வந்து பார்த்தனர்.
இது பற்றி கம்ப்யூட்டர் பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்களில் பலர் தசரா மற்றும் பக்ரீத் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இதையடுத்து பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்து மீண்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
5 மணிநேர போராட்டத்துக்கு பிறகு காலை 7.30 மணி அளவில் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதுவரை பயணிகள் சோதனை மற்றும் போர்டிங் பாஸ் வழங்கும் பணிக்காக கூடுதலான ஆட்களை நியமித்து வழங்கப்பட்டன.
இதனால் 10 விமானங்களும் சுமார் அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி சென்னை புறநகர் பகுதியில் அ.தி.மு.க.வினர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நந்தம்பாக்கத்தில் மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான எஸ்.ராஜசேகர் தலைமை தாங்கினார். மண்டலக்குழு தலைவர் பரிமளா நந்தகுமார், கவுன்சிலர்கள் ஹேமாபரணிபிரசாத், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, எம்.எல்.ஏ.க்கள் ப.தன்சிங், வி.என்.பி.வெங்கட்ராமன், ஒன்றிய தலைவர் என்.சி.கிருஷ்ணன், பட்ரோடு தேன்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் மூவரசம்பட்டில் மாவட்ட பாசறை செயலாளர் கோவிலம்பாக்கம் ராஜேஷ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அப்போது மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் பக்தவச்சலம் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் 10 பேர் மொட்டை போட்டுக்கொண்டனர்.
கொட்டிவாக்கத்தில் பெருங்குடி மண்டலக்குழு தலைவர் கொட்டிவாக்கம் ராஜாராம் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் கே.பி.கந்தன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் டி.வி.நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஆலந்தூர் நகர ஜெயலலிதா பேரவை சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. மாநகராட்சி கவுன்சிலரும், பேரவை செயலாளருமான சீ.வேம்பரசன் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் என்.தனசேகரன், எஸ்.வரதராஜன், பி.சிவராஜ், ஜி.பி.குணா, எம்.எச்.உமர்கத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 5 அ.தி.மு.க. தொண்டர்கள் மொட்டை போட்டுக் கொண்டனர்.
தென்சென்னை மாவட்ட இலக்கிய அணி சார்பில், ஜெயலலிதா விடுதலை கோரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஷேக்அலி, மஜித் ஆகியோர் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ஜி.செந்தமிழன், எம்.கே.அசோக், மாநகராட்சி கவுன்சிலர் என்.எஸ்.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நந்தம்பாக்கத்தில் அ.தி.மு.க. செயலாளர் பர்மா கண்ணன் 108 அலகு குத்தி கொண்டு தேர் இழுத்தார். நீலாங்கரையில் சென்னை மாநகராட்சி கணக்கு தணிக்கை குழு தலைவர் நீலாங்கரை முனுசாமி தலைமையில் மனித சங்கிலி பேரணி நடந்தது. கோவிலம்பாக்கம் ஊராட்சி அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து மணலியில் அ.தி.மு.க.வினர் மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் தலைமையில் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஜோசப், எஸ்.ஆர்.ரவி, சங்கர் உள்பட 101 அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்துக்கொண்டனர். மேலும் மும்மத வழிபாடும், யாக சாலை வழிபாடும் செய்தனர்.
இதில் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.குப்பன், மண்டலக்குழு தலைவர் தங்கசிவம், நகர செயலாளர் டாக்டர் கே.சி.சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அனைவரும் ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல எண்ணூரில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வம், எழிலரசி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
அம்பத்தூரில் நகர அ.தி.மு.க. சார்பில் அம்பத்தூர் ஓ.டி.பஸ்நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அம்பத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.