Showing posts with label trichy sabarinathan. Show all posts
Showing posts with label trichy sabarinathan. Show all posts

Thursday, February 20, 2020

On Thursday, February 20, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 20-02-2020

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். 
                  

அப்போது அவர் பேசுகையில்,
வேளாண் மண்டலம் குறித்த சட்ட முன்வடிவை

                  

 முதலமைச்சர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்துள்ளார். இதன் மூலம் நடைமுறையிலுள்ள, செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நிறுத்தப்பட மாட்டாது. இந்த தேதிக்கு முன்பாக செயல்பாட்டில் உள்ள திட்ட அளவில் ஏற்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நிறுத்தப்படாது.

 இனிமேல் வரக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தான் அனுமதி மறுப்பு என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியை ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணி தொடங்கப்பட்டுள்ளது. 

 இப்பொழுது செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். 
ஏற்கனவே ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்காக பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும் என்பதற்காக போராடினார்களோ அந்த குழாய்கள் எடுக்கப்படாது. இப்போதுள்ள சட்டப்படி செயலில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக உள்ள இவைகளுக்கு தடை கிடையாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

 எனவே இதில் பல குழப்பங்கள் இருக்கிறது. குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி,  புள்ளம்பாடி இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் சேர்க்கப்படவில்லை. கரூர் மாவட்டம் குளித்தலை சேர்க்கப்படவில்லை. இவை அனைத்தும் வேளாண்மை நிறைந்த பகுதிகள் ஆகும். இதுகுறித்து குறைகளை களைய முதலமைச்சர் தலைமையில் துணை முதலமைச்சர் உள்பட 24 பேர் கொண்ட குழு பரிசீலித்து அதன் முடிவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதனால் குறைபாடுகளுடன் தற்போது அவசரமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை  நிறைவேற்றாமல் அடுத்து ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கழித்து வேறு சட்டமன்ற கூட்டத்தில் இதை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்காக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் குறித்த எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.  என்றார்.

Wednesday, February 19, 2020

On Wednesday, February 19, 2020 by Tamilnewstv in ,    
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒர் சட்டமா ? பொதுமக்கள் குழப்பம்.

தொடர்ந்து எல்பின் நிறுவனம் பற்றி செய்தி வெளியிட்டு வரும் சத்தியமூர்த்தி அனுப்பிய வீடியோவில்


நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரிஸ் ரெசிடென்சி ஹோட்டலில் எல்பின் நிறுவனத்தினர்  அதிகாலை 4 மணிக்கு தமிழகத்திலுள்ள டாப் மோஸ்ட் லீடர்கள் 200 பேரை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தி உள்ளனர். இந்த தகவல் அறிந்து நான் முதல் நாள் இரவே எஸ்பி ,கமிஷனர் இருவரையும் தொடர்பு கொண்டேன்

ஆனால் அவர்களது தொலைபேசி எண் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அவசர போலீஸ் 100 எண்ணில் தொடர்பு கொண்டேன் அவர்கள் முலம்  கன்டோன்மென்ட் காவல் நிலைய அதிகாரி தொடர்பு கொண்டார். இந்த நிறுவனம் பற்றி புகார் அளித்து உள்ளீர்கள் என என்னிடம் கேட்டார் நான் கமிஷனர் மற்றும் எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளேன் எனக் கூறினேன் சரி சென்று பார்க்கிறேன் என கூறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டேன் அவர் நான் சென்று பார்த்து விட்டேன்  இன்டோர் மீட்டிங் நடத்த பர்மிஷன் தேவையில்லை. வெளியில் மேடை அமைப்பு அவர்கள் கூட்டம் நடத்தவில்லை. அரங்கத்துக்குள் கூட்டம் நடத்த யாரிடமும் அனுமதி வாங்க அவசியமில்லை எனக் கூறினார். நான் தஞ்சையில் புகார் அளித்ததன் பேரில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது அவர்கள் முறைகேடாக கூட்டம் நடத்துவதால் எங்கும் அனுமதி இல்லை என கூறினேன். மீண்டும் அவர் ஒரே பதிலை கூறினார் அவர் பேசிய ஆடியோ இதில் பதிவிட்டுள்ளேன்.


ஒரே மாநிலத்தில் ஒரே டிஜிபி உள்ள காவல் துறைக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு சட்டமா ? தஞ்சைக்கு ஒரு சட்டம், திருச்சிக்கு ஒரு சட்டம், புதுகைக்கு ஒரு சட்டமா? இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எல் பின் நிறுவனம் ஓர் ஏமாற்று நிறுவனம். பொதுநலன் கருதி நான் இவர்கள் மீது புகார் அளித்து வருகின்றேன். எல்பின்  நிறுவனம் மூடிய பின்பு காவல்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்தார் எந்த ஆதாரமும் இல்லாத நிறுவனத்தில் எப்படி பணம் போட்டீர்கள் என காவல்துறையினர் கேட்பார்கள் அதற்கு வழிவிடாமல் முன்பே காவல்துறை தடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். பாவம் பொதுமக்கள் தங்களது கஷ்டத்தில் ஒன்றுக்கு மூன்றாக கிடைக்கிறது என்று நம்பி பணம் போடுகிறார்கள். பணம் படைத்தவர்கள் எதிர்த்து பொது நல வழக்கு தொடர்ந்து அவர்கள் பலர் காணாமல் போனது எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் டிஜிபி அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் . ஜெய்ஹிந்த்.


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


( தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது)


Tuesday, February 18, 2020

On Tuesday, February 18, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பட்டா  கத்தியுடன் திரிந்ததால் திருச்சியில் பரபரப்பு

திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே மத்திய அரசுக்கு எதிராக முஸ்லிம் மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர் காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

அங்கிருந்து வரும் வழியில் புத்தூர் நால்ரோடு  இடத்திற்கு அருகே மீன் மார்க்கெட்  உள்ளது மீன் மார்க்கெட் அருகே அமைந்துள்ள டீக்கடை முன்புறம் ஒரு நபர் குடிபோதையில் பட்டாக்கத்தி உடன் திரிந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது
On Tuesday, February 18, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பிப்17

சென்னையை திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரவில் கூடிய 600க்கும் மேற்பட்ட
மாணவர்கள் -  தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவிப்பு

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில்
இஸ்லாமிய கட்சியினர், அமைப்புக்கள், பல்வேறு கட்சியினர் தொடர்ந்து
போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறனர். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு சி.ஏ.ஏ க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்.பி.ஆர், என்.சி.ஆர் ஆகியவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில்
கடந்த 15ம் தேதி திடீரென  (சனிக்கிழமையன்று)
இஸ்லாமிய மாணவர்கள்
600க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 போலீசார்
சமாதானப் பேச்சுவார்த்தையில் நடத்தினர். ஆனால் மாணவர்கள்
சட்டமன்ற கூட்டத்தொடரில் சி.ஏ.ஏவை
அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம்  நிறைவேற்றும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள ஜமாத்தார்  அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி திங்கட்கிழமை (இன்று) உங்களது கோரிக்கையின் படி சி.ஏ.ஏ எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் இந்த கூட்டத்தை விட்டு விடுவோம் அல்லது தொடர்வோம் என கூறி கூட்டத்தை கலைந்து போக வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்
சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சபாநாயகர் கூறியதையடுத்து 300க்கு மேற்பட்ட மாணவர்கள் திடீரென இரவு தென்னூர் உழவர் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு கூடியவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த இடத்தை விட்டு கலையாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.


Monday, February 17, 2020

On Monday, February 17, 2020 by Tamilnewstv in ,    


*ரிசர்வ் வங்கி கூட கொடுக்க முடியாத வட்டியை கொடுக்கும் திருச்சி எல்பின் நிறுவனம்.*

திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தொடர்ந்து மோசடி வழிகளில் பணம் சம்பாதித்து வரும் நிறுவனம் எல்பின் நிறுவனம் ஆகும்.

தற்போது மாநகரங்களில் காவல்துறையினர் என்பின் நிறுவனத்தினர் கூட்டம் நடத்த தடை விதித்து இருப்பதால் கிராம புற மக்களை கோடிஸ்வரர்  ஆக்கலாம் என தனது டீம் லீடர்களிடம் கூறி கிராமங்களில் கிராம மக்களின் வீடுகளுக்குச் சென்று மூளை சலவை செய்து வரும் பணி நடைபெற்று வருகிறது தற்போது.
புதிதாக தற்போது எல்பின் டிராவல்ஸ் என்று ஒன்றை ஆரம்பித்து
(இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் ? எந்த முகாந்திரம் வைத்து இந்த ட்ராவல்ஸ் ஆரம்பிக்கப்பட்டது  யார் யார் துபாய் செல்ல உள்ளனர் யார் யார் இந்தியா திரும்ப உள்ளனர் ? என மத்திய புலனாய்வு பிரிவு  போலீசார் விசாரிக்க வேண்டும் ) வரும் மார்ச் 3ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட  நபர்களை துபாயில் உள்ள உயரமான கட்டிடத்தின் மேல் வர்த்தக கூட்டம் நடத்த உள்ளதாக கூறி தலைக்கு ஒரு லட்சம் கட்ட வேண்டும் அப்படி கட்டுபவர்களுக்கு துபாய் டூர் மற்றும் அவர்களது வங்கி கணக்கில் தினமும் 550 ரூபாய் என ஒரு வருடம் பணம் ஏறும் அதாவது ஒரு லட்சம் போட்டால் ஒரு வருடத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம் என நோட்டீஸ் அடித்து மூளை சலவை செய்து வருகின்றனர்.. இதுபோல் பணம் கட்டியவர்கள் பலரும் தற்போது திரும்ப பணம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். முதலில் தினமும் பணம் ஏறியது, பிறகு வாரம் ஒரு முறை ஏறியது, பிறகு மாதம் ஒரு முறை அதன்பின் அதுவும் இல்லை என பொதுமக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
இன்று கிடைத்த தகவலின்படி இந்நிறுவனத்தின் தலைவர் அழகர்சாமி (எ) ராஜா வரும் 24ஆம் தேதி அல்லது ஏதோ மார்ச் அல்லது மே 24 ஆம் தேதி அன்று முன்னணி கட்சியின் மாநில பதவி பெறப் போவதாகவும் அதன்மூலம் நமது நிலை மேலும் உயர போவது என்றும் காவல்துறை நமது பின்னால் நிற்கும்  என்றும் தனது டீம் லீடர் களிடம் உறுதியாக கூறி வருகிறாராம். தற்போது தஞ்சையில் கைதான பிரசன்ன வெங்கடேஷ் அவர்களுக்கு ஜாமின் கூட கிடைக்கவில்லை .அவரது புகைப்பட கலைஞர்கள் மூலம் தஞ்சை நடைபெற்ற கூட்டங்கள் அதன் புகைப்படம் மற்றும் வீடியோ கிளிப்பிங்ஸ் பெற்று தஞ்சை போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனால் பல டீம் லீடர் விலகி போக உள்ளதாக வந்த தகவலை அடுத்து ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் இதுபோன்ற தகவலை பரப்பி வருகின்றாராம். டீம் லீடர் களை குஷிப்படுத்தி கிராமப்புற மக்களை மூளை சலவை செய்து வேறு வழியில் பணம் சம்பாதிக்க செல்ல உள்ளனர் இதை உடனடியாக பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். ஜெய்ஹிந்த்.
என சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய வீடியோவில் கூறியுள்ளார்.

பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*

Sunday, February 16, 2020

On Sunday, February 16, 2020 by Tamilnewstv in ,    
காவல்துறைக்கு சவாலாக ELFIN சகோதரர்கள்


புதுகை சத்தியமூர்த்தியின் அடுத்த வீடியோ.



எல்ஃபின் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தாலும் தொடர்ச்சியாக இவர்கள் சதுரங்க வேட்டையில் ஈடுபடுகிறார்கள்

நான் தொடர்ந்து ELFIN நிறுவனத்தின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் வீடியோ வெளியிட்டு வருகின்றேன். இதனைத் தொடர்ந்து காவல்துறை துரிதமாக செயல்பட்டு எல்பின் நிறுவனம் திருச்சி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற இருந்த கூட்டத்தை தடை செய்தனர்.
தற்போது எல்பின் நிறுவனத்தினர் போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி அந்தந்த திருடர்கள் அவர்களின் இல்லத்திலேயே கூட்டம் நடத்த சொல்லி அறம் மக்கள் நல சங்கம் தலைவர் அழகர்சாமி (எ)ராஜா மற்றும் ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதற்கெல்லாம் காரணமாக உள்ள டீம் லீடர்களை பின்தொடர்ந்து விசாரித்தால் இவர்களை விசாரிப்பது மிகவும் சுலபம். மிகவும் துரிதமாக செயல்பட்டுவரும் காவல்துறை அதிகாரிகள் இந்த டீம் லீடர்களைLock லாக் செய்தாலே போதும் இந்த நிறுவனத்தை முற்றிலும் முடக்கி விடலாம் என்பது என் கருத்து . ஜெய்ஹிந்த்

Saturday, February 15, 2020

On Saturday, February 15, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பிப் 15

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தலைவர்
செ.கு. தமிழரசன் தலைமை வகித்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் தாக்கல் செய்த பட்ஜெட் ஒன்றோடு ஒன்று சார்ந்து உள்ளது. இரண்டு கருத்துக்களும் ஒரே கருத்தாக அமைந்துள்ளது. ஆனால் இரண்டு பட்ஜெட்களிலும் தலித் சமூக வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வில்லை. இது ஏமாற்றமளிக்கிறது. தலித் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தலித்களுக்கு என்று மத்திய மாநில அரசுகள் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். பட்ஜெட்டில் தலித் நலன் சார்ந்த அறிவிப்புகள் இல்லாதது கண்டனத்திற்குரியது. குறிப்பாக தலித்களின் உயர் கல்விக்கு எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தான் ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரஜினிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், எதிர்பார்ப்பும் உள்ளது. அதனால் தான் அவரது கருத்துக்கள் அரசியல்வாதிகள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இத்தகைய விமர்சனங்கள் ரஜினிக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது. ரஜினி கட்சி துவங்கி கொள்கைகளை அறிவித்தால் அவரது கூட்டணி குறித்து வரவேற்போம். இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

Friday, February 14, 2020

On Friday, February 14, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி

திருச்சி மாவட்ட இறுதி வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

திருச்சியில் இறுதி வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு  வெளியிட்ட பின்னர் செய்தியாளரகளுக்கு அளித்த பேட்டியில்

 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 22 லட்சத்து 97 ஆயிரத்து 106 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 11 லட்சத்து 18 ஆயிரத்து 900. பெண்கள் 11 லட்சத்து 77 ஆயிரத்து 997. மூன்றாம் பாலினமாக 209 பேரும் உள்ளனர். அதிக வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதியாக ஸ்ரீரங்கம் விளங்குகிறது. இந்நிலையில் குறைவான வாக்காளர்கள் உள்ள சட்டமன்ற தொகுதியாக லால்குடி இருக்கிறது. புதிதாக 50 ஆயிரத்து 992 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 1741 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என கூறினார்.

Tuesday, February 11, 2020

On Tuesday, February 11, 2020 by Tamilnewstv in ,    

எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் .


எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது. இங்கு உள்ளவர்கள் ஏற்கனவே பல கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது நான் காரைக்குடியில் அந்தோணி செல்வம் என்பவர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த உள்ளார் என்பது குறித்து காரைக்குடி எஸ்பியிடம் புகார் அளிக்க வந்துள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை எஸ்பி இடம் அளித்த புகாரின் பேரில் தஞ்சை எல்பின்  பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார். தற்போது புதுக்கோட்டையில் மற்றும் தஞ்சாவூரிலும்  ELFIN நிறுவனம் கூட்டம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. திருச்சியிலும் கூட்டம் நடத்தாமல் இருக்க முயற்சி செய்து வருகின்றேன். திருச்சியில் தொடர்ந்து ELFIN கூட்டம் நடைபெற்று தான் வருகிறது



🏵🏵 *GOLDEN     OPPORTUNITY* 🏵🏵
           
               🙏 🙏 🙏
மிகச்சிறந்த வருமானம் தரும் வாய்ப்பு உங்களுக்காக..👉👉👉
           
🏵ELFIN OPPORTUNITY PROGRAM🏵

நாள்       : *08.02.2020*
கிழமை  : *சனிக்கிழமை*
நேரம்     : மாலை *5.00*
                  மணி *SHARP*
இடம்      : *நந்தனம் ஹால்,*
              ஹோட்டல் ரம்யாஸ்,
                        திருச்சி.
* சிறப்பு விருந்தினர்          திரு.  அண்ணாதுரை
அவர்கள்

 🎤🎤🎤ஸ்பீக்கர்  🎤🎤🎤               

திருமதி. *ஜெ. நிர்மலா* அவர்கள்

          🎊🎊🎊🎊🎊🎊
நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை  அழைக்கவும்.
இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் வாழ்வை வளமானதாக்கிக் கொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
     🎊🎊🎊🎊🎊🎊
 
           🌹 🌹🌹🌹🌹🌹ஒருங்கிணைப்பாளர்கள்:
 👉 திருமதி. K. உமாகோபி -      9629434932
👉 திரு. N.சண்முகமூர்த்தி -    9944132200
👉 திருமதி. A.நஸ்ரின் - 9659557657
👉 திருமதி. V.கவிதா- 8015273833
👉 திருமதி. R.உத்ரா - 9698151364
👉 திருமதி. கீதா - 81449  35961
 👉 திரு.  V. கண்ணகி  - 7639969116
            🙏🙏🙏🙏🙏🙏



இந்நிலையில் நேற்று திருச்சியை சேர்ந்த  மக்கள் மறுமலர்ச்சி கழகம் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் பொன். முருகேசன் என்பவர் டிஜிபிக்கு இணையதளம் வாயிலாக மனு ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் நானும் தஞ்சாவூரை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரையும் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திருவேங்கடம் யாதவ் ( எல்பின் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர் குற்றப் பொருளாதாரப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்) என்பவரும் ஜாதியின் அடிப்படையில் செயல்படுவதாக ஜாதி வெறியை தூண்டும் வகையில் மனு அனுப்பியுள்ளார்.


பொதுநலன் கருதி போராடுபவர்கள் மீது ஜாதி சாயம் பூசுவது ஏன். 18 மாதங்களுக்கு முன்பு வருமான வரி ரெய்டு முடிந்த பின்பு எல்பின் நிறுவனம் முடக்கப்பட்டு விட்டது. இது அந்தக் வழக்கறிஞர் பொன். முருகேசன் அவர்களுக்கு தெரியாதா. எல்பின் நிறுவனத்திற்கு  ஒருதலைபட்சமாக பேசுவதும் பொதுமக்கள் பாதிப்படைவது  கருதாமல் பொன். முருகேசன் அவர்கள் ஒருதலைபட்சமாக பேசுவது போல் உள்ளது. நான் தலைமறைவாகி விட்டதாக கூறுகிறார்கள். தற்போது கூட  சிவகங்கை எஸ்பி அலுவலகம் முன்பு அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு வந்து தான் பேசுகிறேன்.
பொது மக்களுக்காக போராடும் என்னுடைய செய்தியை ஏன் பத்திரிக்கை நண்பர்கள் பொதுமக்கள் நலனுக்காக எல்பின் நிறுவனம் பற்றிய உண்மையை ஏன் எழுதக் கூடாது ? எல்பின் ராஜா (எ) அழகிரிசாமியும், SRK ரமேஷ் குமார்(எ) ரமேஷும் எந்தப் பத்திரிகையிலும் நமது செய்தி வராது அனைத்துப் பத்திரிகைகளும் நாம் விளம்பரம் தருகிறோம் என தெனாவட்டாக பேசி வருவதாக சில நண்பர்கள் கூறுகிறார்கள். காசுக்காக அனைவரும் விலை போகமாட்டார்கள் நீதி என்றும் வெல்லும். நான் அளித்த மனுவின் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றால் எந்த முகாந்திரமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ரமேஷ் குமார் அவர்களின் பத்திரிகையில் காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் எழுதி வருகிறார்கள்.

தற்போது வழக்கறிஞர் பொன்.முருகேசன் என்பவர் என்னை பார்த்ததே இல்லை திருவேங்கடம் யாதவ் என்பவரையும் பார்த்ததில்லையாம். இந்நிலையில் எங்களின் மீது அவர் டிஜிபிக்கு புகார் அளித்தது ஏன் ?

 
இந் நிறுவனத்தில் பொன். முருகேசன் அவர்கள் என்னவாக உள்ளார் என தெரியவில்லை.

மேலும்  ELFIN  நிறுவனம் முறைப்படி அனுமதி இல்லாமல் நடத்தும் கூட்டங்களை ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் .ஜெய்ஹிந்த்
On Tuesday, February 11, 2020 by Tamilnewstv in ,    
மாணவ,மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும்,அறிவியல் தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்வதற்க்கும் கல்விக் கண்காட்சி.

கண்காட்சியில் அனைத்து பாடங்களிலிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்திய  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவிகள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைகோரை ஊராட்சியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. 110 மாணவ,மாணவிகள், 7 ஆசிரியர்களுடன் இயங்கும் இப்பள்ளியின் மாணவ,மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும்,அறிவியல் தொழில்நுட்பத்தை கற்றறியவும்,எளிமையில் புரிந்து கொள்வதற்காகவும் கல்விக் கண்காட்சி இப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

லால்குடி வட்டார கல்வி அலுவலர் மார்டீன் கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் அனைத்து பாடப்பிரிவுகளிலிருந்தும் காட்சிகள் பார்வைக்கு வைக் கப்பட்டிருந்தது.

இதில் தேசப்பற்று ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அகல் விளக்குகளால் அமைத்த  இந்திய வரைபடம்,சமூகம் அன்றும், இன்றும் நாம் பயன்படுத்திய பொருட்கள், கண்டங் களை கண்டறிவது என ஏழு கண்டங்களில்  என்னென்ன தாவரங்கள், விலங்குகள் உள்ளது என மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட் சியில் வைக்கப்பட்டது. இந்திய தலைவர்களின் புகைப்படம்,கற்கால கருவிகள்,கணித பூங்கா,கணித வடிவ கார்பெட், இந்திய,வெளிநாட்டு நாணயங்கள்,பணத்தாள்கள்,நீர்மேலாண்மை,மூலிகை தாவரங்கள், ஐவகை நிலங்கள், எளிய முறையில் ஆங்கில இலக்கணம் கற்றுக் கொள்ள சாட்டுகள் உள்ளிட்டவைகள்  கல்வி கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

இதில் கல்விக் கண்காட்சியில் பங்குபெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை ஸ்ரீரங்கம் அரிமா சங்கத்தினர் வழங்கினர். கண்காட்சியை மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள்,பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.

பேட்டி : திருமாளவளவன் ( தலைமையாசிரியர் )

Monday, February 10, 2020

On Monday, February 10, 2020 by Tamilnewstv in ,    

 பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்


மோசடி நிறுவனத்தை தடைசெய்யக்கோரி புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி  சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இவர்கள் மோசடி தொடரக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்து பொதுநலன் கருதி  சத்தியமூர்த்தி என்பவர் மனு அளித்து வருகிறார்
 புதுக்கோட்டை மாவட்டத்தில் ELFIN நிறுவனத்தின் சந்திப்பு நடத்தக்கூடாது கூடாது என்று மாவட்ட நிர்வாகம் காவல்துறை உயரதிகாரிகள் முடிவு செய்த நிலையில் திடீரென புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் நேர்மையான காவல் கண்காணிப்பாளர் அவர்களை ELFIN நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தித்தது ஏன் என்ற கேள்வி ஏற்படுத்தி உள்ளது
On Monday, February 10, 2020 by Tamilnewstv in ,    
புதுகை சத்யமூர்த்தி அடுத்த தகவல்.
சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் எல்பின் நிறுவனத்தின் சார்பில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இத்தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் துரிதமாக செயல்பட்டு எல்பின் நிறுவனம் முறையாக நடத்தும் நிறுவனமா என்பதை அறிந்து முறையாக வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். ஆனால் ரமேஷ் குமார் அவர்கள் ஆசிரியராக உள்ள  பத்திரிகையில் நேர்மையாக செயல்பட்ட காவல்துறையினரை தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பத்திரிகையில் காவல்துறையினரை தவறாக பதிவு செய்துள்ளனர் .

முறைப்படி தாங்கள் மத்திய மாநில அரசுக்கு வரி செலுத்துகிறோம் கம்பெனி பதிவு செய்து உள்ளோம் என செய்தி வெளியிட்டு உள்ளனர். அவர்கள் பல கம்பெனியை தொடங்கி பொதுமக்களை  ஏமாற்றி உள்ளனர். முதலில் அவர்கள் எந்த கம்பெனி நடத்துகின்றார்கள்.  JP ஓரியண்ட் என்ற கம்பெனியும்   வரகா மணி என்ற கம்பெனியும், RMWC கம்பெனி எல்பின்  என்ற நிறுவனமும், தற்போது

குளோபல் டிரடிங், குளோபல் ரியாலிட்டி என்ற  பெயரில் கம்பெனி  தற்போது நடத்தி வருவதாக கூறுகிறார்கள். முதலில் தங்கள் கம்பெனி பெயரை உறுதியாக கூறட்டும். இவர்கள் பல வங்கிகளிலும் கணக்கு வைத்துள்ளனர் தங்கள் ஊழியர்களுக்கு இதில் ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்கிறார்கள். சரி இந்த பணப்பரிவர்த்தனை செய்ய உங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது. எதில் முதலீடு செய்து எதிலிருந்து எடுத்து கொடுக்கிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள். காவல்துறையை அவதூறு செய்தி வெளியிடும் அவர்கள் நடத்தி வரும் பத்திரிக்கை .  கடந்த சில நாட்களுக்கு முன்பு போலியாக பத்திரிக்கையாளர் யார் அவர்கள் மீது  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மாண்புமிகு நீதிபதி தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவில்  வழக்கில் உள்ள குற்றவாளி ரமேஷ் குமார் இவர் எப்படி  பத்திரிகையின் ஆசிரியரானார். ஒரு குற்றவாளி எப்படி பத்திரிகை நடத்த முடியும். தங்களையும், தங்களது நிறுவனத்தையும் பாதுகாத்துக்கொள்ள பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நடத்தி வரும் இவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேர்மையாகச் செயல்படும் காவல்துறையை குற்றம்சாட்டும் இவர்கள் மீதும் பத்திரிகை மீது நீதித்துறை நன்கு ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மூலம் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் என்பது எனது கருத்து. நன்றி ஜெய் ஹிந்த்

Sunday, February 09, 2020

On Sunday, February 09, 2020 by Tamilnewstv in ,    
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஓட்டுநர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தினர் 

திருச்சியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.                             தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்பு மாநில தலைவர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது...... தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்கள் வாகன ஓட்டுநர்களை மரியாதை குறைவாக நடத்துகின்றனர். மேலும் தகாத வார்த்தையால் பேசுகின்றனர். இதனை மாற்றிக்கொள்ளவேண்டும். ஓட்டுநர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். சங்க பொதுச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
On Sunday, February 09, 2020 by Tamilnewstv in ,    

5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்த தமிழக அரசிற்கு  தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சியில் நன்றி தெரிவித்து உள்ளது.                                                          தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்....... ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் இரா.தாஸ் பேசும்போது.... ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடைமுறையை முதன்மை கல்வி அலுவலர்கள் பின்பற்றி வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இல்லையெனில் பிப்ரவரி இறுதி வாரத்தில் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார். கூட்டத்தில் மாநில  தலைவர் நடராஜன், மாநில பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
On Sunday, February 09, 2020 by Tamilnewstv in ,    
*திருச்சி எல்பின் நிறுவனத்தின் மீது திருச்சி ஸ்ரீரங்கம் திருவெங்கடம் யாதவ் பரபரப்பு புகார்* .

அவர் நமது நிருபரிடம் தெரிவித்தபோது


நான் 2017 ஆம் ஆண்டு எனது நண்பன் மணியின் மூலம் எல்பின் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் வெறும் ரூபாய் 5000 மட்டும் கட்டினேன். அதற்கு இரண்டாவது நாளில் 3000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் கொடுத்தனர். அடுத்த நாள் முதல் பேங்க் கமிஷன் 10 ரூபாய் போக தினமும் 40 ரூபாய் அக்கவுண்டில் ஏறியது. இதனால் மணி என்பவர் மீண்டும் 55 ஆயிரம் கட்டி ஷேர் ஹோல்டர் ஆகுங்கள் என கூறியதன் பேரில் ரூபாய் 55 ஆயிரம் கட்டினேன். அதற்குரிய கமிஷன் பணம் அக்கவுண்டில் சரியாக ஏறியது. அதனால் எல்பின் நிறுவனம் நல்ல நிறுவனம் நம்பிக்கை அந்நிறுவனம் என்று என் மனதில் எண்ணம் தோன்றியது . இது அவர்கள் செய்யும் தந்திரம் என தெரியாமல் போனது.
சிறிது நாளில் ELFIN தலைவர் ராஜா என்னும் அழகிரிசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் அதில் பங்குதாரராக ரூபாய் 5 லட்சம் கட்ட வேண்டும் எனக் கூறினார். நான் ராஜா என்னும் அழகிரிசாமியிடம் உங்கள் டீம் லீடர்கள் கீழ் பணிபுரிய மாட்டேன்  நான் நேரடியாக உங்களிடம் தான் பணம் கட்டுவேன் என கூறினேன் .இத நம்பி நானும் ரூ.4.5000/- பணத்தைக் கட்டினேன் திருச்சி சங்கம் ஹோட்டலில் வைத்து ராஜாவிடம் நேரடியாக கொடுத்தேன். இதை மேடையில் அறிவிப்பேன் என கூறினார், ஆனால் பல நிகழ்ச்சிகளையும் அவர். மேடையில் கூறவில்லை.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ரூபாய் 5000 ரூபாய் 55 ஆயிரம் இந்த 4.50 லட்சம் இதற்கும் இவர்கள் ரசீது அல்லது ஆவணங்கள் எதுவும் வழங்கவில்லை. நானும் முதல் 5000 மற்றும் 55 ஆயிரம் பணம் திரும்ப முறையாக கிடைத்தால் இதை பெரிதாக எண்ணவில்லை. ஆனால் சிறிது நாட்களில் ராஜாவின் பேச்சு மாறியது. என்னை தாக்குவதற்கு, நமது கம்பெனியை அழிப்பதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள் என சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் பேசினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு  திருச்சி மன்னார்புரம் பழைய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதிதாக அலுவலகம் திறந்த பின்பு காவல்துறையை சேர்ந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர்கள் எஸ்.எஸ்.ஐ கள் என பலரும் அந்த நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கினார்கள். கம்பெனியின் ட்ரெண்டு மாறத்தொடங்கியது. 2017 ஆம் ஆண்டு நான் முதலீடு செய்தது இன்றைய தேதி வரை ஒரு ரூபாய் கூட திரும்ப கிடைக்க. நானும் தற்போது ஆறு மாதமாக தொடர்ந்து போராடி வருகிறேன். நடுவில் போனிலும் நேரிலும் சென்று கேட்டபோது பில் இருக்கா ஆவணங்கள் இருக்கா ஏதாவது கொண்டு வாருங்கள் உடனடியாக பணம் தருகிறோம் என இல்லாத ஒன்றை கேட்டு விரட்டி விட்டார்கள். தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் நான் அனுப்பினேன் ஆனால் 5. 2. 20 வரை எனது மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கடந்த ஆறாம் தேதி நான் நேரில் சென்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் எனது ஆதார் கார்டுகள் போன்றவற்றை காட்டி முறையாக நிறுவனத்தின் மீதும் அதன்  நிர்வாக இயக்குனர் ராஜா (எ) அழகிரிசாமி,  ரமேஷ், மற்றும் புதிதாக உள்ள சில இயக்குனர்கள் மீது புகார் மனு அளித்துள்ளேன். பாவம் அப்பாவி மக்கள் பணத்தை வைத்துக்கொண்டு இவர்கள் தற்போது அறம் மக்கள் நல சங்கம் ஒன்றை உருவாக்கி உதவிகள் செய்து நல்லவர்கள் போல்  போலி மாயையை உருவாக்கி பொதுமக்கள் பணத்தை ஆட்டையைப் போடுகிறார்கள்.  டிவி, மக்கள் பத்திரிக்கை, விரைவில் தொடங்கப் போவதாக கூறி வருகின்றனர்.
இவர்களின் பணத்தால் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் மாநில அளவில் உள்ளவர்களை எல்லாம் தங்கள் கையில்  வைத்திருப்பதாக இந்தத் தகவல்கள் தெரிய வருகிறது. யாரை எவ்வளவு பெரிய ஆட்களை (பணத்தால்) கையில் வைத்திருந்தாலும் இன்று நீங்கள் ஜெயிப்பது போன்று தோன்றும். ஆனால் உண்மை என்றும் தோற்காது என்று திருவேங்கடம் யாதவ் கூறியுள்ளார்.

Saturday, February 08, 2020

On Saturday, February 08, 2020 by Tamilnewstv in ,    


திருச்சி எல்பின் நிறுவன உரிமையாளர்  ராஜா என்கிற அழகர்சாமி  மற்றும்  ரமேஷ் குமார்  அரசுக்கு எதிராக செயல்படுவதால்  கைது செய்யப்படுவார்களா

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்பின் நிறுவனத்தில் பல்வேறு கவர்ச்சி டெபாசிட் திட்டங்களை அறிவித்து பல பெரிய ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி பணம் வசூலித்து வருகின்றனர்.



இந்நிறுவனம் குறித்து பல்வேறு புகார்கள் உள்ளன இது தொடர்பாக  குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் தஞ்சையில் எல்பின்  நிதி நிறுவனத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. தஞ்சை தனியார் மண்டபத்தில் இதற்காக தஞ்சை எல்பின் நிதிநிறுவன லீடர் பிரசன்ன வெங்கடேஷன்  ஏற்பாடு செய்திருந்தார்.
இதை அறிந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் எல்பின்  நிதி நிறுவனம் முறைப்படி இயங்குகிறதா இந்த கூட்டத்திற்கு யார் அனுமதி அளித்துள்ளார் என விசாரிக்க சொல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
 அதன்பேரில் தஞ்சை பல்கலைக்கழக போலீசார் கூட்டத்தை கேன்சல் செய்ய சொல்லிவிட்டு கூட்டத்தை ஏற்பாடு செய்த பிரசன்ன வெங்கடேசனை மேல்  விசாரணைக்காக தஞ்சை மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் ஆவேசமடைந்த எல்பின் தலைவர்  ராஜா என்கிற அழகர்சாமி  மற்றும்  ரமேஷ் குமார் எல்பின் வாட்ஸ்அப் குரூப்களில் அனைவரும் ஒன்று திரண்டு நமது சக்தியை காவல்துறையினருக்கு எதிராக காட்டவேண்டும் ஒன்று திரண்டு வாருங்கள் என சட்டத்திற்கு விரோதமாக கூறினார். இவரது பேச்சை கேட்டு 200க்கும் மேற்பட்ட எல்பின் உறுப்பினர்கள் தஞ்சை எஸ்பி அலுவலகம் முன் அரசுக்கு எதிராக திரண்டனர். இதனால் எஸ்.பி அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது . இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆயுதப்படை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்பு தஞ்சை மாவட்ட லீடர் பிரசன்னா வெங்கடேசன் மற்றும் இருவர் மீது தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சையில் உள்ள பொதுமக்கள் போலி நிதி நிறுவனம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல் துறையினரையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு திருச்சி ரம்யாஸ் ஓட்டலில் நந்தனம் மகாலில் இதே போல் ஓர் நிகழ்ச்சி இந்த எல்பின் போலி நிதி நிறுவனத்தால் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல தகவல்களுடன்

Friday, February 07, 2020

On Friday, February 07, 2020 by Tamilnewstv in ,    
தைப்பூச விழாவையொட்டி சமயபுரத்தில் தெப்பத் திருவிழா.

       திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா  10  நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். ஜனவரி 30 கொடியேற்றத்துடன் துவங்கிய விழா தினமும் ்இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 9 ம் நாளான இன்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. அம்மன்  தெப்பத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  10 ம் நாளான  நாளை  காலை  அம்மன் கோயிலிருந்து தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி கொள்ளிடம் வடகாவிரியில்  அண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் தைப்பூசத்திற்க்கு சீர் வாங்கும் விழா நடைபெறும்.

            விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர்  கே.பி. அசோக்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
On Friday, February 07, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பாலக்கரை கீழப்புதூர் அருகே மதிமுக சார்பில் பொதுமக்களிடையே இந்திய குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து பெறப்பட்டது

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி பாலக்கரை புதூர் காளியம்மன் கோவில் எடத்தெரு அருகே  அருகில் மதிமுக மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி சோமு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ரொகையா ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில்  பெல் ராஜமாணிக்கம் அன்புராஜ் ஜங்சன் பகுதி செயலாளர் பிரபாகரன் பொறியாளர் ஸ்டீபன் பகுதி நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜஸ்டின் செல்லகுமார் மாவட்ட பிரதிநிதி கரிகாலன் பகுதிசெயலாளர்கள் துரை வடிவேல், எடத் தெரு சரவணன், ஜெயசீலன்,  பொன்மலைப்பட்டி கணேசன், அகமது கபீர், ரஜினி சிவா, கல்லுக்குழி பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் திருச்சி செல்லத்துரை, திமுக நாகராஜ், ஜமால், ராமமூர்த்தி, ஷாஜஹான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, December 24, 2019

திருச்சி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுறிச்சி 4வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நாச்சிகுறிச்சி ஆனந்தி அருண்பிரசாத் அவர்கள் இன்றைக்கு முன்னாள் மேயர் மற்றும் காங்கிரஸ் பிரமுகருமான  சுஜாதா அவர்களுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்


அவருடன் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Monday, December 23, 2019

On Monday, December 23, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுறிச்சி 4வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நாச்சிகுறிச்சி ஆனந்தி அருண்பிரசாத் அவர்கள் இன்றைக்கு அழகர் நகர் இந்திரா காந்தி நகர் வயலூர் ரோடு அருணகிரி நகர் வாசன் வேலி  ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்
அவருடன் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்