Showing posts with label Coimbatore. Show all posts
Showing posts with label Coimbatore. Show all posts
Sunday, September 21, 2014
கோவை அருகே உள்ளது ஒண்டிப்புதூர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர். பஸ் நிறுத்தம் அருகே ஒரு வேன் மற்றும் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
மதியம் 12.30 மணியளவில் கோவை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது. அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மினி டோர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி டோர் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.
பின்னர் அந்த லாரி கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய பின்னர் பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது. அதன் பின்னர் அங்குள்ள கடை மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 1 ஆண் மற்றும் 3 பெண்கள் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் சிங்காநல்லூர் போலீசாரும், கிழக்கு போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காயமடைந்தவர்கள் அப்பநாயக்கன்பட்டி புதூரைச் சேர்ந்த முருகன் (வயது 65), அவரது மனைவி கலா மணி (52), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி அம்சவேணி (35), பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன், அவரது மனைவி ஜெயந்தி என்பது தெரிய வந்தது. மற்றொரு பெண் பெயர் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து சிங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
வால்பாறையை அடுத்துள்ள ஒரு தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகம் தங்களது சம்பளத்தில் தொழில்வரிபிடித்தம் செய்ததற்கான ரசீது தரவேண்டும், தேயிலைத் தோட்டங்களில் பல்வேறு இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் தோல்வி யாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளும் வருகிறது.
எனவே இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடுதலாக கூலி வழங்கவேண்டும். தொழிலாளர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் கடந்த வாரம் வேலை நிறுத்தம் செய்தனர்.
பின்னர் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகள், தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் வார்டு கவுன்சிலர் ஆகியோர் இது குறித்து எஸ்டேட் நிர்வாகத்திடமும் தொழிலாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் எஸ்டேட் நிர்வாகம் எந்த வித உடன்பாட்டிற்கும் வரவில்லை. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மீது எஸ்டேட் அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து எஸ்டேட் மேலாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக வால்பாறை போலீசில் எஸ்டேட் நிர்வாகத்தினர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரையும் திரும்ப பெறவேண்டும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் வேலையையும் கெடுக்காமல் தொழிலும் பாதிக்காமல் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் எஸ்டேட் தோட்ட அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போடும் போராட்டத்தை செய்துவருகின்றனர்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நேற்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர். இந்த தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Saturday, September 20, 2014
வால்பாறையில் யானை கள் அட்டகாசத்தை தடுக்க கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யானைகள் அட்டகாசம்
வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக யானை கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வால்பாறையை அடுத்த தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக்கழக (டேன்டீ) நிர்வாகத்திற்கு சொந்தமான பெரியகல்லார், சின்னக்கல்லார், சின்கோனா ஆகிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 12.30 மணிக்கு 15 யானைகள் கொண்ட கூட்டம் பெரியகல்லார் எஸ்டேட் பகுதிக்குள்ளும், 10 யானைகள் கொண்ட கூட்டம் சின்னக்கல் லார் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்தன. இதில் சின்னக்கல்லார் எஸ்டேட் குடியிருப்பில் நுழைந்த காட்டு யானைகள் தொழிலாளர்களுக்கு வழங்க ரேஷன் பொருட்கள் வைக்கப் பட்டு இருந்த அறையின் கதவு, ஜன்னல்களை உடைத்தன. ஆனால் அங்கு ரேஷன் பொருட்கள் ஏதும் இல்லாத தால் அருகில் இருந்த ஆளில் லாத குடியிருப்புகளை இடித்து தள்ளின.
வீடு சூறை
பின்னர் கண்ணன் என்பவ ரின் வீட்டின் முன்புற அறையை இடித்து துதிக் கையை உள்ளே விட்டு சாப்பி டுவதற்கு ஏதும் கிடைக்குமா? என்று தேடின. ஆனால் அங்கு ஒன்றும் இல்லாததால் முன் அறையில் நிறுத்தப்பட்டிருந்த மோட் டார் சைக்கிள், கேபிள் இணைப்பு வழங்கும் கருவி கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை உடைத்து வீட்டை சூறையாடின.
உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கண்ணன், தனது வயதான தாயாரை வீட்டின் பின்பக்க வழியாக அழைத்துக் கொண்டு, அருகில் இருந்த குடியிருப்புக்குள் சென்று விட்டார். பின்னர் எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து யானைகளை துரத்தினார்கள். ஆனால் யானைகள் செல்லாமல் அங்கே நின்று, கொண்டுதொழிலாளர்களை துரத்தின. தொடர்ந்து வனத்துறையின ருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. வனத்துறையினர் வருவ தற்குள் மீண்டும் யானைகள் வீட்டை சேதப்படுத்தி விட்டு காட்டுக்குள் சென்றன.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
இந்த நிலையில் யானை களின் அட்டகாசத்தை தடுக்க கோரி சின்னக்கல்லார் எஸ்டேட் தொழிலாளர்கள் நேற்று அந்த பகுதியின் வார்டு கவுன் சிலர் சுதாகர் மற்றும் வால்பாறை கூட்டுறவு நகர வங்கி இயக்குனர் பெருமாள் ஆகியோர் தலை மையில் வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது, தொடர்ந்து காட்டுயானைகளால் பாதிப் புக்குள்ளாகி வருகிறோம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை டேன்டீ நிர்வாகமும், வனத்துறையின ரும் எடுக்க வேண்டும். யானை கள் நடமாட்டம் அதிகமுள்ள நாட்களில் 2 கும்கி யானை களை கொண்டு வந்து பாது காப்பு பணியில் ஈடுபட வேண்டும். கூடுதலாக வனத் துறையினரை போதிய வாகன வசதியுடன் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட வேண் டும். டேன்டீ நிர்வாகம் சார் பில் காட்டு யானைகள் நிற்கக் கூடிய இடங்களை கண்டறிந்து வனத்துறையினருக்கு முன் கூட்டியே தெரிவிப்பதற்கு போதிய பணியாட்களை நியமிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
ரூ.10 லட்சம்
இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு டேன்டீ டிவிசன் மேலாளர் விக்ரம், மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் அறிவொளி, ஆகியோர் வந்த னர். அப்போது தொழிலாளர் கள் அவர்களை முற்றுகை யிட்டு தங்களது கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவோ அல்லது ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வீதம் கொடுத்து தங்களை பணியில் இருந்து விடுவிக்கவோ வேண்டும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் அறி வொளி, சின்னக்கல்லார் பகுதியில் குடியிருந்து வரும் தொழிலாளர்களின் வீடுகள் அருகருகே இல்லை. இதனால் காட்டு யானைகள் எளிதாக குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றன. எனவே பி.ஏ.பி. நிர்வாகத்திற்கு சொந்தமான பல குடியிருப்புகள் காலியாக உள்ளன. இந்த வீடுகளுக்கு எஸ்டேட் தொழிலாளர்களை மாற்றி விட்டால் காட்டு யானைகளின் தொல்லை அதிகம் இருக்காது என்று டிவிசனல் மேலாளரிடம் தெரிவித்தார்.
அப்போது அங்கு வந்த வால்பாறை தாசில்தார் நேரு விடமும், எஸ்டேட் தொழி லாளர்கள் இதே கோரிக்கையை முன்வைத்து வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். இது குறித்து மாவட்ட கலெக்ட ரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் நேரு எஸ்டேட் தொழிலாளர்களி டம் உறுதி கூறினார்.
இதைத்தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். தொழிலாளர் களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
யானைகள் அட்டகாசம்
வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக யானை கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வால்பாறையை அடுத்த தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக்கழக (டேன்டீ) நிர்வாகத்திற்கு சொந்தமான பெரியகல்லார், சின்னக்கல்லார், சின்கோனா ஆகிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 12.30 மணிக்கு 15 யானைகள் கொண்ட கூட்டம் பெரியகல்லார் எஸ்டேட் பகுதிக்குள்ளும், 10 யானைகள் கொண்ட கூட்டம் சின்னக்கல் லார் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்தன. இதில் சின்னக்கல்லார் எஸ்டேட் குடியிருப்பில் நுழைந்த காட்டு யானைகள் தொழிலாளர்களுக்கு வழங்க ரேஷன் பொருட்கள் வைக்கப் பட்டு இருந்த அறையின் கதவு, ஜன்னல்களை உடைத்தன. ஆனால் அங்கு ரேஷன் பொருட்கள் ஏதும் இல்லாத தால் அருகில் இருந்த ஆளில் லாத குடியிருப்புகளை இடித்து தள்ளின.
வீடு சூறை
பின்னர் கண்ணன் என்பவ ரின் வீட்டின் முன்புற அறையை இடித்து துதிக் கையை உள்ளே விட்டு சாப்பி டுவதற்கு ஏதும் கிடைக்குமா? என்று தேடின. ஆனால் அங்கு ஒன்றும் இல்லாததால் முன் அறையில் நிறுத்தப்பட்டிருந்த மோட் டார் சைக்கிள், கேபிள் இணைப்பு வழங்கும் கருவி கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை உடைத்து வீட்டை சூறையாடின.
உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கண்ணன், தனது வயதான தாயாரை வீட்டின் பின்பக்க வழியாக அழைத்துக் கொண்டு, அருகில் இருந்த குடியிருப்புக்குள் சென்று விட்டார். பின்னர் எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து யானைகளை துரத்தினார்கள். ஆனால் யானைகள் செல்லாமல் அங்கே நின்று, கொண்டுதொழிலாளர்களை துரத்தின. தொடர்ந்து வனத்துறையின ருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. வனத்துறையினர் வருவ தற்குள் மீண்டும் யானைகள் வீட்டை சேதப்படுத்தி விட்டு காட்டுக்குள் சென்றன.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
இந்த நிலையில் யானை களின் அட்டகாசத்தை தடுக்க கோரி சின்னக்கல்லார் எஸ்டேட் தொழிலாளர்கள் நேற்று அந்த பகுதியின் வார்டு கவுன் சிலர் சுதாகர் மற்றும் வால்பாறை கூட்டுறவு நகர வங்கி இயக்குனர் பெருமாள் ஆகியோர் தலை மையில் வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது, தொடர்ந்து காட்டுயானைகளால் பாதிப் புக்குள்ளாகி வருகிறோம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை டேன்டீ நிர்வாகமும், வனத்துறையின ரும் எடுக்க வேண்டும். யானை கள் நடமாட்டம் அதிகமுள்ள நாட்களில் 2 கும்கி யானை களை கொண்டு வந்து பாது காப்பு பணியில் ஈடுபட வேண்டும். கூடுதலாக வனத் துறையினரை போதிய வாகன வசதியுடன் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட வேண் டும். டேன்டீ நிர்வாகம் சார் பில் காட்டு யானைகள் நிற்கக் கூடிய இடங்களை கண்டறிந்து வனத்துறையினருக்கு முன் கூட்டியே தெரிவிப்பதற்கு போதிய பணியாட்களை நியமிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
ரூ.10 லட்சம்
இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு டேன்டீ டிவிசன் மேலாளர் விக்ரம், மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் அறிவொளி, ஆகியோர் வந்த னர். அப்போது தொழிலாளர் கள் அவர்களை முற்றுகை யிட்டு தங்களது கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவோ அல்லது ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வீதம் கொடுத்து தங்களை பணியில் இருந்து விடுவிக்கவோ வேண்டும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் அறி வொளி, சின்னக்கல்லார் பகுதியில் குடியிருந்து வரும் தொழிலாளர்களின் வீடுகள் அருகருகே இல்லை. இதனால் காட்டு யானைகள் எளிதாக குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றன. எனவே பி.ஏ.பி. நிர்வாகத்திற்கு சொந்தமான பல குடியிருப்புகள் காலியாக உள்ளன. இந்த வீடுகளுக்கு எஸ்டேட் தொழிலாளர்களை மாற்றி விட்டால் காட்டு யானைகளின் தொல்லை அதிகம் இருக்காது என்று டிவிசனல் மேலாளரிடம் தெரிவித்தார்.
அப்போது அங்கு வந்த வால்பாறை தாசில்தார் நேரு விடமும், எஸ்டேட் தொழி லாளர்கள் இதே கோரிக்கையை முன்வைத்து வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். இது குறித்து மாவட்ட கலெக்ட ரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் நேரு எஸ்டேட் தொழிலாளர்களி டம் உறுதி கூறினார்.
இதைத்தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். தொழிலாளர் களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்டிசோலை பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 47). சமையல் தொழிலாளி. இவர் நேற்று மோட்டார்சைக்கிளில் ஊட்டியில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிள் அவினாசி சாலையில் கருமத்தம்பட்டி அருகே உள்ள கொள்ளுபாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, எதிரே வந்த வேன் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனைமலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் மீது லாரி ஏறியது. இதில் கணவர் கண் எதிரே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருமணம்
பொள்ளாச்சியை அடுத்த கோப்பனூர் புதூரை சேர்ந் தவர் அனந்தபத்மநாபன் (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் உடுமலை திருமூர்த்தி நகரை சேர்ந்த உமாமகேஸ்வரி (28) என்பவருக்கும் இடையே கடந்த மாதம் 29–ந் தேதி திரு மணம் நடை பெற்றது.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு அனந்தபத்ம நாபன் தனது மனைவி உமா மகேஸ்வரியுடன் ஆனைமலை மாசாணியம்மன் கோவி லுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் 2 பேரும் சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் கோப்பனூர்புதூ ருக்கு திரும்பி வந்தனர்.
புதுப்பெண் பலி
பொள்ளாச்சி – மீன்கரை ரோட்டில் அம்பராம் பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால், 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செங்கோடு நோக்கி சென்ற ஒரு லாரி உமா மகேஸ் வரி மீது கண்இமைக்கும் நேரத் தில் ஏறியது. இந்த விபத்தில் அனந்தபத்மநாபன் கண் முன்னே உமாமகேஸ்வரிஉடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அனந்த பத்மநாபன் காய மின்றி உயிர் தப்பினார். மனைவி இறந்து கிடப்பதை பார்த்த அவர் கதறி துடித்தார்.இது குறித்த தகவல் அறிந்த ஆனைமலை போலீசார் விரைந்து சென்று உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக் காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புதுப் பெண் உமா மகேஸ்வரி இறந்த தகவல் அறிந்ததும், அவரது உறவினர்கள் வேட்டைக் காரன் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இந்த விபத்து தொடர்பாக திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் மணி (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் இல்லை என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஐ.ஜி. விஷ்ணுராவ் தெரிவித்தார்.
நிறைவு விழா
கோவை அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு 166 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஐ.ஜி. விஷ்ணுராவ் கோவை வந்தார்.
பின்னர் கதிர்நாயக்கன்பாளையம் சென்ற அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். அதை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீவிர கண்காணிப்பு
மத்திய அரசும், மத்திய ரிசர்வ் படை போலீசாரும் இணைந்து நக்சலைட்டுகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அத்துடன் ஏற்கனவே உள்ள நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள நக்சலைட்டுகளின் 80 சதவீதம் பேர் குறித்த அனைத்து விவரங்களும் எங்களிடம் உள்ளன. 20 சதவீதம் பேர் குறித்த தகவல் மட்டுமே இல்லை. இதற்கு காரணம் அவர்கள் மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். பகல் நேரத்தில் டாக்டர்களாக, என்ஜினீயர்களாக மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளனர். ஆனால் இரவில் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வழிகள் தடுக்கப்படும்
எனவே அவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளில் மாறுவேடத்தில் சென்று கண்காணித்து வருகிறார்கள். நக்சலைட்டுகளை கொல்வது எங்கள் நோக்கம் இல்லை. அவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆகும்.
வெளிநாடுகளில் இருந்து நக்சலைட்டுகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அதுகுறித்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது உண்மையாக இருந்தால் ஆயுதங்கள் வரும் வழிகள் தடுக்கப்படும்.
50 இடங்களில் பயிற்சி
பெரும்பாலும் வேலை இல்லாத இளைஞர்கள்தான் நக்சலைட்டுகளாக மாறி வருகிறார்கள். எனவே அவர்களை கண்டுபிடித்து, அவர்கள் தொழில் தொடங்க மத்திய அரசு மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் புதிதாக நக்சலைட்டுகள் உருவாகுவது தடுக்கப்பட்டு உள்ளது. எனவே நக்சலைட்டுகள் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உள்ளவர்களுக்கு அதிநவீன துப்பாக்கிகளை பயன்படுத்துவது, நக்சலைட்டுகளை ஒழிப்பது, கலவரங்களை தடுப்பது, கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது உள்பட பல்வேறு பயிற்சிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருகிறது.
இவ்வாறு ஐ.ஜி. விஷ்ணுராவ் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊடுருவல் இல்லை
தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் உள்ளதா என்று கேட்டபோது, ‘தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் இல்லை. இங்கு நக்சலைட்டுகள் இருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறை சார்பில் எங்களுக்கு தகவலும் கொடுக்கவில்லை. தமிழக போலீசார் சிறப்பாக கண்காணித்து வருகிறார்கள்’ என்றார்.
பேட்டியின்போது அவருடன் பயிற்சி பள்ளி முதல்வரும் டி.ஐ.ஜி.யுமான ஜேக்கப் உடன் இருந்தார். இந்த பள்ளியில் சிறப்பாக பயிற்சி பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிறைவு விழா
கோவை அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு 166 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஐ.ஜி. விஷ்ணுராவ் கோவை வந்தார்.
பின்னர் கதிர்நாயக்கன்பாளையம் சென்ற அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். அதை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீவிர கண்காணிப்பு
மத்திய அரசும், மத்திய ரிசர்வ் படை போலீசாரும் இணைந்து நக்சலைட்டுகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அத்துடன் ஏற்கனவே உள்ள நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள நக்சலைட்டுகளின் 80 சதவீதம் பேர் குறித்த அனைத்து விவரங்களும் எங்களிடம் உள்ளன. 20 சதவீதம் பேர் குறித்த தகவல் மட்டுமே இல்லை. இதற்கு காரணம் அவர்கள் மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். பகல் நேரத்தில் டாக்டர்களாக, என்ஜினீயர்களாக மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளனர். ஆனால் இரவில் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வழிகள் தடுக்கப்படும்
எனவே அவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளில் மாறுவேடத்தில் சென்று கண்காணித்து வருகிறார்கள். நக்சலைட்டுகளை கொல்வது எங்கள் நோக்கம் இல்லை. அவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆகும்.
வெளிநாடுகளில் இருந்து நக்சலைட்டுகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அதுகுறித்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது உண்மையாக இருந்தால் ஆயுதங்கள் வரும் வழிகள் தடுக்கப்படும்.
50 இடங்களில் பயிற்சி
பெரும்பாலும் வேலை இல்லாத இளைஞர்கள்தான் நக்சலைட்டுகளாக மாறி வருகிறார்கள். எனவே அவர்களை கண்டுபிடித்து, அவர்கள் தொழில் தொடங்க மத்திய அரசு மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் புதிதாக நக்சலைட்டுகள் உருவாகுவது தடுக்கப்பட்டு உள்ளது. எனவே நக்சலைட்டுகள் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உள்ளவர்களுக்கு அதிநவீன துப்பாக்கிகளை பயன்படுத்துவது, நக்சலைட்டுகளை ஒழிப்பது, கலவரங்களை தடுப்பது, கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது உள்பட பல்வேறு பயிற்சிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருகிறது.
இவ்வாறு ஐ.ஜி. விஷ்ணுராவ் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊடுருவல் இல்லை
தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் உள்ளதா என்று கேட்டபோது, ‘தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் இல்லை. இங்கு நக்சலைட்டுகள் இருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறை சார்பில் எங்களுக்கு தகவலும் கொடுக்கவில்லை. தமிழக போலீசார் சிறப்பாக கண்காணித்து வருகிறார்கள்’ என்றார்.
பேட்டியின்போது அவருடன் பயிற்சி பள்ளி முதல்வரும் டி.ஐ.ஜி.யுமான ஜேக்கப் உடன் இருந்தார். இந்த பள்ளியில் சிறப்பாக பயிற்சி பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி பகுதியில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங் கள், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங் களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் காலி யாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பொள் ளாச்சி வட்டார பகுதியில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு நேற்று முன்தினம் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் 12–வது வார்டில் 71 சதவீத வாக்குகளும், கோட்டூர் பேரூராட்சி 16–வது வார்டில் 82.5 சதவீத ஓட்டுகளும், வேட் டைக்காரன்புதூர் பேரூராட்சி 9–வது வார்டில் 87 சதவீத வாக்குகளும் பதிவாகின.
77.45 சதவீதம்
கோமங்கலம் ஊராட்சி 6–வது வார்டில் 81 சதவீதமும், பில் சின்னாம்பாளையம் ஊராட்சி 6–வது வார்டில் 89 சதவீதமும், பெத்தநாயக்கனூர் ஊராட்சி 7–வது வார்டில் 69 சதவீதமும், 9–வது வார்டில் 57 சதவீதமும், கரியாஞ்செட்டிபாளையம் ஊராட்சி 2–வது வார்டில் 81 சதவீதமும், சூலக்கல் ஊராட்சி 3–வது வார்டில் 79 சதவீதமும், தேவ ணாம்பாளையம் ஊராட்சி 8–வது வார்டில் 78 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. பொள்ளாச்சி வட்டார பகு தியில் 10 இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77.45 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பெட்டிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரங்கள் பூட்டி சீல் வைக்கப் பட்டன. ஊராட்சிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம், ஆனைமலை ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் ஓட்டுப் பெட்டிகளும், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேட்டைக்காரன்புதூர் பேரூ ராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மின்னணு வாக் குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுப்பெட்டிகள், மின் னணு வாக்குப்பதிவு எந்தி ரங் கள் வைக்கப்பட்டுள்ள அறை கள் பூட்டி சீல் வைக்கப் பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள் ளது. 24 மணி நேரமும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் கள்.
பதிவான ஓட்டுகள் அந்தந்த மையங்களில் வருகிற 22–ந் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலைக்குள் முடிவுகள் தெரிந்து விடும்.
Friday, September 19, 2014
கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் மொத்தம் 1,226 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. கோவை ஆவாரம்பாளையம் வாக்குச்சாவடி எண் 369–ல் ஓட்டுப்பதிவு தொடங்கும்போது மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதேபோல் குளத்துப்பாளையம் வாக்குச்சாவடி எண் 998–லும் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் விரைந்து சென்று எந்திரத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறை சரி செய்தனர். இதைத்தொடர்ந்து 2 வாக்குச்சாவடிகளிலும் 15 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதன்பின்னர் ஓட்டுப்பதிவு எந்தவித இடையூறும் இன்றி நடைபெற்றது.
கோவை மேயர் தேர்தலுக்கு மொத்தம் 1,226 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. ஓட்டுப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்றிவிட்டு புதிய ஓட்டுப்பதிவு எந்திரங்களை பொருத்த தயார்நிலையில் 154 எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே பொருத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடைபெற்று முடிந்ததாக மாநகராட்சி பிரிவு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மேயர் தேர்தலுக்கு மொத்தம் 1,226 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. ஓட்டுப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்றிவிட்டு புதிய ஓட்டுப்பதிவு எந்திரங்களை பொருத்த தயார்நிலையில் 154 எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே பொருத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடைபெற்று முடிந்ததாக மாநகராட்சி பிரிவு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவையில் நடந்த மோதல் சம்பவத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., பா.ஜனதா வேட்பாளர் உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க.–பா.ஜனதா மோதல்
கோவை மேயர்தேர்தலையொட்டி நேற்றுமுன்தினம் பிரசாரம் முடிந்திருந்த நிலையில் சவுரிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் வெளியூரை சேர்ந்த அ.தி.மு.க.வினர் வீடுவீடாக சென்று ஆதரவு கேட்பதாக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த கட்சியின் மேயர் வேட்பாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் தொகுதி சின்னச்சாமி எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்து சம்பவம் குறித்து கேட்க முற்பட்டபோது, மோதல் சம்பவம் மேலும் அதிகரித்தது.
போலீசில் புகார்
இதில் பா.ஜனதா வேட்பாளர் நந்தகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டதுடன், ஒருசில நிர்வாகிகளின் சட்டைகளும் கிழிக்கப்பட்டன. அத்துடன் இருதரப்பினர் கார்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த மாநகர போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் சார்பில் பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
100 பேர் மீது வழக்கு
இந்த வழக்கு குறித்து போலீசார் கூறும்போது, தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பு நிர்வாகிகள் சார்பில் புகார் செய்யப்பட்டு உள்ளது. பா.ஜனதா நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில் அ.தி.மு.க.வை சேர்ந்த சின்னச்சாமி எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீதும், அ.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் பா.ஜனதா மேயர் வேட்பாளர் நந்தகுமார் உள்பட 50 பேர் என்று மொத்தத்தில் 100 பேர் மீது, ஏராளமானோர் கூடி கலகம் செய்தல், வாகனங்களை உடைத்தல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது என்றனர்.
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்களித்தனர்.பின்னர் அவர்கள் கூறும்போது,
எங்கள் கட்சிக்கே வெற்றி கிடைக்கும் என்று ஒவ்வொருவரும் நம்பிக்கை தெரிவித்தனர். அமைச்சர்
கோவை மேயர்தேர்தலில் தமிழக உள்ளாட்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை 9 மணிக்கு ஓட்டு போட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் கோவை கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்றுக்காலை 7.45 மணியளவில் ஓட்டுப்போட்டார். அவருடன் மனைவி தயமந்தி, தாயார் புவனேஸ்வரி ஆகியோரும் சென்று வாக்களித்தனர்.
அப்போது கணபதி ப.ராஜ்குமார் கூறியதாவது:–
கோவை மாநகராட்சியின் அடிப்படை வசதிகளுக்காக முதல்–அமைச்சர் ரூ.2,378 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.நான் வெற்றி பெற்றால் கோவை மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் சப்ளையை தீவிரமாக அமல்படுத்துவேன். கோவையின் பெரும் பிரச்சினையாக உள்ள போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா வேட்பாளர்
கோவை மேயர் தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடும் ஆர்.நந்தகுமார் நேற்று காலை 7–45 மணியளவில் துடியலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓட்டுப்போட வந்தார். அவர் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.
ஓட்டு போட்டுவிட்டு வந்த பின்னர் அவர் கூறும்போது, ‘கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வெளியூரை சேர்ந்தவர்கள் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி ஓட்டு போட முயற்சிக்கிறார்கள். போலீசும் தேர்தல் ஆணையமும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூ.
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடும் பத்மநாபன் தனது மனைவி மனோன்மணியுடன் கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் மழலையர் பள்ளியில் காலை 8.15 மணிக்கு வந்து ஓட்டுப்போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆளும் கட்சி இடைத்தேர்தலை ஜனநாயக முறையில் நடத்தாததாலும், தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தியதாலும் பெரும்பாலான மக்கள் ஓட்டுப்போட ஆர்வம் காட்டவில்லை. வெளியூர்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு தங்கி இருந்ததாலும், ஓட்டுக்கு பணம் கொடுத்ததாலும் பொதுமக்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போடவில்லை. இதுவே வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணம் ஆகும்.
கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கைகள், எங்களுடைய நேர்மை, உழைப்பு ஆகியவற்றுக்கு பொதுமக்கள் தங்கள் வாக்குகள் மூலம் நியாயம் வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு பத்மநாபன் தெரிவித்தார்.
காந்தீய மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் டாக்டர் டென்னிஸ் கோயில் பிள்ளை, மஞ்சீஸ்வரி மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
எம்.எல்.ஏ.க்கள்
கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தா.மலரவன், கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மனைவி சியாமளாவுடன் சென்று வாக்களித்தார்.
சிங்காநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சின்னசாமி மசக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஓட்டு போட்டார்.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., வி.சி.ஆறுகுட்டி விளாங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் முதல் ஓட்டாக தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் மனைவி பானுமதி, மகன்கள் சஞ்சய், அருண்குமார் ஆகியோரும் ஓட்டுப்போட்டனர்.
கோவை மேயர் தேர்தலில் புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பொதுமக்கள் ஓட்டுப்போடுவதில் ஆர்வம் செலுத்தினார்கள். 90 வயது மூதாட்டி உள்பட வயதான பெண்களை தூக்கி வந்து ஓட்டு போட வைத்தனர்.
புறநகர் பகுதியில் கூட்டம்
கோவை மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், கோவை புறநகர் பகுதியில் நேற்று காலை முதல் விறு,விறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கிராமப்புற பகுதிகள் அதிகம் நிறைந்த வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை முதல் விறு,விறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 166–வது வாக்குச்சாவடியில் மொத்தம் உள்ள 1,310 பேரில், காலை 11 மணியளவில் 501 பேர் ஓட்டு போட்டு இருந்தனர். இதனால் காலை 11 மணியளவில் இந்த வாக்குச்சாவடியில் 38 சதவீதம் ஓட்டுப்பதிவானது.
கோவை சுகுணாபுரம், அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் காணப்பட்டனர். இதனால் இந்த வாக்குச்சாவடியில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. பகல் 11 மணியளவில் 20 சதவீதமும், மாலை 3 மணியளவில் 40 சதவீதமும் ஓட்டுப்பதிவானது.கோவைபுதூரை சேர்ந்த மதீனா என்ற பெண், 4 மாத கைக்குழந்தையை கையில் தூக்கியபடி வந்து ஓட்டு போட்டார். அவர் வரிசையில் நிற்காமல் விரைவில் ஓட்டுப்போட பொதுமக்கள் வசதி செய்து கொடுத்தனர்.
93 வயது மூதாட்டி
வடவள்ளி மருதமலை ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 155–வது வாக்குச்சாவடியில் 93 வயது அங்கம்மாள், உறவினர் ஒருவரின் துணையுடன் ஆட்டோவில் வந்து ஓட்டு போட்டார். இதேபோல் அந்த வாக்குச்சாவடியில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.
கவுண்டம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டியம்மாள் என்ற 90வயது மூதாட்டியை கைத்தாங்கலாக தூக்கி வந்து உறவினர் உதவியுடன் ஓட்டு போட வைத்தனர். துடியலூர் பகுதியில் காலையில் விறு,விறுப்பாக ஓட்டுப்பதிவு காணப்பட்டது. பிற்பகலில் மந்த நிலையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கீர்த்தி என்ற மாணவி காலில் காயம் அடைந்த நிலையிலும், காரில் வந்து ஆர்வத்துடன் ஓட்டு போட்டார்.
கோவை புறநகர் பகுதிகளான வீரக்கேரளம், வடவள்ளி, சரவணம்பட்டி பகுதிகளில் ஆர்வமுடன் பொதுமக்கள் வாக்களித்தனர்.
மாலையில் விறு,விறுப்பு குறைந்தது
கோவை புறநகர் பகுதியில் காலையில் காணப்பட்ட விறு,விறுப்பு மாலையில் குறைந்தது. பல வாக்குச்சாவடிகளில் பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் ஓட்டு போட்டனர்.
ஓணாப்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பல வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டு இருந்ததால் இந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
ஓட்டுப்போட்டுவிட்டு வந்தவர்கள் கூறும்போது, திரும்ப, திரும்ப தேர்தல் நடைபெறுவது தேவையில்லாதது, மக்களின் வரிப்பணம் விரையமாகிறது. எனவே அவசியமானால் மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
கோவை மேயர் தேர்தலில் அ.தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி, வாக்குச்சாவடி அருகே பாரதீய ஜனதாவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பாரதீய ஜனதாவினர் எதிர்ப்பு
கோவையை அடுத்த துடியலூர் 1–வது வார்டு பகுதியில் நேற்று காலை ஓட்டுப்பதிவு நடைபெற்றுகொண்டிருந்தது.அப்போது அந்த பகுதியில் வெளியூரை சேர்ந்த சிலர் நின்றுகொண்டு அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பதாக பாரதீய ஜனதாவினர் புகார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அங்கிருந்த அ.தி.மு.க.வினருக்கும், பாரதீய ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினார்கள்.
சம்பவ பகுதிக்கு பாரதீய ஜனதா வேட்பாளர் நந்தகுமார் வந்து பார்வையிட்டார். அவர் கூறும்போது, வெளியூரை சேர்ந்த அ.தி.மு.க.வினர் துடியலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் குவிந்து நின்று வாக்குச்சாவடி அருகே அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
கள்ள ஓட்டு போட முயற்சி
இந்த நிலையில் கவுண்டம்பாளையம் ராமசாமி பள்ளியில் 32–வது வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை பிடித்து பாரதீய ஜனதா பிரமுகர் சந்திரன் என்பவர் போலீசில் ஒப்படைத்தார். அவர் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் ஆவார். துடியலூர் போலீசார் அவரை வேனில் ஏற்றி சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவை 32–வது எண் வாக்குச்சாவடியில் ஆளும் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக கூறி, பாரதீய £னதா கட்சியினர் வாக்குச்சாவடி அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட கூடுதல் துணைசூப்பிரண்டு அதிவீரபாண்டியன், மற்றும் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினார்கள். சம்பவ இடத்துக்கு பாரதீயஜனதா மாநில செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஆகியோரும் வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அழைத்துச்சென்றனர்.
துடியலூர் பகுதியில் ஓட்டுப்பதிவு தொடங்கிய காலை முதல் மாலைவரை இருகட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றம் நிலவியதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Thursday, September 18, 2014
ஆனைமலை அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் தியாகு விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்பட சில பொருட்கள் திருட்டு போயின. இது குறித்து தியாகு ஆனைமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் உள்பட பொருட்களை திருடிய நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் செல்போனில் உள்ள ரகசிய குறியீட்டு எண் மூலம் அதனை திருடிய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார் கள். விசாரணையில் அந்த அவர் திருப்பூர் மாவட்டம் வேலாம்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் செல்போன் திருடியதாக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அய்யா வைகுண்ட சிவபதி
கோவை சரவணம்பட்டியை அடுத்த வரதய்யங்கார்பாளையம் லட்சுமி கார்டனில் அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பணிவிடை, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.
அது போல் இந்த ஆண்டுக்கான புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பதி நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு நாதஸ்வர வாத்தியம், செண்டை வாத்தியம் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 5.30 மணிக்கு உகபடிப்பு, அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளல், காலை 8 மணிக்கு அன்னதானம், மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு பணிவிடை, அன்னதானமும், இரவு 7.30 மணிக்கு அகில திரட்டு சிறப்பு சொற்பொழிவும், தொட்டில் வாகனத்தில் அய்யா திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
திருவீதி உலா
திருவிழாவையொட்டி 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் காலை, மாலை உகபடிப்பும், மதியம் உச்சிப்படிப்பும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. தினமும் 6 மணிக்கு சொற்பொழிவும், இரவு 8.30 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.
20-ந்தேதி மயில் வாகனத்திலும், 21-ந்தேதி அன்ன வாகனத்திலும், 22-ந்தேதி தொட்டில் வாகனத்திலும், 23-ந்தேதி பூஞ்சப்பர வாகனத்திலும், 24-ந்தேதி சர்ப்ப வாகனத்திலும், 25-ந்தேதி கருட வாகனத்திலும், 26-ந்தேதி குதிரை வாகனத்திலும், 27-ந்தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். 27-ந்தேதி இரவு 9 மணிக்கு செந்தில்குமாரின் அய்யா நாமகீத இன்னிசை கச்சேரி நடைபெறும்.
தேரோட்டம்
திருவிழாவின் 10-ம் நாள்(28-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு உகபடிப்பு, பணிவிடை, அன்னதானமும், பகல் 11.30 மணிக்கு பல்லக்கு வாகனம் மூலம் அய்யா வைகுண்டர் திருத்தேருக்கு எழுந்தருளல், பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு இளைபெருமாளின் இசை நிகழ்ச்சி நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா வைகுண்டர் அம்மையப்பராக எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். அதிகாலை 3 மணிக்கு திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
அய்யா வைகுண்ட சிவபதி
கோவை சரவணம்பட்டியை அடுத்த வரதய்யங்கார்பாளையம் லட்சுமி கார்டனில் அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பணிவிடை, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.
அது போல் இந்த ஆண்டுக்கான புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பதி நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு நாதஸ்வர வாத்தியம், செண்டை வாத்தியம் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 5.30 மணிக்கு உகபடிப்பு, அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளல், காலை 8 மணிக்கு அன்னதானம், மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு பணிவிடை, அன்னதானமும், இரவு 7.30 மணிக்கு அகில திரட்டு சிறப்பு சொற்பொழிவும், தொட்டில் வாகனத்தில் அய்யா திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
திருவீதி உலா
திருவிழாவையொட்டி 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் காலை, மாலை உகபடிப்பும், மதியம் உச்சிப்படிப்பும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. தினமும் 6 மணிக்கு சொற்பொழிவும், இரவு 8.30 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.
20-ந்தேதி மயில் வாகனத்திலும், 21-ந்தேதி அன்ன வாகனத்திலும், 22-ந்தேதி தொட்டில் வாகனத்திலும், 23-ந்தேதி பூஞ்சப்பர வாகனத்திலும், 24-ந்தேதி சர்ப்ப வாகனத்திலும், 25-ந்தேதி கருட வாகனத்திலும், 26-ந்தேதி குதிரை வாகனத்திலும், 27-ந்தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். 27-ந்தேதி இரவு 9 மணிக்கு செந்தில்குமாரின் அய்யா நாமகீத இன்னிசை கச்சேரி நடைபெறும்.
தேரோட்டம்
திருவிழாவின் 10-ம் நாள்(28-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு உகபடிப்பு, பணிவிடை, அன்னதானமும், பகல் 11.30 மணிக்கு பல்லக்கு வாகனம் மூலம் அய்யா வைகுண்டர் திருத்தேருக்கு எழுந்தருளல், பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு இளைபெருமாளின் இசை நிகழ்ச்சி நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா வைகுண்டர் அம்மையப்பராக எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். அதிகாலை 3 மணிக்கு திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
கோவை அருகே வீடு புகுந்து முதியவர்களை தாக்கி நகைகளை கொள்ளை கும்பல் பறித்து சென்றது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் டி.ஐ.ஜி.யும், போலீஸ் சூப்பிரண்டும் நேரில் விசாரணை நடத்தினர்.
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்
கோவை சரவணம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயகுமாருடன் அவரது தந்தை மீனாட்சிசுந்தரம் (67), தாய் சியாமளா (61), மனைவி முத்துமாரி ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
விஜயகுமார் நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் முத்துமாரி, மீனாட்சி சுந்தரம், சியாமளா ஆகியோர் இருந்தனர். இரவு சாப்பிட்டு விட்டு அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று தூங்கி கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் விஜயகுமாரின் வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் வீட்டு பிரதான கதவில் ஓட்டி இருந்த நிலைக்கண்ணாடியை கழற்றினார்கள். அதன் பிறகு கண்ணாடி இருந்த இடத்தின் வழியே கையை உள்ளே நுழைத்து உட்புறமாக பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளனர். மர்ம நபரில் ஒருவன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு ஆட்கள் யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிட்டான்.
முதியவர்கள் மீது சரமாரி தாக்குதல்
கதவு திறக்கப்பட்ட சத்தத்தை கேட்டு மீனாட்சி சுந்தரம் யாரது? என்று சத்தம் போட்டு கொண்டே தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது வீட்டிற்குள் நின்றிருந்த மர்ம நபர், மீனாட்சி சுந்தரத்தின் தலையில் பலமாக தாக்கினார். இதில் அம்மா என்று அலறியபடி அவர் கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த சியாமளாவையும் அந்த மர்ம நபர் தலையில் பலமாக தாக்கினார். அவரும் அலறியபடியே கீழே விழுந்தார்.
மாமனார், மாமியாரின் அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து அறையில் இருந்து முத்துமாரி சத்தம் போட்டுக்கொண்டே வெளியே ஓடி வந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களும் திடீரென்று தங்களது வீட்டில் விளக்கை எரியவிட்டு கதவை திறந்தனர். இதை பார்த்த வெளியே நின்றிருந்த ஆசாமி வீட்டிற்குள் இருக்கும் கொள்ளையனுக்கு சைகை காண்பித்தான். உடனே வீட்டிற்குள் நின்றிருந்த அந்த ஆசாமி, சியாமளா அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். வெளியே நின்றிருந்த ஆசாமியும் தப்பி ஓடி விட்டான்.
தீவிர சிகிச்சை
இந்த நிலையில் கொள்ளையர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து மீனாட்சிசுந்தரமும், சியாமளாவும் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். உடனே முத்துமாரி 108 ஆம்புலன்சுக்கும், தனது கணவருக்கும் தகவலை தெரிவித்தார். இதற்கிடையே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஓடி வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மற்றொரு வீட்டில் திருட்டு
இதே போல் விஜயகுமாரின் வீட்டில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனசேகரன் (33) என்பவரது வீட்டிலும் அந்த கொள்ளை கும்பல் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நேற்று தனசேகரன் தனது மனைவி மதுமதி மற்றும் குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். வீட்டின் கதவிலிருந்த கண்ணாடியை கழற்றி உட்புறமாக பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளே புகுந்த ஆசாமி குழந்தை இடுப்பில் கட்டி இருந்த வெள்ளி அரைஞாண் கொடியை அறுத்தான். சத்தம் கேட்டு எழுந்த மதுமதி தனது கணவரை எழுப்ப முயன்று இருக்கிறார். அப்போது கொள்ளையன் மதுமதியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டு வெள்ளி அரைஞாண் கொடியையும், வீட்டில் இருந்த கவரிங் நகையையும் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டான்.
போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை
இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் டி.ஐ.ஜி. மணீஸ் திவாரி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மோப்ப நாய் ஹேரி வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி இருக்கிறதா? என்று ஆய்வு நடத்தினர்.
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்
கோவை சரவணம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயகுமாருடன் அவரது தந்தை மீனாட்சிசுந்தரம் (67), தாய் சியாமளா (61), மனைவி முத்துமாரி ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
விஜயகுமார் நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் முத்துமாரி, மீனாட்சி சுந்தரம், சியாமளா ஆகியோர் இருந்தனர். இரவு சாப்பிட்டு விட்டு அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்று தூங்கி கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் விஜயகுமாரின் வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள் வீட்டு பிரதான கதவில் ஓட்டி இருந்த நிலைக்கண்ணாடியை கழற்றினார்கள். அதன் பிறகு கண்ணாடி இருந்த இடத்தின் வழியே கையை உள்ளே நுழைத்து உட்புறமாக பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளனர். மர்ம நபரில் ஒருவன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு ஆட்கள் யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிட்டான்.
முதியவர்கள் மீது சரமாரி தாக்குதல்
கதவு திறக்கப்பட்ட சத்தத்தை கேட்டு மீனாட்சி சுந்தரம் யாரது? என்று சத்தம் போட்டு கொண்டே தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது வீட்டிற்குள் நின்றிருந்த மர்ம நபர், மீனாட்சி சுந்தரத்தின் தலையில் பலமாக தாக்கினார். இதில் அம்மா என்று அலறியபடி அவர் கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த சியாமளாவையும் அந்த மர்ம நபர் தலையில் பலமாக தாக்கினார். அவரும் அலறியபடியே கீழே விழுந்தார்.
மாமனார், மாமியாரின் அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து அறையில் இருந்து முத்துமாரி சத்தம் போட்டுக்கொண்டே வெளியே ஓடி வந்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களும் திடீரென்று தங்களது வீட்டில் விளக்கை எரியவிட்டு கதவை திறந்தனர். இதை பார்த்த வெளியே நின்றிருந்த ஆசாமி வீட்டிற்குள் இருக்கும் கொள்ளையனுக்கு சைகை காண்பித்தான். உடனே வீட்டிற்குள் நின்றிருந்த அந்த ஆசாமி, சியாமளா அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். வெளியே நின்றிருந்த ஆசாமியும் தப்பி ஓடி விட்டான்.
தீவிர சிகிச்சை
இந்த நிலையில் கொள்ளையர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து மீனாட்சிசுந்தரமும், சியாமளாவும் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். உடனே முத்துமாரி 108 ஆம்புலன்சுக்கும், தனது கணவருக்கும் தகவலை தெரிவித்தார். இதற்கிடையே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஓடி வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மற்றொரு வீட்டில் திருட்டு
இதே போல் விஜயகுமாரின் வீட்டில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனசேகரன் (33) என்பவரது வீட்டிலும் அந்த கொள்ளை கும்பல் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நேற்று தனசேகரன் தனது மனைவி மதுமதி மற்றும் குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். வீட்டின் கதவிலிருந்த கண்ணாடியை கழற்றி உட்புறமாக பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளே புகுந்த ஆசாமி குழந்தை இடுப்பில் கட்டி இருந்த வெள்ளி அரைஞாண் கொடியை அறுத்தான். சத்தம் கேட்டு எழுந்த மதுமதி தனது கணவரை எழுப்ப முயன்று இருக்கிறார். அப்போது கொள்ளையன் மதுமதியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டு வெள்ளி அரைஞாண் கொடியையும், வீட்டில் இருந்த கவரிங் நகையையும் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டான்.
போலீஸ் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை
இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் டி.ஐ.ஜி. மணீஸ் திவாரி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மோப்ப நாய் ஹேரி வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி இருக்கிறதா? என்று ஆய்வு நடத்தினர்.
பெரியாரின் 136-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசு சார்பில் விழா
பெரியாரின் 136-வது பிறந்தநாளை நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சிறப்பாக கொண்டாடினார்கள். கோவையில் அரசு சார்பில் நடந்த விழாவில், எம்.பி.க்கள் ஏ.பி.நாகராஜன், ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் சின்னச்சாமி, தாமோதரன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, தா.மலரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை முன்னிட்டு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அருகே பெரியாரின் நினைவு தூண் முன்பு பெரியாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தமிழக நகராட்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, மண்டல தலைவர்கள் சாவித்திரி பார்த்திபன், ஆதிநாராயணன், ஜெயராமன் மற்றும் சி.டி.சி. ஜப்பார், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.-ம.தி.மு.க.
கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கா.ரா.சுப்பையன், கார்த்திக்செல்வராஜ், மகுடபதி, நாச்சிமுத்து உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் ம.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் பெரியாரின் உருவப்படத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் என்.கே.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அ.சேதுபதி, மு.தியாகராஜன், சூரிநந்தகோபால், கணபதி செல்வராஜ், ஆர்.சற்குணம், மு.ராமநாதன், வெள்ளியங்கிரி, ஷாஜகான், யூசுப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கோபால், சாஜித், ஆறுச்சாமி, ராமசாமி, இளங்கோ, பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உறுதிமொழி ஏற்பு
கோவை வெங்கிட்டாபுரத்தில் குத்தூசி குருசாமி படிப்பகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பெரியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வக்கீல் சி.பி.சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கதிரவன், ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலா, அன்பு, ஓவியா உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு பெரியாரின் கொள்கைகள் இடம்பெற்ற நோட்டீசுகளும் வினியோகம் செய்யப்பட்டன.
அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஸ்டீபன் ராஜ் மாலை அணிவித்தார். இந்தநிகழ்ச்சியில் இளங்கோ, சி.டி.சி.சுப்பிரமணி, பி.எஸ்.ஸ்டீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அரசு சார்பில் விழா
பெரியாரின் 136-வது பிறந்தநாளை நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சிறப்பாக கொண்டாடினார்கள். கோவையில் அரசு சார்பில் நடந்த விழாவில், எம்.பி.க்கள் ஏ.பி.நாகராஜன், ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் சின்னச்சாமி, தாமோதரன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, தா.மலரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை முன்னிட்டு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அருகே பெரியாரின் நினைவு தூண் முன்பு பெரியாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தமிழக நகராட்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, மண்டல தலைவர்கள் சாவித்திரி பார்த்திபன், ஆதிநாராயணன், ஜெயராமன் மற்றும் சி.டி.சி. ஜப்பார், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.-ம.தி.மு.க.
கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கா.ரா.சுப்பையன், கார்த்திக்செல்வராஜ், மகுடபதி, நாச்சிமுத்து உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் ம.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் பெரியாரின் உருவப்படத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் என்.கே.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அ.சேதுபதி, மு.தியாகராஜன், சூரிநந்தகோபால், கணபதி செல்வராஜ், ஆர்.சற்குணம், மு.ராமநாதன், வெள்ளியங்கிரி, ஷாஜகான், யூசுப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கோபால், சாஜித், ஆறுச்சாமி, ராமசாமி, இளங்கோ, பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உறுதிமொழி ஏற்பு
கோவை வெங்கிட்டாபுரத்தில் குத்தூசி குருசாமி படிப்பகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பெரியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வக்கீல் சி.பி.சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கதிரவன், ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலா, அன்பு, ஓவியா உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு பெரியாரின் கொள்கைகள் இடம்பெற்ற நோட்டீசுகளும் வினியோகம் செய்யப்பட்டன.
அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஸ்டீபன் ராஜ் மாலை அணிவித்தார். இந்தநிகழ்ச்சியில் இளங்கோ, சி.டி.சி.சுப்பிரமணி, பி.எஸ்.ஸ்டீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tuesday, September 16, 2014
கோவை,செப்.16-
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கிழக்கு மண்டல பகுதியில் சந்தையில் அமைச்சர் மோகன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைதேர்தல் வருகின்ற 18 ம் தேதி நடைபெற உள்ளது. மேயர் பதவிக்கு அண்ணா தி.மு.க.சார்பில் கணபதி ப.ராஜ்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து கோவை மாநகராட்சி யில் உள்ள 100 வார்டுகளிலும் தமிழக அமைச்சர்கள், வாரியத்தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 57வது வார்டு, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து பகுதியிலும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான ப.மோகன் தலைமையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.சின்னசாமி, மாவட்ட பொருளாளர் சிங்கை என்.முத்து, பகுதி செயலாளர் சிங்கை ரங்கநாதன், 57வது வார்டு கவுன்சிலரும், தொகுதி செயலாளருமான மாரப்பன், வட்டார செயலாளர் ஆர்.வடிவேல்,மற்றும் அண்ணா தி.மு.க.வினர் வீதி, வீதியாக சென்று பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பின்னர் மசக்காளிபாளையம் ரவுண்டாணா அருகில் சந்தையில் அமைச்சர் மோகன் பெண்களிடம் 3 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைதேர்தல் வருகின்ற 18 ம் தேதி நடைபெற உள்ளது. மேயர் பதவிக்கு அண்ணா தி.மு.க.சார்பில் கணபதி ப.ராஜ்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து கோவை மாநகராட்சி யில் உள்ள 100 வார்டுகளிலும் தமிழக அமைச்சர்கள், வாரியத்தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 57வது வார்டு, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து பகுதியிலும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான ப.மோகன் தலைமையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.சின்னசாமி, மாவட்ட பொருளாளர் சிங்கை என்.முத்து, பகுதி செயலாளர் சிங்கை ரங்கநாதன், 57வது வார்டு கவுன்சிலரும், தொகுதி செயலாளருமான மாரப்பன், வட்டார செயலாளர் ஆர்.வடிவேல்,மற்றும் அண்ணா தி.மு.க.வினர் வீதி, வீதியாக சென்று பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பின்னர் மசக்காளிபாளையம் ரவுண்டாணா அருகில் சந்தையில் அமைச்சர் மோகன் பெண்களிடம் 3 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அமைச்சருடன் மகளிர் அணி பகுதி இணை செயலாளர் குமுதவல்லி, பேரவை செயலாளர் ராஜேந்திரன், வட்டார அவைத்தலைவர் பன்னீர் செல்வம், பெரியார் ராமசாமி, பார்த்திபன்,சௌந்தரராஜன்,தாஸ், எம்.கே.பி.செல்வராஜ்,சேகர், பழனிசாமி, திண்டிவனம் எம்.எல்.ஏ.ஹரிதாஸ், விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பி.தங்கபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் செல்லமுத்து, வார்டு பொறுப்பாளர்கள் ரஜினி குணசேகரன், முருகானந்தம், குமரேசன், பால்ராஜ், திருநாவுகரசு, ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பாக்கியலட்சுமி, கௌரி ஆகியோர் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.
சூலூர்.செப்.16-
இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக அண்ணா தி.மு.க.நிர்வாகிகளும்,கூட்டணி க்கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரம் செய்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியம், இருகூர் பேரூராட்சி மன்ற இடைத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் டி.பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் சூலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் நிலவள வங்கி சங்க தலைவர் என்.சி.குட்டியப்பன், கருமத்தம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அடித்தட்டு மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காக நல்ல பல திட்டங்களை அளித்து வருகிறார்.எங்களை போன்ற எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் காலையில் வைக்கும் கோரிக்கைகளை மாலையில் 110 விதியின் கீழ் திட்டங்களாக அறிவித்து வருகிறார். இந்தியாவில் உள்ள 32 மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை கொண்டு செல்லும் வகையில் விஷன் 2023 ஐ உருவாக்கியுள்ளார்.அவரது வாழ்நாளில் தமிழக மக்கள் யாரும் கையேந்தும் நிலைக்கு விடமாட்டேன் என சூளுரைத்து மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் வகையில் அள்ளும் பகலும் அவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார்.அவரது ஆசி பெற்ற வேட்பாளராக போட்டியிடும் பத்மசுந்தரி துரைசாமி நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்.முதல்வரின் திட்டங் களை முன் நின்று செயல்படுத்துபவர்.அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கதிரவன் எம்.எல்.ஏ.பேசினார்.
கூட்டத்தில் வாகரம்பாளையம் பேரூராட்சி தலைவர் தெப்பீஸ்வரன், இருகூர் துரைசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, ரங்கநாதன், கருப்புசாமி, சக்திவேல், பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் மாவட்டசெயலாளர் கர்ணன். அம்மா பேரவை தலைவர் ராமசாமி உளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் இருகூர் 18வது வார்டு பொறுப்பாளர் கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் ஏ.சி.மகாலிங்கம் தலைமையில் கருமத்தம்பட்டி பேரூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் அட்ஷயா செந்தில், அவைத்தலைவர் சண்முகசுந்தரம், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், எஸ்.கே.மணி, வசந்தி ஆறுமுகம், மார்டின்,பொருளாளர் ஜோசப்,செல்லமுத்து, ராயர்பாளையம் சுரேஷ் உள்ளிட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் வீதி, வீதியாக சென்று 3 ஆண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
இருகூர் பேரூராட்சி மன்ற 5வது வார்டு பொறுப்பாளர் பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் வி.கே.சண்முகம் தலைமையில் சூலூர் அங்கமுத்து, இருகூர் நகர செயலாளர் துரைசாமி, ஜல்லிப்பட் டி ராமசாமி, பாபு என்கிற ஜெயச்சந்திரன், கவுன்சிலர் பிரகாஷ், பள்ளபாளையம் பேரூராட்சி கழக செயலாளர் பேச்சிமுத்து உள்பட பலர் காமாட்சிபுரம் 5வது வார்டு, மெயின் ரோடு, குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வீடு,வீடாக சென்று ஜெயலலிதாவின் சாதனைகளை பெண்களிடம் விளக்கி கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து தேர்தல் பொறுப்பாளர் மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட இலக்கிய அணி செயலாளரும்,சுல்தான்பேட்டை ஒன்றிய துணைத் தலைவருமான வ.மா.பழனிசாமி தலைமையில், 8 மற்றும் 9 வது வார்டுகளில் உள்ள இருகூர் டவுன், கண்ணன் நகர் முத்துராமலிங்கம் வீதி, சாமியான்மேடை, ஒண்டிபுதூர் ரோடு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் உமா மகேஸ்வரி, சுல்தான்பேட்டை ஒன்றிய பாசறை செயயலாளர் மகேஸ்வரன், பூராண்டம்பாளையம் ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியம், சுல்தான்பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், அமலோற்பவமேரி, கண்ணம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ரங்கநாதன், செஞ்சேரி தங்கவேல், வேலாயுதம், சின்னகுயிலி துரைசாமி, கிளை செயலாளர் சுந்தர்ராஜ்,சுல்தான்பேட்டை ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் மணிமாலா, அமிர்தம், இருகூர் பகுதி கிளை நிர்வாகிகள் பூபால் செல்வம், ஜெகநாதன், வெற்றிவேல்,நாகராஜ், குமார், பிளம்பர் ஈஸ்வரன், உச்சா செல்வராஜ் ஆகியோர் வீடு,வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தே.மு.தி.க.வின் 10-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுலைமான், ஒன்றிய செயலாளர்கள் கோலார்பட்டி பாலு, நித்தியானந்த சரவணன், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கேப்டன் மன்ற செயலாளர் சையது காஜாசெரிப் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் கோல்டுகுமார், தே.மு.தி.க. நிர்வாகிகள் ஜெகன், கிட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். முடிவில் கணேசன் நன்றி கூறினார்.
இதில் மாவட்ட பொருளாளர் கோல்டுகுமார், தே.மு.தி.க. நிர்வாகிகள் ஜெகன், கிட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். முடிவில் கணேசன் நன்றி கூறினார்.
பொள்ளாச்சியில் நகை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25½ பவுன் நகை கள் மீட்கப்பட்டன.
வாகன சோதனை
பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி துணை சூப்பிரண்டு முத்து ராஜன் மேற்பார்வையில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக் டர் சோமசுந்தரம் தலைமை யில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீ சார் உடுமலை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட் டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி னார்கள். விசாரணையில் அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார்கள். இதனால் சந்தே கமடைந்த போலீசார் 2 பேரையும் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார் கள்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் மதுரை ராமமூர்த்தி நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 29), ஜீவா நகரை சேர்ந்த மாயாண்டி (26) என்பதும் தெரியவந்தது. இதில் சக்திவேல் கடந்த பிப்ரவரி மாதம் வெங்கடேசாகாலனி வி.கே.வி. லே-அவுட்டில் ராமசாமி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை திருடுபோன வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரைக்குடி உள்பட பல்வேறு பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியில் மளிகை கடைக்கு சென்ற ஸ்ரீதேவி என்ற பெண் ணிடம் மாயாண்டி 5 ½ பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேல், மாயாண்டி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் களி டம் இருந்து 25½ பவுன் நகை களை மீட்டனர். பின்னர் கைதான 2 பேரையும் போலீ சார் கோர்ட் டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
வாகன சோதனை
பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி துணை சூப்பிரண்டு முத்து ராஜன் மேற்பார்வையில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக் டர் சோமசுந்தரம் தலைமை யில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீ சார் உடுமலை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட் டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி னார்கள். விசாரணையில் அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார்கள். இதனால் சந்தே கமடைந்த போலீசார் 2 பேரையும் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார் கள்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் மதுரை ராமமூர்த்தி நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 29), ஜீவா நகரை சேர்ந்த மாயாண்டி (26) என்பதும் தெரியவந்தது. இதில் சக்திவேல் கடந்த பிப்ரவரி மாதம் வெங்கடேசாகாலனி வி.கே.வி. லே-அவுட்டில் ராமசாமி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை திருடுபோன வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரைக்குடி உள்பட பல்வேறு பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியில் மளிகை கடைக்கு சென்ற ஸ்ரீதேவி என்ற பெண் ணிடம் மாயாண்டி 5 ½ பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேல், மாயாண்டி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் களி டம் இருந்து 25½ பவுன் நகை களை மீட்டனர். பின்னர் கைதான 2 பேரையும் போலீ சார் கோர்ட் டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
ஸ்ரீரங்கத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம் பூலோக வைகுண்டம் என்று போற்றக்கூடிய 108 திவ்ய தேசங்களில் முதன்மையான அரு...