Showing posts with label Break. Show all posts
Showing posts with label Break. Show all posts

Tuesday, May 17, 2016

On Tuesday, May 17, 2016 by Unknown in ,    



தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள 15-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சு மார் மூவாயிரத்திற்கும் அதிகமான மலைவாழ் மக்கள் உள்ளனர். மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இந்த மலைவாழ் மக்களுக்காக மாவடப்பு மலைக்
கிராமத்தில் இந்த முறை ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
மாவடப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் மலைவாழ் மக்கள் வாக்களித்தனர்.  மேலும், கோடந்தூர் மலைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் கோடந்தூர், ஆட்டுமலை, பொறுப்பாறு ஆகிய செட்டில்மெண்ட் கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வாக்களித்தனர்.
 அமராவதி வனச்சரகத்துக்கு உள்பட்ட தளிஞ்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் தளிஞ்சி, தளிஞ்சி வயல் ஆகிய செட்டில்மெண்டுகளைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வாக்களித்தனர்.
மேலும், குருமலை, திருமூர்த்தி மலை, ஈசல் திட்டு ஆகிய செட்டில்மெண்ட்டுகளுக்கு கீழே திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலும் மலைவாழ் மக்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். கரட்டுப்பதி செட்டில்மெண்ட்டைச் சேர்ந்த வாக்காளர்கள் அமராவதி நகரில் வாக்களித்தனர்.

Friday, May 13, 2016

On Friday, May 13, 2016 by Unknown in ,    



வேலூர் மாவட்டம் வாணியம் பாடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நீலோபர் கபீல். இவரது வீடு வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ளது. இங்கு, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பறக்கும் படை அதிகாரிகள் ஹமீது நவாஸ், சிவக்குமார் மற்றும் போலீஸார் நீலோபர் கபீல் வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தி னர். அப்போது, வீட்டில் வேட் பாளர் நீலோபர் கபீல் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
பின்னர் வீட்டில் உள்ள, வர வேற்பறையில் இருந்த ஷோஃபா, அலமாரி மற்றும் நாளிதழ்களில் சுற்றி வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதை யடுத்து, வருமான வரித் துறை உதவி இயக்குநர் பனீந் திரன் தலைமையிலான குழுவின ரும் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்குத் தொடங்கிய சோதனை நேற்று காலை 9 மணி வரை நடந்தது. அதில், கணக்கில் வராத பணம் ரூ.14 லட்சத்து 8 ஆயிரத்து 820 பறிமுதல் செய்து வாணியம்பாடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இந்த தகவலறிந்த வாணியம் பாடி எம்எல்ஏ கோவி. சம்பத்குமார் மற்றும் அக்கட்சியினர் நீலோபர் கபீல் வீட்டில் குவிந்தனர். பின்னர் அதிகாரிகளிடம், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு செய்ய வேலூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜேந்திர ரத்னு பரிந்துரை செய்தார்
On Friday, May 13, 2016 by Unknown in ,    



தென்மேற்கு வங்கக்கடலில் இலங் கைக்கு அருகே நாளை (மே 14) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, அடுத்த 2 நாட்க ளில் அது வலுவடையும். வெப்பச் ச லனம் காரணமாக மே 15, 16 தே திகளில் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகில் நாளை (மே 14) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும். அடுத்த இரு நாட்களில் (மே 16) இது அதே இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும்போதுதான் அதனால் எந்த அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும் என்பதைக் கூற முடியும்.
கடந்த 24 மணி நேரத்தைப் பெ ாருத்தவரை வெப்பச் சலனம் காரண மாக தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங் களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை (மே 13) வட தமிழகத்தில் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 60 மில்லி மீட்டர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆகிய இடங்களில் தலா 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவில், பெரம்பலூர், பு துக்கோட்டை மாவட்டம் பெருங்க ளூர், தேனி மாவட்டம் பெரியாறு, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் தலா 40 மில்லி மீட்டர், உடுமலைப் பேட்டை, கோவை மாவட்டம் சூலூர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், செங்கோட்டை, தேனி மாவட்டம் கூடலூர், பெரியகுளம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருச்சி மாவட்டம் முசிறி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கந்தர்வக்கோட் டை, கோவை ஆகிய இடங்களில் தலா 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலையைப் பொருத்த வரை நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வெப்பச் சலனம் காரணமாக மே 14 ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். மே 15,16 தேதிகளில் ராமநாதபுரம் , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விரு துநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை மே 13, 14 தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
On Friday, May 13, 2016 by Unknown in ,    



உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம், ஜெயலலிதா வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவின் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடந்த 3-ம் தேதி பரிந்துரை செய்த‌து. அவர் தவிர‌, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் மாணிக் ராவ் கான்வில்கர், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டிருந்த‌து.
மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா தலைமையிலான சட்ட அமைச்சகம் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. நீதிபதிகளாக பரிந்துரை செய்யப் பட்டுள்ள 4 பேரின் ஆவணங்களும் கோப்புகளும் சரி பார்க்கும் பணிகள் நேற்றுமுன்தினம் வரை நடைபெற்றது. இதையடுத்து நால்வரின் பெயர்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சட்ட அமைச்சகத்தின் பரிந் துரையை ஏற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட், அஜய் மாணிக் ராவ் கான்வில்கர், அசோக் பூஷண் மற்றும் மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவ் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நிய மிக்க நேற்று ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் நால் வரும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கின்றனர்.
உயர்நீதிமன்றங்களில் நூற்றுக் கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த மூத்த நீதிபதிகளே பெரும்பாலும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக் கும் கொலிஜியம் அமைப்பின் உறுப் பினர்களின் அழுத்தமான பரிந் துரையில் மூத்த வழக்கறிஞர்கள் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதி யாக நியமிக்கப்படுவார்கள்.
இந்திய சட்ட மற்றும் நீதித்துறை வரலாற்றில் வழக்கறிஞராக இருந்து நேரடியாக‌ உச்ச நீதிமன்ற நீதிபதியாக இதுவரை 6 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7-வது நபராக எல்.நாகேஸ்வர ராவ் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு ஜெயலலிதாவின் மற்றொரு மூத்த வழக்கறிஞரான ஃபாலி எஸ். நரிமனின் மகன் ரோஹின்டன் நரிமன் வழக்கறிஞ ராக இருந்து நேரடியாக உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொலிஜியம் முறைப்படி அமித்வா ராய் (ஜெயலலிதா வழக்கு நீதிபதி) உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 15 மாதங் களுக்கு பிறகு தற்போது உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருப்பதால் நீதிபதி களின் எண்ணிக்கை 25ல் இருந்து 29-ஆக உயர்ந்துள்ளது.
On Friday, May 13, 2016 by Unknown in ,    



அவிநாசியில் அரசுப் பேருந்து மோதி துணை ராணுவ வீரர் காயமடைந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் பேருந்து ஓட்டுநரைத் தாக்கி, அதன் கண்ணாடி உடைத்ததால் வியாழக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.
 அவிநாசியில், சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 65-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர்.
 இந்நிலையில், துணை ராணுவ வீரர்கள் சிலர், திருமண மண்டபத்துக்கு அருகில் உள்ள தேநீர் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து துணை ராணுவ வீரரான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மீது மோதியது. இதில், அவர் காயமடைந்துள்ளார்.
 இச்சம்பவத்தால், சுரேஷ்குமாருடன் சென்ற சக ராணுவ வீரர்களுக்கும், அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநர் ரங்கசாமியைத் தாக்கி, பேருந்துக் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். இதனால், அவிநாசி-கோவை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
 பேருந்து மோதி காயமடைந்த சுரேஷ்குமார், ராணுவ வீரர்களால் தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர் ரங்கசாமி ஆகியோரை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் செந்றனர். இது குறித்து போலீஸார், இரு தரப்பினரிடமும் விசாரிக்கின்றனர்
On Friday, May 13, 2016 by Unknown in ,    


குண்டடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 7 பேர் காயமடைந்தனர்.
மதுரையிலிருந்து கோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து வியாழக்கிழமை காலை குண்டடம் அருகே திருப்பூர் பிரிவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
இதில், பேருந்தில் பயணித்த தஞ்சாவூரைச் சேர்ந்த கெளசல்யா (22), முத்துமாரி(30), தாமோதரன் (30), ராதாகிருஷ்ணன் (50) உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து குண்டடம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
On Friday, May 13, 2016 by Unknown in ,    


உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உடுமலையில் புதன்கிழமை இரவு திடீரென, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மழை தொடர்ந்து 3 மணி நேரம் பெய்தது. இதனால், உடுமலை நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது.
மழைநீருடன் சாக்கடைக் கால்வாய் கழிவுநீரும் கலந்து வந்ததால் துர்நாற்றம் வீசியது.  கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் மழைநீர் நிரம்பிச் சென்றது.
கருணாநிதி காலனி, சாதிக் நகர் உள்ளிட்ட பல்வேறு குடிசைப் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
அமராவதி நகர், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. கனமழை பெய்ததால் விவசாயிகள்,  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
On Friday, May 13, 2016 by Unknown in ,    
.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு நினைவுகூறும் வகையிலான பிரசார வாகனத்தை வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து திருப்பூர் தெற்குத் தொகுதி கருவம்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சு.குணசேகரனுக்கு ஆதரவு திரட்டி அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:
 கடந்த 5 ஆண்டுகளில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 3,662 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தில் 3 லட்சத்து 59,278 பயனாளிகளுக்கு ரூ.168 கோடியே 92 லட்சம் செலவில் இப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருமணத்துக்குத் தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தில் இதுவரை 12,109 பயனாளிகளுக்கு ரூ.57.12 கோடி மதிப்பீட்டில் உதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் திருமண உதவி தொகையுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்திற்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.6,870 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 6,730 பெண் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். கல்வித் துறைக்கு இந்த ஆண்டு ரூ.21,000 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார் என்றார்.
அதிமுக நிர்வாகிகள், தம்பி மனோகரன், அன்பகம் திருப்பதி, ஷாஜகான், சடையப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
On Friday, May 13, 2016 by Unknown in ,    


திருப்பூரில் தேர்தலுக்குப் பிறகு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்று திமுக வேட்பாளர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்றிய கருப்புக் கொடிகளை அகற்றினர்.
திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட மெய்யாண்டம்பாளையம், ஏ.டி.காலனியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி பொதுமக்கள் தங்களது வீடுகளில் மே 10-ஆம் தேதி முதல் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புக் கொடி போராட்டம் வியாழக்கிழமை வரை தொடர்ந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை திமுக வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் அப்பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது, தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தால் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து வீடுகளில் ஏற்றப்பட்டிருந்த கருப்புக் கொடிகளை அப்பகுதி மக்கள் அகற்றினர். உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
On Friday, May 13, 2016 by Unknown in ,    



 காங்கயம் தொகுதியில் போட்டியிடும் திமுக,காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பி.கோபியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு காங்கயத்தில் வியாழக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டார்.
 அப்போது அவர் பேசியதாவது:
 முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவாராம். 2011-இல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்கும்போது தமிழகத்தில் 1,800 டாஸ்மாக் கடைகள் இருந்தன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டு தோறும் 1,000 கடைகள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 6,800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதுதான் ஜெயலலிதா அரசின் சாதனை. திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பாக முதியோர் உதவித் தொகையை ஆயிரத்திலிருந்து ரூ. 2 ஆயிரமாக உயர்த்தித் தரப்படும். 100 நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டம் 100 நாளிகளில் இருந்து 150 வேலை நாள்களாக உயர்த்தப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட 501 திட்டங்களில் 81 திட்டங்கள் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு ஆனது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.  அந்த மாற்றம் மே 16-இல் நிகழ இருக்கிறது என்றார்.
On Friday, May 13, 2016 by Unknown in ,    
திருப்பூர், முதலிபாளையம் சிட்கோவில் செயல்பட்டு வரும் நிஃப்ட்-டீ கல்லூரி, பின்னலாடை சார்ந்த பல்வேறு படிப்புகளை வழங்கிவருகிறது. மேலும், இக்கல்லூரியில் பல்வேறு வகையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான மென்பொருளை சிங்கப்பூரைச் சேர்ந்த பெகாஸஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த மென்பொருளை கல்லூரிக்கு இலவசமாக வழங்குவது குறித்தும், தையல் இயந்திர தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவது குறித்தும் ஆலோசிப்பதற்காக அந்நிறுவன அதிகாரிகள் இக்கலூரிக்கு வருகைபுரிந்துள்ளனர். பெகாஸஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜான் டான், துணைத் தலைவர் டகாசி, அந்நிறுவனத்தன் இந்தியக் கிளை பொது மேலாளர் ராஜீவ் பிள்ளை ஆகியோர் இக்கல்லூரிக்கு வந்துள்ளனர்.
அவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கல்லூரியின் தலைமை ஆலோசகர் ராஜா எம்.சண்முகம், கல்லூரியின் சேர்க்கைக் குழுத் தலைவர் டி.ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
On Friday, May 13, 2016 by Unknown in ,    
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ச.ஜெயந்தி கூறியதாவது:
 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள சீட்டுகள், கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், பொதுத்
துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களால் தங்கள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி மற்றும் அஞ்சலகங்களில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம், வருமான வரித் துறை நிரந்தரக் கணக்கு எண் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணிக்கான அடையாள அட்டை, தொழிலாளர் நலத் துறையால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு மின்னணு அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், சட்டப் பேரவை உறுப்பினர், மக்களை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக ரீதியான அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம்.
 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை பயன்படுத்த இயலாதவர்கள், மேற்கூறப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி தங்கள் வாக்கினைச் செலுத்தி, நூறு சதவீத வாக்குப் பதிவு என்ற இலக்கினை அடைவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
On Friday, May 13, 2016 by Unknown in ,    


Thursday, May 12, 2016

On Thursday, May 12, 2016 by Unknown in ,    




தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, மே 14-ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதற்கு பிறகு செய்ய வேண் டியவை, செய்யக் கூடாதவை குறித்து தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெ ளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல், 16-ம் தேதி திங்கள்கிழமை, காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடக்கும். 14-ம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126-ன் கீழ் விதிமுறைகள் செயலில் இருக்கும்.
* தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக்கூட்டம், ஊர்வலத்தை யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
* எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், ட்விட்டர் போன்ற சாதனங்கள் வாயிலாக பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பும் இதில் அடங்கும்.
* தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் அல்லது அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியவர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர் அல்லாதவர்கள் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
* திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் ஆகிய இடங்களில் வெளி யாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என ஆய்வு செய்யப்படும்.
* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் 14-ம் தேதி மாலை 6 மணி முதல் செயல்திறன் அற்றதாகிவிடும்.
* வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் அவரது பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், தேர்தல் முகவர் பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், சட்டப்பேரவை தொகுதிக்கானஅவரது பணியாளர்கள் அல்லது கட்சிப் பணியாளர்களின் பயன்பாட்டுக்கு மற்றொரு வாகனம் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து தனி அனுமதி பெறலாம்.
* வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவும், அழைத்துச் செல்லவும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுக்கவோ, வாங்கவோ, பயன்படுத்தவோ அனுமதியில்லை. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
* 2 நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக அலுவலகம் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர்கள் தொலைவில் அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட் டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
* 14-ம் தேதி மாலை 6 மணிமுதல் 16-ம் தேதி மாலை 6 மணி வரை கருத்துக் கணிப்பு நடத்தவும், முடிவுகளை வெளியி டவும் தடை விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 4-ம் தேதி காலை 7 மணி முதல் மே 16-ம் தேதி மாலை 6.30 மணிவரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
மின்தடை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத்தில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி உத்தரவிட்டார். இதன்படி, மாவட்ட தேர்தல் நிர்வாகம் மற்றும் மின்வாரியத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் விசாரித்து, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். தற்போது, தமிழக தேர்தல்துறைக்கு வரும் புகார்கள் அனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது
On Thursday, May 12, 2016 by Unknown in ,    





அவர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறி யதாவது: தமிழ்நாட்டில் நல்லாட்சி யாகவும், வெளிப்படையான ஆட்சியாகவும் இருக்க வேண் டும் என மக்கள் கருத்து வலு வடைந்துள்ளது. திமுக, அதிமுக கட்சிகளிடம் புதிய கொள்கை, திட்டங்கள், சிந்தனை கள் இல்லை என்பதை மக் கள் புரிந்துகொள்ளத் தொடங்கி உள்ளனர். மாற்று ஆட்சியை கொடுக்க மக்கள் நலக் கூட்டணி தயாராகி வருகிறது.
இன்று தமிழக பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறது. இதை ஆட்சியில் இருக்கிற அதிமுக மூடி மறைக் கிறது. அதிகாரத்தை திரும்ப பெற துடிக்கும் திமுகவும் மூடி மறைக்கிறது. தமிழக விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நெருக்கடியில் உள்ளனர். நீர் வளம் குறைந்ததால் உணவு உற்பத்தித் திறன் அதிகரிக்கப் படவில்லை. விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் ஏற் படுத்தப்படவில்லை. விவ சாயப் பொருட்களுக்கு கட்டுப் படியான விலை நிர்ணயம் கிடைப்பதில்லை.
கருப்பு பணத்தை கைப்பற்று வேன் என உறுதியளித்த மோடி, ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகளாகியும் அமைதியாக இருக்கிறார். கருப்பு பணத்தை வைத்திருப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விஜய் மல்லையாவைப்போல் கடன் பெற்று வங்கிகளை ஏமாற்றுப வர்கள், நாட்டை ஏமாற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் பெயர்களை வெளி யிடவும், நடவடிக்கை எடுக்கவும் மோடி அரசு தயக்கம் காட்டு கிறது. மோடி அரசால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந் துள்ளது.
தமிழகத்தில் மாற்று அரசி யல், கொள்கை சார்ந்த அரசி யல் வெற்றி பெற மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தெரி விப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
On Thursday, May 12, 2016 by Unknown in ,    



கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பேங்க் கே.சுப்பிரமணியனை ஆதரித்து கரூரில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்ட ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியது: இந்த தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் தோல்வியை வழங்க வேண்டும். வாக்கு சேகரிக்கச் செல்லும் அதிமுக அமைச்சர்களை மக்கள் விரட்டியடிக்கின்றனர்.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்கிறார் ஜெயலலிதா. ஏன் கடந்த 5 ஆண்டுகளில் இதை செய்யவில்லை? இனி அவர் முதல்வராக முடியாது. முதல்வராக இருக்கும்போதே 2 முறை சிறைக்குச் சென்ற அவர், மீண்டும் சிறை செல்வது உறுதி. யானையின் மீது காட்டும் பரிவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் காட்டாதவர் ஜெயலலிதா.
காவிரி, முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் பிரச்சினை என எதற்கும் தீர்வு காணாத அவர் மீண்டும் முதல்வரானால் தமிழகம் நரகமாகிவிடும். மதுவால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துவிட்டனர். மக்களை சந்திக்காத, மக்களின் பிரச்சினைகள் குறித்து தெரியாத ஜெயலலிதா ஆட்சியில், ஏழை மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக் கவில்லை. அமைச்சர்களை அவர் கொத்தடிமைபோல நடத்துகிறார். மின்வெட்டைப் போக்குவதற்காக கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கி, மின் கட்டணச் சுமையை மக்கள் மீது சுமத்திவிட்டனர். இந்த அவலங்களில் இருந்து மீள, திமுக-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்
On Thursday, May 12, 2016 by Unknown in ,    



தமிழகத்தின் அடுத்த முதல்வர் உண்மையான மக்கள் முதல்வராக இருப்பார். 'நாட் ரீச்சபிள்' முதல்வரும், வாய்ப்பு கொடுத்தால் செய்வோம்' என்று கூறும் முதல்வரும் தமிழகத்துக்கு வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். பிரச்சாரத்துக்கு இடையில் அவர் தி இந்து (தமிழ்) இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.


ஒரு மருத்துவராக, அரசியல்வாதியாக நான் உருவானது இங்கிருந்துதான். என்னுடைய மருத்துவப் படிப்புக்காக சென்னை வந்து குடியேறிய தொகுதி விருகம்பாக்கம். 25 வருடங்களாக இங்கேதான் இருக்கிறேன். படிப்பை முடித்து கிளினிக்கை ஆரம்பித்ததும் இதே தொகுதியில்தான். மழை, வெள்ளம் வந்தபோது இங்கே இருந்துதான் மக்களுக்காக பணியாற்றினேன்.


என் சேவையை முதலில் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்று எண்ணுகிறேன். தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ள தற்போதைய சட்டமன்ற உறுப்பினரைப் போல அல்லாமல், 24 மணி நேரமும் மக்களோடு தொடர்பில் இருக்க ஆசைப்படுகிறேன். தொகுதி மக்கள் எந்த நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் அழைப்பதற்கு வசதியாக தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் உதவிக்குழு என்ற பெயரில், விருகம்பாக்க தன்னார்வல இளைஞர்கள் ஒன்றிணைக்கப்படுவார்கள். அவர்கள் உதவி தேவைப்படும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பணியாற்ற உள்ளார்கள்.


பிரகாசமாய் இருக்கிறது. மக்களுக்கு எதுவும் செய்யாத அதிமுக கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் இருகிறார்கள். நான் வெற்றி பெற வேண்டும் என்று, என்னை விட என் தொகுதி மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். முக்கியக் கட்சி வேட்பாளர்கள் மீது ஏராளமாக புகார்கள் இருக்கின்றன. வழக்குகள் கூட உள்ளன. ஆனால் நான் அவர்கள் செய்யாத பணிகளை விடுத்து, நான் செய்ய உள்ளதைச் சொல்லி ஓட்டு கேட்கிறேன்.


விருகம்பாக்கம் தொகுதியின் முக்கியப் பிரச்சினை, குப்பைகள். அவற்றை முதலில் அகற்ற வேண்டும். அடுத்ததாக சாலை விரிவாக்கம். கோயம்பேடு - ஆற்காடு சாலையை இணைக்கும் காளியம்மன் கோயில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதனால் சாலை அகலப்படுத்தப்பட வேண்டும். மூன்றாவதாக சாக்கடையைப் போல மாறியுள்ள கோயம்பேடு கால்வாயை தூர் வார வேண்டும். சாக்கடை நீர் வடிகால் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். கோயம்பேடு சந்தையில் கொட்டப்படும் காய்கறி மற்றும் பழக்கழிவுகளால், விருகம்பாக்கம் நோய்களைப் பரப்பும் தொகுதியாக மாறியுள்ளது. அதை மாற்ற வேண்டும்.

  மோடி அலை இருக்கிறது என்பதைவிட, மோடியின் அவசியம் வெகு நிச்சயமாய் இருக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா, இலவசங்கள் ஃபார்முலாவைப் பார்த்துவிட்டோம். வளர்ச்சியைப் பேசக்கூடிய மோடி ஃபார்முலாவையும் கொஞ்சம் பார்க்கலாமே?

திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகளில் போட்டியிடும் பெண்கள், பண பலமும் ஆள் பலமும் இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். வேட்பாளராக மட்டும் இருந்துவிடாமல், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக வேண்டும்.

அவர் நிச்சயம் உண்மையான மக்கள் முதல்வராக இருப்பார். 'நாட் ரீச்சபிள்' முதல்வரும், 'வாய்ப்பு கொடுத்தால் செய்வோம்' என்று கூறும் முதல்வரும் தமிழகத்துக்கு வேண்டாம். தமிழக மக்கள் நல்லதைப் பெற தகுதியானவர்கள். அந்த தகுதியை
On Thursday, May 12, 2016 by Unknown in ,    


காவல் துணை ஆணையர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையராக இருந்த டி.மகேஷ்குமார் அம்பத்தூர் துணை ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கே.பெரோஸ்கான் அப்துல்லா அண்ணா நகர் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ளா
On Thursday, May 12, 2016 by Unknown in ,    




குறும்படம் என நினைத்து அதிமுக தேர்தல் பிரச்சார விளம்பரத்தில் நடித்து விட்டதாக அதிமுக, திமுக விளம்பரத்தில் நடித்த கஸ்தூரி பாட்டி விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவும், திமுகவும் போட்டிபோட்டுக் கொண்டு தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து வருகின்றன. நிமிடத்துக்கு நிமிடம் இரு கட்சிகளின் பிரச்சார விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
‘‘பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம் புரட்சித் தலைவி அம்மாதான்.’’ என அதிமுக விளம்பரம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கம், ‘‘வானத்துல பறக்கறவங்களுக்கு நம்ம பிரச்சினை எப்படித் தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா…’’ என்ற விளம்பரம் ஓடிக் கொண்டிருக்கிறது.
நிமிடத்துக்கு நிமிடம் மாறிமாறி ஒளிபரப்பாகும் இந்த இரு விளம்பரங்களும் தமிழகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாகி விட்டது. காரணம் இந்த இரு விளம்பரங்களிலும் நடித்தது கஸ்தூரி பாட்டி என்கிற ஒரே நபர்.
இது தொடர்பாக கஸ்தூரி பாட்டி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சினிமாவிலும் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறேன். இப்போது குறும்படங்களிலும் நடித்து வருகிறேன். ஏஜென்ட் அழைத்ததால் குறும்படம் என நினைத்து அதிமுக விளம்பரத்தில் நடித்து விட்டேன்.
சில நாட்களில் மீண்டும் நடிக்க ஏஜென்ட் அழைத்தார். அது விளம்பரம் என்பது தெரியும். ஆனால் கட்சி விளம்பரம் என்று தெரியாது.
திமுக விளம்பரத்தில் கடைசியில் ‘போதும்மா..’ என்று சொல்வேன். என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் அதனைச் சொல்லி கிண்டல் செய்கிறார்கள். இதனால் சில நாள்களாக வேலைக்கே செல்ல முடியவில்லை.
நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவள் இல்லை. எனக்கு அரசியல் தெரியாது. ஏஜென்ட் சொன்னதை நம்பி நடித்து விட்டேன். அதிமுக விளம்பரத்தில் நடித்ததற்காக ரூ. 1,500-ம், திமுக விளம்பரத்தில் நடித்ததற்காக ரூ.1,000-ம் கொடுத்தார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறீர்கள் எனக் கேட்டபோது, ‘யார் வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சிதான்’ என்றார் கஸ்தூரி பாட்டி.
On Thursday, May 12, 2016 by Unknown in ,    
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை நீட்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழகத் தேர்தல் அதிகாரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் அனுப்பியுள்ள கடிதம்: சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தற்போது வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்குத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து மிகவும் தாமதமாகவே பூத் ஸ்லிப்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பகுதிகளில் பூத் ஸ்லிப்கள் முழுமையாக வழங்கப்படாத நிலையுள்ளது. எனவே, பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மே 13-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.