Showing posts with label trichy reporter sabarinathan. Show all posts
Showing posts with label trichy reporter sabarinathan. Show all posts
Friday, February 21, 2020
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வகித்தார். திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி இதில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வீரமணி செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார்.
அவர் கூறுகையில், மணியம்மையார் நூற்றாண்டு விழாவை மார்ச் 10ஆம் தேதி சென்னையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை நிரந்தரமாக நீக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். திராவிடர் கழகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 11 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதை வரவேற்கிறோம். இந்த நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் மார்ச் 23-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம் மூலம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க அழுத்தம் கொடுக்கப்படும். இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். உயர் ஜாதியினரின் பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு எனும் அரசமைப்புச் சட்டம் மோசடி திட்டமாகும். அதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை நாங்கள் வரவேற்றோம். அதேசமயம் இந்த முயற்சியை வரவேற்றாலும், அது முழு முயற்சியாக இருக்க வேண்டும். அவசர அவசரமாக இல்லாமல், ஆழமாக இதை செய்து முடிக்க வேண்டும். ஐந்து மாவட்டங்களில் மட்டும் இந்த சட்டத்தை அமல்படுத்தி விட்டு விட்டால், இதர மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். அதனால் முழுமையாக சட்டத்தை கொண்டு வரவேண்டும். தற்போது மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. முழுமையாக செயல்படுத்தியும் ஒப்புதல் பெறவேண்டும். ஒரு துறையில் நிபுணரை தேர்வு செய்வதில் தவறில்லை. அவர் எந்த ஜாதியாக இருந்தாலும் அவரை நியமித்துக் கொள்ளலாம். நாங்கள் தனிப்பட்ட பிராமணருக்கு எதிரானவர்கள் கிடையாது. பிராமணியத்தை தான் எதிர்க்கிறோம். அதனால் பிரசாந்த் கிஷோர் நியமனத்தில் தவறில்லை என்றார்.
Thursday, February 20, 2020
டெண்டர் பிரச்சனையால் கதறும் வியாபாரிகள் வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளபோது இடத்தை கைப்பற்ற முயற்சியா
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம் உள்ளது ஆம்னி பேருந்து நிலையம்
இந்திய ரயில்வேயில்
காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் பெருக்க ரயில்வே வாரியம் 5 ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்து இதனடிப்படையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் ரயில் நிலையம் இடையே உள்ள ரயில்வேக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தை திருச்சி கோட்ட ரயில்வே தேவகுமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு குத்தகைக்கு விட்டது அப்போது தேவகுமார் தரப்பு ஆம்னி பஸ் நிலையத்தில் புதிதாக வணிக நிறுவனங்கள் அமைக்க விளம்பரம் செய்தது பயணிகள் வரத்து அதிகம் இருந்ததால் வருவாய் கிடைக்கும் என நம்பி 60க்கும் மேற்பட்டோர் கடை திறக்க முன்வந்தனர் இவர்களிடம் இருந்து முன்வைப்புத் தொகையை தேவகுமார் தரப்பு பெற்றுக்கொண்டு கடை நடத்த அனுமதித்தது
இந்நிலையில் ஒப்பந்தம் முடிந்தது ரயில்வே நிர்வாகம் 2 மாதங்களுக்கு முன்பு பெற்ற டெண்டரில் ஆம்னி பஸ் நிலையத்தை விஷ்ணு என்பவர் எடுத்தார் இதைத் தொடர்ந்து புதிய ஒப்பந்தகாரர் தற்போது ஆம்னி பஸ் நிலையத்தில் ஏற்கனவே பணம் கொடுத்து கடை நடத்தி வந்தவர்களிடம் முன்வைப்பு தொகை வேண்டும் என கேட்டுள்ளார் ஏற்கனவே கொடுத்த முன்வைப்பு தொகை என்ன ஆனது என கேட்டு வியாபாரிகள் பணம் தர ஒத்துக் கொள்ளவில்லை இது தொடர்பாக புதிதாக ஒப்பந்தம் எடுத்த நபரும் வியாபாரிகளும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர் இதனால் விவகாரத்தில் ரயில்வே அதிகாரி தலையை பியித்து கொண்டுள்ளனர்
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ஒரு ஒப்பந்தம் விடப்பட்டு அதே இடம் வேறு ஒருவர்க்கு டெண்டர் முறையில் விடும்போது ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்தவர்கள் ரயில்வேக்கு தர வேண்டிய தொகை அந்த இடத்தில் வேறு வில்லங்க நடவடிக்கைகள் இல்லை என உறுதி செய்து டாக்குமெண்ட் உரிமை பத்திரத்துடன் ஒப்படைக்க வேண்டும் ஆனால் ஆம்னி பஸ் நிலைய விவகாரத்தில் வில்லங்க நடவடிக்கை இல்லை என டாக்குமெண்ட் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்பதுதான் இதில் உள்ள சிக்கலாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார்
இதனால் ஒரு கடைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை முன்வைப்பு தொகை கொடுத்தவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் இதற்கு முக்கிய காரணம் ரயில்வேயில் நிலவும் ஊழல் தண்டர் மூலம் ஒருவருக்கு ஒப்பந்த விட்டாலும் சம்பந்தப்பட்ட இடத்தில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்றால் உரிய அதிகாரிகளை கவனிக்க வேண்டும் இப்படி வாங்கி பழக்கப் பட்டவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர் என்றனர் ரயில்வே நிர்வாகத்திடம் ஏமாற்று வேலைகள் இருக்காது என நம்பி ஒப்பந்ததாரரிடம் பணம் கொடுத்து கடை தொடங்கியவர்கள் பாதிக்கப்படாத வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள்
Wednesday, February 19, 2020
திருச்சி 19.02.2020
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலை தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சமையல் கியாஸ் சிலிண்டருடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசை கண்டித்தும், சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் லால்குடி வட்ட தலைவர் சுகுமார், புள்ளம்பாடி வட்ட தலைவர் அர்ஜுனன், நகரத் தலைவர்கள் செல்வகுமார், அய்யாவூ, INTCU மாவட்ட தலைவர் துரைராஜ், மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி காங்கிரஸார் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..
பேட்டி: கலை(வடக்கு மாவட்ட தலைவர்)
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலை தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சமையல் கியாஸ் சிலிண்டருடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசை கண்டித்தும், சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் லால்குடி வட்ட தலைவர் சுகுமார், புள்ளம்பாடி வட்ட தலைவர் அர்ஜுனன், நகரத் தலைவர்கள் செல்வகுமார், அய்யாவூ, INTCU மாவட்ட தலைவர் துரைராஜ், மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி காங்கிரஸார் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..
பேட்டி: கலை(வடக்கு மாவட்ட தலைவர்)
திருச்சி 19-02-2020
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் திருச்சியிலும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தினசரி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், முழக்கப் போராட்டம், காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இந்த வகையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி ஜமாத்துல் உலமா அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு திருச்சி ஜமாத்துல் உலமா தலைவர் ரூஹில் ஹக் தலைமை வகித்தார். இதில் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தக் கருப்புச் சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் அதற்கான பலனை அதிமுக அனுபவிக்க நேரிடும் என்று போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் திருச்சியிலும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தினசரி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், முழக்கப் போராட்டம், காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இந்த வகையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி ஜமாத்துல் உலமா அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு திருச்சி ஜமாத்துல் உலமா தலைவர் ரூஹில் ஹக் தலைமை வகித்தார். இதில் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தக் கருப்புச் சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் அதற்கான பலனை அதிமுக அனுபவிக்க நேரிடும் என்று போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
Sunday, February 16, 2020
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சிறிய திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் கடந்த 10 ஆண்டுகளாக 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 2019- 2020 ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து,கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, இறகுபந்து, டென்னிஸ் ஜூடோ, குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் தடகள போட்டிகள் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது..
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.
மேலும் இப்போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
திருச்சி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் முதுகலை பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது
அப்போது காலியாக உள்ள உதவி இயக்குனர் ஏ டி பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும் 100% தேர்ச்சி வழங்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரில் விருது வழங்கி ஊக்கமளிக்க வேண்டும் மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள 32 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 46 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மாணவர்களின் நலன் கருதி 12 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு அம்பேத்கர் சிறப்பு வழிகாட்டி புத்தகம் உடனே வழங்க வேண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு முன் ஏற்கனவே பணிபுரிந்து வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலத் தலைவர் செந்தில்குமார் பேட்டியளித்தார்
Saturday, February 15, 2020
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ?
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறுவனம் எல்பின் இந்நிறுவனத்தின் இயக்குனர் அழகர்சாமி ( எ ) ராஜா, SRK ( எ ) ரமேஷ் மற்றும் பங்குதாரர்கள் மீதும் பலரை ஏமாற்றிய பல வழக்குகள் பல மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ளது.
தற்போது மதுரை திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக துரிதமாக செயல்பட்டு எல்பின் நிறுவனத்தை மூடி சீல் வைக்கவுகும் ,ராஜா, ரமேஷ் இருவரையும் கைது செய்யவும் முழு முயற்ச்சியில் ஈடுபட்டு வருவதால், இவர்கள் சார்ந்திருந்த கட்சியின் தலைவர் இவர்களது செயல்பாடுகளுக்கு ஒத்து வராததால் தானோ
தற்போது காவல்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் எச். ராஜா அவர்களை நேரில் சந்தித்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
எச். ராஜா அவர்களை நேரில் சந்தித்தபோது கிலோ கணக்கில் எடையுள்ள விக்கிரகம் ஒன்றை பரிசுப் பொருளாக வழங்கி உள்ளனர்.
எங்களை எப்படியாவது வழக்கில் இருந்து காப்பாற்றுங்கள் எனக் கூறி தங்க விக்கிரகத்தை வெள்ளி முலாம் பூசி வழங்கியதாக ஒரு தகவல் வருகிறது இது உண்மையா பொய்யா என தெரியவில்லை.
ஆனால் அழகர்சாமி ( எ) ராஜாவும் ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ரகசியமாகச் சென்று எச். ராஜாவை சந்தித்ததன் பின்னணி என்ன ? பொதுமக்கள் ஒரே குழப்பத்தில் உள்ளனர்.
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறுவனம் எல்பின் இந்நிறுவனத்தின் இயக்குனர் அழகர்சாமி ( எ ) ராஜா, SRK ( எ ) ரமேஷ் மற்றும் பங்குதாரர்கள் மீதும் பலரை ஏமாற்றிய பல வழக்குகள் பல மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ளது.
தற்போது மதுரை திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக துரிதமாக செயல்பட்டு எல்பின் நிறுவனத்தை மூடி சீல் வைக்கவுகும் ,ராஜா, ரமேஷ் இருவரையும் கைது செய்யவும் முழு முயற்ச்சியில் ஈடுபட்டு வருவதால், இவர்கள் சார்ந்திருந்த கட்சியின் தலைவர் இவர்களது செயல்பாடுகளுக்கு ஒத்து வராததால் தானோ
தற்போது காவல்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் எச். ராஜா அவர்களை நேரில் சந்தித்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
எச். ராஜா அவர்களை நேரில் சந்தித்தபோது கிலோ கணக்கில் எடையுள்ள விக்கிரகம் ஒன்றை பரிசுப் பொருளாக வழங்கி உள்ளனர்.
எங்களை எப்படியாவது வழக்கில் இருந்து காப்பாற்றுங்கள் எனக் கூறி தங்க விக்கிரகத்தை வெள்ளி முலாம் பூசி வழங்கியதாக ஒரு தகவல் வருகிறது இது உண்மையா பொய்யா என தெரியவில்லை.
ஆனால் அழகர்சாமி ( எ) ராஜாவும் ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ரகசியமாகச் சென்று எச். ராஜாவை சந்தித்ததன் பின்னணி என்ன ? பொதுமக்கள் ஒரே குழப்பத்தில் உள்ளனர்.
திருச்சி பிப் 15
தஞ்சையில் நடைபெறும் இந்து மக்கள் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனசதாப்தி ரயில் மூலம் கோவையிலிருந்து அர்ஜுன் சம்பத் தஞ்சாவூர் சென்றார். வழியில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சிறப்பான முறையில் உள்ளது. குறிப்பாக பெண்கள், முதியவர்கள் வளர்ச்சித் திட்டம், அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, நீர்நிலைகள் மேம்பாடு திட்டம், விவசாயிகள், மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஆகியவை வரவேற்கத்தக்கது. கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய மசூதிகளில் பராமரிப்புக்கு தலா 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கோயில்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். முதியோர் பராமரிப்பு இல்லம் மாவட்டந்தோறும் தொடங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கிறிஸ்தவ தன்னார்வத் தொண்டு நிறுவனமத்துடன் இணைந்து செய்வது ஆபத்தானது. கல்வி, சேவை என்ற பெயரில் ஏற்கனவே மதமாற்றம் நடைபெற்று வருகிறது. அரசு நேரடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் ராமகிருஷ்ணா சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்று கூறி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த முறை 2,000 பேர் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். குடியுரிமை சட்ட விவகாரத்தை அரசியல் பிரச்சாரமாக மாற்றி அப்பாவி இஸ்லாமியர்களை பயன்படுத்துகின்றனர். நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது நடந்தது தவறான முன்னுதாரணமாகும். போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து இதை சரியான முறையில் கையாள வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் சுயலாபம் தேடுவதற்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டி விடவும் முயற்சி செய்கிறார். இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்களில் தேசத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும். எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். நேற்றிரவு மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டம் காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஸ்டாலின் நேற்றைய இரவு கருப்பு இரவு என்று கூறியது சரிதான். அதிகமான பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கிக்காக திமுக இது போன்று செயல்படுகிறது. குடியுரிமை சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரம் செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டிவிடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. இது கண்டிக்கத்தக்கது. வெளிநாட்டு இஸ்லாமியர்கள் நம் நாட்டிற்குள் ஊடுறுவுவதற்காக ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்தி உள்ளார். திமுக கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்கிறது. இது பின்னாளில் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
தஞ்சையில் நடைபெறும் இந்து மக்கள் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனசதாப்தி ரயில் மூலம் கோவையிலிருந்து அர்ஜுன் சம்பத் தஞ்சாவூர் சென்றார். வழியில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்று கூறி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த முறை 2,000 பேர் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். குடியுரிமை சட்ட விவகாரத்தை அரசியல் பிரச்சாரமாக மாற்றி அப்பாவி இஸ்லாமியர்களை பயன்படுத்துகின்றனர். நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது நடந்தது தவறான முன்னுதாரணமாகும். போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து இதை சரியான முறையில் கையாள வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் சுயலாபம் தேடுவதற்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டி விடவும் முயற்சி செய்கிறார். இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்களில் தேசத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டும். எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். நேற்றிரவு மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டம் காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஸ்டாலின் நேற்றைய இரவு கருப்பு இரவு என்று கூறியது சரிதான். அதிகமான பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கிக்காக திமுக இது போன்று செயல்படுகிறது. குடியுரிமை சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரம் செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்டிவிடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. இது கண்டிக்கத்தக்கது. வெளிநாட்டு இஸ்லாமியர்கள் நம் நாட்டிற்குள் ஊடுறுவுவதற்காக ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்தி உள்ளார். திமுக கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்கிறது. இது பின்னாளில் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
Friday, February 14, 2020
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த விசிக பிரமுகர்கள். காரணம் என்ன ?
மோசடி பேர்வழிகள் டெல்லியில் தஞ்சமா தமிழக காவல்துறைக்கு சவாலா
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிறுவனம் எல்பின் .
இந்நிறுவனத்தின் இயக்குனர் அழகர்சாமி ( எ ) ராஜா மற்றும் அவரது தம்பி SRK (எ) ரமேஷ் குமார் ஆகிய இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பதவி வகித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்து வருபவர் இந்நிலையில் அவரது கட்சியின் மாநில பொறுப்பில் இருக்கும் ராஜா , ரமேஷ் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் ஹெச். ராஜா அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
எல்பின் நிறுவனம் சட்டத்துக்கு புறம்பான வகையில் செயல்பட்டு வருவதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு தெரியவந்ததாலும் மேலும் அழகர்சாமி ( எ ) ராஜாவுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க தலைவருக்கு அவர்கள் அளித்த கோரிக்கைக்கு அவர் செவி சாய்க்காததால் திருமாவளவன் அவர்கள் மீது அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் ரமேஷ் ரமேஷ் குமார் சகோதரர்கள் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்தையும் அறிந்தவர் அண்ணன் திருமாவளவன், இவர்களின் தில்லுமுல்லு அவருக்குத் தெரியாதா என உள்ளூர் கட்சியினர் கூறி வருகின்றனர்.
மேலும் மதுரையில் வெடி வியாபாரியிடம் வெடி வியாபாரம் மோசடியில் ஈடுபட்டனர் பல்வேறு மோசடி வழக்குகள் இவர்கள் மீது தொடர்ந்த வண்ணம் உள்ளது பாதிக்கப்பட்டார்கள் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை தமிழக காவல்துறையினரால் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுத்து தீவிரமாகி வருகிறது என்ற தகவலை மோசடி சகோதரர்கள் தற்போதுகூட டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவருடன் கைதில் இருந்து தப்பிப்பதற்கான வழி முறைகளைப் பற்றி பேசி வருவதாக தகவல் .
இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திருவெங்கடம் யாதவ் அவர்களை இன்று டிஜிபி திரிபாதி அவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி சென்னை வரவைத்து என்பின் நிறுவனம் பற்றி டிஜிபி அலுவலக சட்டம் ஒழுங்கு ஐஜி இடம் நேரடியாக புகார் மனுவினை வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி உறுதி அளித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.
தமிழகம் முழுவதும் இவர்கள் மீது ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளது எல்பின் நிறுவனம் முடக்கப்பட்டு பல ஆண்டு ஆகியும் அதில் பணம் முதலீடு செய்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர் அதில் பாஜகவை சேர்ந்த சில பிரமுகர்களும் நிறுவனத்தில் பண முதலீடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது இந்நிலையில் அரசியலில் நேர்மையாக செயல்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இவர்களுக்கு சாதகமாக நடக்காததால் இவர்களுடைய மோசடியை மறைக்க மத்தியில் ஆளும் அரசை நாடி உள்ளனரா இவர்கள் மோசடியில் பொதுமக்கள் மற்றும் பாஜக பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது
திருச்சி சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார்.
மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜவகர், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் சமையல் எரிவாயு உருளை உடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசை கண்டித்தும், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஜவகர் செய்தியாளரிடம் பேசுகையில், கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு மக்களுக்கு எவ்விதமான
நன்மைகளையும் செய்யவில்லை. சமையல் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். செயல்களை சமாளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்தம், காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்து
மத்திய பாஜக அரசு மக்களை திசை திருப்புகிறது.
இவற்றை கண்டிக்கும் வகையில் தான் மகிளா காங்கிரஸ் சார்பில் தற்போது நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார்.
மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜவகர், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் சமையல் எரிவாயு உருளை உடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசை கண்டித்தும், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஜவகர் செய்தியாளரிடம் பேசுகையில், கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு மக்களுக்கு எவ்விதமான
நன்மைகளையும் செய்யவில்லை. சமையல் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். செயல்களை சமாளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்தம், காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்து
மத்திய பாஜக அரசு மக்களை திசை திருப்புகிறது.
இவற்றை கண்டிக்கும் வகையில் தான் மகிளா காங்கிரஸ் சார்பில் தற்போது நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.
Thursday, February 13, 2020
திருச்சியில் காணாமல்போன மக்கள் நல சங்கங்கள் எங்கே? கருப்பு ஆடுகள்
களை எடுக்கப்படுமா ?
கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையரிடம் எல்பின் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் 45 பேர் எல்பின் நிறுவனம் ஏற்கனவே RMWC என்ற பெயரில் ஓர் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர் . இவர்களால் நாங்கள் பாதிப்படைந்து விட்டோம் நாங்கள் கட்டிய பணத்தை இது நாள் வரை அவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை என புகார் அளித்தனர்.
அந்த புகார் மனுவை வைத்து திருச்சி மாநகர் முழுவதும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் வகையில் ? அந்த மக்கள் நல சங்கத்தினரால் அரசு மற்றும் அரசு அதிகாரிகளை எச்சரிக்கும் வண்ணம் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி எல்பின் நிறுவன பங்குதாரர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். குற்ற பொருளாதாரப் பிரிவு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்ட பொழுது உரிமையாளர்களான ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் மற்றும் இவருடன் உள்ள எல்பின் பங்குதாரர்கள் எங்கு சென்றனர் ஆய்வின் போது எங்கே இருந்தனர்? இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது இவ்வழக்கு விசாரணை இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
(இதுபோன்று திருச்சி தில்லை நகர் பகுதியில் செந்தூர் பின்கார்ப் என்ற நிறுவனம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது)
இந்நிலையில் பொதுநலன் கருதும் மக்கள் நல சங்கத்தை தான் வசப்படுத்தி விட்டதாகவும் மேலும் தன்னைப் பற்றி செய்தி வெளியிட்ட இரு முன்னணி நாளிதழுக்கு விளம்பரம் கொடுத்து வாயை அடைத்து விட்டதாகவும் மார்தட்டி வருகிறார்கள் அழகர்சாமி என்கிற ராஜா, ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்.
தற்போது எல்பின் நிறுவனத்தில் அடிக்கடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் நேற்று கூட தஞ்சை போலீசார் சோதனை மேற்கொண்டனர் இதில் எந்த முக்கிய ஆவணங்களும் சிக்க இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உரிமையாளர்கள் அங்கு இருப்பதில்லை.
இதற்கு காரணம் நேர்மையாக பணியாற்றும் காவல் துறையினர் இவர்களை ஆய்வுசெய்யும் பல்வேறு துறைகள் இடையே ஒரு சில கருப்பு ஆடுகள் எல்பின் நிறுவனத்திற்கு முன்னதாகவே தகவல் தருவதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.
இந்த கருப்பு ஆடுகளை தமிழக அரசும் திறன்பட செயல்பட்டுக் கொண்டிருக்கும் டிஜிபி களை எடுப்பார என பாதிப்படைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் எனக்கு கோடி ரூபாய் விலை பேசி அரசியல் பிரமுகர்களிடம் அழுத்தம் செய்வதாக வெளியில் கூறிக்கொண்டே திரிகிறார்கள் இது முற்றிலும் தவறான தகவல் இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறை மூலமாக தகுந்த நடவடிக்கை எடுப்பேன் மேலும் என்னிடம் உள்ள ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியுலகிற்கு கொண்டுவருவேன் இப்படிக்கு சத்தியமூர்த்தி ஜெய்ஹிந்த் என தெரிவித்தார்
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
திருச்சி காந்தி மார்க்கெட் பழைய பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமின் துவக்க விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் கைத் தெளிப்பான் கருவி வழங்கப்பட்டது.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. சிறந்த பட்ஜெட்டை தமிழக அரசு வழங்கும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். எந்த திட்டமாக இருந்தாலும் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பதையே தனது அன்றாட பணியாகக் கொண்டுள்ளார். பலரும் பாராட்டக்கூடிய வேளாண் மண்டல அறிவிப்பை குறை கூறினால், அதற்கு எப்படி நான் பதில் கூறுவது.
தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக விவசாயிகளின் நண்பனாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் பலரும் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். விவசாயிகளின் நண்பனாக, ஒரு விவசாயியின் தலைமையில் ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. டாஸ்மாக் மதுபான கடைகளில் அனுமதியில்லாத நேரங்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வகையில் ஆக்கிரமிப்புகளும் உரிய முறையில் அகற்றப்படும். ஆக்கிரமிப்பாளர்களை அழைத்து பேசி அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பொழிவான நகரமாக உருவாக்குவோம் என்றார்.
திருச்சி காந்தி மார்க்கெட் பழைய பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமின் துவக்க விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் கைத் தெளிப்பான் கருவி வழங்கப்பட்டது.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. சிறந்த பட்ஜெட்டை தமிழக அரசு வழங்கும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். எந்த திட்டமாக இருந்தாலும் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பதையே தனது அன்றாட பணியாகக் கொண்டுள்ளார். பலரும் பாராட்டக்கூடிய வேளாண் மண்டல அறிவிப்பை குறை கூறினால், அதற்கு எப்படி நான் பதில் கூறுவது.
தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக விவசாயிகளின் நண்பனாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் பலரும் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். விவசாயிகளின் நண்பனாக, ஒரு விவசாயியின் தலைமையில் ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. டாஸ்மாக் மதுபான கடைகளில் அனுமதியில்லாத நேரங்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வகையில் ஆக்கிரமிப்புகளும் உரிய முறையில் அகற்றப்படும். ஆக்கிரமிப்பாளர்களை அழைத்து பேசி அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பொழிவான நகரமாக உருவாக்குவோம் என்றார்.
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர்
தொல் .திருமாவளவன் பேட்டி
டில்லி தேர்தலில் பிஜேபி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். என்பிஆர் என் ஆர் சி
உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற வேண்டும், நடைமுறைபடுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும். தமிழக முதல்வரும் தமிழகத்தில் சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை என்பிஆர் நடைமுறைக்கு வர உள்ளது அதனை நடைமுறைபடுத்த மாட்டோம் என தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.
டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது நாளிது அறிவிப்போடு இருந்துவிடக்கூடாது
சட்டம் இயற்றப்படும் என முதல் அறிவித்துள்ளார் என உடனடியாக சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார் பாதிக்கப்படக்கூடாது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத அளவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
தொல் .திருமாவளவன் பேட்டி
டில்லி தேர்தலில் பிஜேபி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். என்பிஆர் என் ஆர் சி
உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற வேண்டும், நடைமுறைபடுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும். தமிழக முதல்வரும் தமிழகத்தில் சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை என்பிஆர் நடைமுறைக்கு வர உள்ளது அதனை நடைமுறைபடுத்த மாட்டோம் என தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.
டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது நாளிது அறிவிப்போடு இருந்துவிடக்கூடாது
சட்டம் இயற்றப்படும் என முதல் அறிவித்துள்ளார் என உடனடியாக சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார் பாதிக்கப்படக்கூடாது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத அளவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
Monday, February 10, 2020
உரிய சொத்து பங்கீடு வழங்க காவல்நிலையம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி.
திருச்சி துவாக்குடி தெற்குமலையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சேலம் உருக்காலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி சேலம் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மணிகண்டனின் தந்தை காமராஜ் தனது தாய் ராணியுடன் செய்துக்கொண்ட முதல் திருமணத்தை மறைத்து, லலிதா என்ற பெண்ணை 2ம் தாரமாக திருமணம் செய்து கொண்டு, தற்போது லலிதாவிற்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த தாரத்தின் மகனான மணிகண்டனுக்கும், அவரது தாயாருக்கும் வழங்கவேண்டிய உரிய பங்கு வழங்காததாலும், இதற்கு முட்டுக்கட்டையாக இரண்டாம் மனைவி லலிதா மற்றும் உறவினர்கள் செயல்பட்டு வருவதாகவும், எனவே தங்களுக்கான உரிய பங்கு தொகையை பெற்றுத் தரக்கோரி திருவெறும்பூர் காவல் நிலையத்திலும், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் வழங்கப்பட்டுள்ளது. அப்போது கண்துடைப்புக்காக விசாரணையை மட்டும் நடத்திவிட்டு அதற்கான எந்த ஒரு முயற்சியும் செய்யாத நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்,
இன்றைய தினம் மணிகண்டன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி மணிகண்டனை காப்பாற்றினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் ஆட்சியர் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் தீக்குளிப்பு முயற்சி செய்த மணிகண்டனை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கைது செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி துவாக்குடி தெற்குமலையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சேலம் உருக்காலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி சேலம் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மணிகண்டனின் தந்தை காமராஜ் தனது தாய் ராணியுடன் செய்துக்கொண்ட முதல் திருமணத்தை மறைத்து, லலிதா என்ற பெண்ணை 2ம் தாரமாக திருமணம் செய்து கொண்டு, தற்போது லலிதாவிற்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த தாரத்தின் மகனான மணிகண்டனுக்கும், அவரது தாயாருக்கும் வழங்கவேண்டிய உரிய பங்கு வழங்காததாலும், இதற்கு முட்டுக்கட்டையாக இரண்டாம் மனைவி லலிதா மற்றும் உறவினர்கள் செயல்பட்டு வருவதாகவும், எனவே தங்களுக்கான உரிய பங்கு தொகையை பெற்றுத் தரக்கோரி திருவெறும்பூர் காவல் நிலையத்திலும், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் வழங்கப்பட்டுள்ளது. அப்போது கண்துடைப்புக்காக விசாரணையை மட்டும் நடத்திவிட்டு அதற்கான எந்த ஒரு முயற்சியும் செய்யாத நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்,
இன்றைய தினம் மணிகண்டன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி மணிகண்டனை காப்பாற்றினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் ஆட்சியர் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் தீக்குளிப்பு முயற்சி செய்த மணிகண்டனை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கைது செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Friday, February 07, 2020
தனது உயிருக்கு எல்பின் நிறுவனத்தினரால் ஆபத்து புதுகை சத்தியமூர்த்தி கதறல்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொதுமக்களுக்கு தங்கள் முதலீட்டை 300 மடங்காக தரும் ஒரே நிறுவனம் என விளம்பரம் செய்து ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் எல்பின் நிறுவனம் குறித்து பல இடங்களில் புகார் அளித்து வருபவர் புதுக்கோட்டையை சேர்ந்த சத்தியமூர்த்தி.
இவர் நமக்கு அனுப்பிய வீடியோவில்
நான் தொடர்ந்து எல்பின் நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து திருச்சி ,புதுகை, தஞ்சை, மதுரை போன்ற மாவட்டங்களில் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். இதனால் என்னிடம் 50 லட்சம் வரை தருகிறேன் என பேரம் பேசினார்கள் வழக்குகளை வாபஸ் பெறக் கோரி. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதால் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என கூறியதால் என் மீது பல்வேறு பொய் வழக்கு பதிந்தார்கள். (பாலியல் வழக்கு உள்பட)
அதற்கும் உடன்படாததால் தற்போது திருச்சி சேர்ந்த அறம் மக்கள் நல சங்கம் பிரமுகர் எனக்கூறி பிரபாகரன் என்பவர் என்னை நீ சின்னப் பையன் நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் உனது கழுத்தை அறுத்து விடுவேன் கொலைமிரட்டல் விடுகின்றார்.
பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையில் உள்ள எனக்கு பல்வேறு சோதனைகள் வேதனைகள் ஏற்படுகின்றது எல்லாம் ELFIN நிறுவனத்தின் பணத்தால் தான் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது முழுக்க முழுக்க ELFIN நிறுவனம் மட்டுமே காரணம்.
மேலும் பல தகவல்களுடன்
Thursday, February 06, 2020
கிராம சுகாதார செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை பழிவாங்கும் நடவடிக்கை என ஒழுங்கு நடவடிக்கை, இடமாறுதல் உத்தரவு, தற்காலிக பணிநீக்கம் ஆகியவற்றை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சைக்கு வற்புறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. பெண்கள் பிரசவத்திற்கு, மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்த பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளில் உள்ளவர்கள் தான் பெண்களை பொறுப்புடன் கவனித்துக் கொள்ளவேண்டும். இதற்காக கிராம சுகாதார செவிலியர்களை அழைக்கக் கூடாது. தேசிய ஊரக நல திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி விபரம் குறித்த தகவலை குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், இமெயிலில் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.
துணை சுகாதார நிலைய மேம்பாட்டு நிதி, நிபந்தனையற்ற நிதி, கிராமக் குடிநீர் மற்றும் துப்புரவு குழு நிதிகளை மூன்று ஆண்டுகளாக முறையாகவும், முழுமையாகவும் வழங்க வேண்டும். வாடகையில் இயங்கும் துணை சுகாதார நிலையங்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பழுதடைந்த துணை சுகாதார நிலையங்களுக்கு வாடகை பிடித்தம் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
Tuesday, January 28, 2020
திருச்சி: திருச்சியில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
ஈரநிலம் அமைப்பின் சார்பில் ஓவியர் தமிழரசனின் அன்னை பூமி என்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி திருச்சியில் இன்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி முதல் கடலூர் வரையிலான இந்த ஓவியக் கண்காட்சி திட்டம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாக இன்று திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சகாயராஜ் தலைமை வகித்தார்.
ஓவிய கண்காட்சியை மத்திய சுங்க துறை இணை ஆணையர் வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்தார். பள்ளியின் முதல்வர் சின்னப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட ஓவியப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கண்காட்சியில் தமிழ்மொழியின் சிறப்பு, தமிழர் பண்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.
பேட்டி:
ஓவியர் தமிழரசன்
ஈரநிலம் அமைப்பின் சார்பில் ஓவியர் தமிழரசனின் அன்னை பூமி என்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி திருச்சியில் இன்று நடைபெற்றது.
ஓவிய கண்காட்சியை மத்திய சுங்க துறை இணை ஆணையர் வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்தார். பள்ளியின் முதல்வர் சின்னப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட ஓவியப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கண்காட்சியில் தமிழ்மொழியின் சிறப்பு, தமிழர் பண்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.
பேட்டி:
ஓவியர் தமிழரசன்
Tuesday, January 07, 2020
பாஜகவை சேர்ந்த எச் ராஜா எஸ் வி சேகர் கைது செய்யப்பட வேண்டும்
திருச்சி நெல்லை முபாரக் பேட்டி (மாநிலத் தலைவர் எஸ்டிபிஐ கட்சி)
திருச்சி வன்முறையை தூண்ட கூடியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்
பாஜகவை சேர்ந்த எச் ராஜா எஸ் வி சேகர் அவரை ஏன் கைது செய்யவில்லை குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த அதுதான் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி
திருச்சியில் இன்று (ஜன.07) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டிபி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், துணைத் தலைவர் அம்ஜத் பாஷா,பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், மாநில செயலாளர்கள் அகமது நவவி, அபுபக்கர் சித்திக், வழ.சஃபியா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், ஏ.கே.கரீம், சபியுல்லா, ஷஃபிக் அகமது மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி:
அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான, ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை, பிற அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, நாடு முழுவதும் பரவலான போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஈடுபட்டு வருகின்றது. இதுதொடர்பாக நாடு முழுவதும் சுமார் 5000 நிகழ்ச்சிகளை நடத்தி, குடியுரிமை சட்டத்திருத்தம் என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி. சம்மந்தமான பா.ஜ.க. மற்றும் சங்பரிவார்களின் பொய் மற்றும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை முறியடித்து, அதன் மத அடிப்படையிலான மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை தகர்க்கவும், நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக எதிர்வரும் ஜனவரி 18 அன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மிகப்பெரும் பேரணி நடத்தவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் இந்த பேரணியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கின்றோம். மத்திய அரசு இச்சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி தீவிரப்படுத்தும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மக்கள் விரோத சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:
அரசியலமைப்பின் உன்னத கொள்கைகளை, கட்டளைகளை அப்பட்டமாக மீறும் பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். அதனை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோன்று, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. வழக்கத்திற்கு மாறாக, மக்கள் தொகை கணெக்கெடுப்பின் போது இதுவரை கேட்கப்படாத பெற்றோரின் பிறப்பு, அவர்கள் பிறந்த இடம் உள்ளிட்ட கூடுதலான கேள்விகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சம்பந்தமில்லாத அதிகப்படியான தகவல்கள் கேட்பது என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) என்ற கொடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. ஏற்கனவே, நாடு முழுவதும் என்.பி.ஆர் தரவுகளின் அடிப்படையில் என்.ஆர்.சி தயாரிக்கப்படும் என்று நாடாளுமன்றத்திலும், பல்வேறு இடங்களிலும் மோடி அரசு கூறியுள்ளது.
அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி. கணக்கெடுப்பானது நாடு முழுவதும் நடைபெறும் என்று உள்துறை அமித் ஷா கூறியுள்ளார். அவ்வாறு என்.ஆர்.சி. நடைபெற்றால் ஆவணங்களை திரட்ட முடியாத கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமை ரத்தாகும் போது, முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களை தவிர மற்ற அனைவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மீண்டும் தங்களது குடியுரிமையை பெறுவார்கள் என்பதிலிருந்தே மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. எத்தகைய அபாயகரமானது என்பது விளங்கும். இந்த மூன்று சட்ட நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
ஆகவே, தமிழக அரசு சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றை அமல்படுத்தக் கூடாது எனவும், இச்சட்டங்களுக்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்கனவே, அதிமுக துணையுடன் தான் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதிமுகவின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு ஆதரவான நிலைபாட்டை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கான எதிர்வினையை மக்கள் காட்டத் தொடங்கியுள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணித்ததன் காரணமாக, அதிமுகவிற்குள்ளே உட்கட்சி பூசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் விரோத மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அதிமுக தொடருமானால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பினை அது சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து, சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.
போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்:
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவரும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், ஜமாத்தினர், மாணவர்கள், பெண்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை தமிழக காவல்துறை பதிவு செய்து வருகின்றது. இதுவரை தமிழகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் விரோத சட்டங்களை இயற்றியுள்ள மத்திய அரசை விமர்சித்து பேசுபவர்கள் மீது பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவர்கள் சிறைகளில் அடைப்பக்கப்பட்டுள்ளனர். தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் அநீதியான முறையில் கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் அரசியல் சாசனத்தையும், பன்முகத்தன்மைமையும் பாதுகாப்பதற்காக குடிமக்கள் நடத்தும் போராட்டங்களை வழக்குகள், கைது நடவடிக்கைகள் மூலம் தடைபோட முயலும் அதிமுக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. போராடுபவர்களையெல்லாம் சிறையில் அடைக்க தீர்மானித்தால் நாட்டின் சிறைச் சாலைகள் போதாது. போராட்டங்களை தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு உந்துசக்தியாக மாறும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, பொதுமக்கள் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை தமிழக அரசும், காவல்துறையும் ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிகையில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை:
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. பல இடங்களில் சிசிடிவி கண்காணிப்புக்குள் வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் கொண்டுவரப்படவில்லை. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என நாங்கள் குற்றஞ்சாட்டுகின்றோம். தேர்தல் ஆணையம் அதன் பொறுப்பை தட்டிக்கழித்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சேவையை அங்கீகரித்த மக்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, வாக்களித்த மக்களின் நம்பிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி நிச்சயம் நிறைவேற்றும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஜனவரி 08 நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு:
மத்திய அரசின் தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், ரயில்வே, வங்கி, பிஎஸ்என்எல், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும், ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நாளை (ஜனவரி 08) நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு தெரிவிக்கின்றது. தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஜே.என்.யு. மாணவர்கள் மீதான ஏபிவிபி குண்டர்களின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது:
முகமூடி அணிந்த பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் பெரும்திரளான குண்டர்கள், ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நுழைந்து, மாணவர் கூட்டமைப்பின் தலைவர் அய்ஷே கோஷ் மற்றும் மாணவ-மாணவிகள் மீது இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மாணவர் விடுதிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த வன்முறை தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜே.என்.யு. மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலில் சம்மந்தப்பட்ட ஏபிவிபி சமூகவிரோதிகளை காலம்தாழ்த்தாமல் கைது செய்வதோடு, கடுமையான சட்டப்பிரிவுகளைக் கொண்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்
பேட்டி .....
நெல்லை முபாரக்
திருச்சி நெல்லை முபாரக் பேட்டி (மாநிலத் தலைவர் எஸ்டிபிஐ கட்சி)
திருச்சி வன்முறையை தூண்ட கூடியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்
பாஜகவை சேர்ந்த எச் ராஜா எஸ் வி சேகர் அவரை ஏன் கைது செய்யவில்லை குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த அதுதான் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி
அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி:
அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான, ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை, பிற அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, நாடு முழுவதும் பரவலான போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஈடுபட்டு வருகின்றது. இதுதொடர்பாக நாடு முழுவதும் சுமார் 5000 நிகழ்ச்சிகளை நடத்தி, குடியுரிமை சட்டத்திருத்தம் என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி. சம்மந்தமான பா.ஜ.க. மற்றும் சங்பரிவார்களின் பொய் மற்றும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை முறியடித்து, அதன் மத அடிப்படையிலான மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை தகர்க்கவும், நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக எதிர்வரும் ஜனவரி 18 அன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மிகப்பெரும் பேரணி நடத்தவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் இந்த பேரணியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கின்றோம். மத்திய அரசு இச்சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி தீவிரப்படுத்தும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மக்கள் விரோத சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:
அரசியலமைப்பின் உன்னத கொள்கைகளை, கட்டளைகளை அப்பட்டமாக மீறும் பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். அதனை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோன்று, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. வழக்கத்திற்கு மாறாக, மக்கள் தொகை கணெக்கெடுப்பின் போது இதுவரை கேட்கப்படாத பெற்றோரின் பிறப்பு, அவர்கள் பிறந்த இடம் உள்ளிட்ட கூடுதலான கேள்விகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சம்பந்தமில்லாத அதிகப்படியான தகவல்கள் கேட்பது என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) என்ற கொடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. ஏற்கனவே, நாடு முழுவதும் என்.பி.ஆர் தரவுகளின் அடிப்படையில் என்.ஆர்.சி தயாரிக்கப்படும் என்று நாடாளுமன்றத்திலும், பல்வேறு இடங்களிலும் மோடி அரசு கூறியுள்ளது.
அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி. கணக்கெடுப்பானது நாடு முழுவதும் நடைபெறும் என்று உள்துறை அமித் ஷா கூறியுள்ளார். அவ்வாறு என்.ஆர்.சி. நடைபெற்றால் ஆவணங்களை திரட்ட முடியாத கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமை ரத்தாகும் போது, முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களை தவிர மற்ற அனைவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மீண்டும் தங்களது குடியுரிமையை பெறுவார்கள் என்பதிலிருந்தே மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. எத்தகைய அபாயகரமானது என்பது விளங்கும். இந்த மூன்று சட்ட நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
ஆகவே, தமிழக அரசு சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றை அமல்படுத்தக் கூடாது எனவும், இச்சட்டங்களுக்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்கனவே, அதிமுக துணையுடன் தான் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதிமுகவின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு ஆதரவான நிலைபாட்டை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கான எதிர்வினையை மக்கள் காட்டத் தொடங்கியுள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணித்ததன் காரணமாக, அதிமுகவிற்குள்ளே உட்கட்சி பூசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் விரோத மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அதிமுக தொடருமானால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பினை அது சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து, சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.
போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்:
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவரும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், ஜமாத்தினர், மாணவர்கள், பெண்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை தமிழக காவல்துறை பதிவு செய்து வருகின்றது. இதுவரை தமிழகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் விரோத சட்டங்களை இயற்றியுள்ள மத்திய அரசை விமர்சித்து பேசுபவர்கள் மீது பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவர்கள் சிறைகளில் அடைப்பக்கப்பட்டுள்ளனர். தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் அநீதியான முறையில் கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் அரசியல் சாசனத்தையும், பன்முகத்தன்மைமையும் பாதுகாப்பதற்காக குடிமக்கள் நடத்தும் போராட்டங்களை வழக்குகள், கைது நடவடிக்கைகள் மூலம் தடைபோட முயலும் அதிமுக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. போராடுபவர்களையெல்லாம் சிறையில் அடைக்க தீர்மானித்தால் நாட்டின் சிறைச் சாலைகள் போதாது. போராட்டங்களை தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு உந்துசக்தியாக மாறும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, பொதுமக்கள் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை தமிழக அரசும், காவல்துறையும் ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிகையில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை:
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. பல இடங்களில் சிசிடிவி கண்காணிப்புக்குள் வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் கொண்டுவரப்படவில்லை. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என நாங்கள் குற்றஞ்சாட்டுகின்றோம். தேர்தல் ஆணையம் அதன் பொறுப்பை தட்டிக்கழித்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சேவையை அங்கீகரித்த மக்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, வாக்களித்த மக்களின் நம்பிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி நிச்சயம் நிறைவேற்றும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஜனவரி 08 நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு:
மத்திய அரசின் தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், ரயில்வே, வங்கி, பிஎஸ்என்எல், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும், ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நாளை (ஜனவரி 08) நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு தெரிவிக்கின்றது. தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஜே.என்.யு. மாணவர்கள் மீதான ஏபிவிபி குண்டர்களின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது:
முகமூடி அணிந்த பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் பெரும்திரளான குண்டர்கள், ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நுழைந்து, மாணவர் கூட்டமைப்பின் தலைவர் அய்ஷே கோஷ் மற்றும் மாணவ-மாணவிகள் மீது இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மாணவர் விடுதிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த வன்முறை தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜே.என்.யு. மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலில் சம்மந்தப்பட்ட ஏபிவிபி சமூகவிரோதிகளை காலம்தாழ்த்தாமல் கைது செய்வதோடு, கடுமையான சட்டப்பிரிவுகளைக் கொண்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்
பேட்டி .....
நெல்லை முபாரக்
Saturday, September 28, 2019
On Saturday, September 28, 2019 by Tamilnewstv in trichy reporter sabarinathan, திருச்சி சபரிநாதன் 9443086297
28.09.2019 சனிக்கிழமை
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தமிழரின் பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக மாநில அளவிலான சிலம்ப போட்டியை உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம் மற்றும் சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடம் இணைந்து நடத்தியது.
இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள், சிலம்ப பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியானது மழலையர் (2-ம் வகுப்புவரை), மினி சப்ஜூனியர் (3 முதல் 5ம் வகுப்புவரை), சப்ஜூனியர் (6 முதல் 8ம் வகுப்புவரை), ஜூனியர் (9 மற்றும் 10ம் வகுப்பு), சீனியர் (11 மற்றும் 12ம் வகுப்பு) மற்றும் சூப்பர் சீனியர் (கல்லூரி மாணவ மாணவியர்கள்) ஆகிய பல பிரிவுகளில் நடைபெற்றது.
இதில் குத்து வரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு வீச்சு மற்றும் கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. மேலும் இப்போட்டியில் தேர்வாகியிருக்கும் சுகித்தா, சுஜீத், ஸ்ரீ மாலன் ஆகிய சிலம்ப வீரர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியில் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சர்வதேச சிலம்பப் போட்டிக்கு சிலம்பப் பயிற்சியாளர் திரு.அரவிந்த் மற்றும் சுருளி ஆண்டவர் சிலம்பக்கூடத் தலைவர் திரு.மோகன் ஆகியோர் அழைத்துச்செல்வர்.
இன்றைய போட்டிக்கு சிறப்பு விருந்தினராக டால்மியா சிமென்ட் வாழ்நாள் இயக்குனர் திரு. Er. N. கோபால்சுவாமி மற்றும் தலைவர் கி.ஆ.பெ. விசுவநாதம்பள்ளி டாக்டர்.V.ஜெயபால், அவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களைப் பாராட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.
மேலும் இப்போட்டியை திரு. தமிழ்மகன் (எ) கண்ணன் (தலைவர், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம்) அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
காலை 9:30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடத்தின் தலைவர் திரு. மோகன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.
இந்நிகழ்ச்சியை திருச்சி தில்லைநகரிலுள்ள சகுந்தலா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாகத்தினர் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தமிழரின் பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக மாநில அளவிலான சிலம்ப போட்டியை உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம் மற்றும் சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடம் இணைந்து நடத்தியது.
இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள், சிலம்ப பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியானது மழலையர் (2-ம் வகுப்புவரை), மினி சப்ஜூனியர் (3 முதல் 5ம் வகுப்புவரை), சப்ஜூனியர் (6 முதல் 8ம் வகுப்புவரை), ஜூனியர் (9 மற்றும் 10ம் வகுப்பு), சீனியர் (11 மற்றும் 12ம் வகுப்பு) மற்றும் சூப்பர் சீனியர் (கல்லூரி மாணவ மாணவியர்கள்) ஆகிய பல பிரிவுகளில் நடைபெற்றது.
இதில் குத்து வரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு வீச்சு மற்றும் கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. மேலும் இப்போட்டியில் தேர்வாகியிருக்கும் சுகித்தா, சுஜீத், ஸ்ரீ மாலன் ஆகிய சிலம்ப வீரர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியில் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சர்வதேச சிலம்பப் போட்டிக்கு சிலம்பப் பயிற்சியாளர் திரு.அரவிந்த் மற்றும் சுருளி ஆண்டவர் சிலம்பக்கூடத் தலைவர் திரு.மோகன் ஆகியோர் அழைத்துச்செல்வர்.
இன்றைய போட்டிக்கு சிறப்பு விருந்தினராக டால்மியா சிமென்ட் வாழ்நாள் இயக்குனர் திரு. Er. N. கோபால்சுவாமி மற்றும் தலைவர் கி.ஆ.பெ. விசுவநாதம்பள்ளி டாக்டர்.V.ஜெயபால், அவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களைப் பாராட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.
மேலும் இப்போட்டியை திரு. தமிழ்மகன் (எ) கண்ணன் (தலைவர், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம்) அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
காலை 9:30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடத்தின் தலைவர் திரு. மோகன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.
இந்நிகழ்ச்சியை திருச்சி தில்லைநகரிலுள்ள சகுந்தலா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாகத்தினர் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
Tuesday, July 30, 2019
On Tuesday, July 30, 2019 by Tamilnewstv in trichy reporter sabarinathan, திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஜூலை 30
தொண்டர்கள் பலமுறை வற்புறுத்தியும் நேரில் சென்று முறையிட்டும் கட்சிப் பணிகளை மேற்கொள்ளாத தீபாவை கண்டித்து திருச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர் சி கோபி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய முடிவு?
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.சி. கோபி பேட்டி
மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் உறவினரான தீபா ஜெயலிதா மறைந்த பின்னர் தனியாக
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என இயக்கம் ஆரம்பித்து அதில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமித்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக தெரிவித்தார். தேர்தல் முடிந்த பின்னர் தொடர்ந்து தீபாவின் செயல்பாடுகள் ஒன்றும் இல்லாமல் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் திருச்சி மாவட்ட செயலாளர் கோபி தீபாவை தொடர்புகொண்டு கட்சியின் நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும் இதன் காரணமாக அவரை கட்சியை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று
செய்தியாளர்களை
சந்தித்த ஆர்.சி.கோபி
திபாவை சந்தித்து இயக்கத்தை செயல்படுத்த பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கை எடுக்காததால் கட்சியை விட்டு வெளியேறினேன். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர், அவர்களுடைய கருத்தை அறிந்து புதிய அமைப்பை துவங்குவது அல்லது அனைவரும் ஒன்றிணைந்து முதல்வர் எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும், தங்களுக்கு நல்ல ஒரு பதவி கிடைத்தால் செயல்பட தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
தொண்டர்கள் பலமுறை வற்புறுத்தியும் நேரில் சென்று முறையிட்டும் கட்சிப் பணிகளை மேற்கொள்ளாத தீபாவை கண்டித்து திருச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர் சி கோபி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய முடிவு?
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.சி. கோபி பேட்டி
மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் உறவினரான தீபா ஜெயலிதா மறைந்த பின்னர் தனியாக
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என இயக்கம் ஆரம்பித்து அதில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமித்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக தெரிவித்தார். தேர்தல் முடிந்த பின்னர் தொடர்ந்து தீபாவின் செயல்பாடுகள் ஒன்றும் இல்லாமல் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் திருச்சி மாவட்ட செயலாளர் கோபி தீபாவை தொடர்புகொண்டு கட்சியின் நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும் இதன் காரணமாக அவரை கட்சியை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று
செய்தியாளர்களை
சந்தித்த ஆர்.சி.கோபி
திபாவை சந்தித்து இயக்கத்தை செயல்படுத்த பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கை எடுக்காததால் கட்சியை விட்டு வெளியேறினேன். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர், அவர்களுடைய கருத்தை அறிந்து புதிய அமைப்பை துவங்குவது அல்லது அனைவரும் ஒன்றிணைந்து முதல்வர் எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும், தங்களுக்கு நல்ல ஒரு பதவி கிடைத்தால் செயல்பட தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...